Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts
Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அடக்கம் உடைமை

குறள் எண் : 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

பொருள்:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

பழமொழி :

A stitch in time saves nine.
விரிசலைச் சரி செய்து விட்டால் உடைவது தப்பும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

நேற்றைய மனிதனின் வாழ்க்கை உண்மையும், எளிமையும் கொண்டதாயிருந்தது. இன்றோ சுகங்களையே அதிகம் விரும்பும் கேவலநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. சுகங்கள் அதிகரிக்கவும் ஒழுக்கங்கள் தேய்ந்து மறையலாயிற்று.

பொது அறிவு :

1. வரதட்சணை ஒழிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 

1961. 

2. தமிழக சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்? 

234 பேர்

English words & meanings :

ant that is important - significant

ஆரோக்ய வாழ்வு :

சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும் போது சமைக்காத உணவுகளில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும். மேலும், ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

NMMS Q

குளோரெல்லாவில் நிறைந்து காணப்படுவது__________ 

விடை: புரதம் & வைட்டமின்கள்




பிப்ரவரி 20


உலக நீதி நாள்

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.[1

நீதிக்கதை

தூக்கணாங்குருவி

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது. 

வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.

பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இன்றைய செய்திகள்

20.02.2023

* அப்துல் கலாம் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர் தயாரித்த 150 செயற்கைக் கோள்கள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

* ஐக்கிய அரபு அமீரகம் 200 படுக்கை கொண்ட ஒரு மருத்துவமனை துருக்கியில் பூமியதிர்ச்சி பாதிக்க பட்டவர்களுக்காக திறந்துளளது.

* தந்தைக்கு கல்லீரலின் ஒரு பாகத்தை தானம் செய்த 17 வயது மகள்..தடைக்கற்களை மீறி சரித்திரம் படைத்த சிறுமி..!

* சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை எடுத்து சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் 20 ரன்கள் எடுத்த விராட் கோலி இந்த புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines


 * 150 satellites made by students under the Abdul Kalam project were successfully launched yesterday.

 * UAE opens 200-bed hospital for earthquake victims in Turkey

 * A 17-year-old daughter who donated a part of her liver to her father..a girl who broke barriers and created history..!

 * Virat Kohli has broken Sachin Tendulkar's record by scoring 25,000 runs in the fastest international matches.  Virat Kohli made this new record by scoring 20 runs in the 3rd Test against Australia

 * In the second Test against Australia, the Indian team won by 6 wickets.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2023

 திருக்குறள் :

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:374

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

விளக்கம்:

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

பழமொழி :

Beauty comes not by forcing. 

அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 

பொன்மொழி :

மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.

பொது அறிவு :

1. முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது? 

 மூன்று ஆண்டுகள் . 

 2.பாரதியார் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் என்ன?

 ஷெல்லிதாசன்.

English words & meanings :

A very little ant - infant (குழந்தை)

ஆரோக்ய வாழ்வு :

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

          தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

NMMS Q

சீமா சச்சினின் சகோதரி. சச்சினும் ராகுலும் சகோதரர்கள் மற்றும் ராகுல் கமலாவின் மகன் ஆவார். கமலாவிற்கு சீமாவிடம் உள்ள தொடர்பு என்ன? 

 விடை: மகள் 

பிப்ரவரி 07


தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்




தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

குட்டி குரங்கின் செயல்

மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கூடம். அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர். குட்டிக் குரங்கு புஜ்ஜி. மலைமீது பல குரங்குகள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தன. அந்தக் கூட்டத்தில் புஜ்ஜி என்ற சிறிய குரங்கும் இருந்தது. அது மிகவும் புத்திசாலி. சரியாக பள்ளிக்கூட உணவு நேரத்தில் மலையை விட்டுக் கீழே இறங்கி வரும். 

மாணவர்கள் தருகின்ற உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். தாகம் தீர்த்துக் கொள்ள மாணவர்கள் குடிக்கும் குடிநீர்க் குழாயில், மாணவர்களைப் போலவே குழாயைத் திறந்து குடித்துவிட்டு, மீண்டும் குழாயைச் சரியாக மூடிவிட்டுச் செல்லும். இது அன்றாடம் நடக்கின்ற நிகழ்வு. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல புஜ்ஜி, மாணவர்கள் இல்லாததைக் கண்டு ஏமாந்து போகும். வெறும் நீரை மட்டும் குடித்துவிட்டு மலையேறும்.

முதலில் குரங்குக் குட்டியைக் கண்டு மாணவர்கள் அச்சம் கொண்டனர். நாளடைவில் அதன்மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டனர். பின்னர், அதற்குத் தாங்கள் உண்ணும் உணவிலிருந்து கொஞ்சம் கொடுத்து மகிழ்ந்தனர். ஒருநாள் வழக்கம்போல, உணவு இடைவேளைக்குச் சரியாக வந்த புஜ்ஜி, உணவுக்காகக் காத்திருந்தது. சில மாணவர்கள் மரத்தடியில் உண்டு கொண்டிருந்தனர். அவர்களின் அருகே குரங்குக் குட்டி வந்ததும் தங்களின் உணவில் கொஞ்சம் கொடுத்தனர்.

