Showing posts with label STD 4 - Q&A. Show all posts
Showing posts with label STD 4 - Q&A. Show all posts

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 3. யானைக்கும் பானைக்கும் சரி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 பக்கம் - 19

 வாங்க பேசலாம்

1. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதையை உம் சொந்தநடையில் கூறுக.

 விடை :  மரியாதை இராமனிடம் வந்த விசித்திரமான வழக்கு இது. உழவரின் மீது அரபு வணிகர் தொடுத்த வழக்கு. ஓர் உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக அரபு வணிகர் ஒருவரிடம் யானையை இரவல் கேட்டார். அவரும் கொடுத்தார். ஊர்வலத்தின்போது யானை இறந்துவிட்டது. அரபு வணிகர் யானையைத் திருப்பித் தரும்படி கேட்கிறார். உழவரோ, “யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டதாகவும், மாற்றாக வேறு யானை வாங்கித் தருவதாகவும் அல்லது யானைக்குரிய விலையைத் தருவதாகவும் நான் கூறினேன். ஆனால் வணிகர் ஏற்றுக் கொள்ளாமல் அடம்பிடிக்கிறார்,” என்று கூறினார். 

 யானைக்கும் பானைக்கும் சரி உண்மையை அறிந்த மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்திற்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். பின்னர் உழவரைத் தனியாக அழைத்து, தான் ஆள் அனுப்பும்போது வந்தால் போதும் என்றார். பிறகு அவரிடம், “வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள்” என்று கூறி அனுப்பி விட்டார். மரியாதை இராமன் கூறியபடி உழவர் செய்தார். வணிகர் உழவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்காக வேகமாக வந்து கதவைத் திறந்தார். பானைகள் விழுந்து உடைந்தன. உழவர் வணிகரிடம், “அப்பானைகள் காலங்காலமாக வைத்திருந்த பழம் பானைகள். இவற்றை உடைத்துவிட்டீரே, எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்,” என்று சத்தமிட்டார். வணிகர் செய்வதறியாமல் திகைத்தார். வணிகர் நடந்ததை மரியாதை இராமனிடம் கூறினார். மரியாதை ராமன் வணிகரிடம் “நீங்கள் இறந்துபோன யானையை உயிருடன் திருப்பிக் கேட்கிறீர். அவர் உடைந்த பழம்பானைகள் வேண்டும் என்று கேட்கிறார். நீங்கள் பானையைக் கொடுத்தால் அவர் யானையைக் கொடுத்துவிடுவார்” என்று கூறினார். வணிகர் தன்னால் பழைய பானைகளைத் தரமுடியாது என்றார். மரியாதை இராமன் ”உங்களால் திருப்பித் தர முடியாது என்றால் அவரால் மட்டும் எப்படித் திருப்பித் தர முடியும்” என்றார். ஆதலால் யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது’ என்று தீர்ப்பளித்தார்.

 சிந்திக்கலாமா?

 உன் நண்பன் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு உன்மீது சினம் கொண்டால் நீ என்ன செய்வாய்?

 விடை : நான் அவனைச் சமாதானப்படுத்துவேன். என்ன நடந்திருந்தாலும் அவனிடம் உண்மை கூறிப் புரிய வைப்பேன். சினம் கொள்வதற்கான அவசியமில்லை என்று கூறுவேன். சினத்தை விடுத்து சிந்திக்க முயற்சி செய்யும்படி கூறுவேன். 

 வினாக்களுக்கு விடையளிக்க 

1. உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்? 

 விடை : உழவர், தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக யானையை இரவல் கேட்டார். 

 2. ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது? 

 விடை :  ஊர்வலம் சென்ற யானை இறந்துவிட்டது. 

3. மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து என்ன கூறினார்? 

 விடை :  மரியாதை இராமன் உழவரை தனியாக அழைத்து “நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டாம். அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன். அவர் வரும்போது உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள். பின்னர், நடப்பதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

 4. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதை உணர்த்தும் நீதி என்ன?

 விடை : ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு. 

  பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக

 1. வணிகர் ………………. நாட்டைச் சேர்ந்த வர். 

 விடை : அரபு 

 2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர்…………. 

 விடை :  மரியாதை ராமன்

 3. திருமண ஊர்வலத்தில் …………….. இறந்து விட்டது. 

