R.H-2023- வரையறுக்கப்பட்ட விடுமுறை

 R.H-2023- வரையறுக்கப்பட்ட விடுமுறை






SCHOOL MORNING PRAYER ACTIVITIES 23.11.2022

2022-2023 ஆம் ஆண்டிற்கான அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ..

 


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 19 மற்றும் 25 ன் படி அமைந்துள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படியும் , அதனைத் தொடர்ந்து பார்வை 2 இல் கண்டவாறு வெளியிடப்பட்ட அரசாணைகளின்படியும் , ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இதனடிப்படையில் , தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் , உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பாக , பார்வை 3 இல் காணும் அரசாணையின்படி , சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரே ( தொடக்கக்கல்வி ) தகுதிவாய்ந்த அலுவலராக உள்ளார்.


எனவே இதனடிப்படையில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரால் ( தொடக்கக்கல்வி ) நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பான கூட்டம் 28.11.2022 மற்றும் 29.11.2022 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள மாவட்டங்கள் வாரியாக நடைபெறும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக்கல்வி ) தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , மேற்படி கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் , மேற்படி கூட்டத்தில் சரிபார்ப்பு பணிக்கான பணியினை மேற்கொள்ள 15 குழுக்கள் அமைத்திடவும் , இக்குழுவில் வட்டாரக் கல்வி அலுவலர் -1 , கண்காணிப்பாளர் -1 , உதவியாளர் -2 ஆகியோர் இடம் பெற வேண்டும் எனவும் , மேற்படி பணியினை மேற்கொள்ள பணியாளர்கள் தேவைப்படின் , அருகாமை மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர் / அலுவலகப் பணியாளர்களை உட்படுத்தி கொள்ளவும் தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


 மேலும் , இக்குழுவானது 05 குழுக்கள் துவக்கப்பள்ளிக்கானதாகவும் , 10 குழுக்கள் நடுநிலைப்பள்ளிக்கானதாகவும் இருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

gen

Staff fixation 2022-2023 circular.pdf - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

திறனறி தேர்வுகள் - வட்டார அளவிலான ஆசிரியர் கருத்தாளர்களுக்கான பயிற்சி - ( NMMS / TRUST / NTSE ) - தொடர்பாக CEO செயல்முறைகள்

 மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் :

2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறும் NMMS / TRUST / NTSE தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான கணித மற்றும் உளவியல் பாட கருத்தாளர்களுக்கான பயிற்சி அந்தந்த வட்டார வளமையத்தில் மாவட்டம் முழுவதும் 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.


 இப்பயிற்சி வகுப்பில் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியினை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ( பொ ) ஆகியோர் இணைந்து சிறப்பாக நடத்திட தெரிவிக்கப்படுகிறது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

29 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி: நவ. 26 வகுப்பு தொடக்கம்

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 414 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 26-ம் தேதி தொடங்கப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும்.


இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம்வழங்கப்படுகிறது. ஒரு பிளாக்கிற்குஒரு மையம் என 414 மையங்கள் நீட் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் என தமிழகம் முழுவதும் 29,000 மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தோறும் இப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்


.இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது: நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் 10 மையங்களில் 700 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். வாரம் தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். 100 முதுகலை ஆசிரியர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் மாணவர்களுக்கு இதற்கான பாடகுறிப்புகள் வழங்கப்படும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி அளித்தல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

ஈரோடு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி அளித்தல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

25.11.2022 அன்று SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 


25.11.2022 அன்று SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

SMC Meeting Circular 25.11.2022.pdf - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

SMC - November Agenda for CwSN

 

இந்த மாதத்திற்கான மாற்றுத்திறன் மாணவர்கள் சம்பந்தப்பட்ட SMC செயல்பாடுகள் :


SMC - November Agenda for CwSN - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: என்எம்எம்எஸ் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டு இருக்கிறது.


தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.


இத்தேர்வு மூலம் கல்வி உதவித்தொகைக்கு அகில இந்திய அளவில்ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வுசெய்ய்படுகிறார்கள். இதில், தமிழகத்துக்கான மாணவர் ஒதுக்கீட்டு எண்ணிக்கை 6,695 ஆகும். இவ்வாறு தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புதிதாகவும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பிக்கவும் பதிவுசெய்ய வேண்டும். அந்த வகையில், நடப்பாண்டு என்எம்எம்எஸ் கல்வி உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.scholarships.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

கலைத் திருவிழா -திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை (பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி போன்ற போட்டிகள் தலைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளது )


கலைத் திருவிழா -திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை

(பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி போன்ற போட்டிகள்

தலைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளது )






2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!! மாவட்ட வாரியாக பள்ளிகள் & பாட விவரம் - Attached


2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

மாவட்ட வாரியாக பள்ளிகள் & பாட விவரம் - Attached






பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 21.11.2022

திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்: இல்வாழ்க்கை

குறள் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்:
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.


