சிபிஎஸ்இ விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

1130383

சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் விளையாட்டுப் போட்டியில் அரசு சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


மதுரை கோவில் பாப்பாகுடியைச் சேர்ந்த சந்திரா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மகள் நித்யமீனாட்சி, மதுரை ரயில்வே சிபிஎஸ்இ பள்ளியில் 11-ம் வகுப்புப் படிக்கிறார். கைப்பந்துப் போட்டியில் பங்கேற்று வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் இடையே தேசிய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகளை சிபிஎஸ்இ விளையாட்டு வாரியம் நடத்துகிறது.


இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவறானது. எனவே அக். 1-ல் தொடங்கும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகளில் அரசு சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜராகி, அரசுப் பள்ளி மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுப்பது சட்டவிரோதம், என்றார். இதையடுத்து, சிபிஎஸ்இ விளையாட்டுப் போட்டிகளில் அரசு சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ஆசிரியர் தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி

 ஆசிரியர் தகுதி தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் இலவசப்பயிற்சி வழங்க உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடக்க உள்ள தேர்வுகள் பற்றி அறிவிப்பு டிச.,ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு, அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.பயிற்சிகள் நாளை(செப்.,30) துவங்குகிறது. ஆசிரியர் தகுதித்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். 

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை 63792 68661 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

 1130401


நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கணினி வழியிலான கேட் தேர்வு, இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 29பாடப் பிரிவுகளில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.


2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11-ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்த உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட்30-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.


இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் (செப். 29) நிறைவடைகிறது. மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தாமதக்கட்டணத்துடன் அக். 13 வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, நவம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.


தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் மார்ச் 16-ம் தேதி வெளியாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

கல்வி உதவித் தொகைக்கான நுழைவுத் தேர்வு திடீர் ரத்து

  மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் இன்று (செப்.29) நடைபெறவிருந்த கல்வி உதவித் தொகைக்கான யாசஸ்வி நுழைவுத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.


மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் பிரதமர் – யாசஸ்வி (Prime Minister – Young Achievers Scholarship Award Scheme for Vibrant India) கல்வி உதவித் தொகைக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஜூன் மாதத்தில் அறிவித்தது. இந்த தேர்வை எழுத நாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்,


பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் தேர்வு நடத்தப்படும் என்பன போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தமிழகத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்த 6,593 பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.


இந்நிலையில், இன்று (செப்.29) நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், நுழைவுத் தேர்வுக்கு பதிலாக, தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் தற்போது 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், கடந்த ஆண்டு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் தேசிய உதவித் தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கெனவே நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளும் இதற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வருமான எஸ்.சிவகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கல்வி உதவித் தொகைக்கான யாசஸ்வி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளில் ஏராளமான முரண்பாடுகள் இருந்தன.


இந்த நிலையில், இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு, 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கல்வி உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பை பொறுத்தவரை அரசு பொதுத் தேர்வாக நடைபெறுகிறது. ஆனால், 8-ம் வகுப்புக்கு மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே விடைத் தாள்கள் திருத்தப்படுவதால் அந்த மதிப்பெண்களை மற்ற பள்ளிகளுடன் ஒப்பிட்டு தரப்படுத்துவது சரியான நடைமுறையாக இருக்காது.


ஒவ்வொரு பள்ளிக்கும் மதிப்பீடு செய்யும் முறைகளும் மாறும். எனவே, 8-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களுடன் மாநில அளவில் அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பிற திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு மதிப்பெண்களை வழங்கலாம். மேலும், அனைத்து பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 30.11.2023க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு!

 

NMMS தேர்வில் (2022-23ஆம் கல்வியாண்டு) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 01.10.2023 முதல் 30.11.2023க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு!

Selected Candidates - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி - Batch wise teachers name list avail

 IMG_20230930_083110

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் 05.10.2023 முதல் மதுரையில் நடைபெற உள்ளது...தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Batch wise teachers name list avail- pdf

 Middle HM Training - 2023-24 @ Madurai - Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ITK மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் பொருட்கள் மற்றும் தன்னார்வலர் கையேடு வழங்குதல் சார்ந்து இளம்பகவத் அவர்களின் செயல்முறைகள்

 IMG_20230928_170649

இல்லம் தேடி கல்வி மையங்களுக்கான கற்றல் கற்பித்தல் பொருட்கள் மற்றும் தன்னார்வலர் கையேடு வழங்குதல் சார்ந்து இளம்பகவத் அவர்களின் செயல்முறைகள்....