 விடை : யானை 

 4. பழைய …………. கீழே விழுந்து நொறுங்கின. 

 விடை :  பானைகள்




பக்கம் - 20 
சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.

 விடை :


 குறிப்புகளைப் பயன்படுத்திக் கதை உருவாக்குக.  பொருத்தமான தலைப்பிடுக. 

 நான்கு எருதுகள் – ஒற்றுமையாக வாழ்தல் – சிங்கம் – பிரிக்க நினைத்தல் – எருதுகள் எதிர்த்தல் – சிங்கத்தின் சூழ்ச்சி – எருதுகள் பிரிதல் – சிங்கம் வேட்டையாடுதல்.

 விடை :  ஒற்றுமையே பலம் ஒரு காட்டில் நான்கு எருதுகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அவை நான்கும் வலிமையுடன் இருந்தன. அக்காட்டில் வாழ்ந்த சிங்கம் இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து, எப்படியாவது இவைகளைப் பிரித்துவிட வேண்டும் என்று எண்ணியது. 

முதலில் ஒரு எருதைக் கொல்லலாம் என்று சிங்கம் சீறிப் பாய்ந்தது. ஆனால் மற்ற எருதுகள் சேர்ந்து சிங்கத்தைத் தம் கொம்புகளால் குத்தித் தாக்கின. வலியால் துன்புற்ற சிங்கத்திடம் நரி வந்து பேசியது. தந்திரமாக எப்படியாவது நான்கு எருதுகளையும் பிரிப்பதாகக் நரி கூறியது. 

அதேபோல் ஓர் எருதிடம் சென்று “உன் வலிமையால்தான் சிங்கம் பயந்து ஓடியது. மற்ற எருதுகளால் இல்லை ” என்று கூறியது. இதேபோல் ஒவ்வொரு எருதிடமும் கூறியது. எருதுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பிரிந்தன. அச்சமயம் பார்த்து சிங்கம் ஒவ்வொரு எருதாய்க் கொன்றது. எருதுகள் ஒற்றுமையாய் இல்லாததால் கொல்லப்பட்டன. 

  குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?

 விடை :



 கூடுதல் வினாக்கள் 

 வினாக்களுக்கு விடையளிக்க. 

1. உழவர், மரியாதை இராமனிடம் என்ன கூறினார்?

விடை : “ஐயா, இரவலாக வாங்கிய யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது. அதற்குரிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது, வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், இந்த வணிகர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?” என்று வருத்தத்துடன் உழவர் கூறினார். 

2. உழவருக்கு மரியாதை இராமன் சொன்ன யோசனை யாது?

விடை :  வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தல். கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்தல். இவற்றைச் செய்தால் போதும் என்று உழவருக்கு மரியாதை இராமன் கூறினார். 

 3. மரியாதை இராமன் என்ன தீர்ப்பு அளித்தார்? 

விடை :  வணிகர் இறந்துபோன தனது யானையைக் கேட்டார். உழவர் உடைந்துபோன பானைகளைக் கேட்டார். இரண்டுமே திரும்பப் பெற முடியாதவை. இறந்துபோன யானை மீண்டும் உயிர்பெற்று வர இயலாது என்பதை மரியாதை இராமன் உணர வைத்தார். யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது என்று அவர் தீர்ப்பு அளித்தார்.

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 4. நன்னெறி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

  வாங்க பேசலாம் 


 1. பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ்க. 

 விடை : மாணவர்கள் தாங்களாகவே பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ வேண்டும். 

 2. உன்னிடம் பிறர் எப்படிப் பேச வேண்டும் என எண்ணுகிறாய்? ஏன்?

 விடை :என்னிடம் பிறர் இன்சொல் பேச வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் நாம் பேசும் இன்சொற்களால் அனைவரும் மகிழ்வர். பிறர் நம்மிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று எண்ணுகிறோமா அதேபோல் நாமும் பிறரிடம் பேசவேண்டும்.

 சிந்திக்கலாமா? 

 இன்சொற்களைப் பேசுவதால் நன்மையே விளையும் என்பதைப் பிறருக்கு எப்படி உணர்த்தலாம்? 

