ITK APP – மையத்திற்கு வரும் மாணவர்களை சேர்க்க புதிய வசதி அறிமுகம்.( Version 0.0.23)

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கவனத்திற்கு தங்கள் மையத்திற்கு வரும் மாணவர்களை சேர்க்க ITK APP-ல் புதிய வசதி அறிமுகம்.

( Version 0.0.23)

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk

Step :1.  Clickமாணவர் சேர்க்க

Step :2. Click Add student

Step 3. Click Filter option

Step:4 select category & school type

Step:5 click apply

Step :6 select school name – class -section

Step :7 click tic in box -add student


All CEOs Meeting on 5.4.22& 6.4.22 - Meeting Agenda

All CEOs Meeting on 5.4.22& 6.4.22 - Meeting Agenda






பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 04.04.2022 மற்றும் 05.04.2022 ஆகிய நாட்களில் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் அனுப்புதல் - சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! 

 All CEOs Meeting on 5.4.22& 6.4.22 - Meeting Agenda - Download here...


Plus Two Practical Exam 2022 - Instructions And DGE Proceedings

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை பொதுத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!



Plus Two Practical Exam 2022 - Instructions And DGE Proceedings 

Reader allowance for Visually Impaired | பார்வைக் குறைபாடு உள்ள 14 முதல் 18 வயது உடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக வாசிப்புப் படியாக ₹.100 / வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD-PDF

பார்வைக் குறைபாடு உள்ள 14 முதல் 18 வயது உடைய அரசுப் பள்ளி  மாணவர்களுக்கான கற்றல் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக வாசிப்புப் படியாக  ₹.100 / வழங்குதல்  சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

9th STD TAMIL & ENGLISH LESSON PLAN GUIDE (PDF)





6th Workbooks

  • 6th Tamil - Bridge Course Worksheets - Tamil Medium PDF - Download Here 

  • 6th English - Bridge Course Worksheets - English Medium PDF - Download Here

  •  6th Maths - Bridge Course Worksheets - English Medium PDF  - Download Here 

  • 6th Science - Bridge Course Worksheets - English Medium PDF- Download Here

  • 6th Social - Bridge Course Worksheets - English Medium PDF - Download Here

HOD's School Inspection – Monitoring App - User Manual – School Inspection Module

TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வு - பதிவு செய்யும் விவரங்கள்




Click Here To Download - HOD's School Inspection – TN EMIS Monitoring App - User Manual – School Inspection module - Pdf

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


 இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரையிலும் நிறைவேற்றப்படாத சிறந்த திட்டத்தை முதல்-அமைச்சர் நடைமுறைப்படுத்தி உள்ளார். இதன் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்பது அதிகரிக்கும். பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை உயர்கல்வி பயில அனுப்பி வைப்பார்கள்.


கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கூடங்கள் சரியாக திறக்கப்படவில்லை. பள்ளிகளில் வருகிற மே மாதம் தேர்வுகள் முடிந்த பின்னர் கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை ரீதியாக ஆலோசனை செய்த பின்னர்தான் முடிவு செய்யப்படும்.



பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் கல்வித்துறைக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தாண்டு ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது. மேலும் பள்ளிகளில் கழிப்பறைகள், ஆய்வுக்கூடம், மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.


கடந்த மாதம் சேலத்தில் நடந்த மண்டல ஆய்வின்போது, மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கையேடுகள் அறிமுகப்படுத்தினோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய 44 பகுதிகளில் சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1,100 ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும்? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகள் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் முதற்கட்டமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது என்றார். கோடை விடுமுறை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார். 


மாணவர்களின் வருகை பதிவு மற்றும் அடைவுத்திறன் பதிவேற்றம் செய்தமைக்காக பள்ளிக்கு ரூ 20 ஒதுக்கீடு - SPD செயல்முறைகள்

மாணவர்களின் வருகை பதிவு மற்றும் அடைவுத்திறன் பதிவேற்றம் செய்தமைக்காக பள்ளிக்கு ரூ 20 ஒதுக்கீடு - SPD செயல்முறைகள்





TRUST - தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்களை அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

TRUST - தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்களை அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!



தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வில் (TRUST) தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்களை அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!