பழமொழி :
Nothing so bad but it might have been worse.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. 


இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல


பொன்மொழி :

உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும். --ஸ்டீவ் ஜாப்ஸ்


பொது அறிவு :

1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 

 1914 ஆம் ஆண்டு . 

 2. உலக சமாதான சின்னம் எது ?

 ஒலிவ் மரத்தின் கிளை.


English words & meanings :

ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms.


ஆரோக்ய வாழ்வு :

ஊட்டச்சத்து நிறைந்த பாதாம் சிற்றுண்டிக்கு ஆரோக்கியமான மாற்று உணவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே சமயம் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு முடிவின்படி, தினசரி 56 கிராம் பாதாம் சாப்பிடுவது, ப்யூட்ரேட்டின் அளவை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


NMMS Q

0.04, 0.09, 0.25, 0.49, ________ 

 விடை: 0.121 

 விளக்கம்- பகா எண்களின் தொடர்ச்சி மற்றும் அதன் வர்க்கமாக உள்ளது.


நவம்பர் 21 இன்று

சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்


உலகத் தொலைக்காட்சி நாள் 

உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.


நீதிக்கதை

சிட்டுக்குருவியின் ஆசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி. 

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது. 

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.


இன்றைய செய்திகள் - 21.11.22

* பல மின்இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்.

* சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23-ல் தர்ணா: அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு.
* தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்து வருகின்றன என தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

* பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு: வாரணாசியில் பாரதி நினைவிட பணியையும் மேற்கொள்ள திட்டம்.

* டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு.

* 2வது டி20 போட்டி - நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* சர்வதேச டி20 கிரிக்கெட்: ஒரே போட்டியில் பல சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.

* 32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

Today's Headlines

* Multiple Electricity Connection Holders Can Link Same Aadhaar Number: Electricity Authority Explanation

 *Dharna on Dec. 23 in 7 mandals including Chennai: Government Employees Association announcement.
 *Archeology Minister Thangam Thennarasu said that the ongoing excavations on behalf of the Tamil Nadu government are providing new data and information to history.

 *Central Govt declares Bharathi's birthday as National Languages ​​Day: Plans to build Bharati Memorial in Varanasi

* It has been announced that the Winter Session of Parliament will begin on December 7.

 * UN  France supports India's permanent membership in the Security Council.

 * 2nd T20I - India win by beating New Zealand easily.

 * International T20 Cricket: Suryakumar Yadav who achieved many records in a single match.

 * The  World Cup football festival started yesterday in Qatar with 32 teams
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




Team Visit Google Form for Primary And Middle School

கலைத் திருவிழா - Students Entry in EMIS Portal

 


கலைத் திருவிழா

 

📚Students Entry in EMIS Portal


கலைத் திருவிழாவில் பள்ளி அளவில் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்களை *Emis இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி* தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது 


Steps to update the students list👇


 School Login ---> School ---> Competition --> Programs ---> Select Program ---> Class ---> Type of Competition ---> Select Event ---> Category ---> Types of Event ---> Add Participants ---> Select ✅ Students ---> Submit


 Click here to join whatsapp group for daily kalvinews update 

New Medical certificate & Medical fitness Form

 மருத்துவ விடுப்பிற்கான மருத்துவ சான்று பெறுவது தொடர்பாக புதிய நடைமுறைகளை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அறிவித்துள்ளது...! புதிய Medical certificate & Medical fitness படிவம் வெளியீடு


இனி Blood test  ECG போன்ற test அவசியம்.  Out patient என்றாலும் ஆஸ்பத்திரி வரிசை பதிவு எண் அவசியம்


New Medical certificate & Medical fitness Form - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Ennum Ezhuthum - THB English book தமிழாக்கம்

 

EE THB English book தமிழாக்கம்.


Google translate மூலம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது....