 விடை : பிறர் மனதைப் புண்படுத்தாத சொற்களே இன்சொற்கள். நாம் எதிர்நோக்குபவர்களில் புதியவர், சிறியவர், பெரியவர், நண்பர், உறவினர் என எவராக இருந்தாலும் இனிமையாகப் பேசுதல் சிறப்பு. நலம் விசாரித்தல், உபசரித்தல் போன்றவையும் இன்சொல்லாகும். இன்சொல் பேசுவதனால் ஏற்படும் நன்மைகளை உணர்த்தும் கதைகளை, நிகழ்வுகளை நாம் பிறருக்குக் கூறலாம்.

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. ‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

 அ) இன் + சொல் ஆ) இனிமை + சொல் இ) இன்மை + சொல் ஈ) இனிய + சொல்

 விடை :ஆ) இனிமை + சொல் 

 2. ‘அதிர்கின்ற வளை’ – இச்சொற்களில் அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள்…………… 

அ) உடைகின்ற ஆ) ஒலிக்கின்ற இ) ஒளிர்கின்ற ஈ) வளைகின்ற

  விடை :ஆ) ஒலிக்கின்ற

 3. வியனுலகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. 

அ) வியன் + உலகம் ஆ) வியல் + உலகம் இ) விய + உலகம் ஈ) வியன் + னுலகம்

  விடை :அ) வியன் + உலகம் 

 வினாக்களுக்கு விடையளிக்க 

 1. உலகம் எப்போது மகிழும்? – நன்னெறிப் பாடல் மூலம் உணர்த்துக.

 விடை :உலகம் மக்கள் பேசும் இன்சொற்களைக் கேட்டு மகிழும். 

 2. கடலின் அலைகள் எப்போது பொங்கி எழும்? 

 விடை :குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளியைக் கண்டு கடலின் அலைகள் பொங்கி எழும். 

பொருத்துக : 

1. இன்சொல் – கதிரவனின் ஒளி 

2. வன்சொல் – நிலவின் ஒளி 

3. அழல்கதிர் – கடுஞ்சொல்

 4. தண்ணென் கதிர் – இனிய சொல் 

 விடை : 1. இன்சொல் – இனிய சொல் 

2. வன்சொல் – கடுஞ்சொல்

 3. அழல்கதிர் – கதிரவனின் ஒளி

 4. தண்ணென் கதிர் – நிலவின் ஒளி 

 பக்கம் - 23
 குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக



சிறு வட்டத்தில் உள்ள எழுத்தை முதலாகக் கொண்டு சொல் உருவாக்குக

விடை : 

1. குடை 
2. குவி 
3. குதி 
4. குதிரை 
5. குறை 
6. குவியல் 
7. குளி
8. குடம் 
9. குரல் 
10. குடல்

செயல் திட்டம்:

இனியவை கூறல் என்னும் திருக்குறள் அதிகாரத்திலுள்ள குறட்பாக்களை எழுதி வருக. 

விடை : 

 1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
      செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

 2. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
      இன்சொலன் ஆகப் பெறின். 

3. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
     இன்சொ லினதே அறம். 

4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 
    இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

 5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
    அணியல்ல மற்றுப் பிற.

 6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
     நாடி இனிய சொலின்.

 7. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
     பண்பின் தலைப்பிரியாச் சொல். 

8. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
     இம்மையும் இன்பம் தரும். 

9. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
     வன்சொல் வழங்கு வது.

 10. இனிய உளவாக இன்னாத கூறல் 
      கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 

  கூடுதல் வினாக்கள்

 வினாக்களுக்கு விடையளிக்க.

 1. நன்னெறி நூல் பற்றி எழுதுக.

விடை : நீதி நூல்களுள் ஒன்று நன்னெறி. இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினார். நாற்பது நேரிசை வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வோர் உவமை மூலம் ஒவ்வொரு நீதிக்கருத்தை விளக்குவது இந்நூலின் சிறப்பாகும்.

2. இன்சொல் – வன்சொல், நன்னெறிப் பாடல் மூலம் விளக்குக. 

விடை :  கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்று நன்னெறி கூறுகிறது.

  பாடல் பொருள் பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்பதைப் புரிந்து செயல்படுக.

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 5. பனிமலைப் பயணம் - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 பனிமலைப் பயணம்


வாங்க பேசலாம்
பக்கம் - 26
 சிந்திக்கலாமா? 

