நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு

 இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நீட் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுளள்து.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான neet.nta.nic.in இணையதளத்தில், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. நீட் 2023ஆம் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6ஆம் தேதி கடைசியாகும். நீட் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழடை நடைபெறவிருக்கிறது.


இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1600லிருந்து ரூ.1700 ஆக அதிகரிக்கப்பட்டுளள்து. இதர பிறப்டுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1600 ஆகவும், அதுபோல எஸ்சி/எஸ்டி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கு வெளியே வாழும் மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.9,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாணவர்கள் ஜிஎஸ்டி மற்றும் செயல்முறைக் கட்டணங்களையும் கூடுதலாக கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களது கல்விச் சான்று உள்ளிட்டவற்றை இணைத்தபிறகு, விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டதற்கான உறுதிச் சான்றை புகைப்படமாக சேமித்து வைத்துக் கொள்வது பயனளிக்கும்.



Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - Term 3 - Unit 7 - TLM - Tamil, English, Mathematics

 எண்ணும் எழுத்தும் - பருவம் 3 - அலகு 7 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு

 Ennum Ezhuthum - Term 3 - Unit 7 - TLM - Tamil - Download here


Ennum Ezhuthum - Term 3 - Unit 7 - TLM - English - Download here



Click here for latest Kalvi News 

ITK - குறும்படக் கொண்டாட்டம் - மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விபரம் :

 இல்லம் தேடிக் கல்வி - குறும்படக் கொண்டாட்டம் - மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விபரம் :

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் 3 நிமிடத்தில் தங்களது மையத்தில் உள்ள மாணவர்களை வைத்து மொபைல் போன் மூலமாக குறும்படம் எடுத்து ஒன்றிய அளவிலும்,  மாவட்ட அளவிலும் தேர்வு செய்து அனுப்பிய குறும்படங்களில் இருந்து மாநில அளவில் சிறந்த 6 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

TNSED SCHOOL mobile app இல் மாணவர்களது நலத்திட்ட விபரங்களை பதிவேற்ற உத்தரவு.

 திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் அரசு / உள்ள நகராட்சி / ஆதிதிராவிடர் / உதவிபெறும் , தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் விபரங்களை ( புத்தகங்கள் , பாடக்குறிப்பேடுகள் , சீருடைகள் . விலையில்லா புத்தகப்பை ) வகுப்பாசிரியர் Login ID மூலம் TNSED SCHOOL mobile app இல் உடனடியாக பதிவேற்றம் செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை / தொடக்கக்கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest Kalvi News 

14.03.2023 ( செவ்வாய் கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 14.03.2023 ( செவ்வாய் கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

14.03.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மே திங்கள் இரண்டாவது சனிக்கிழமை ( 13.05.2023 ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 ( Under Negotiable Instruments Act 1881 ) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 14.03.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு , தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.

Click here for latest Kalvi News 

பொதுத் தேர்வு கண்காணிப்பாளராக தனியார் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது: தேர்வு துறை உத்தரவு

 தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளராக தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும்.


கூடுதல் தேவை ஏற்பட்டால், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிமூப்பில் மூத்த முதுநிலை ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்துக் கொள்ளலாம்.


எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட கூடாது. இந்த வழிமுறைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பின்பற்றி, புகாருக்கு இடமின்றி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



Click here for latest Kalvi News 

நான் முதல்வன்'திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்!

 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சரால் துவங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “போட்டித் தேர்வுப் பிரிவு” இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் (07.03.2023) நாளை காலை 10.00 மணியளவில் துவங்கப்பட உள்ளது.


“நான் முதல்வன்” திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசு தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence, போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே துவங்கப்படவுள்ளது. இப்போட்டித் தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டித்தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் போட்டித் தேர்வு பிரிவு துவங்கப்படவுள்ளது.

இந்த தொடக்க விழாவிற்கு உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மை செயலர் உதயச்சந்திரன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா இளைஞர்களுக்கு ஊக்க உரை அளிக்க கலியமூர்த்தி (ஓய்வு) உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சென்னையை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.



Click here for latest Kalvi News 

NEET ( UG ) Entrance Test - 2023 | Steps to apply online

TNSED Attendance App - some issues - TEAM EMIS

 TNSED Attendance App - some issues - TEAM EMIS

 Marking Student Attendance has some issues throughout the state as of now. It will be resolved in a while. Kindly try marking the student attendance after 10.15 AM.


