ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணிப்பதிவேடு தகவல்களை 01.07.2023-க்குள் சரிபார்த்துக்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.

 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடு ( SR ) ஈட்டிய விடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப் பட்டுள்ளதை உறுதி செய்தல் -அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள். 


தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களது பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திட வழங்கப்படுகின்றன.



 Click here to join whatsapp group for daily kalvinews update 

இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை.

 அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம்.

 இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை :


🔸அனைத்துப் பள்ளிகளும் 02.01.2023 அன்று திறக்கப்பட வேண்டும்.


🔸1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 02.01.2023 முதல் 04.01.2023 வரை தவறாது எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.


🔸6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 02.01.2023 முதல் பள்ளி திறக்கப்பட வேண்டும்.


🔸ஓராசிரியராக இருக்கும் தலைமை ஆசிரியர்கள் தவறாது எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ( _குறிப்பு - SMC மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை. தலைமையாசிரியர்கள் EE பயிற்சி பெற்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்_ )


🔸4 மற்றும் 5 ஆம் வகுப்பு போதிக்கும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  02.01.2023 முதல் பள்ளிக்கு வருகை தந்து கீழ்கண்ட செயல்களில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. மூன்றாம் பருவத்திற்குரிய பாடநூல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்தல்.


2.பள்ளிக் கல்வித்துறையால் பள்ளிக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும்  Emis portal ல் பதிவு  செய்தல்.


3. மூன்றாம் பருவத்திற்குரிய பாடத்திட்டங்கள் தயாரித்தல்.


4. கற்றல் உபகரணங்கள் தயாரித்தல்.


5. வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல்.


6. அனைத்து ஆசிரியர்களுக்கும் 02.01.2023 முதல் TNSED Attendance App ல் வருகைப் பதிவு மேற்கொள்ளுதல்.


7.ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி ஐந்து முதல் தொடங்கும்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்!

 NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு , பிப்ரவரி 2023

NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் :


.
இதையும் படியுங்கள்:


NMMSS தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்

 NMMSS தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது!


NMMSS Guidelines.pdf - Download here


இதையும் படியுங்கள்:


*New - SPECIAL GUIDE FOR THE STUDENTS PARTICIPATING IN THE TALENT TESTS PART 1 - MENTAL ABILITY TEST (NMMS, TRSTSE & NTSE)*

*NMMS Old Question Paper & Answer Key*

*NMMS இலவச கையேடு வெளியீடு!PDF FILE-August 2022 released

ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு - அரசாணை

 


தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – அரசாணை வெளியீடு.


GO NO : 149 , 20.07.2018 - Download here

15,149 காலியிடங்கள் - TRB - 2023 ஆம் ஆண்டுக்கான Annual Planner வெளியீடு!

 


2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-ல் 15,146 பணியிடங்களை நிரப்ப முடிவ செய்யப்பட்டுள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வு 2024 ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது

Assistant Professors in
Government Arts and Science Colleges & Colleges of Education - 4000

Block Educational Officer
(BEO) - 23

Secondary Grade Teachers (SGT) - 6553

BT Assistants (Graduate Teachers) - 3587

Lecturers in Government
Polytechnic Colleges - 493

Assistant Government
Professors in Engineering
Colleges - 97

Assistant Professors in
Government Law Colleges - 129

Post Graduate Assistants - 267

C , D பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு.

 சி, டி பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு.


கலை திருவிழா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

 அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டி, இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகளை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் ்என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் 2022- 23ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதில் வெற்றி பெறும் பரிசு வழங்கும் விழாவானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 12ம் தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. வெற்று பெறும் மாணவ மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவிலான இந்த போட்டிகள் வகுப்பு வாரியாக 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதன்படி,

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதுரையிலும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கோயம்புத்தூரிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருவள்ளூரில் நுண்கலை, நாடகம் மற்றும் மொழித்திறன் போட்டிகள், காஞ்சிபுரத்தில் இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, இசை சங்கமம் உள்ளிட்ட போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடன போட்டிகள் ஆகியவை நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 லட்ச ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

TRUST Examination - December 2022 - Tentative Key Answer Released by DGE!

 

TRUST Examination - December 2022 - Tentative Key Answer Released by DGE!

ஜன. 3 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

 கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாகூா் ஆண்டவா் 466-ஆவது ஆண்டு கந்தூரி விழா இன்று (டிச.24) முதல் ஜன.6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, காவல்துறையினர், ஆயுதப்படையினர், ஊர்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளள்னர். 