 பக்கத்து ஊருக்குச் செல்ல படகிலும் செல்லலாம், பேருந்திலும் செல்லலாம்… எதில் பயணம் செய்ய நீ விரும்புவாய், காரணம் என்ன?

விடை :  நான் படகில் பயணம் செய்ய விரும்புவேன். 

காரணம் : சாலை வழிப் பயணம் என்பது எப்போதும் எளிதானது. வழக்கமாக நிகழும் ஒன்று. ஆனால் படகில் பயணம் செய்வது அரிதானது. சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும், மாசடைந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது. படகில் பயணம் செய்யும்போது மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவும். பயணம் செய்வதற்கான சோர்வு இல்லாமல் இருக்கும். இவையே நான் படகில் பயணம் செய்வதற்கான காரணங்கள் ஆகும். 

  சிந்திப்போம்! எழுதுவோம்!
பக்கம் - 27

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது? 

அ) மெதுவாக ஆ) எளிதாக இ) கடினமாக ஈ) வேகமாக 

விடை :  அ) மெதுவாக 

2. “என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது…………….. அ) என்ன என்று ஆ) என்னென்று இ) என்னவென்று ஈ) என்னவ்வென்று 

விடை :  இ) என்னவென்று 

3. “அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………… 

அ) அந்த + காட்டில் ஆ) அ + காட்டில் இ) அக் + காட்டில் ஈ) அந்தக் + காட்டில்

 விடை : ஆ) அ + காட்டில் 

 4. “என்னவாயிற்று” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) என்ன + ஆயிற்று ஆ) என்னவா + ஆயிற்று இ) என்ன + வாயிற்று ஈ) என்னவோ + ஆயிற்று 

விடை : அ) என்ன + ஆயிற்று 

  வினாக்களுக்கு விடையளிக்க 

  1. படகில் செல்லும்போது, விலங்குகள் ஏன் திடீரென அலறின? 

விடை :  விலங்குகள் படகில் செல்லும்போது, திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது. அதனால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்ததனால் விலங்குகள் அலறின. 

 2. நரி, முதலையிடம் என்ன கூறியது? 

விடை :  “இதற்கு முன் ஒரு முதலை, விலங்குகளைச் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்துவிட்டது.” “விஷ முறிவுச் செடிகளை நாங்கள் தின்றுள்ளதால், எங்களை யார் கடித்தாலும் அவர்கள் இறந்துவிடுவர்” என்று நரி முதலையிடம் கூறியது. 

  3. இக்கதையில் உனக்குப் பிடித்த விலங்கு எது? ஏன்? 

விடை : எனக்குப் பிடித்த விலங்கு நரி. ஏனெனில் நரி தன் தந்திரத்தால் உடனிருந்த அனைத்து விலங்குகளையும் காப்பாற்றியது. 


 உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக



மொழியோடு விளையாடு 

 கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. 
உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.

அகர வரிசைப்படுத்துக 

 மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மௌவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய். 

 மைதானம், முறுக்கு, மோப்பம், மகிழ்ச்சி, மௌவல், மாதம், மொழி, மீன், மேகம், மெத்தை, மிளகு, மூட்டை




Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 6. ஆராய்ந்திட வேண்டும் - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 

 6. ஆராய்ந்திட வேண்டும்   

இரண்டாம் பருவம் 

வாங்க பேசலாம் 

பக்கம் - 33

1. கதையை உம் சொந்த நடையில் கூறுக. 

விடை :  மன்னர் ஒருவர் தம் நாட்டு மக்களின் நிலையை அறிய குதிரையில் பயணம் செய்தார். குதிரையும் மன்னரைப் போன்று இரக்கக் குணம் கொண்டது. அக்குதிரை சாலையை நோட்டமிட்டுக் கொண்டே சென்றது. அப்போது காலில் அடிபட்ட நாய் ஒன்று நடக்க முடியாமல் நொண்டி நொண்டி வருவதைப் பார்த்தது. மன்னரின் அனுமதி பெற்று அந்த நாயை மன்னருக்கு முன் அமரச் செய்தது. மன்னர் முன்னே அமர்ந்து குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்த அந்த நாயானது மிகவும் மகிழ்ச்சியடைந்தது. குதிரையின் மீது அமர்ந்து வரும் மன்னரைப் பார்த்து மக்கள் அனைவரும் வணக்கம் தெரிவித்தனர். நாய், குதிரையையும் மன்னரையும் வணங்காமல் மக்கள் தன்னை வணங்குவதாக எண்ணி மகிழ்ச்சியில் தன்னை மறந்தது. தன் தலையைத் தூக்கியபடி ‘லொள் லொள்’ என்று குரைத்தது. 