Proceedings - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Selection List Of NAAN MUDHALVAN UPSC Scholarship Exam - 2023

 

SELECTION LIST OF NAAN MUDHALVAN UPSC PRELIMINARY SCHOLARSHIP EXAM - 2023👇

Click here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

 தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு, வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு,1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் படுகிறது. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறும் தொழிலாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதற்கு, தொழிலாளர்களின் மாத சம்பளம் 25,000 ரூபாயாக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை

 59436_20230928163347

 இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், யு.கே., கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை இலவசமாக மேற்கொள்ள முடியும். யு.கே.,வின் காம்ன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் வழங்கும் இந்த திட்டம், செப்டம்பர் / அக்டோபர் 2024 முதம் துவங்கும் படிப்புகளுக்கு பொருந்தும்.

தகுதியுள்ள கருப்பொருள்கள்:

 வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல் உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளை சமாளித்தல்

* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்புகள்


தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். யு.கே., கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள உரிய தகுதி பெற்றவராக இருப்பதுடன், செப்டம்பர் / அக்டோபர் 2024 சேர்க்கை பெற தயாராக இருக்க வேண்டும்.

* செப்டம்பர் 2023க்குள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

* இரண்டாவது யு.கே., முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு சி.எஸ்.சி., நிதி அளிப்பதில்லை. எனினும், அதன் அவசியம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் நிதி உதவி அளிக்கப்படலாம்.

* எம்.பி.ஏ., படிப்பிற்கு நிதி உதவி அளிக்கப்படுவதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் https://fs29.formsite.com/m3nCYq/omxnv2g3ix/index எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பபதோடு, இந்திய கல்வி அமைச்சகத்தின் https://proposal.sakshat.ac.in/scholarship/ எனும் சாக்சாத் இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:காமன்வெல்த் உதவித்தொகை கமிஷனின் இணையதளம் வாயிலாக 17 அக்டோபர் 2023 வரையிலும், இந்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளம் வாயிலாக 25 நவம்பர் 2023 வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு: www.education.gov.in



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள்

 தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிந்து கொள்ளலாம்.உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியில் இயங்கும்,

  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஜூன், ஜூலை 2023, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

விடைத்தாள்களை மறுகூட்டல், ஒளி நகல் பெற விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அக்., 3ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ பதிவேற்றம் செய்யலாம்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.

 

 G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.


அரசாணை 242- கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்... 

👇👇👇👇👇👇👇👇

Click to download pdf file


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

SNA கணக்கிலிருந்து பணம் அனுப்புவதற்கு முன் உள்ளீடு செய்ய வேண்டிய COMPONENTS CODE FOR GRANTS

 


IMG_20230929_090047

SNA COMPONENTS CODE FOR GRANTS

தொடக்க , நடுநிலை பள்ளிகளுக்கு


COMPOSITE GRANT ELEMENTARY


COMPONENTS CODE-F. 01.18


YOUTH AND ECO CLUB ELEMENTARY


COMPONENTS CODE -F. 01.12.01


உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளுக்கு


COMPOSITE GRANT SECONDARY


COMPONENTS CODE -F. 03.12


YOUTH AND ECO CLUB SECONDARY


COMPONENTS CODE-  F. 03.06


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6 To 12th Std - Summative / Quarterly Exam 2023 - Official Answer key ( All Subject )

 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான காலாண்டு / முதல் பருவத் தேர்வு விடைக்குறிப்பு மற்றும் இதனுடன் learning out comes குறியீடு எண் கொடுக்கப்பட்டுள்ளது.


6 To 12th Std - Summative / Quarterly Exam 2023 - Official Answer key with Related Learning Outcomes - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE| எண்ணும் எழுத்தும்| | வகுப்பு 1'2'3| MATHS | MOD10 | PART 1 & 2 | CLASS 1,2,3|| KALVITV |

 மாணவர்கள் கவனம் ஆசிரியரில் வருவதற்கும் , வகுப்பறை கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும் விதம் சிறப்பாக அமைந்துள்ளது . மாணவர்களிடம் கற்றல் தூண்டல் நடைபெற மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு கற்றலுக்கு முந்திக்கொள்வது தனி சிறப்பாகிறது. விரல் பொம்மைகளை வைத்து வாரத்தின் நாட்களை அறிமுகப்படுத்தியது மிக சிறப்பு. மாணவர்கள் தானாகவே கற்றது மறக்க முடியாததாக வாழ்க்கை பயனுடையதாக மாறுகிறது.




