School Calendar - August 2022

ஆகஸ்ட் மாத  முக்கிய தினங்கள்.


06-08-2022-- குறை தீர்க்கும் நாள்.


27-08-2022 --- சனி --- CRC நாள்..


வரையறுக்கப்பட்ட விடுமுறை:


1) 03-08-2022---  புதன் ---ஆடிப் பெருக்கு /ரிக் உபகர்மா


2) 05 -08-2022 -- வெள்ளி -- வரலட்சுமி  விரதம்.


3) 11-08-2022 -- வியாழன் ---யஜுர் உபகர்மா


4) 12-08-2022 -- வெள்ளி --

காயத்ரி ஜெபம்.


அரசு விடுமுறை நாட்கள் :


1) 09-08-2022 -- செவ்வாய் -- மொஹரம் பண்டிகை


2) 15-08-2022 -- திங்கள் -- சுதந்திர தினம்


3)19-08-2022 --வெள்ளி -- கிருஷ்ண ஜெயந்தி


4) 31-08-2022 -- புதன் -- விநாயகர் சதுர்த்தி




பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் / பதிவு செய்யப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் அல்லது உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் , தொழில்சார்ந்த அல்லது கலை அல்லது சமுதாயக் கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் . அதிக அளவிலான மாணவர்களை சென்றடைவதுதான் இதன் நோக்கம் ஆகும் . உள்ளூர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளின் பங்கு பிரதானமாக அமைவதால் , இக்கூட்டமைப்புகளும் நுகர்வோர் மன்றங்களாக செயல்படலாம்.

நுகர்வோர் மன்றங்கள் உருவாக்குதலில் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு - Download here



 Click here to Join WhatsApp group for Daily kalvi news

1/8/2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம்

  1.8.2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம்.





Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக சேர்க்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டுதலில் , புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். கல்வியாண்டின் இறுதியில் கணக்கெடுப்பு நடத்தாமல், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 5,8,10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Click here to Join WhatsApp group for Daily kalvi news

SMC Training - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் கால அட்டவணை வெளியீடு.

2022-2023 ம் கல்வியாண்டு  பள்ளி மேலாண்மைக்குழு - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் - நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 - ன்படி பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் .  அனைத்து அரசு தொடக்கநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன.

 குழந்தைகளுக்கான தரமான கல்வியை உறுதி செய்திடவும் , அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் , பெற்றோர்களின் முக்கியமானது என்று கல்வி உரிமை சட்டம் வலியுறுத்துகிறது. எனவே பெற்றோர்களின் பங்கேற்பை உறுதி செய்திட மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து இதன்படி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சியளித்து , இக்குழுக்கள் சிறப்பாகச் செயல்பட ஊக்கம் அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி அளித்தல் மற்றும் கால அட்டவணை :


SMC Training - Proceedings to Districts - Dr level, School Level , Letter pad & ID card Expenses - reg.pdf - Download here 



Click here to Join WhatsApp group for Daily kalvi news

School Morning Prayer Activities - 27.07.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2022



Click here to download pdf file

Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி மாணவர்களின் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி: பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்

 பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூரில் நடந்த உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். செயலி மூலம் திறன் கண்காணிக்கப்பட்டு ,மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்படும் என அவர்  கூறினார்.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

TN PTA Rules And Regulations

 தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள்!


Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022-2023 ஆம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக் குழு மாநில மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022-2023 ஆம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக் குழு மாநில மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு.



SPD Proceedings avail
👇👇👇👇👇👇👇👇👇👇

School Morning Prayer Activities - 26.07.2022

மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 சென்னையில் அமர் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமானது, 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' என்ற திட்டத்துடன் இணைந்து 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் சேர்ந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது. 

இதனை அமர் சேவா சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். தரமான கல்வி-பெண் கல்வி-திறன் மேம்பாடு-விளையாட்டுக்கல்வி-உடல் கல்வி-ஆகியவற்றில் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியரை முழுமையாக ஈடுபடுத்தக்கூடியத் திட்டம் தான் இது.


இந்தியாவிலேயே நமது மாநிலம்தான் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியருக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அந்த வகையில் இப்போது தொடங்கப்பட்டுள்ள திட்டம் மிகமிக ஒரு முன்னோடித் திட்டம். 

இரண்டாவது நிகழ்வாக, அமர் சேவா சங்கத்தின் நாற்பதாம் ஆண்டை முன்னிட்டு ஆண்டு மலர் வெளியிடும் நிகழ்ச்சி. மரியாதைக்குரிய ராம கிருஷ்ணன்-சங்கர் ராமன் ஆகியோரால் இன்று வளர்த்தெடுக்கப்பட்டு வரும் இந்த அமர் சேவா சங்கமானது 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் நலனிற்காக குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சிடும் ஒரு சிறந்த நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. 