  நாயின் இச்செயலைக் கண்ட குதிரை “நாயே, அமைதியாக இருந்து கொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால் எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை. நாய், “மக்கள் என்னை வணங்குவது உனக்குப் பொறாமையாக உள்ளது. அதனால்தான் என்னை மட்டம் தட்டுகிறாய்” என்றது. குதிரை, நாயிடம் “அவர்கள் மன்னருக்குத்தான் மரியாதை கொடுக்கின்றனர். உனக்கு இல்லை” என்று கூறியது. ஆனால் நாய் அதனை ஏற்கவில்லை. குதிரையின் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாமல் மேலும் சத்தமாகக் குரைத்தது. மன்னரின் அருகில் வந்து கொண்டிருந்த காவலர்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினர். அங்கிருந்து சென்ற நாய் சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது. தான் இல்லாத போதும் மக்கள் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். இக்காட்சியைப் பார்த்தபோது நாய்க்கு உண்மை புரிந்தது. தன் தவற்றினை உணர்ந்தது. ஆராயாமல் முடிவு எடுத்ததை எண்ணி வருந்தியது. 

 2. ஆராய்ந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளைக் கூறுக. 

விடை :  நாம் செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். அவையே நன்மைகளைத் தரும். நம்மால் ஆராய்ந்து செயல்படும்போது, பிழைகளைத் தவிர்க்க முடியும். நம்மால் துன்பத்திலிருந்து விடுபட இயலும். நாம் எல்லோராலும் பாராட்டப்படுவோம். பிறரைச் சார்ந்து இல்லாமல் தனித்துவமாக நம்மால் இயங்க முடியும். நல்லது கெட்டதைப் பகுத்தறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். நாம் தலைமைத் தாங்கிச் செயலாற்ற முடியும். மன்னரைப் போன்று நமக்கு மரியாதை கிடைக்கும். 

சிந்திக்கலாமா?

 நீ செய்யாத செயலுக்கு உனக்கு ஒருவர் நன்றி கூறினால் அல்லது பரிசு அளித்தால் அவ்வேளையில் நீ என்ன செய்வாய்? 

விடை :  ஒருவர் எனக்கு நன்றி கூறியதற்கு எதிர் நன்றி கூறிவிட்டு நான் அச்செயலைச் செய்யவில்லை என்று அவரிடம் உண்மையைக் கூறுவேன். அவர் ஏதேனும் பரிசு அளித்தால் ‘பரவாயில்லை வேண்டாம்’ என்று சொல்லி விடுவேன். 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 வினாக்களுக்கு விடையளிக்க 

 1. குதிரை ஏன் நாய்க்கு உதவி செய்ய நினைத்தது? 

விடை :  காலில் அடிபட்டதால் நாய் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தது. அதனால் குதிரை நாய்க்கு உதவி செய்தது. 

 2. காவலர்கள், குதிரைமீது இருந்த நாயை ஏன் கீழே இறக்கிவிட்டனர்?

 விடை :  நாய், குதிரையின் மேலே அமர்ந்துகொண்டு குதிரையிடம் விவாதம் செய்து கொண்டு சத்தமாகக் குரைத்தது. ஆதலால் காவலர்கள் நாயைக் கீழே இறக்கிவிட்டனர். 

நிறுத்தக் குறியிடுக 

 “அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக் கொண்டு, அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது.

 ஒரே சொல் இரண்டுமுறை அடுத்தடுத்து வருமாறு சொற்றொடர் அமைத்து எழுதுக. 

 (எ.கா.) நாய் ஒன்று நொண்டி, நொண்டி நடந்தது. 

 1. தத்தித் தத்தி = குழந்தை தத்தித் தத்தி நடந்தது. 

2. எழுதி எழுதி = கந்தன் எழுதி எழுதி பார்த்தான். 

3. திரும்பித் திரும்பி = குழந்தை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றது. 

