School Morning Prayer Activities - 11.10.2022

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 11.10.2022

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: வான் சிறப்பு

குறள் : 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

பொருள்:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

பழமொழி :

Whatever you do, do it properly.
செய்வன திருந்தச் செய்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்

பொன்மொழி :

எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால் பிறரை அவமதிக்கிறானோ, அவன் மந்த புத்தியுடையவன்!


பொது அறிவு :

1. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது? 

கிழக்கு சகாரா பாலைவனம். 

2. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு எது? 

ஜெர்மனி.

English words & meanings :

bio-ly-sis - the death and disintegration of living organisms. Noun. Banana peels take more time for biolysis. உயிரியல் சிதைவு. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

துளசி இலைகளை எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம் .இதனால் சொறி சிரங்கு போன்றவை முற்றிலும் குணமாகும்.

NMMS Q 72 :

விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 9, 30, 51, 72, _________ 

விடை : 93. விளக்கம்: 9+21 = 30; 30+21 = 51; 51*21 = 72; 72+21= 93;

அக்டோபர் 11 இன்று

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்


பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child, Day of the Girl, International Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.[1][2] இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.


நீதிக்கதை

உண்மைக்குக் கிடைத்தப் பரிசு

ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர். 

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். 

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள். 

அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். 

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். 

அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீர்ரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார். 

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார். 

ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். 

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தர். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. 

ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான். 

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். 

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன். 

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது. 

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். 

பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. 

பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார். 

நீதி :
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.

இன்றைய செய்திகள் - 11.10.22

* சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.

* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் வரும் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

* சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.

* 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடக்கம்.

* 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாகே, டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டிப்விக் ஆகிய மூன்று அறிஞர்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

* ரஷ்யா - உக்ரைன் போர்: கீவ் உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்.

* பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் மீண்டும் 'சாம்பியன்'.

* தேசிய விளையாட்டுப் போட்டி: டிரையத்லானில் தமிழக வீராங்கனை ஆர்த்திக்கு வெண்கலம்.

* டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.


Today's Headlines

* Southern Railway has ordered to increase in the speed of 86 express trains from Chennai to Kudur from 110 to 130 mph.

 * Weather forecast: Hefty rain warning for 9 districts in Tamil Nadu today.

 * Union Minister of State for Health Bharati Praveen Pawar has said that AIIMS Hospital in Madurai will be completed by 2026.

 * The Tamil Nadu Welfare and Rehabilitation Department Commissioner have warned that strict action will be taken against agents who illegally send youth abroad.

 * Preparation of budget for the financial year 2023-24 begins.

 * The 2022 Nobel Prize in Economics has been announced.  The Nobel Prize is shared by three American scholars, Ben Bernaghe, Douglas Diamond, and Philip Dibwig.

* Russia-Ukraine war: Bombing hits cities including Kiev again

* Formula 1: Dutchman Verstappen is 'Champion' again.

 * National Games: Tamil Nadu's Aarti wins bronze in the triathlon.

 * T20 World Cup practice match: Team India beat Western Australia and won the match
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

CRC- 15.10.2022-Materials & Videos

 

CRC - 15.10.2022 - Materials & Videos - View here

TNSED EMIS ATTENDANCE NEW APP RELEASED(10.10.2022 முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய EMIS ATTENDANCE செயலி!!)


TNSED EMIS ATTENDANCE NEW APP RELEASED


10.10.2022 முதல் அனைவரும் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டிய புதிய செயலி வெளியீடு


DIRECT LINK👇👇👇






தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு- MODEL OMR Sheet - PDF

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள்  (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!!!

CLICK HERE TO DOWNLOAD-OMR SHEET


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

TNSED - School Attendance New Mobile App Released

 

TNEMIS - TNSED ATTENDANCE NEW APP RELEASED


10.10.2022 முதல் அனைவரும் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டிய புதிய செயலி வெளியீடு

TNSED Attendance App Download here...

10.10.2022 முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய EMIS ATTENDANCE செயலி - என்னென்ன?

Click here to Join WhatsApp group for Daily kalvi news

TNTET Paper 1 - Computer Based Examination Admit Card Published

Flash News-TNTET HALL TICKET PUBLISHED

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-I - 2022 COMPUTER BASED EXAMINATION ADMIT CARD






COMPUTER BASED EXAMINATION ADMIT CARD

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 14.10.2022 முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படும் என 23.09.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது . கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது . தற்போது , தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 ( District Admit Card.I ) இன்று 07.10.2022 முதலும் தேர்வு மையம் ( இடம் ) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு -2 ( Venue - Admit Card - II ) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here to download Admit Card


Click here to view Applications Rejected List

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை அறிவிப்பு-

 கேந்திரவித்யாலயா பள்ளிகளில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை அறிவிப்பு


மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கேந்திரவித்யாலயா பள்ளிகள் நாடு முழுதும் செயல்பட்டுவருகின்றது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது.


