தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி மதுரையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 இதனைத் தொடர்ந்து , தற்போது 06.02.2023 முதல் 25.02.2023 வரை Batch 67 முதல் 73 வரை அணிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.


 இப்பயிற்சியில் இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


CoSE - HM Training.pdf - Download here...


Click here for latest Kalvi News 

பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டியவை - கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளரின் அறிவுரைகள்

 கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட காணொளி கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.....


பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான  Payroll Run 12.02.2023 அன்று செய்யப்படும்.


பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மாற்றங்களையும் (Income Tax... ect..) 10.02.2023 ற்கு முன்னதாக செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.*


20.02.2023 ற்கு பிறகு Mark For Recalculation Icon  Remove செய்யப்படும்.


எனவே, பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியல் தயாரிப்பதில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளுக்குள்  உரிய மாற்றங்களை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Click here for latest Kalvi News 

பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு

 

பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு


பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையில் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 11 வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “ 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்.10-க்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதில், உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Click here for latest Kalvi News 

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

 


TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறையை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை!

Leave Manual - Download here


Click here for latest Kalvi News 

4 & 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 11.2.23 அன்று CRC பயிற்சி - SCERT Proceedings

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டு , பணிமனைகளுக்கான குறுவள மற்றும் வட்டார வளமைய கூட்டத்திற்குத் தேவையான மதிப்பீடு சார்ந்த பொருண்மைகளை உருவாக்கம் சார்பான பணிகள் இந்நிறுவனத்தில் நடைபெற்று முடிவுற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து வருகின்ற 11.02.2023 அன்று குறுவள மையக் கூட்டம் அனைத்து மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படவேண்டி உள்ளதால் , கீழ்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு ( CRC ) கூட்டத்தினை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 07.02.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

2022-2023 - ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு ( NMMS ) 26.12.2022 முதல் 20.01.2023 விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.


இந்நிலையில் தற்சமயம் இத்தேற்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று 03.02.2023 முதல் 07.02.2023 வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.


 Click here for latest Kalvi News 


கனமழை விடுமுறை அறிவிப்பு - 03.02.2023

 கனமழை  காரணமாக இன்று ( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :

நாகை - 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

தஞ்சை - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மற்ற மாவட்டங்கள் நிலை குறித்து தகவல் கிடைத்த உடன் பகிரப்படும்...



Click here for latest Kalvi News 


School Morning Prayer Activities - 03.02.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.02.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் ...

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

பொருள்:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது


பழமொழி :

Try and try again you will succeed at last.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :

அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.


பொது அறிவு :

1. ரேடியோ கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் யார் ? 

 கியூரி

. 2. உலக அதிசயமான தொங்கும் தோட்டம் எங்கு உள்ளது ? 

 பாபிலோன்.


English words & meanings :

when an ant is looking for a job we call it APPLICANT


ஆரோக்ய வாழ்வு :

தினமும் 2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வரலாம். இது ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் குறைக்க பெரிதும் உதவி செய்யும்.
தயிர் பச்சடிகளில் பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.


NMMS Q

ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க பயன்படும் வினைவேகமாற்றி எது?

 விடை: இரும்பு


 பிப்ரவரி 03 இன்று

யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்


யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. 


என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்


கிறித்துவக் கம்பர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. 

நீதிக்கதை

என் அடிமைகளுக்கு நீ அடிமை

மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.

அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும்படி ஆணையிட்டான்.

முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப்படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.

முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து கொல்ல வரும் நபரைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா? என்று கேட்டான்.

அதற்கு முனிவர் மன்னா... நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது! என்றார்.

அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக முடியும்? என்று முனிவரிடம் கேட்டான். அவர் அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன் என்றார். மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.


இன்றைய செய்திகள் - 03.02.2023

* ஐ.டி. பயன்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழக காவல்துறை: டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்.

* கோடைகாலத்தில் தினசரி மின்தேவை 19 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்: தமிழக மின்வாரியம் கணிப்பு.

