1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' RTE ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.

 RTE சட்டம் - புதிய கட்டுப்பாடு

 

IMG-20240428-WA0022

வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் , அந்த மாணவருக்கு , அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' அனைவருக்கும் கல்வி உரிமை ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.


 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் , இந்த சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அதிக அளவு தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

UGC தேசிய தகுதித்தேர்வு தேதி மாற்றம்!!!

 ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த UGC தேசிய தகுதித்தேர்வு ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

IMG-20240430-WA0010

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!

 IMG_20240430_202131

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் 

ஆங்கிலம், 

கணிதம், 

அறிவியல்

 பாடம் பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!

PSHM to BT Panel List👇

English - Download here


Maths - Download here


Science - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EMIS - STUDENTS PROMOTION OPTION IS AVAILABLE

 

STUDENTS PROMOTION OPTION IS AVAILABLE FOR EMIS WEB PORTAL

IMG_20240429_122349


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தமிழக அரசு திடீர் நிபந்தனை

 

Tamil_News_lrg_3612252

தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என, நுழைவு நிலை வகுப்பில், மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீதத்தில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.


அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மாநில அரசே பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.


ஆனால், அந்த கட்டணத்தை அரசு எப்போதும் மொத்தமாக தருவதில்லை; படிப்படியாக வழங்கி வந்தது. அதைக்கேட்டு, தனியார் பள்ளிகளும் குரல் கொடுத்து வந்தன.


திடீர் நிபந்தனை


அரசு பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கக் கூடாது என, திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


தற்போது இந்த திட்டத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏப்., 22 முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில், மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, நலிந்த பிரிவு, எச்.ஐ.வி., பாதித்த குழந்தை, மாற்றுத்திறனாளி குழந்தை, துாய்மை பணியாளர் குழந்தை ஆகியோருக்கு, உரிய ஆவணங்கள், சான்றுகள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


மாணவர் வசிப்பிடத்தில் இருந்து, 1 கிலோ மீட்டர் துாரத்திற்குள் இருக்கும் பள்ளிகளில் முதலில் சேர்க்கை வழங்க வேண்டும். இந்த துாரத்துக்குள் அரசு பள்ளிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர அறிவுறுத்த வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் உரிய கட்டமைப்பு மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டால், எப்படி சேர்க்க முடியும் என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இலவச சேர்க்கை வேண்டாம்


இதற்கிடையில், 'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு நிதி வழங்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.


சங்கத்தின் தலைவர் அருமைநாதன், பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனு:

தனியார் பள்ளிகள், ஏழை மாணவர்களிடம் இருந்து, புத்தகம், சீருடை, டைரி, ஷூ, டை போன்றவற்றுக்கும், கராத்தே, நீச்சல், சுற்றுலா, ஆண்டு விழா போன்றவற்றுக்கும் கணிசமான தொகை வசூலிக்கின்றன. இதை செலுத்தாத குழந்தைகள், பல வகைகளில் அவமதிக்கப்படுகின்றனர்.


இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள், பெரும்பாலும் தனி விதமாகவே நடத்தப்படுகின்றனர். ஏழை குழந்தைகள் அருகில் உள்ள அரசு சார்பு பள்ளிகளில் சேராமல், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்து விடுகின்றனர்.


இதனால், அரசு பள்ளிகளில் சேர்க்கை படிப்படியாக குறைந்து, சில இடங்களில் பள்ளிகளை மூடும் நிலைமை உருவாகிறது. எனவே, தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் தொகையை நிறுத்தி, அதை இன்னும் கூடுதலாக அரசு பள்ளிகளை வலுப்படுத்த பயன்படுத்தலாம்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

 

1238906

ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா்.


இதேபோல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனர். இதனிடையே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது.


தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

 

005

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

Pay Order - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2025-26 முதல் இரண்டு பொதுத் தேர்வு முறை: சிபிஎஸ்இ ஆயத்தப் பணி தொடக்கம்

 


1236628

வரும் 2025-26 கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வு முறையைக் கொண்டுவர மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆயத்தமாகும் வகையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆணைக்கு ஏற்ப சிபிஎஸ்இ பணிகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


வரும் மே மாதம் முதல் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்களுடன் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே கல்வியாண்டில் இரண்டு பொதுத் தேர்வு நடத்துவதற்கான கல்வி சார்ந்த கட்டமைப்பை வகுக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போதுள்ள நடைமுறைக்கு பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் இது முன்னெடுக்கப்படுகிறது.


பருவத் தேர்வு முறையை அமல் செய்யும் திட்டம் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தும் முறையினை 2024-25 கல்வியாண்டில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் 2025-26 கல்வியாண்டுக்கு அது மாற்றப்பட்டுள்ளது.