கேந்திரவித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஐந்திலிருந்து, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது.இதை தொடர்ந்து, ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள், ‘பால்வாடிகா’ என்ற பெயரில், கே.வி பள்ளியில் துவங்கப்படுகிறது. 


👉பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும், 


👉பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும், 


👉பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும் 


மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை, 


https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் அக்டோபர் 10ம் தேதி வரை காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை பதிவுகள் நடக்கும். பால்வாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும்.


இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய

👇👇👇👇👇👇👇👇


https://chennaiiit.kvs.ac.in/sites/default/files/Balavatika.pdf


Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 07.10.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!!!

 IMG_20221006_125713


தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு , 15.10.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்டப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 07.10.2022 பிற்பகல் முதல் பள்ளிகளுக்கான User ID , Password- ஐப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினைத் தாங்கள் பயிலும் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.5,000 தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்கள்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

 


தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


மழலையா் வகுப்புகளுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையா் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியா்கள் நியமனம் செய்வது தொடா்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் கருத்துரு அனுப்பியுள்ளாா். அதையேற்று மழலையா் வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது தற்காலிக பணி என்பதை அறிவுறுத்தி ஒரு மையத்துக்கு ஓராசிரியா் வீதம் 2,381 நபா்களை தோ்வு செய்ய வேண்டும்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களை தற்காலிக ஆசிரியராக முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக பணியமா்த்தலாம். அதில் தகுதியானவா்கள் இல்லாத நிலையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்தவா்களை நியமனம் செய்யலாம். இவா்கள் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் பணியாற்ற வேண்டும். பள்ளி வேலை நாள்களில் காலை 9.30 முதல் 12.30 மணி வரை பணி நேரமாகும். கல்வியாண்டின் இறுதி நாளில் அவா்கள் பணிகள் நிறைவடைந்துவிடும். 


பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் தரப்படும். இதற்காக நிகழ் கல்வியாண்டுக்கு ரூ.13.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

6-12 வகுப்பு ஆசிரியர்களுக்கு மாநில அளவில் 2 நாட்கள் STEM பயிற்சி SPD செயல்முறைகள்


 6-12 வகுப்பு ஆசிரியர்களுக்கு மாநில அளவில் 2 நாட்கள் STEM பயிற்சி  SPD செயல்முறைகள்


 Click here to download 

4th,5th std - 2nd Term Syllabus Download

 4th,5th std - 2nd Term Syllabus Download


நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடத்திட்டம்


CEOs Seniority List ( 04.10.2022)

 முதன்மைக் கல்வி அலுவலர் / அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 48 அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு!

 CEOs Seniority List 4th Oct.pdf



Click here to Join WhatsApp group for Daily kalvi news

DEOs Seniority List ( 04.10.2022 )

 146 மாவட்டக் கல்வி அலுவலர்களின் அக்டோபர் - 2022 நிலவரப்படி உத்தேச பணிமூப்புப் பட்டியல் (Seniority List) வெளியீடு!

DEOs Seniority List.pdf - Download here





Click here to Join WhatsApp group for Daily kalvi news

Transfer Gov Women Employees - Maternity Leave Clarification - RTI Letter

 மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்க வழிவகை இல்லை - RTI REPLY!



காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும்,1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதி வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த சில தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான தகவல்களை பெற்றோருக்கு தெரிவித்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. 


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அனுமதி பெற்று சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்ளலாம். ஆனால், முழு நாளாக அந்த வகுப்புகள் நடைபெறக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம் – தலைமை செயலாளர் உத்தரவு !

 இனி வரும் அரசு பணிகளுக்கு சேர விரும்புவோர் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்படுவதாக தற்போது தமிழக அரசின் தலைமை செயலரிடம் இருந்து அனைத்து துறை செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது.


கணிணிமயமாகும் அரசுத் துறைகள்:


தமிழக அரசின் அனைத்து துறைகளும் தற்போது கணினி மையமாக்கப்பட்டுள்ளதால் அரசு பணிகளுக்கு பெறுவோர் அனைவரும் கட்டாயமாக கணினியினை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பிணை அவசியமாக வேண்டும் என தமிழக அரசிற்கு டி.என்.பி.எஸ்.சி. பரிந்துரைத்தது.


இதனை ஏற்று தற்போது அனைத்து அரசு பணிகளிலும் சேருவதற்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆபீஸ் ஆட்டோமேசன் படிப்பு


10ம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு தமிழ், ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை, தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு நிலையம், அரசு, அரசு உதவி பெரும், தனியார் பாலிடெக்னிக்களில் 120 மணி நேர பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர்நிலை பணிகள் மட்டுமில்லாது கீழ்நிலை பணிகளுக்கும் இந்த கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எந்தெந்த பதவிகளுக்கு ஆட்டோமேசன் படிப்பு கட்டாயம்.?


