PGTRB பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்!!!

 PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு Syllabus மாற்றம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் 14.11.2022 ல் நடைபெற உள்ளது. இதில் பாடத்திட்டத்தை முற்றிலும் புதிய வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதிகப்படியான அலகுகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் பழைய கருத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டு  நடைமுறையில் உள்ள புதிய கருத்துக்களை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தெரிவித்துள்ளார்.

TNSED - Patents App New - Version Available Update Now

TNSED PARENT APP NEW UPDATE 

Version 0.0.8

Update date - 03.04.2023_ 

Whats New :

CSR Module Added.

 App update link 👇


ENNUM EZHUTHUM CORNERS NAMES | எண்ணும் எழுத்தும் களங்கள் பெயர்கள்

 

ENNUM EZHUTHUM CORNERS NAMES | எண்ணும் எழுத்தும் களங்கள் பெயர்கள்



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

11th & 12th கையாளும் ஆசிரியர்களுக்கு 29.10.2022 CRC கூட்டம் ஒத்திவைப்பு!

 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறும் கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே குறுவள மையக் கூட்டம் நடைபெறும் எனவும் , பல்வேறு நிர்வாக காரணங்களால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள் மையக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. 

எனவே . வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறவுள்ள குறுவள மையக் கூட்டத்திற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு ( 1. தமிழ் , 2. ஆங்கிலம் . 3. கணக்கு . 4.அறிவியல் . 5. சமூக அறிவியல் ) கற்பிக்கும் ஆசிரியர்களை , தெரிவு செய்யப்பட்ட இடத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழியாக ஆசிரியர்களை குறுவள மையக் கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

நவ.1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 குமரி மாவட்டத்துக்கு நவம்பர் 1-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


கன்னியாகுமாரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஈடுசெய்ய நவம்பர் 12-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

October Month SMC Meeting - SPD Instructions

 


க்டோபர் மாதத்திற்கான SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!

October Month SMC Meeting - SPD Instructions - Download here


03.11.2022 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாளான சதய விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இவ்வாண்டு கொண்டாடுப்படும் 1037 - ஆவது ஆண்டு சதயவிழாவை முன்னிட்டு 03.11.2022 அன்று வியாழக்கிழமை , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.

 இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 12.11.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 03.11.2022 வியாழக்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியார்களோடு இயங்கிடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

CRC- 29.10.2022-Materials & Videos

 

CRC- 29.10.2022-Materials & Videos

Video No:1 Roles and Responsibilities of Facilitator - View here


Video No:2. Introduction to BRC Discussion Meeting. - View here


Video No:3. Marking Attendance on Oct 15th. - View here


Video No:4. Stage Setting - View here


Video No:5. Last Month Lesson Review - View here


Video No:6. Exemplar Content for Previous Month - View here


Video No:7. Mediawiki - View here


Video No:8. Next Month Lesson Review - View here


Video No:9. TNSED App flow till Conclusion - View. - View here


Video No:10-a. 123 e Psychometric. (To be played at 03.00 PM onwards on 15th Oct) - View here


Video No:10-b. 123 e Game Result. (Will be available from 03.20 onwards on 15th Oct 2022) - View here


Feedback for this Course

DTEd - ஆசிரியர் பயிற்சித் தேர்வு விடைத்தாள் நகல் இணையத்தில் பெறலாம்!

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களின் விடைத்தாள் நகலை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணை தள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டு கட்டணத் தொகையை கீழ்க் குறிப்பிட்டுள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் அனுப்ப வேண்டும். 



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Action Plan for C&D Students (Tamil , English , Maths)

 

CLICK HERE TO DOWNLOAD - TAMIL ACTION PALN

CLICK HERE TO DOWNLOAD - ENGLISH ACTION PALN

CLICK HERE TO DOWNLOAD - MATHS ACTION PALN


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

29.10.2022 CRC Meeting - CEO Instructions

 

29.10.2022 அன்று 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெறவுள்ள அக்டோபர் மாத ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம் - அனைத்து அரசு / அரசு உதவிப் பெறும் தொடக்கநிலை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...





2021 மற்றும் 22-ம் ஆண்டுகளுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 


தமிழில் சிறந்த மென்பொருள் தயாரிப்புக்கு வழங்கப்படும் முதல்வரின் கணினித் தமிழ் விருதுகளுக்கு டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினிவழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது.


அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினித் தமிழ்விருதுக்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மேலும், 2021-ம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022-ம்ஆண்டுக்கு தனி நபர், நிறுவனத்திடம் இருந்து தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.


விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2018,2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விருதுக்கான விண்ணப்பங்கள், ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு வரும்டிச.31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 – 28190412, 28190413ஆகிய தொலைபேசி எண்கள், tvt.budget@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

 தமிழகம் முழுவதும் 1990-91ம் ஆண்டு மற்றும் 2002-2003ம் ஆண்டு முதல் 2006-2007ம் கல்வி ஆண்டு வரை 45 பள்ளிகளுக்கு 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மேலும் 2011-2012ம் கல்வி ஆண்டில் 100 நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2014-2015ம் கல்வி ஆண்டிலும் இதேபோல் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.


மேலும் 2018-2019ம் கல்வி ஆண்டில் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் அதன் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிலை உயர்த்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் 5 பள்ளிகளிலும் தலா 6 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 30 பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டன. இப்பணியிடங்களை பணி நிரவல் மூலம் நிரப்பவும் அரசு உத்தரவிட்டது. இதுதவிர 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்பட்டது. இவ்வாறு 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு 100 தலைமை  ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டது.


அதேபோல் 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 95 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தலா 6 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறு 200 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2021 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை, பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு 1.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.


TNSED Attendance App 2.0 Manual

 

பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வருகையினை பதிவிடுவதற்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள TNSED Attendance App- ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டு கையேடு.

TNSED Attendance App 2.0 Manual.pdf - Download here

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

School Education Department Policy Note 2022 - 2023

 



பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு | Policy Note of School Education Department 2022-2023 Published

2022-2023 School Education Department Policy Note English.pdf - Download here

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

TNSED Attendance App - Exclusive Version Update ( 4.0 )

 


Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases.



 TNSED Attendance App 4.0 - New Update Link - Update here... ( 26.10.2022) 


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4th std Tray cards - Term 2 - All Subjects

 4th std Tray cards - Term 2 - All Subjects

Download here 

English

Tamil

Maths

Science

Social 



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4TH STD - TRAY CARDS - TERM 2- SCIENCE & Social Science

 

4TH STD - TRAY CARDS - TERM 2- SCIENCE



4TH STD - TRAY CARDS - TERM 2- Social SCIENCE





4TH STD - TRAY CARDS - TERM 2 - MATHS

4th std tray cards - term 2 - tamil & English

அக்டோபர் மாதத்திற்கான SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!

 


அக்டோபர் மாதத்திற்கான SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!


SPD - Oct Smc Proceedings - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பகுதி நேர பயிற்றுநர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் 28.10.2022க்குள் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 

பகுதி நேர பயிற்றுநர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் 28.10.2022க்குள் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

_அவர்களுக்கு (PTI) விரைவில் மாறுதல் கலந்தாய்வு!


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அனைத்து வகை ஆசிரியர்களும் (1 to 12) PINDICS படிவத்தை EMIS இணையத்தில் இன்று (21.10.2022) முதல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - SPD செயல்முறைகள்!

 


அனைத்து வகை ஆசிரியர்களும் (1 to 12) PINDICS படிவத்தை EMIS இணையத்தில் இன்று (21.10.2022) முதல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - SPD செயல்முறைகள்!


SPD PINDICS Proceedings - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

குறில் நெடில் வார்த்தைகள் வண்ணப்படங்களுடன் (PDF)

 குறில் நெடில் வார்த்தைகள் வண்ணப்படங்களுடன் (PDF)


Click here to download pdf file

வீட்டுப்பாடங்கள் குறித்த வழிமுறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்துதல் - சுற்றறிக்கை

 வீட்டுப்பாடங்கள் குறித்த வழிமுறைகள் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்துதல் - சுற்றறிக்கை

DOWNLOAD CIRCULAR வீட்டுப்பாடங்கள் குறித்த வழிமுறைகள்


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

வகுப்பு 6 முதல் 12 வரை இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

 

வகுப்பு 6 முதல் 12 வரை இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

110 விதியின் கீழ் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து முதலமைச்சரின் அறிவிப்பு!!!

 110 விதியின் கீழ் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து முதலமைச்சரின் அறிவிப்பு!!!


பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டி அக் .22 - க்குள் பதிவு செய்ய வேண்டும்

 ' என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ' , ' இந்து தமிழ் திசை ' நாளிதழ் இணைந்து , ' கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2022 ' முன் னிட்டு பள்ளி மாணவ - மாணவி களுக்கான விநாடி வினா போட் டியை நடத்துகின்றன.