- TEAM EMIS

கல்வித் துறை பணியாளர்களுக்கு `இ-ஆபீஸ்' குறித்து பயிற்சி

 பள்ளிக்கல்வித் துறையில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் ‘இ-ஆபீஸ்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அனைத்துப் பணியாளர்களுக்கும் இதுகுறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தமிழக அரசு நிர்வாகத்தில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும்நோக்கில் ‘இ-ஆபீஸ்’ திட்டம் 2022 ஆக. 1 முதல், பல்வேறு துறைகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில், பள்ளிக்கல்வித் துறையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. துறையின் தலைமை அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் அரசுப் பள்ளிகளில் விரைவில் இ-ஆபீஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


இதையொட்டி, துறை ஊழியர்களுக்கு இதுதொடர்பாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அலுவலர்கள், பணியாளர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பள்ளிக்கல்வித் துறையில் கருத்துரு, தகவல் பரிமாற்றம், கோப்புகள் அனைத்தும் இ-ஆபீஸ் மென் பொருள் வாயிலாகவே அனுப் பப்படும்.

TNSED Administrators App - CEO/DEO/BEO/BRTE மாதம்தோறும் ஆய்வு செய்ய வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை

 TNSED Administrators App - CEO/DEO/BEO/BRTE மாதம்தோறும் ஆய்வு செய்ய வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை





எண்ணும் எழுத்தும் வகுப்பறை பார்வையில், ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

 எண்ணும் எழுத்தும் வகுப்பறை பார்வையில், ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்


04.03.2023 - CRC Training Power Point Modules

 04.03.2023 - CRC Training Power Point Modules 

 1 To 3 CRC Training Pptx - Download here

மாசி மகத்தையொட்டி மார்ச் 7ல் பள்ளிகளுக்கு விடுமுறை - எந்த மாவட்டத்துக்கு???

 மாசி மகத்தையொட்டி வருகிற மார்ச் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மேல்நிலைத் தவிர்த்த பள்ளிகளுக்கு கல்வித் துறை விடுமுறை அறிவித்துள்ளது.


அதேநேரத்தில், மேல்நிலைப் பள்ளிகளுக்கான செய்முறை தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டு மாசி மகம் திருவிழா நடைபெறும் வைத்திக்குப்பம் கடற்கரையில், புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவது வழக்கம்.


ஒரே இடத்தில் அனைத்து முக்கியக் கோயில்களின் உற்சவர்களும் எழுந்து அருள்வதால் ஏராளமான பக்தர்கள் மாசி மகத்துக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு மாசி மக பெருவிழா வருகிற 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற உள்ளது.


இதனையொட்டி மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்புக்காக சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கோயில் சுவாமிகள் நிற்கும் இடத்திற்கு பந்தல் அமைப்பதும், சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் கடற்கரையில் இறங்காத வகையில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், போலீஸ் தரப்பில் கண்காணிப்பு தீவிரபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாசி மக தீர்த்த வாரியில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்யவுள்ளனர்.


இதனிடையே, புதுவை கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 7ம் தேதி மாசி மக திருவிழாவையொட்டி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேல்நிலைப் பள்ளிகளுக்கான செய்முறை தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

 TNSED (SMC) Parents Mobile App :


03.03.2023 நடைபெறவுள்ள SMC உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் SMC Parents App - ஐ Google Play Store -ல் பதிவிறக்கம் செய்து அதில் தங்களது வருகையினை பதிவு செய்ய வேண்டும்.


User Name : உறுப்பினர்களது பதிவு செய்த Phone Number

Password : Smc@Phone Number last 4 Digit ( S Capital ) 


Example : Smc@5643

TNSED (SMC) Parents Mobile App - Download here...


The username is the mobile number and password is Smc@last four digits. The message will be passed on to all HMs via EMIS inbox module and the SMC and EMIS DCs as well.




Click here for latest Kalvi News 

CTET - Dec 2022 Result Published

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடந்த தேர்வுக்கான முடிவுகளை https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். முதல் தாள் தேர்வு எழுதிய 14.22 லட்சம் பேரில் 5.79 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வு எழுதிய 12.76 லட்சம் பேரில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


CTET டிசம்பர் தேர்வின் தாள் 1 க்கு மொத்தம் 17,04,282 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்தனர், அவர்களில் 14,22,959 பேர் தேர்வெழுதினர் மற்றும் 5,79,844 பேர் தகுதி பெற்றுள்ளனர். தாள் 2ல், 15,39,464 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 12,76,071 பேர் தேர்வெழுதி 3,76,025 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 28, 2022 முதல் பிப்ரவரி 7, 2023 வரை நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு பிப்ரவரி 14, 2023 அன்று CBSE ஆல் வெளியிடப்பட்டது. சவால்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 17, 2023 வரை கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டது.

CBSE ஆனது CTET 2022-23 தேர்வை டிசம்பர் 28, 2022 முதல் பிப்ரவரி 7, 2023 வரை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தியது. சிபிஎஸ்இ 2022-23க்கான CTET தற்காலிக பதில் விசையை பிப்ரவரி 14, 2023 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் விரைவில் டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் CTET டிசம்பர்-2022 இன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் அவர்களுக்கு வழங்கிய  பதிவு எண்ணைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.