Teachers Self Assessment Format (PINDICS)

 Teachers Self Assessment Format (PINDICS)


Click here to download

TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வின் பொழுது பதிவு செய்யும் விவரங்கள்

 TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வின் பொழுது பதிவு செய்யும் விவரங்கள்






ITK APP - New Version 0.0.66 - Update Now


IMG_20230908_093035

ITK APP NEW VERSION UPDATE

 Version 0.0.66

DATE : 7.9.23


What's New

E-SEVAI REGISTRATION MODULE ADDED


ITK APP NEW VERSION 0.0.66 UPDATE LINK


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk


Click here for latest Kalvi News 



இயக்குனர் குழு ஆய்வு: எமிஸில் பள்ளிகள் தேர்வு

மதுரை : மதுரையில் இயக்குனர், இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்வதற்கான பள்ளிகளை முதல்முறையாக எமிஸ் (பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு)இணையதளத்தில் தேர்வு செய்யவுள்ளது.மதுரையில் மார்ச் 31ல் அமைச்சர் மகேஷ், செயலர் காக்கர்லா உஷா தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. 

இதையொட்டி மார்ச் 30ல் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கமிஷனர், இயக்குனர் குழு பள்ளிகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளவுள்ளன.

இதற்காக முதன்முறையாக எமிஸ் இணையதளத்தில் பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளது. இதனால் எந்த பள்ளிக்கு குழு ஆய்வுக்கு வருமோ என்ற 'திக் திக்' மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். 

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் இயக்குனர் ஆய்வு என்பது இதுவரை சி.இ.ஓ.,கள் தேர்வு செய்யும் பட்டியலில் உள்ள பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்வர். ஆய்வு குறித்து முன்கூட்டியே சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு தகவல் சென்று விடும். அங்கு அதிகாரிகளுக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்படும். 

ஆனால் கமிஷனர் நந்தகுமார் உத்தரவால் இம்முறை எமிஸ் மூலம் பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளது. மதுரையில் இயக்குனர் லதா, இணை இயக்குனர்கள் அமுதவல்லி, உமா குழு ஆய்வு செய்கிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்படும் ஆசிரியர் பெயரும் எமிஸ் மூலம் தேர்வு செய்யப்படுகிறது என்றார்.

01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் (பொருளியல், வணிகவியல், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1) பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மே.நி.க.) உத்தரவு!.


PG Promotion Panel Preparation Proceeding - Download here

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வி துறை அனுமதி!

அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,774 முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், அரசு பள்ளி மாணவர்கள், உயர்கல்விக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், பள்ளிக்கல்வி அதிகாரிகள் அலட்சியமாக இருந்து விட்டனர். இந்நிலையில், பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதை தாமதமாக அறிந்த, பள்ளிக்கல்வி துறை, தற்காலிகமாக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி, மாநிலம் முழுதும் 2,774 முதுநிலை ஆசிரியர்களை, தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் பாடங்களுக்கு, ஐந்து மாதங்களுக்கு மட்டும், தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வி துறையின் மேல்நிலை பள்ளி இணை இயக்குனர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.பொது தேர்வு நெருங்கும் நிலையில், இது தாமதமான முடிவு என்று, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


கல்வித்துறை பட்ஜெட் 2022-23 முழு விவரம் – இல்லம் தேடி திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும்

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

கல்வித்துறை பட்ஜெட் 2022-23 


அவர் கல்வித்துறை அறிவிப்பில் பேசியதாவது: 

கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற சிறப்பான முன்னோடி கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.88 லட்சம் தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது நமது நாட்டிற்கே ஒரு முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இதன் வாயிலாக 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால், பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இத்திட்டம் வரும் நிதி ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கல்வித்துறை பட்ஜெட் 2022-23 – மாடல் பள்ளி

அரசு பள்ளி மாணவர்கள் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஸ்டீரிம் அதாவது அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து கல்வி பெற உதவும் நோக்கோடு கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன் மாதிரி பள்ளிகள் மாடல் ஸ்கூல் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கல்வித்துறை பட்ஜெட் 2022-23 – பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்