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE | எண்ணும் எழுத்தும்| |வகுப்பு 4,5| |TAMIL| MOD9 |ACT 1| CLASS1,2, 3 |KALVITV |

 மாணவர்களின் நிலைத்த கற்றல் திறன் வெளிப்பட ஆசிரியர் கையாளும் திறன் மிக சிறப்பு. மாணவர்கள் தொடக்க எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளை உருவாக்கும் விதம், வார்த்தை தேடல், பாராட்டுகளால் மகிழும் விதம் மிக சிறப்பு. புதிய வார்த்தைகளை கையாண்டு படைப்பாற்றலை வளர்த்துக்கொள்கின்றனர்




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE | எண்ணும் எழுத்தும்|ENGLISH| STD 4&5 |MOD5&6 |kalvitv|

 The teacher effectively introduce compound words so that the students able to strengthen their pronunciation skills , vowel sound also developing vocabulary. The students are improving the reading and speaking skills.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

DEO TO CEO Promotion - GO 236

 

IMG_20230926_204801

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி அங்குலட்சுமி அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

G.O.236 SE1(1) D date 26.09.2023 - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

IFHRMS வழியாக ஊதியம் பெற்று வழங்க இயலாத ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20230926_205033

IFHRMS வழியாக ஊதியம் பெற்று வழங்க இயலாத ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

DSE - IFHRMS Salary Proceedings - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNSED மணற்கேணி (Manarkeni) Student APP - New Version 0.0.21

 IMG_20230927_073742

TNSED மணற்கேணி (Manarkeni) Student APP - New Version 0.0.21 - Update Now


⚡- Version 0.0.21 


⚡- Updated on Sep 26, 2023 


 What's New 

* Middle Order Questions. 

* Bug Fixes & Performance Improvements

Click here App


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CTET Result 2023 & Cut-off Mark

 CTET Result 2023: சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு; கட் -ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?

CTET

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு முடிவுகள்  ( செப்.25) வெளியாகி உள்ளன.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவைப் பார்ப்பது எப்படி என்று காணலாம். 


அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (CENTRAL TEACHER ELIGIBILITY TEST - CTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். 


அதேபோல மத்திய அரசுப் பணிகளுக்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பேனா - காகித முறையில் நடைபெறும் தேர்வை சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது.


2023ஆம் ஆண்டுக்கான தேர்வு நேரடி முறையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 29 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். குறிப்பாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் முதல் தாளை எழுத 15,01,719 பேர் விண்ணப்பித்தனர். அதேபோல 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் இரண்டாம் தாளை எழுத 14,02,184 பேர் விண்ணப்பித்தனர். 


இதற்குத் தேர்வர்கள் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இதில் பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி 


பிரிவினருக்கு முறையே ரூ.500 கட்டணமாகவும் ரூ.600 கட்டணமாகவும் பெறப்பட்டது. 


இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களையும் சிடெட் சான்றிதழையும் சிபிஎஸ்இ விரைவில் வெளியிட உள்ளது. 


கட் -ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?


பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு கட் -ஆஃப் மதிப்பெண் 60 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் எஸ்சி, எஸ்டி,ஓபிசி, மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு 


தகுதி கட் - ஆஃப் மதிப்பெண் இன்னும் குறைவாகவே இருக்கும். 


பார்ப்பது எப்படி?


* தேர்வர்கள் https://ctet.nic.in/ctet-aug-23-result/ . 

* அதில், CTET AUG-23 Result என்ற இணைப்பு தோன்றும். அதை க்ளிக் செய்ய வேண்டும். 

* தொடர்ந்து https://cbseresults.nic.in/ctet_23_aug/CtetAug23.htm என்ற இணைப்பு தோன்றும்.

* அதை க்ளிக் செய்து, பதிவு எண்ணை உள்ளிடவும்.

* தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

 *அதை பதிவிறக்கம் செய்து, வருங்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். 


2022 தேர்வு


கடந்த 2022ஆம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ற்கான கணினி வழித் தேர்வு (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்19.10.2022 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.