புதிய பாடத்திட்ட அமைப்பு 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு பருவத் தேர்வை முன்மொழிந்திருந்தது. இதனை புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு கட்டமைத்தது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்வினை மாணவர்கள் அழுத்தமின்றி எதிர்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் நடைமுறை கொண்டு வரப்படுவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இது ஜேஇஇ பொறியியல் நுழைவுத் தேர்வு போல இருக்கும். மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணை தேர்வு செய்து கொள்ளலாம்.


அதே நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதுவது மாணவர்களின் விருப்பம் என்றும், அது கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்தது. இதற்கு முன்பும் பொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு

 1237125

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


அதன்படி 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்திஉட்பட 13 மொழிகளில் மே 5-ம்தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.


அவற்றை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் அறியலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in இணையதளத்தில் அறியலாம்.


ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளியிலேயே சீருடையை தைத்து வழங்க முடிவு

 1237163

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்(எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நடத்தப்பட்டு வருகின்றன.


அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெற்றோர் செயலியில் உள்ளீடு செய்யும் நடைமுறை அமலில் இருக்கிறது. 1,369 தீர்மானங்கள் மாணவர்களின் சீருடை அளவு சார்ந்தவைகளாக உள்ளன. எனவே, ஒரு முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடை தைத்து வழங்குவதை எஸ்எம்சி குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கான சீருடைகள் தைத்தலை சார்ந்த பள்ளிகளே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


அந்த சீருடைகளை தைப்பதற்கு சுய உதவிக்குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதிவாய்ந்த ஒரு தையல் கலைஞரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அளவுகளை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் எஸ்எம்சி மூலமாக பள்ளி மாணவர்களுக்கு அளவெடுத்து தைப்பதற்குத் தேவையான துணியின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளின் அளவு தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை தற்போது முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு

 


1237009

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நடப்பு (2023-24) கல்வி ஆண்டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி, ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.


அதன்படி, 6, 7-ம் வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப்பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.


அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNPSC - Departmental Exam May 2024 Notification Published

 


IMG_20240426_173348

DEPARTMENTAL EXAM MAY 2024

Applications are invited from the candidates through " ONLINE " only for admission to the Departmental Examinations - MAY - 2024 


The candidates are required to furnish their particulars in Departmental Examination One Time Registration before applying . Aadhaar Number details shall be linked with the Departmental Examination One Time Registration , mandatorily . If there is any change with regard to details entered in the One Time Registration , such as name , initial , father's name , date of birth , working district , etc. , the same shall be updated in the One Time Registration before applying for Departmental Examinations - MAY - 2024 . After submitting the application , any subsequent claim , with regard to change of test code / centre , corrections in name , father's name , age , date of birth , etc. , will not be entertained . Hence , the candidates are instructed to submit the applications with utmost care.


 Candidates should submit their applications in on - line mode only . Other mode of applications will not be accepted and they will be rejected , even though the cost of application is enclosed with them .

TNPSC - Departmental Exam May 2024 Notification pdf👇👇👇

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED ADMIN APP New Version 0.1.1

 


TNSED ADMIN APP NEW UPDATE-0.1.1- Date 26.4.2024

What's New

Uniform Measurement Module Updated. Bug Fixes and Performance Improvements


👇 App update  செய்ய Direct link


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் மே முதல் வாரத்தில் தொடக்கம்

 


1236535

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேலாக எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மே முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.


நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌’ 2022-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.


தொடர்ந்து இந்தாண்டு பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறையின் இயக்குநர் சு.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2024-25) தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேலானவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணிகள் மாவட்ட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இதையடுத்து தங்கள் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து வார்டு அளவில் எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறியும் கணக்கெடுப்பை மே முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். இதற்கு பள்ளி, கல்லூரிகளில் என்சிசி போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டும் கணக்கெடுப்பு நடத்தலாம்.


பிற மாநிலத்தவர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் யாரும் விடுபடுதல்கூடாது. அதன்படி எழுத, படிக்க தெரியாதவர்களை கண்டறிதல், தன்னார்வலர்கள் நியமனம் உட்பட பணிகளை மே 24-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN EMIS Students Profile Updated Details

 TN EMiS Students Profile Updated Details


ஆசிரியர்களுக்கான தகவல்கள்


 Students 

👇

Students List

👇

Emis I'd , Name in Tamil, Name in English, Class, Section, Action 

👇

✏️ Pencil Icon Click Updates 

👇

Name of the Students 

👇

View Profile 

👇

Aadhaar Number 

👇

Date of birth 

👇

Family Details 

👇

Communication Details 

👇

Academic Information 

👇

Students Bank Details 


Update செய்வதற்கான வழிமுறைகள் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ளுங்கள் முழு விவரங்களுடன்

👇👇👇👇👇👇👇👇👇


https://youtu.be/Hm4ynqf9x7k?si=ELaQcJknATie8qQU


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News