Click here for latest Kalvi News 

ஓய்வூதியர் குறைதீர் கூட்டங்களை மாவட்டங்களில் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!

 


ஓய்வூதியர் குறைதீர் கூட்டங்களை மாவட்டங்களில் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.38 - Download here


Click here for latest Kalvi News 

விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தொடர்பு அலுவலரின் (Liaison Officer) பணிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!


நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளின் விடைத்தாட்களை விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் அன்றன்றே கலக்கிப் பிரிக்கும் பணியினை மேற்கொள்ள தங்களால் நியமனம் செய்யப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது . இவ்வறிவுரைகளை தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Liaison Officer Instructions.pdf - Download here 


Click here for latest Kalvi News 

தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள்

 வரும் கல்வி ஆண்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநூல் கழகத் தலைவர் ஐ லியோனி தெரிவித்துள்ளார். தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளதால் கூடுதலாக பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி கூறியுள்ளார்.


கடந்த செப்டம்பர் மாதம் முதலே வரும் கல்வி ஆண்டிற்கு தேவையான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு தடையில்லாமல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இதுவரை 25 புத்தகங்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவத் துறை மாணவர்களுக்கான புத்தகங்களில் 5 புத்தகங்கள் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு இருப்பதாகவும் மேலும் 13 புத்தகங்கள் மொழிமாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.


Click here for latest Kalvi News 

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித் தொகைக் கான இணையதளம் https://tnadtwscholarship.tn.gov.in/ இந்தாண்டு ஜன.30ல் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வரை மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.


விதிமுறைகளின்படி நடப்பு கல்வியாண்டு முதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஜாதி சான்று வருமானச் சான்று ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களும் இணைய வழியில் சரி பார்க்கப்படும்.


இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக 'வீடியோ' வெளியிடப்பட்டு உள்ளது.


இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை ஆணை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

 


மேல்நிலைக்கல்விப்பணி 01.01.2021 நிலவரப்படி வரை உள்ள 01.01.2013 நிலவரப்படி முதல் காலத்திற்கு பதவி உயர்வு மூலமாக கணிதம் , இயற்பியல் , வேதியியல் , தாவரவியல் , விலங்கியல் மற்றும் உயிரியல் UBL முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை ஆணை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள். 


PG Teachers Regularisation Order - Download here

Click here for latest Kalvi News 

TNSED Administrators App - பள்ளிப் பார்வை செயலியினை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது?

 


TNSED Schools - பள்ளிப் பார்வை செயலியினை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது என்பதை கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

TNSED Administrators App - How to Install And use - Video Link - Click here...



Click here for latest Kalvi News 

பள்ளி பார்வை செயலியில் ஆய்வின் போது கேட்கப்படும் தகவல்கள் என்ன? முழுமையான விளக்கம்!!!

 

பள்ளி பார்வை செயலியில் ஆய்வின் போது கேட்கப்படும் தகவல்கள் என்ன? முழுமையான விளக்கம்!!!

* பாடம் கற்பித்தல்

* வகுப்பறை மேலாண்மை

* மாணவர்கள் வருகை

* மாணவர்கள் மதிப்பீடு

* பாடக் குறிப்பேடுகள் சரிபார்ப்பு

* பள்ளி ஆய்வு

* பள்ளி நிர்வாகம்

* பள்ளி கட்டமைப்பு

* மாணவர் மற்றும் ஆசிரியர்கள் பதிவு விவரம்

* பார்வையாளரின் குறிப்புகள் ஏதேனும் இருப்பின் பார்வை அறிக்கை.


Full Details pdf file - Click here...





Click here for latest Kalvi News 

மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அடிப்படை தேர்வு (Baseline Assessment) அறிவிப்பு.

 மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அடிப்படை மதிப்பீடு (Baseline Assessment) - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 04.03.2023 அன்று நடைபெற உள்ளது - தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்!



மார்ச் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

 திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டைத்தையொட்டி மார்ச் 13 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வழக்கமாக சனிக்கிழமை இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 03.03.2023 நடத்த உத்தரவு.

 


அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதால் மேல்நிலைப் பள்ளிகள் நீங்கலாக தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2023 மாதத்திய பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை 03.03.2023 ( வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது .

SMC meeting circular 03.03.2023 -Reg - Download here


03.03.2023 - SMC Meeting Agenda

 


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கலந்துரையாடல் சிந்தனையில் மாற்றம் ! சமூகத்தின் ஏற்றம் !

Annexure 2 - SMC-CwSN Agenda 03 March.pdf - Download here