கூடுதல் விவரங்களுக்கு: https://ctet.nic.in


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி - SCERT Proceedings

 IMG_20230927_183413

முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான இயற்பியல் , வேதியியல் , கணிதம் மற்றும் உயிரியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி வழங்குதல் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் 04.10.2023 முதல் 07.10.2023 முடிய நடத்துதல் பணிமனை ஏற்பாடு செய்தல் பணிமனைக்கான செலவினம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக . -

PG Teachers Training 04.10.2023 to 07.10.2023

SCERT Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNPSC - Departmental Exam December - 2023 Notification & Exam Schedule

 

TNPSC - துறைத்தேர்வு டிசம்பர் - 2023 அறிவிப்பு

துறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு...

 * ஆதார் எண்ணை கட்டாயமாகப் பதிய வேண்டும்.

 * டிசம்பர் - 2023 - ற்கான துறைத்தேர்வுகள் 09.12.2023 முதல் 17.12.2023 வரை தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன.

 * விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 27.09.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

 * இணைய தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள் 26.10.2023 அன்று 11.59 பிற்பகல் வரை.

* அனைத்து கொள்குறி வகை தேர்வுகளும் ( 100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 40 சதவீதம் / 60 சதவீதம் / 80 சதவீதம் ) கணினி வழி முறையிலும் அனைத்தது விரிந்துரைக்கும் வகை தேர்வுகளும் ( 100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 20 சதவீதம் / 40 சதவீதம் / 60 சதவீதம் ) ஏற்கெனவே உள்ள முறையான தேர்வுத் தாளில் எழுதும் வகை தேர்வாக நடைபெறும்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் தேதி குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 


2023-2024 ஆம் கல்வியாண்டில் , காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கும் நாள் 03.10.2023 ஆகும்.


பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பி வைத்திட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 மேலும் , இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (ஆண்டு 2020)!!!

 DSE - PET & PD Duties Proceedings - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - TNCMTSE 2023 - NR & Hall Ticket downloading instructions by DGE!

 

IMG_20230926_132705

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) அக்டோபர் 2023 தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல்

TNCMTSE 2023 - NR & Hall Ticket downloading instructions - Click here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

நவோதயா வித்யாலயா சமிதி 2024-2025 ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு

 2024-25 கல்வியாண்டிற்கான ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்புகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன

Notification - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களைக் கலங்கடிக்கும் அடுத்த புயல்! INCOM TAX OUTSTANDING DEMAND NOTICE!! அப்டீனா என்ன? அடுத்ததா என்ன செய்யனும்? _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

 தங்களது 12 மாத ஊதியத்தில் ஒரு மாத ஊதியத்தை வருமான வரியாகச் செலுத்தி வரும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களில் அநேகருக்கு 2016, 2017, 2018, 2022 உள்ளிட்ட கணக்கீட்டு ஆண்டுகளில் Outstanding Demand இருப்பதாகக் கூறி கடந்த சில ஆண்டுகளாக Notice வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தமிழ்நாடு முழுக்கவே பெரும்பான்மையினருக்கு இந்த Notice email மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ அனுப்பப்பட்டு வருகிறது. பலருக்கு Outstanding Demand இருந்தும் சில சிக்கல்களால் notice வந்தடையாமல் உள்ளது.


நோட்டீஸைப் பார்த்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் "வேணாம். . . முடியல. . . வலிக்குது. . . . அழுதுருவேன்!" என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அத்தகைய நிலையில்தான் உள்ளனர். ஆண்டுதோறும் சம்பளத்தில் 12ல் ஒரு பங்கை வருமான வரியாக முறைப்படிச் செலுத்தி வரும் நமக்கே இப்புடி நோட்டீஸ் வந்துள்ளதே என்று வேதனையோடே உள்ளனர். இவ்வேதனை எதனால் உருவானது? அதைத் தீர்க்க இயலுமா? என்பது குறித்துத் தெளிந்துகொள்ளவே இப்பதிவு.


Outstanding Demand என்றால் என்ன?


ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் உங்களது PAN எண் மூலம் நடைபெற்ற (ஊதியம் உட்பட) பணப்பரிமாற்றம் முழுவதிற்குமான வருமான வரியினை வருமான வரித்துறை மென்பொருள் Generate செய்யும். TDS & ITR பணிகளுக்குப் பின்னர், இத்தொகையானது உங்களது PAN எண்ணிலிருந்து பெறப்பட்ட வருமான வரியைவிடக் கூடுதலாக இருக்குமெனில், அந்தக் கூடுதல் தொகை Outstanding Demandஆக அதாவது இன்னும் கட்ட வேண்டிய வருமான வரிப் பாக்கியாக உங்களது PAN கணக்கில் சேரும்.