இந்நிலையில், கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். 


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு.

 பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி சி மற்றும் டி பிரிவைச் (C மற்றும் D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.


தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

மேற்கூறிய மிகை ஊதியம்/பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு 221 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். என்றும் கூறப்பட்டுள்ளது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

TNSED School App - New Feature Updated

TNSED-Mobile App New Update
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇




Version 0.0.64

8.5.23


What's new

Schemes and Leave Module changes.Bug fixing & Performance improvements


TNSED APP NEW VERSION 0.0.64 UPDATE LINK




புதிய TN SED ATTENDANCE APP அனைத்து மாவட்டங்களுக்கும் 01-01-2023 முதல் செயல்முறைப்படுத்த ஆணையரின் செயல்முறைகள்

புதிய TN SED ATTENDANCE APP அனைத்து மாவட்டங்களுக்கும் 01-01-2023 முதல் செயல்முறைப்படுத்த ஆணையரின் செயல்முறைகள் 







பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் புதிய செயல்முறைகள்

தொடக்கப்பள்ளிகளுக்கு பள்ளி திறக்கும் நாள் 05-01-2023 





8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு அறிவிப்பு - தேர்வு நாள்: 25.02.2023 - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!

NMMS தேர்வு அறிவிப்பு - தேர்வு நாள்: 25.02.2023 - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!!

கடைசி நாள் -24.01.2023








எண்ணும் எழுத்தும் (EE) பயிற்சி கால அட்டவணை

மூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் (EE) பயிற்சி கால அட்டவணை - தமிழ் , English,  கணக்கு...








TNSED-Mobile App New Update

TNSED-Mobile App New Update





VERSION 0.0.51

OOSC,  ITK  CENTER SUPPORT AND ENNUM EZHUTHUM MODULE UPDATED 


தமிழக அரசு பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்!!!

2022-23-ம் ஆண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி டிச.19-ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜன.11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு மாநி்ல திட்ட இயக்குனர் இரா.சுதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளை கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பிற்கான தரவுகள் அனைத்தையும் உள்ளீடு செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வகையில் ஒரு கைப்பேசி செயலிமுதன்முறையாக வடிவமைக்கப்பட்டு அதன் மூலம் சென்ற கல்வியாண்டிற்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இதன் வழியாக கிடைக்கப்பெற்ற அனுபவங்களிலிருந்து கைப்பேசி செயலியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 2022-23-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்படவுள்ளது.



இப்பணியை அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், சிறப்புப் பயிற்றுநர்கள், இயன்முறைப் பயிற்சியாளர்கள் (Physiotherapist), சிறப்பு பயிற்சி மையப் பாதுகாவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாகக் கருத வேண்டும். இத்துடன் பள்ளிக்கு அடிக்கடி வராமல் இருந்து இடைநிற்கும் வாய்ப்பு அதிகம் உள்ள குழந்தைகளும் இதில் அடங்குவர். பள்ளியே செல்லாத குழந்தைகள், 8-ம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் குழந்தைகள் ஆகியோர் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் ஆவர். இவர்களைக் கண்டறிந்து பள்ளிகளில், சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும்.


கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்பு விவரங்களை ஊரக வளர்ச்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய துறையினரிடமிருந்து பெற்று இறுதி செய்ய வேண்டும். அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிதல் வேண்டும்.


கட்டுமான பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்-குவாரி, மணல்- குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலங்களிலிருந்து, மாவட்டங்களிலிருந்து தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வருகின்றனர்.


அதனால், தொழிற்சாலை, மார்க்கெட் பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தும்போது குழந்தை தொழிலாளர் நலத்துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு ஹெல்ப் லைன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும். ரயில் நிலையத்தில் கணக்கெடுப்பு நடத்தும்போது ரயில்வே சைல்டு ஹெல்ப் லைன் உடன் இணைந்து நடத்த வேண்டும்.


பெருநகரங்களில் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ளும் போது மாநகர ஆணையரின் ஆலோசனையுடன் குழந்தைகள் நலனுக்காக சிறப்பாகச் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், உதவி குழுக்களைக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தி எந்தவொரு குடியிருப்பு பகுதியும் விடுபடாமல் கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.


வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.