4. குனிந்து குனிந்து = குனிந்து குனிந்து புத்தகத்தை எடுத்து அடுக்கியதால் முதுகு மிகவும் வலிக்கிறது என்றான் கந்தன்.

  குறிப்பைப் படி! விடையைக் கொடு!

அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

 போலி – ஒன்றைப்போல இருத்தல் 

பொறாமை – காழ்ப்பு 

சவாரி – பயணம்

 வருந்தியது – துன்படைந்தது 

மரியாதை – நேர்மையான ஒழுக்கம் 

சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக 

 மண்னர் – மன்னர்

 குதிறைச் சவாரி – குதிரைச் சவாரி 

உர்சாகம் – உற்சாகம் 

சிறந்தவண் – சிறந்தவன் 

மக்கலெள்ளாம் – மக்களெல்லாம்

 கனைப்பொளி – கனைப்பொலி 

இறக்கக் குணம் – இரக்கக் குணம் 

கிராமங்கல் – கிராமங்கள் 

விலங்குகளுக்குரிய ஒலிப்புகளை வட்டமிடுக.



1. குதிரை கனைக்கும் 

2. சிங்கம் முழங்கும் 

3. நாய் குரைக்கும் 

4. புலி உறுமும் 

5. யானை பிளிறும்அறிந்து கொள்வோம்

செயல் திட்டம் 

 பிறர் பாராட்டுவதற்குரிய நல்ல செயல்கள் எவையெவை என உன் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதி வருக. 

விடை :  

  • விடியற்காலையில் துயிலெழுதல்.
  •  தினமும் இறைவனை வழிபடுதல் 
  • பள்ளிக்கு நேரத்திற்குச் செல்லுதல். 
  • வாரம் ஒருமுறை நகம் வெட்டுதல். 
  • தலைமுடியைச் சீராக வெட்டுதல். 
  • பிறருக்கு உதவி செய்தல். 
  • அன்புடன் திகழுதல். 
  • பெரியோரை மதித்தல் 
  • இனிமையாகப் பேசுதல்
  •  பணிவுடன் இருத்தல். 
  • ஒழுக்கத்தைக் கடைபிடித்தல். 
  • வாய்மையைப் போற்றுதல். 
  • அடக்கமாக இருத்தல். 

முக்காலம் அறிவோமா?

பக்கம் - 36 

கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் போல எழுதுக.


அட்டவணையில் விடுபட்ட இடங்களை நிரப்புக

படங்களுக்குப் பொருத்தமான காலங்களைப் பயன்படுத்தித் தொடர் எழுதுக

படங்களுக்குப் பொருத்தமான காலங்களைப் பயன்படுத்தித் தொடர் எழுதுக.





கூடுதல் வினாக்கள் 

 வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. மன்னர் எதற்காகக் குதிரையில் பயணம் மேற்கொண்டார்? 

விடை :  கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டியும், மன்னர் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டார். 

 2. குதிரை அரசரிடம் என்ன கேட்டது?

 விடை :  ஒரு நாய் நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று நடந்து கொண்டிருந்தது. நாயை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு, அது செல்ல வேண்டிய இடத்தில் விட்டுவிடலாமா என்று குதிரை அனுமதி கேட்டது. 

 3. குதிரையின் இரக்கக் குணத்தைப் பார்த்து மன்னர் என்ன கூறினார்?

 விடை : “குதிரையே! என்னைப் போலவே நீயும் இரக்கத்துடன் செயல்படுகிறாய்! அந்த நாய்க்கு உதவுவதில் உனக்கு இருக்கின்ற மகிழ்ச்சியைப் போன்றே எனக்கும் இருக்கின்றது” என்று மன்னர் குதிரையிடம் கூறினார். 

 4. நாயின் செயலைக் கண்டு குதிரை என்ன கூறியது?

விடை :  “நாயே! அமைதியாக இருந்துகொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால் எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை.

 5. நாய் தன் தவறினை எப்போது உணர்ந்தது? 

விடை :  “நாய்! குரைத்துக் கொண்டே வந்ததால் காவலர்கள் அதனை இறக்கிவிட்டனர். சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டு நாய் திரும்பிப் பார்த்தது; தான் இல்லாதபோதும் குடிமக்கள் எல்லாரும் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்தார். இக்காட்சியைப் பார்த்த நாய்க்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. தன்னுடைய தவற்றினை நினைத்து வருந்தியது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news