என்னென்ன காரணங்களுக்காக Outstanding Demand உருவாகிறது

6 காரணங்களால் Outstanding Demand உருவாக வாய்ப்புள்ளது. 6 காரணங்களையும் அதற்குரிய பிரிவுகளையும் இனி காண்போம்.


143(1)(a)(i) :

ITRல் எண்கள் உள்ளீட்டில் பிழை.


143(1)(a)(ii) :

ITRல் தவறான வரி விலக்குகளுக்கு உரிமை கோரியது.


143(1)(a)(iii) :

ITRல் கோரப்பட்ட இழப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


143(1)(a)(iv) :

ITRல் கோரப்பட்ட செலவினத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


143(1)(a)(v) :

ITR ல் கோரப்பட்ட வரிவிலக்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


143(1)(a)(vi) :

படிவம் 26AS, Form 16 / 16Aல் காட்டப்பட்டதைவிடக் கூடுதலாக வருமானம் வந்துள்ளது.


Outstanding Demand வந்துள்ளதை வருமான வரித்துறை எவ்வாறு தெரிவிக்கும்?




Outstanding Demand வந்துள்ளோருக்கு இத்தகவலை Email, SMS, WhatsApp & Call மூலம் தெரியப்படுத்தும் வசதி வருமான வரித்துறையிடம் உள்ளது. பல நேரங்களில் Mail ID / Mobile No. குளறுபடிகள் காரணமாக இத்தகவல் முறையாகச் சென்று சேராதநிலையும் உள்ளது.


தங்களுக்கு Outstanding Demand இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவது எப்படி?



incometax.gov.in என்ற (நாம் முன்னர் ITR செய்த) இணையதளத்தில் Login செய்யவும். பின்னர் மேலே நீலநிறப்பட்டையில் உள்ள Menuவில் Pending Actions -> Response to Outstanding Demand என்பதை Click செய்யவும். தங்களுக்கான Outstanding Demand இருந்தால் அந்தத் தொகை உரிய Assessment Year-உடன் தோன்றும். ஏதும் தோன்றவில்லை எனில், உங்களுக்கு தற்போது வரை எவ்வித Outstanding Demandம் இல்லை என்று பொருள்.


Outstanding Demand இருந்தால் என்ன செய்ய வேண்டும்?



எந்த வருடத்திற்கு Outstanding Demand காட்டுகிறதோ அந்த ஆண்டிற்குரிய வருமானவரி ஆவணங்களுடன் இந்தப் பக்கத்தையும் Print செய்து கொண்டு உங்களது அலுவலகம் அமைந்துள்ள மண்டல வருமானவரி அலுவலகத்திற்குச் சென்று விபரங்களை அளித்தால் என்ன காரணத்திற்காக Outstanding Demand வந்துள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.



TDS செய்யும் போது எழுந்த சிக்கலால்தான் என்றால் உங்களது சம்பள அலுவலரிடம் தெரிவித்து இச்சிக்கலைத் தீர்க்க முயற்சிக்கலாம்.



அல்லது, அந்த ஆண்டில் உங்களது PAN சார்ந்த நடவடிக்கைகளால் ஊதியமற்ற வேறு காரணங்களால் கூடுதல் வருமானம் வரப்பட்டு அதனால் Outstanding Demand வந்துள்ளது என்றால், அத்தொகையை நீங்களே மேலே Outstanding Demand காட்டிய அதே பக்கத்தில் சென்று செலுத்தி கணக்கை நேர்செய்து கொள்ளலாம்.


முறையாக வரிக் கணக்கு தாக்கல் செய்தும் Outstanding Demand தவறாக வந்திருந்தால் சரி செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?


a. Income tax return filed for the AY.

b. Form 26AS.

c. Form 16/16A (optional).

d. Challan paid for the AY to ascertain if claim is correct in ITR (optional).

e. Intimation or order u/s.154 from CPC/AO.

f. இது தொடர்பான கூடுதல் ஆவணங்கள்.


வருமானவரித் துறையைத் தொடர்பு கொள்ளலாமா?


இதற்கென தனிப் பிரிவு வருமான வரித்துறையில் அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக திங்கள் முதல் சனி வரை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும். மேலேயுள் பத்தியில் தெரிவித்த ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.


தொலைபேசி : 1800 309 0130

E-MAIL : taxdemand@cpc.incometax.gov.in


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News