டாக்டர்கள், பொறியாளர்கள், வனத்துறை உள்ளிட்ட அதிகாரி பதவிகள், உதவியாளர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் டிரைவர் உள்ளிட்ட கீழ்நிலைப் பதவிகளுக்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

6-7-8-STD | Term 2 பாடத்திட்டக் கையேடு |Maths EM/TM LESSON PLAN Ganga GUIDE.

    CLASS    -  6-7-8-STD Term 2

SUBJECT  -  MATHS

1) VI-MATHS

2) VII-MATHS

3) VIII-MATHS

NUMBER OF SUBJECTS=3.

Click here to download pdf file

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

6-7-8-STD | Term 2 பாடத்திட்டக் கையேடு |Social Science EM/TM LESSON PLAN Ganga GUIDE.

   CLASS    -  6-7-8-STD Term 2

SUBJECT  -  Social Science

1) VI-Social Science

2) VII-Social Science

3) VIII-Social Science

NUMBER OF SUBJECTS=3.


English Medium - Click here to download pdf file


Tamil Medium - Click here to download pdf file

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

6-7-8-STD | Term 2 பாடத்திட்டக் கையேடு | Science EM/TM LESSON PLAN Ganga GUIDE.

  CLASS    -  6-7-8-STD Term 2

SUBJECT  - Science

1) VI-Science

2) VII-Science

3) VIII-Science

NUMBER OF SUBJECTS=3.


English Medium - Click here to download pdf file


Tamil Medium - Click here to download pdf file

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

6-7-8-STD | Term 2 பாடத்திட்டக் கையேடு | ENGLISH LESSON PLAN Ganga GUIDE.

 CLASS    -  6-7-8-STD Term 2

SUBJECT  - ENGLISH

1) VI-ENGLISH

2) VII-ENGLISH

3) VIII-ENGLISH

NUMBER OF SUBJECTS=3.


Click here to download pdf file

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

6-7-8-STD | Term 2 பாடத்திட்டக் கையேடு | TAMIL-தமிழ் LESSON PLAN Ganga GUIDE.

 CLASS    -  6-7-8-STD Term 2

SUBJECT  - TAMIL-தமிழ்

1) VI-TAMIL-தமிழ்

2) VII-TAMIL-தமிழ்

3) VIII-TAMIL-தமிழ்

NUMBER OF SUBJECTS=3.

I) TOTAL NUMBER OF PAGE=200.


Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!

  மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தெரிவிக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக 2 பிரிவுகளாக நடத்தியது. ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து விட்டதால், பழைய படியே பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தேர்வுகள் தொடங்குவதற்கு 45 நாட்கள் முதல் ஒரு மாதம் முன்னதாக மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் தேர்வின் அட்டவணை வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் , நடப்பாண்டில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக நடப்பது போல் 100% பாடத்திட்டத்தின் படி தான் தேர்வுகள் நடக்க உள்ளது.

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு - DISTRICT EMIS TEAM

 மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ள 14/16/18 இலக்க EMIS எண்ணானது, மாணவர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில்  10 இலக்க எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. பழைய எண் படிப்படியாக PORTAL -ல் இருந்து நீக்கப்படும்.

எனவே பழைய எண்களை எதிர்கால தேவை மற்றும் ஒப்பீடுகளுக்கு உரிய பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. ..


- DISTRICT EMIS TEAM

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

School Calendar - October 2022 | அக்டோபர் -- 2022 -- நாள்காட்டி.

 School Calendar - October 2022 |  அக்டோபர் -- 2022  -- நாள்காட்டி.


🏵️ 01-10-2022  --- குறை தீர்க்கும் நாள்


🏵️காலாண்டு விடுமுறை:


1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12 முடிய விடுமுறை.


6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 முடிய விடுமுறை.


🏵️மீண்டும் பள்ளி

திறக்கப்படும் நாள்:


1 - 5 வகுப்புகளுக்கு

13.10.2022 (வியாழன்)


6 - 12 வகுப்புகளுக்கு

10.10.2022 (திங்கள்)


🏵️எண்ணும் எழுத்தும் பயிற்சி:


10.10.2022 - 12.10.2022

(திங்கள் - புதன்)


🏵️15-10-2022 -- CRC


🏵️24 -10- 2022 --  திங்கள்--தீபாவளி --- அரசு விடுமுறை


🏵️அக்டோபர்  --  RL இல்லை

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

New DEO Offices List ( 30.09.2022 )

 


அரசாணை எண். 151, பள்ளிக் கல்வித் துறை, நாள்: 09.09.2022ன் படி பெயர் மாற்றி அமைக்கப்பட வேண்டிய 120 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் புதிதாக அனுமதிக்கப்பட்ட 32 (தனியார் பள்ளிகளுக்கான) மாவட்டக் கல்வி அலுவலகங்கள் விவரம்!


New DEO Offices List - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news