* மன்னார் வளைகுடா, குமரிக் கடலை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன், தூத்துக்குடியில்  3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

* வீரர்கள் எந்த இடத்திலும் தாக்குதல் நடத்த ஜெட்பேக்ஸ், ரோபோ, ட்ரோன்கள் வாங்க டெண்டர் வெளியிட்டது இந்திய ராணுவம்.

* 2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத இந்தியா - ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* “போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய ராணுவ வீரர் வாக்குமூலம்.

* 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

* டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.

Today's Headlines

* Tamil Nadu Police pioneered in IT usage proudly said byDGP Shailendra Babu .

* Daily power demand to rise to 19,000 MW in summer: Tamil Nadu Power Board forecast

* Gulf of Mannar, depression approaching Kumarik Sea: Cyclone warning cage number 3 raised at Pampan, Tuticorin.

 * The Indian Army has issued a tender to buy jetpacks, robots and drones for soldiers to attack anywhere.

* Carbon free India by 2070 - Rs.35 thousand crore allocation.

* "Ukrainians were killed and sexually abused during the war," says ex-Russian soldier.

* South Africa won the 3-match ODI series for 2-1.

* TNPL  Cricketers auction: 2 days to be held in Chennai.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here for latest Kalvi News 


அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 

மத்திய கல்வி அமைச்சக திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதலின்படி , ' Rani Laxmibai Atma Raksha Prashikshan ' ( Elementary and Secondary ) - Salf - Defense Training ) தலைப்பின் கீழ் , 6744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு ரூ .15,000 ஆக மொத்த ரூ.1011.6 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் 5519 உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு 15,000 ஆக மொத்தம் ரூ.827.85 / - இலட்சம் என அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையிலும் , இடைநிற்றலை தவிர்த்து இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு ஏற்ப Karate , Judo , Taekwondo , Silambam ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தருவதால் , பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது.


கல்வி மாவட்டங்களில் தற்காப்புக்கலை பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கீழ்க்காணுமாறு வழங்கப்பட்டுள்ளது.

 SPD - Self Defence Training.pdf - Download here...



 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

CoSE - Geometry Box Distribution.pdf - Download here...

  Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

பிப்.6 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 கன்னியாகுமரி - பிப்.6 உள்ளூர் விடுமுறை


தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லா தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு


வரும் 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்


விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக  வரும் 11ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.

 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

February CRC updates

 February CRC updates


State Level:

4 & 5:     07.02.2023

6 to 8:    08.02.2023


District Level:

4 & 5:     09.02.2023 & 10.02.2023

6 to 8:    13.02.2023 to 17.02.2023 


CRC/BRC Level:

4 & 5:       11.02.2023

6 to 8:      18.02.2023


 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

School Morning Prayer Activities - 02.02.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 02.02.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

பொருள்:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

பழமொழி :
Face the danger boldly than live with in fear.
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :

தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில் பயன் எதுவுமே இல்லை. அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.


பொது அறிவு :

1. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார் ?

 H.டேவி, 1808.

 2. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? 

 F.ஹோலர், 1827.


English words & meanings :

when you bring ant from another country it is - import(+)ant - important 


ஆரோக்ய வாழ்வு :

இதய நோய் அபாயத்தை குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள தியோசல்பினேட்டுகள் ஆபத்தான கட்டிகள் உருவாகுவதை தடுக்கிறது.
இதிலுள்ள அல்லிசின் நைட்ரிக் ஆக்சைடை வெளியிடுவதன் மூலம் இரத்த நாளங்களின் விறைப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 


NMMS Q

விடுபட்ட எண்ணைக் காண்க: 2,5,9,19,37, ?

 விடை: 75. 

விளக்கம்: 2x2+1 =5; 5x2-1 = 9; 9x2+1=19; 19x2-1=37; 37x2+1=75; 


 பிப்ரவரி 02 இன்று

உலக சதுப்பு நில நாள் 


உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.
அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.