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையில் சுய சார்புடன் இருப்பதற்குத் தேவையான திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்புக் கல்வி அளித்து வருகிறது. அவர்கள் நம்பிக்கையுடன் சமுதாய நீரோட்டத்தில் சமநிலை மற்றும் சம வாய்ப்புடன் இணைந்திடும் வகையில் செயல்புரிந்து வருகிறது. 


அமர் சேவா சங்கமானது கிட்டத்தட்ட 900 கிராமங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு மேம்பட கிராமம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. செயலி மூலம் குழந்தைகளுக்கான ஆரம்பகால குறைபாடுகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறீர்கள். 

இதுபோன்ற புதுமையான, ஆக்கப்பூர்வமான திட்டங்களோடு சுமார் 16,000 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த கல்வியினை அளித்து நமது சமுதாயத்தில் அவர்களையும் ஒன்றிணைக்கும் வகையிலே ஆற்றல்மிகு செயல்புரிந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news


தேசியக் கொடி விதிகளில் மத்திய அரசு செய்த முக்கிய திருத்தங்கள்! என்ன அவை?

 பகலில் மட்டுமல்லாது இரவிலும் தேசியக் கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மூவர்ண தேசியக் கொடியை சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறைவதற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் என்பது சட்ட நடைமுறையாக இருந்தது. தற்போது இந்திய தேசியக் கொடி சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தேசியக் கொடிகள் கைத்தறியால் நெய்யப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதியும் அமலில் இருந்தது. ஆனால் தற்போது அந்த விதியிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கைத்தறி மட்டுமல்லாது தேசியக் கொடியானது இயந்திரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும், பாலிஸ்டரில் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம் எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தது நினைவு கூறத்தக்கது.



 Click here to Join WhatsApp group for Daily kalvi news


மனமொத்த மாறுதல் கலந்தாய்வு- கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

  தமிழ்நாடு - தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - 2021-2022 கல்வியாண்டிற்கான பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு- கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


IMG_20220725_171107

IMG_20220725_171126

IMG_20220725_171117



Click here to Join WhatsApp group for Daily kalvi news

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்

 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்.


அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம்

காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என தகவல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தகவல்


 Click here to Join WhatsApp group for Daily kalvi news


தமிழ்நாடு கல்வி ‘பெல்லோஷிப் ' திட்டம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

 தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக இல்லம் தேடிக் கல்வி,எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அவ்வகையில், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது


அதன்படி, முதுநிலை உறுப்பினர் (senior fellow), உறுப்பினர் (fellow) என 2 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முதுநிலை உறுப்பினர் பதவிக்கு 38 பணியிடங்களும், உறுப்பினர் பதவிக்கு 114 பணியிடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை 15-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.


தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜூலை31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள பட்டதாரிகள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform என்ற வலைதளம் வழியே உடனடியாக விண்ணப்பிக்கலாம்.


மொத்த பணிக்காலம் 2 ஆண்டுகளாகும். முதுநிலை உறுப்பினருக்கு ரூ.45,000, உறுப்பினருக்கு ரூ.32,000 மாத தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்தப் பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், முழுமையாக பணியைமுடிப்பவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை tnschools.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TERM 1 CLASS- 4 LESSON PLAN GUIDE TAMIL & ENGLISH MEDIUM (PDF)

TERM 1 CLASS 4, 5 | LESSON PLAN GUIDE COLLECTION | DOWNLOAD PDF

TERM 1 CLASS 5 LESSON PLAN GUIDE TAMIL & ENGLISH MEDIUM (PDF)







 Click here to Join WhatsApp group for Daily kalvi news 



ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ' ஆசிரியர் மனசு ' பெட்டி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 

ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சியானது இன்று கோவையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டடு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித் துறை அலுவலகங்களில் ' ஆசிரியர் மனசு ' என்ற பெட்டி வைக்கப்படும.   ' ஆசிரியர் மனசு ' பெட்டி மூலம் மனுக்களை பெற்று கோரிக்கைகள் நீறைவேற்றப்படும். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

மண்டல ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள்

மண்டல ஆய்வுக் குழுவினரால் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது – ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள் வழங்கி வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு.


Zonal meeting hm instructions - Download here... 


Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழக அரசின் பள்ளிகல்விதுறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


அதன்படி,


1. பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.


 2. சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது.


 3. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.


4.  மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது.


 5.சத்துணவு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.


 6.  பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் மாணவர்களுக்கு"வழங்கப்பட வேண்டும்.


 7.  பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிட வேண்டும்.


8.   ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. 


9.  மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைக்காக பள்ளியை விட்டு வெளியே அனுப்பக் கூடாது. 


10.  ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-இல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்


மேலும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டுமெனவும் இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.71% மாணவர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம். 

பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.அவர்களும் மேற்கூறிய இணையதளங்களிலேயே தேர்வு முடிவை அறியலாம். 
இந்நிலையில் பிளஸ்-2 மத்திய பாடப்பிரிவுக்கான (சிபிஎஸ்இ) தேர்வு முடிவு தாமதத்தால் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. பின்னர் அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ தேர்வு வாரியம் விரைவில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

 சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 98.83% பேர் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதல் இடத்தை பெற்றுள்ளது. பெங்களூரு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.


முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில சொற்களஞ்சியம்

முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில சொற்களஞ்சியம்


Temporary Post - Selected Teachers List

பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி அரசு தொடக்க / மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள நடுநிலை / உயர் நிலை / இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதி மன்ற வழக்கு எண் . WP.No.16704 / 2022 மீதான இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் படி தற்காலி நியமனத்திற்கான ஒப்புதல் அளித்து ஆணை வழங்குதல் சார்பாக தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

இணைப்பில் காண் பட்டியலில் படி ஏற்பளிக்கப்பட்ட தற்காலி நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு ஒப்புதல் அளித்து தற்காலிக நியமனம் பெற்றவர்கள் 20.072022 பணியில் சேர்த்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது . தற்காலிக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கையினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்திட சார்ந்த தெரிவிக்கப்படுகிறது.


 பள்ளித்தலைமையாசிரிகளுக்கு இணைப்பு - தற்காலிக நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவர்கள் விவரம்


Temporary  Post - Selected Teachers List - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மாதந்தோறும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஏப்ரல் ஜுலை மாதங்களில் நடைப்பெற்றுள்ளது . இந்நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் புதிய உறுப்பினர்களைக் கொண்டு மாதந்தோறும் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி நடத்த அறிவுறுத்தப்படுகிறது.


Co-Proceedings of SMC Meeting Guidelines by CoSE, DEE & SPD - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி ஆகஸ்ட் மாதம் 19, 20 & 21 (ஏதேனும் ஒரு நாள்) தேதிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.


Ennum Ezhuthum - July 4th Week Lesson Plan ( July 25 - 29 ) -2022-23

Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023


Ennum Ezhuthum - July 4th Week Lesson Plan 




இல்லம் தேடி கல்வி App New Update 0.41- Direct link

இல்லம் தேடி கல்வி App New Update-0.41 direct link


Update செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk 



Click here to Join WhatsApp group for Daily kalvi news

Palli Paarvai TNSED Administrators App - New User Manual

இனி வரும் நாட்களில் விடுப்பு மற்றும் பள்ளி ஆய்வுகள் இவ்வாறு தான் இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திற்கும் இது பொருந்தும்.



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2022 - School Morning Prayer Activities.





திருக்குறள் :

குறள் எண் – 988

பால் – பொருட்பால்

இயல் – குடியியல். இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.


விளக்கம்:

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.


பழமொழி :

It is hard to please all parties.
ஒருவருக்கு சாதகம் என்றால் மற்றொருவருக்கு பாதகம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய் 

2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்

பொன்மொழி :

பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்....ஒரிசன் ஸ்வெட் மார்டென்

பொது அறிவு :

1.நம் உடலில் உள்ள எந்த உறுப்பை மூளை அதிகமாக வேலை வாங்குகிறது? 

நம் இரண்டு கைகளிலும் உள்ள கட்டை விரல்களை. 

2. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது? 

ஈசல்.




English words & meanings :

be·hold·en - owing gratitude to another, indebted, Adjective:கடமைபடுதல். பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

சோயா சங்க் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சோயா துண்டுகள் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளன, இது உடலில் சரியான செரிமானத்திற்கு அவசியம்.

சோயா துண்டுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

NMMS Q 29:

வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகைபுரிந்த கடைசி ஐரோப்பிய நாடு எது? 

விடை: பிரான்சு

நீதிக்கதை

மனித மனத்தின் ஆசை

இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.

அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.

குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.

ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.


இன்றைய செய்திகள்

21.07.22

📍நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு 7 கேள்விகளை எழுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

📍22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ்.

📍டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ஆம் தேதியே தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

📍இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

📍வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

📍உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது.

📍கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

📍இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Today's Headlines

📍Minister M. Subramanian has said that the central government has raised 7 questions regarding the NEET exemption bill.

 📍CITU union gives strike notice to transport managements pressing 22 demands.

 📍The central government has approved to start procuring short grain paddy in the delta districts from September 1.  The farmers of Delta district have thanked the Tamil Nadu government and the central government for this.

 📍Among those who migrated abroad from India, 1.63 lakh people renounced Indian citizenship in 2021.  Of these, 78,000 have acquired US citizenship.

 📍The Ministry of Commerce has issued new guidelines for working from home.

 📍The list of the world's most powerful passports has been released.  Among these, the Japanese passport is at the top.  The Indian passport is ranked 87th.

 📍The date of the Asian Games, postponed due to the spread of Coronavirus, has been announced.

 📍South Africa won the first ODI against England by 62 runs.
 Prepared by

Covai women ICT_போதிமரம்