கணக்கெடுப்பு குறித்தும், அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் ஊடகங்கள், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள், பண்பலை, ரேடியோ, திரையரங்குகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், ஊராட்சி அலுவலக அறிவிப்புப் பலகை, நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்ய வேண்டும். கணக்கெடுப்பு களப்பணி டிச.19-ல்தொடங்கி அடுத்தாண்டு ஜன.11 வரை நடைபெற வேண்டும் என்று இரா.சுதன் தெரிவித்துள்ளார். 


Click here to join whatsapp group for daily kalvinews update 

TRUST - 2022 Original question paper

 

 தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUST) 2022 வினாத்தாள்.

TRUST - 2022 Original question paper .pdf

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மாற்றம்: பள்ளிக்கல்வி துறை உத்தரவு

 


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 


சமக்ரா சிக்‌ஷா என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநராக ஆர்.சுதன் இருந்து வந்தார். இவர் பள்ளிக்கல்வித் துறையில் பவ்லேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தவர். பள்ளிக்கல்வி செயல்பாடுகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டினார். அதிலும் குறிப்பாக, ஆசிரியர்களின் டிஜிட்டல் வருகைப் பதிவை கொண்டு வந்தார். 

இந்த நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: 


சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன், 15.12.2022 முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொறுப்பை, இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பு பணியாக கண்காணித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.இளம்பகவத், முழு கூடுதல் பொறுப்பாக, அந்த இடத்தில் மற்றொரு அதிகாரி நியமிக்கப்படும் வரை கவனிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளன.


ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி கால அட்டவணை!

 மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் :


டிசம்பர் 27, 28, 29, 30 

தேதிகளில் நடைபெற உள்ளது. 


6 - 8  மாணவர்கள் மதுரை ,


9-10  மாணவர்கள் கோவை ,


11 - 12 மாணவர்களுக்கு சென்னையில்

 நடைபெற உள்ளது.


 போட்டி சார்ந்த விதிமுறைகள்:


1) மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தனி /  குழுவிலுள்ள மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

2) மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களை அப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே  அழைத்து செல்ல வேண்டும்.

3) பெற்றோருடன்  அனுப்பக் கூடாது.

4) பயண செலவீனத் தொகை  வழங்கப்படும்.

5) மாநில அளவில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்ட whatsapp குழு(kalai Thiruvizha - VNR) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் முதலிடம் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பு ஆசிரியர் இணைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


ITK Volunteers Training 17.12.2022

 ITK Volunteers Training 17.12.2022

இல்லம் தேடிக் கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 17.12.2022 இன்று நடைபெறவுள்ள குறைதீர் கற்றல் பயிற்சிக்கான  கையேடு


ITK Volunteers Training 17.12.2022 - Module 6 - Download here


3 நாட்கள் 1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

 02.01.23 முதல் 04.01.23 வரை - 3 நாட்கள் 1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது..


கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை பார்வையிட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியீடு SCERT இயக்குநரின் செயல்முறைகள்



JEE Exam Notification -2023 Published




 Inviting Online Application Forms for Joint Entrance Examination ( Main ) - 2023 Session 1 ( January 2023 ) - Reg



Click here to join whatsapp group for daily kalvinews update 

பள்ளிக் கல்வித் துறையில் இருந்த ADPC பணியிடம் APO பணியிடமாக மாற்றம் - Proceedings

 

பள்ளிக் கல்வித் துறையில் இருந்த ADPC பணியிடம் APO பணியிடமாக மாற்றம் - பள்ளிக் கல்வி ஆணையர், மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!


ADPC - APO Post Proceedings - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

School Morning Prayer Activities - 16.12.2022

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.12.2022

திருக்குறள் :

"பால் :அறத்துப்பால். 

இயல் : இல்லறவியல். 

அதிகாரம் : விருந்தோம்பல்.

 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

 விளக்கம்:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்."


பழமொழி :
"The resolved mind has no cares. 

 துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டுமே."


இரண்டொழுக்க பண்புகள் :

1. "எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.



 2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன்,கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்"


பொன்மொழி :

"தீர்வில் கவனம் செலுத்துங்கள், பிரச்சினையில் அல்ல. 

--ஜிம் ரோன்"


பொது அறிவு :

1.நமது உடலில் மிகப்பெரிய உள்உறுப்பு எது? 

 கணையம்

 2. செரித்தல் திரவத்தில் உள்ள அமிலத்தால் வரும் நோய் எது? 

 பெப்டிக் அல்சர்.