நீதிக்கதை

கல்வியின் பெருமை

பண்ணையார் ஒருவர் தன் ஆறு வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். இவன் என் ஒரே மகன். இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத்தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு ஆசிரியர், நூறு பணம் தாருங்கள். நன்றாக கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான் என்றார் ஆசிரியர்.

ஆ! நூறு பணமா? அந்தப் பணத்திற்கு நல்ல ஒரு எருமை மாடு வாங்கலாமே என்றார் பண்ணையார். வாங்குங்கள். உங்கள் பண்ணையில் ஐம்பத்து இரண்டு எருமை மாடுகள் உள்ளன. இப்படி மற்றவரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றார். 

ஆசிரியரான உங்களுக்குக் கணக்கு தெரியாதா? என்னிடம் ஐம்பது மாடுகள் உள்ளன. ஒரு மாடு சேர்ந்தால், ஐம்பத்து ஒன்று தானே ஆகும். எப்படி ஐம்பத்து இரண்டு வரும்? மாடுகள் கணக்கில் உங்கள் மகனைச் சேர்க்கவில்லையே அவனையும் சேர்த்தால் ஐம்பத்து இரண்டு ஆகும். 

என் மகனை மாடுகள் கணக்கில் சேர்க்க அவன் என்ன மாடா? இப்படி பேச உங்களுக்கு என்ன துணிச்சல்? என்று கோபத்துடன் கேட்டார் பண்ணையார். கல்வி கற்றவன் மனிதன். படிக்காதவன் மாடு, மரம் போன்றவன். இது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார் ஆசிரியர்.

என்னை மன்னியுங்கள். கல்வியின் பெருமையை உங்களால் தெரிந்து கொண்டேன். நீங்கள் கேட்ட பணம் தருகிறேன். இவனுக்கு நன்றாக கல்வி கற்றுத் தாருங்கள். சிறந்த மனிதனாக இவனை மாற்றுங்கள் என்றார் பண்ணையார். அப்படியே செய்கிறேன் என்றார் ஆசிரியர்.

நீதி :
மனிதனுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.நிலையான வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த கருவியாகும். 


இன்றைய செய்திகள் - 02.02.2023

* நிலையான வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த கருவியாகும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தரமான கல்வியை உருவாக்க வேண்டும் என்று ஜி20 கல்வி மாநாட்டில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்.

* தமிழகம் முழுவதும் விரைவில் காலை உணவுத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி.
* வங்கக்கடலில் புயல் சின்னம்: மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.

* மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

* 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

* பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 100 ஆக அதிகரிப்பு.

* ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

* ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்.

Today's Headlines

* Education is the best tool for sustainable development.  IIT Chennai Director Kamakody stressed that all countries should work together to create quality education at the G20 Education Conference.

 * Breakfast program across Tamil Nadu soon: Chief Minister Stalin assured.

 * Storm warning in Bay of Bengal: Fishermen banned from fishing in Gulf of Mannar.

* Union Budget 2023-24 Announces New One Time Saving Scheme for Women

* Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy has announced that Visakhapatnam will be the new capital of Andhra Pradesh.

 * Union Finance Minister Nirmala Sitharaman presented the budget for the financial year 2023-24 in the Lok Sabha yesterday.

* Death toll rises to 100 in Pakistan mosque blast. 

*   26 Indian sportsmen will be competing in the Asian Indoor Athletic meet.

 * ICC T20 ranking list : Indian cricketer Suryakumar Yadav set a new record. 

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Budget Speech 2023 - Full Details ( pdf )

February SMC Meeting ( 3.02.2023 ) - SPD Instructions & Proceedings

 

பிப்ரவரி 2023 முதல் இனி ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும்.


 பிப்ரவரி 2023 இந்த மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 3.2.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி முடிய நடைபெறும் என்பது தொடர்பான தகவல்...


February SMC Meeting ( 3.02.2023 ) - Proceedings - Download here...


 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update