 

 Click here to join whatsapp group for daily kalvinews update 

Ennum Ezhuthum Lesson Plan- November 4th Week Lesson Plan



 Ennum Ezhuthum -  November 4th Week Lesson Plan - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update 

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாரம் பள்ளிகளில் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவு.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாரம் [ நவம்பர் 18 முதல் 24 வரை ] கடைபிடித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரின் இணைச் செயல்முறைகள் [ 17/11/22 ]


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Hi Tech Lab மூலமாக மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் சார்ந்து CoSE & SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் சார்ந்து CoSE & SCERT இயக்குனரின் இணைச் செயல்முறைகள்!

சிறப்பு ஆசிரியர்: தேர்ச்சி விபரம் வெளியீடு

 

சிறப்பு ஆசிரியர் பணிக்கான தேர்ச்சி பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி பள்ளிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் மற்றும் சமூக பாதுகாப்புத்துறைக்கு, சிறப்பு ஆசிரியர் பணிக்கு, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2017ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.


இதன் முடிவுகள், 2018ல் வெளியிடப்பட்டு, 2020ல் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது.


இதைத் தொடர்ந்து, கூடுதல் இடங்களுக்கான தேர்ச்சி பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. விபரங்களை, http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வை காண நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.


இந்த நிலையில் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், டிசம்பர் 5-ம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10-ம் தேதி பணி நாளாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

CoSE - Mission Eeyarkai - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2022





 திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்: இல்வாழ்க்கை

குறள் : 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருள்:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

பழமொழி :

Do well and have well.

நல்லதைச் செய்து நல்லதைப் பெறு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.

2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன். 

பொன்மொழி :

தவறவிட்ட நேரத்தை திரும்பப் பெறமுடியாது. --பெஞ்சமின் பிராங்க்ளின்

பொது அறிவு :

1. உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா எது ? 

ஹட்சன் விரிகுடா.( பரப்பு 317, 500 ச.மைல்). 

 2. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது?

 ரஷியா.

English words & meanings :

Aisle -a passage between seats, noun. இடையில் அமைந்துள்ள பாதை. பெயர்சொல். isle -island. noun. தீவு. பெயர் சொல். both homonyms 

ஆரோக்ய வாழ்வு :

உடலில் நார்ச்சத்து நன்றாக இருப்பதால் வயிறு எளிதில் சுத்தம் செய்யப்படுகிறது. நாவல் விதை பொடியை சாலட், பால் மற்றும் சாறுகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

NMMS Q

ஹரிஹரர் , புக்கர் ஆகிய இரு சகோதரர்களால்___________ தென்பகுதியில் நிறுவப்பட்டது. 

 விடை: கர்நாடகா

நவம்பர் 18


வ. உ. சி அவர்களின் நினைவுநாள்




வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

நீதிக்கதை

குறையா? நிறையா?

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது. 

பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது. 

நீதி :
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.

இன்றைய செய்திகள்

18.11.22

‘தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் மனநல ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ - மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்.

* பயங்கரவாதிகள் ஊடுருவினால் தடுப்பது எப்படி என பிரம்மாண்டமான பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

* இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக பெண் நீதிபதிகள்: அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம்.

* இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ ஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

* மின்னணு சாதனங்களை பழுதுபார்க்க இணையதளம் - மத்திய அரசு விரைவில் அறிமுகம்.

* ரஷ்ய ஏவுகணையை தகர்ப்பதற்காக உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணை போலந்தை தாக்கியதால் பதற்றம்.

* முதல் ஒருநாள் போட்டி: வார்னர், ஸ்மித் அதிரடி- இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.

* இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் இந்த ஆண்டுக்கான தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக் போட்டி: தொடக்க ஆட்டத்தில் மின்வாரியம் அணி வெற்றி.

Today's Headlines

* The High Court has directed the Tamil Nadu government to set up a mobile mental health counseling center in all schools in Tamil Nadu.

*   'Madras Eye' is spreading Rapidly in Chennai - Patients thronging hospitals.

* A grand security exercise was held across Tamil Nadu based on how to prevent terrorists from infiltrating.  10 thousand people participated in it.

 * Tamil Nadu has the  most women judges in India: Minister S. Raghupathi informed with pride.

*  India's first private rocket 'Vikram S' will be launched today from Sri Harikota.

* Central Government is going to Launch a Website platform for Repair of Electronic Devices Soon

* Tensions rise after missile fired by Ukrainian military to shoot down Russian missile hits Poland

 * First ODI: Warner, Smith wonderful play- Australia beat England

 * Indian table tennis player Sarath Kamal has been selected for this year's Dayanchand Gelratna Award.

 * 1st Division Hockey League Match: Minwariyam wins the opening match.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்