4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - அனைத்து பாட புத்தக வினா - விடைகள் :

 4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - அனைத்து பாட புத்தக வினா - விடைகள் :

1. காவல்காரர் - DOWNLOAD HERE

2. எல்லாரும் இப்படியே  இருந்துவிட்டால்!  - DOWNLOAD HERE

3. யானைக்கும் பானைக்கும் சரி  - DOWNLOAD HERE

4. நன்னெறி  - DOWNLOAD HERE

5. பனிமலைப் பயணம் - DOWNLOAD HERE 

6. ஆராய்ந்திட வேண்டும்  - DOWNLOAD HERE 

7. திருக்குறள் கதைகள் - DOWNLOAD HERE 

8. பசுவுக்குக் கிடைத்த நீதி  - DOWNLOAD HERE 

 9. வேலைக்கேற்ற கூலி - DOWNLOAD HERE 

4- ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - காவல்காரர் - வினா - விடைகள்

 தமிழ் 

இரண்டாம் பருவம்

1. காவல்காரர் 

பக்கம் 3

பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.

விடை :  தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது. காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது. 

 காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.

பக்கம் 4

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

  1. ‘பெயரில்லாத’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….

 அ) பெயர் + இலாத         ஆ) பெயர் + இல்லாத        இ) பெயரில் + இல்லாத                   ஈ) பெயரே + இல்லாத 

விடை: 

 ஆ) பெயர் + இல்லாத 

 2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்………………… 

அ) கீழே ஆ) அருகில் இ) தொலைவில் ஈ) வளைவில்

அ) கீழே

 3. ‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது…………………… 

அ) உயிருள்ள பொருள் ஆ) உயிரற்ற பொருள் இ) இயற்கையானது ஈ) மனிதன் செய்ய இயலாதது

ஆ) உயிரற்ற பொருள்

4. அசைய + இல்லை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………….

 அ) அசைய இல்லை ஆ) அசைவில்லை இ) அசையவில்லை ஈ) அசையில்லை

விடை :  இ) அசையவில்லை 

 5. நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்……………………. 

அ) நாளும் ஆ) இப்பொழுதும் இ) நேற்றும் ஈ) எப்பொழுதும் 

விடை: அ) நாளும்

PREPARED BY THULIRKALVI TEAM

வினாக்களுக்கு விடையளிக்க

 1. தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்? 

விடை: தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.

 2. காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?

விடை: காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.

3. பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?

விடை: பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.

 4. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை? 

விடைகாவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.


விடை : 

1. சரிகை வேட்டை 
2. கறுப்புக் கோட்டு 
3. வெள்ளைச் சட்டை
4. சோளக் கொல்லைப் பொம்மை 
5. கனத்த மழை.

பக்கம் 5
பாடலைத் தொடர்ந்து பாடுவோமா?

மக்கள் ஒன்று கூடியே
மகிழ விரும்பும் திருவிழா 
குழந்தைச் செல்வம் யாவுமே
 கூடிஆடும் திருவிழா 
குமரிப் பெண்கள் யாவரும் 
கூடிமகிழும் திருவிழா
கடைத் தெருக்கள் முழுவதும் 
கலைகட்டும் திருவிழா.

பக்கம் 6
உரைப்ப குதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

1. வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன? 

விடை:  பூ, காய், கனி, தண்டு 

2. வாழைநார் எதற்குப் பயன்படுகிறது? 

விடை: வாழைநார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது. .

 3. வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.

 விடை:  செவ்வாழை, பூவன் வாழை  

 4. வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

விடை:  வாழை + இலை

 5. பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக. 

விடை:  சிலவகை.

PREPARED BY THULIRKALVI TEAM

செயல் திட்டம்
உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும்
செய்திகளைத்திரட்டுக.

1. தோட்டத்தின் பெயர் 

விடை: இயற்கைத் தோட்டம். 

 2. உரிமையாளர் பெயர். 

விடை: சிவராமன்.

 3. தோட்டம் அமைந்திருக்கும் ஊர்

விடை:பருத்திப்பட்டு 

4. நீர்வசதி: கிணறு /அடிகுழாய்/ ஆறு/குளம். 

விடை: கிணறு. 

5. தோட்டத்தில் விளையும் காய்கறி/பழம் பெயரைக் குறிப்பிடுக.

 விடை:கீரை வகை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மாதுளம் பழம், சப்போட்டாப் பழம்.

6. தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது/ஓரளவு/ வளர்ச்சி தேவை. 

விடை: நன்றாக உள்ளது.