அதனை உண்டு முடித்தது. சிந்திய பருக்கைகளை, குரங்குக் குட்டியோடு, அணில் பிள்ளையும் உண்டு மகிழ்ந்தது. புஜ்ஜிக்குத் தாகம் எடுத்தது. அது குழாய் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது. அங்கே பல மாணவர்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் உள்ளே புகுந்த புஜ்ஜி திடுக்கிட்டது. குடிநீர்க் குழாய் உடைந்து, ஆறுபோல பெருக்கெடுத்து சீறிப் பாய்ந்தது. மாணவர்கள் செய்வதறியாது திகைத்தபடி நின்றிருந்தனர்.

புஜ்ஜி அங்கும் இங்கும் சென்று எதையோ தேடிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கையில் அகப்பட்ட துணி, கயிறு போன்றவற்றைக் கொண்டு வந்தது. கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை விலக்கிவிட்டு, குழாயிலிருந்து பாய்ந்து கொண்டிருந்த நீரை ஒரு கையால் அடைத்து மறுகையால் துணியைச் சுற்ற ஆரம்பித்தது. பலமுறை தோல்வியே கிடைத்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது புஜ்ஜி. இதனைக் கண்ட சில மாணவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தனர். குட்டிக் குரங்கோடு சேர்ந்து குழாயைத் துணியால் அடைத்து, கயிற்றால் கட்டினர். தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. மன நிறைவோடு அங்கிருந்து புறப்பட்டது குட்டிக் குரங்கு புஜ்ஜி.

இன்றைய செய்திகள்

07.02.2023

* சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

* ஹெக்டேருக்கு ரூ.20,000: பருவம் தவறிய கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகுப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

* எஸ்எஸ்எல்வி-டி2 சிறியரக ராக்கெட்டை பிப்ரவரி 10-ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.

* சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.

* துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: தோண்டத் தோண்ட சடலங்கள்; உயிரிழப்பு 1500-ஐ தாண்டியது.

* சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்.

* பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் 'டிரா'.

Today's Headlines

* The President has ordered the appointment of five additional judges to the Madras High Court.

 * Rs 20,000 per hectare: Relief package for farmers affected by unseasonal heavy rains - Chief Minister Stalin orders.

*  The Department of Primary Education has directed to send recommendations regarding opening and upgradation of new primary schools.

 * ISRO plans to launch SSLV-T2 small rocket on February 10.

*  Ban on 138 gambling apps of foreign countries including China: Central government action.

 * Earthquake hits Turkey, Syria: Bodies unearthed; The death toll exceeded 1,500.

* International Wrestling Championships: Bronze medal for Indian athlete.

 * Women's South Asian Football: India-Bangladesh made Draw. 
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 03.02.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.02.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் ...

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

பொருள்:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது


பழமொழி :

Try and try again you will succeed at last.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :

அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.


பொது அறிவு :

1. ரேடியோ கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் யார் ? 

 கியூரி

. 2. உலக அதிசயமான தொங்கும் தோட்டம் எங்கு உள்ளது ? 

 பாபிலோன்.


English words & meanings :

when an ant is looking for a job we call it APPLICANT


ஆரோக்ய வாழ்வு :

தினமும் 2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வரலாம். இது ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் குறைக்க பெரிதும் உதவி செய்யும்.
தயிர் பச்சடிகளில் பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.


NMMS Q

ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க பயன்படும் வினைவேகமாற்றி எது?

 விடை: இரும்பு


 பிப்ரவரி 03 இன்று

யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்


யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. 


என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்


கிறித்துவக் கம்பர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. 

நீதிக்கதை

என் அடிமைகளுக்கு நீ அடிமை

மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.

அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும்படி ஆணையிட்டான்.

முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப்படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.

முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து கொல்ல வரும் நபரைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா? என்று கேட்டான்.

அதற்கு முனிவர் மன்னா... நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது! என்றார்.

அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக முடியும்? என்று முனிவரிடம் கேட்டான். அவர் அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன் என்றார். மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.


இன்றைய செய்திகள் - 03.02.2023

* ஐ.டி. பயன்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழக காவல்துறை: டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்.

* கோடைகாலத்தில் தினசரி மின்தேவை 19 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்: தமிழக மின்வாரியம் கணிப்பு.

* மன்னார் வளைகுடா, குமரிக் கடலை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன், தூத்துக்குடியில்  3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

* வீரர்கள் எந்த இடத்திலும் தாக்குதல் நடத்த ஜெட்பேக்ஸ், ரோபோ, ட்ரோன்கள் வாங்க டெண்டர் வெளியிட்டது இந்திய ராணுவம்.

* 2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத இந்தியா - ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* “போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய ராணுவ வீரர் வாக்குமூலம்.

* 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

* டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.

Today's Headlines

* Tamil Nadu Police pioneered in IT usage proudly said byDGP Shailendra Babu .

* Daily power demand to rise to 19,000 MW in summer: Tamil Nadu Power Board forecast

* Gulf of Mannar, depression approaching Kumarik Sea: Cyclone warning cage number 3 raised at Pampan, Tuticorin.

 * The Indian Army has issued a tender to buy jetpacks, robots and drones for soldiers to attack anywhere.

* Carbon free India by 2070 - Rs.35 thousand crore allocation.

* "Ukrainians were killed and sexually abused during the war," says ex-Russian soldier.

* South Africa won the 3-match ODI series for 2-1.

* TNPL  Cricketers auction: 2 days to be held in Chennai.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here for latest Kalvi News