பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
நடுநிலை, உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி தொடங்கும் நேரம் & மதிய நேர செயல்பாடுகள்- பள்ளிக்கல்வி ஆணையரால் வெளியிடப்பட்டுள்ள பதிய கால அட்டவணை-Single Pdf
அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!
ஏற்கனவே சோதனை முறையில் சென்னையில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் நன்கு பயிலக் கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கு உண்டு உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சியும் தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு எனப்படும் TRUST தேர்வு மதிப்பெண்களையும், 9ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு எனப்படும் NMMS தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும், 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான NTSE தேர்வு மதிப்பெண் மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் நன்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதலே சிறப்பு கவனம் செலுத்துவது மற்றும் சிறப்பு பயிற்சி அளிப்பது போன்றவற்றின் மூலமாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதை வழிவகை செய்வதற்கு இந்த நடைமுறையை பின்பற்றி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
CEO / DEO க்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
CEO, DEO Training Proceeding - Download here...
பள்ளிகள் திறப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு
மாநில கல்வி கொள்கை: வரும் 15ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் : அமைச்சர் அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் (LKG, UKG வகுப்புகள்) - பள்ளிக்கல்வித்துறை முடிவு
9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 'பாஸ்': பள்ளிக்கல்வித்துறை முடிவு
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம்: தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
இந்நிலையில், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து 5 வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வீடுதோறும் நேரடியாகச் சென்று உடனடி சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5+ வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 5+ மாணவர்களை 100% அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியரின் தலையாயக் கடமையாகும்.
பள்ளியின் சாதனைகள், வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்விமுறை, பாதுகாப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் வாயிலாக பெற்றோர்களிடம் எடுத்து கூறலாம்.
பள்ளிகளில் உள்ள திறன் வகுப்பறைகளின் (Smart Class) செயல்பாடுகள் பற்றியும் விரைவுத் துலங்கல் குறியீடு (QR Code) வழியாக பாடக் கருத்துகள் எளிமையாக்கப்பட்டு கற்றல் செயல்பாடு நடைபெறுகின்றது என்பதைப் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக் கூற வேண்டும்.
பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசு வழங்குவதன் மூலம் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம்.
பள்ளி மேலாண்மைக் குழு:
பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளை பிரித்துக் கொண்டு, ஒவ்வாரு குடியிருப்பில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆசிரியர்களோடு இணைந்து அப்பகுதியில் உள்ள பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்களிடம் பள்ளியின் சிறப்புகளை எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கைக்கு உதவுதல்
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தங்களது குழந்தைகளின் சிறப்பான செயல்பாடுகளை அப்பகுதியில் உள்ள பள்ளி வயதுக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் நேரடியாக உரையாடச் செய்து அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்தல்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களுக்கு மேலாண்மைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து பள்ளி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை திரையிட்டு அரசு வழங்கும் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்துதல்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களான தலைமை ஆசிரியர், ஆசிரிர்கள், பெற்றோர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ஆகியோர் ஒன்றிணைந்து குழுவாக செயல்பட்டு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கலாம்.
பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று அரசுப் பள்ளியின் சாதனைகள், கட்டமைப்பு வசதிகள், நலத்திட்டங்கள் கல்வி உதவி தொகைகள் பற்றிப் பெற்றோரிடம் நோடியாக எடுத்துக் கூற வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் எடுத்துச் செல்லலாம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கலாம்.
நம் பள்ளி நம் பெருமை வலைதள செயலியை பொது மக்களிடம் எடுத்துக் கூறி அதன் தனித்துவம் சார்ந்து விளக்குவதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம்.
பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் சார்பில் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பங்கு
தன்னார்வலர்கள் தங்களது குடியிருப்பில் உள்ள பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்ந்துள்ள விவரத்தை உறுதிப்படுத்துதல்
பள்ளி செல்லாக் குழந்தைகள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் இருப்பின் அதிக கவனம் செலுத்திட வேண்டும்.
தன்னார்வலர்கள் வசித்து வரும் குடியிருப்புப் பகுதியில் புதிதாக பள்ளி வயது குழந்தைகள் உள்ள குடும்பம் குடிபெயர்ந்து வந்திருந்தால் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துப் பள்ளியில் சேர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று கண்டறிந்த 5+ குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உதவிட வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி 2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்''.
தொடக்கக் கல்வி - 2022-23ஆம் கல்வி ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
SBI Upschool: கதைகள் மூலம் கணிதப்பாடம் - எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி
இந்த டிஜிட்டல் திட்டத்தின் மூலம் கணிதம் மற்றும் மொழி பாடங்களுக்கான தரமான முறையில் கற்பிக்கப்படும் . பெற்றோர் மற்றும் மாணவர்கள் learn.khanacademy.org/upschool என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்கள், பாடத் திட்ட அணுகலுக்கான வாட்ஸ்அப் இணைப்பை பெறுவார்கள்.
விரைவில் அதீநவீன 'பிஎம் ஸ்ரீ பள்ளிகள்' தொடங்கப்படும் : கல்வி அமைச்சர்
எஸ்பிஐ நிதி மேலாண்மை லிமிடெட் நிர்வாக அதிகாரி வினய் எம். டான்சே இதுகுறித்து கூறுகையில், " இது மாணவர்களுக்கு தனிப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். கான் அகாடெமி (khan Academy) நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.