English words & meanings :

discrete - individually seperate. adjective. வெவ்வேறான. பெயரடை. Discreet-careful and prudent. adjective. புத்தி கூர்மை உள்ள. பெயரடை


ஆரோக்ய வாழ்வு :

வேர்க்கடலையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு வயதான தோற்றம் ஏற்படுத்துவதை தடுக்கிறது. சரும சுருக்கங்களை நீக்கும்.

பொதுவாக குளிர்காலத்தில் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதன்மூலம் பயோடின் உற்பத்தி அதிகரிக்கும். பயோடின் நம்முடைய தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.


NMMS Q 

1) 1, 4, 27, 16, 125, ____     

 ans 343                                        

2) 0.5, 0.55, 0.65, 0.8,  ___      

 ans 1


டிசம்பர் 16 இன்று

வெற்றி நாள்



வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.


நீதிக்கதை

பத்தாவது பாஸ்

ரகு என்பவன் மதுரையில் பத்தாவது படித்து வந்தான். அவன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தான். அதை அவன் பெற்றோரிடம் மறைத்து விட்டான். 

ஒரு நாள் ரகு தனது கிராமத்திற்கு வந்தான். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. ரகுவின் தந்தை பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். 

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். 

ரகுவின் அம்மா பேச்சியம்மா ரகுவிற்கு ஆரத்தி எடுத்தாள். பாஸ் பண்ணிட்டியாப்பா என்றாள் அம்மா. ஆமாம்மா பாஸாயிட்டேன். ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. 

என்னா தம்பி மேல படிக்கப் போறீயா? நீ டாக்டருக்குப் படிக்கப் போறியாமே, இனி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா? என்று ஆளுக்கு ஒரு கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். 

ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும் என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் தனது மகன் பாஸ் ஆனால், இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடிப்பதாக பிராத்தனை செய்ததை நிறைவேற்றினர். 

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். அடுத்த நாள் ரகுவை காலேஜில் சேர்ப்பதற்கு பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள். 

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று நினைத்த ரகு, அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்து இருவரின் கால்களிலும் விழுந்தான். பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர். 

நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தோல்வியான உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி குலுங்கி அழுதான். 

ரகுவின் அப்பாவும் அம்மாவும் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டு என் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் நினைக்கிறேன் என்றார் பாண்டித்தேவர். 

இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன் என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு. பாண்டித்தேவர் பெருமைப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். 

நீதி :
பொய் சொல்லி பெற்றோர்களை காயப்படுத்துவதை விட உண்மையை மட்டும் பேசி பெருமையடையச் செய்யலாம்.


இன்றைய செய்திகள் - 16.12.22

* தமிழகத்தில் கிராம, வட்டார, மாவட்ட ஊராட்சிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.50 லட்சம் ஆக நிதி அதிகாரம் உயர்வு.

* அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் 192 பேருக்கு விருப்பப்படி பணியிட மாறுதல்: உயர் கல்வித்துறை தகவல்.

* தமிழகத்தில் இவ்வாண்டு 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை: உணவுத்துறை அமைச்சர் தகவல்.

* பவானிசாகரில் இருந்து 6,500 கனஅடி நீர் திறப்பு: கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்.

* இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து சீன உளவு கப்பல் திரும்பி சென்றது - இந்திய கப்பற்படை தீவிர கண்காணிப்பு.

* நாட்டில் 20 புதிய அணுமின் நிலையங்களை 2031-ம் ஆண்டுக்குள் தொடங்க மத்திய அரசு திட்டம்.

* அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா-வின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* பெண்கள் நேசன்ஸ் ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.

* உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்.


Today's Headlines


* In Tamil Nadu, the financial authority has been increased to Rs.5 lakh, Rs.25 lakh and Rs.50 lakh for village, district and district panchayats respectively.

*  192 government college professors got voluntary transfer- information by Higher Education Department..

* Action to purchase 58 lakh metric tons of paddy in Tamil Nadu this year: Food Minister informed.

 * 6,500 cubic feet water release from Bhavanisagar: Vigilance intensified in coastal areas.

* Chinese spy ship returns from Indian Ocean - Indian Navy Keeps watching vigilantly. 

 * Central government plans to start 20 new nuclear power plants in the country by 2031.

 * Following the success of the resolution brought by the United States, it has been announced that Iran will be removed from the UN Women's Organization.

* Women's Nations Hockey: India beats South Africa

 * World Cup Football Final: France vs Argentina
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update