அடுத்து ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளை ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உட்பட நவீனமயமாக்கம் அதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்று மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மேலும் மாணவர்களின் எண்ணிக்கையை எண்ணிக்கைக்கு ஏற்ப தொடக்கப்பள்ளிகள் திறன்மிகு வகுப்பறைகளும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், இதர பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டங்கள் படிப்படியாக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கல்வித்துறை பட்ஜெட் 2022-23 – மத்திய நூலகங்கள்

மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்க ஒரு உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன் கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். நூலகங்கள் நூலக கட்டடங்களுக்கு தமிழறிஞர் பெயர் சூட்டப்படும். சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவது புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பு ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை மாநகராட்சி போன்ற தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழா நடத்தப்படும். புத்தகக் காட்சியை புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கிய திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

கல்வித்துறை பட்ஜெட் 2022-23 நிதி எவ்வளவு

மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் ஆசிரியருடன் கூடிய உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் உபரிப் பணியிடங்களில் நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு




பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவு.

பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் நவம்பர் 21-முதல் ஏப்ரல்-22 வரை 6 மாதத்திற்கான ஊதியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவு. 


இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத் தாள்களை அந்தந்த பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்யலாம் - CEO

இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத் தாள்களை அந்தந்த பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும் - தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்






பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை எளிய மக்களுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொள்கை அடிப்படையில் ஆட்சி செய்கிறோம். நாங்கள் அரசியல் லட்சியவாதிகள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் முதல்-அமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுமையான உரிமை பெற்று தரப்படும். தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல. வளர்ந்த மாநிலமாகும்.
மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

நிதி துறையில் ஒற்றை சாளர முறையில் பயனாளிகளுக்கு சலுகைகள் சென்றடைய சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ரூ.1000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். அத்திக்கடவு - அவினாசி திட்டம் வரும் ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும்.

19 சட்ட மசோதாக்கள் இதுவரை நிலுவையில் உள்ளது. இதனால் அரசாணை வெளியிட முடியவில்லை.

பல சட்டங்கள் கவர்னரும், ஜனாதிபதியும் கையெழுத்திடாமல் நிலுவையில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியாத நிலை உள்ளது.


நிபுணர்கள் குழு துறை வாரியாக கலந்து ஆலோசித்து எங்களுக்கு உதவி செய்கிறார்கள். பல்வேறு அறிவுரைகளையும் வழங்குகின்றன.

இல்லம் தேடி கல்வி திட்டம், குறு-சிறு நடுத்தர தொழில்களுக்கும் நிபுணர்களின் பங்களிப்பு உள்ளது. ஒரு ரூபாய் கூட வாங்காமல் பொருளாதார நிபுணர்கள் சேவை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி.

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி.



தொடக்கக் கல்வி - 2022-23 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 95 வட்டாரக் கல்வி அலுவவர்களுக்கு ( Direct Recruitment BEOs ) நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு தயார்படுத்துவதற்கான அறிமுகப் பயிற்சி 28.03.2022 முதல் 30.03.2022 வரை மூன்று நாள்கள் - உண்டு உறைவிடப் பயிற்சி வழங்குதல் - சார்ந்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 


ITK - பணியில் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க நிதி விடுவிப்பு.

இல்லம் தேடிக் கல்வி திட்டம் - தன்னர்வலர்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் குறுவள மைய அளவில் நடைபெற்ற கல்விகண்காட்சியினை ஆவணப்படுத்துதல் மற்றும் சான்றிதழ் அச்சிட்டு வழங்குதலின் செலவின விவரம் - நிதி விடுவித்தல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.










Public Exam - மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு கூடுதல் அவகாசம்!

10,11ம் வகுப்பு மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு.

பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை - அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை - அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
பள்ளிகளில் 6 - 9ம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி

*கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி
 
பொதுத்தேர்வு நடைபெறும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது

"பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள்" - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது,..

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதனை தவிர்ப்பதற்கு பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். 

சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் 

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப்பள்ளிகளில் சமீபகாலமாக மாணவர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆசிரியர்கள் ஆளாகி வருகின்றனர் 

இதனால் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்ற ஆசிரியர்களின் குரல் ஓங்கியுள்ளது