இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை

 

From OSD sir..


இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை!


மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விருப்பத்திற்கு இணங்க இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம்.


பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும்  மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் நடைபெறுகின்றன. அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நூலகங்களில்   குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்த்து நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை  ஊக்கப்படுத்துங்கள். 


இக்கோடை விடுமுறை காலத்தில் தன்னார்வலர்கள்  பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! மாணவர் சேர்க்கை  குறித்த பதிவை இல்லம் தேடிக் கல்வி மொபைல் செயலியில் தவறாது பதிவு செய்யவும். அதிக குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு  சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்!


அனைவருக்கும் வாழ்த்துகள்!


Click here for latest Kalvi News 

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு

 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு


ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து முன்னுரிமை கோருபவர்கள் தனியே  பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.


இப்பள்ளியில் பணியேற்ற நாள் என்பதில், எந்த தேதியைக் குறிப்பிட்டுள்ளீர்களோ, அதற்குரிய சான்றினை எதுவாயினும் (Appointment Order/ Transfer Order/ Joining Order) ஒன்றினை தாங்களே பதிவேற்றம் செய்துகொள்ள முடியும்.


அதற்கான வசதி உங்களுடைய EMIS Portal லில் வழங்கப்பட்டுள்ளது..


Click here for latest Kalvi News 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, இக்காலக்கெடு புதன்கிழமை (03-may-2023) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

- Commissioner of School Education


Click here for latest Kalvi News 

2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்

 2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு இன்று (28.04.2023) அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்.



 Click here for latest Kalvi News 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 2023 - help line Number

 

IMPORTANT MESSAGE

 

இனி பள்ளி அளவில் EMIS சார்ந்து technical issues ஏதேனும் இருந்தால், தற்போது மாறுதல் விண்ணப்பத்தில் ஏற்படும் சந்தேகம் இருந்தால்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 14417 என்ற மாநில அளவிலான help line எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் போது அழைப்பதற்கான  நோக்கத்துடன் 

School - udise number

Tracher - Tr 8 digit ID

Students - emis number 

உடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.


Here after, Please call 14417 for any kind of EMIS related issues


Thank you.


 Click here for latest Kalvi News 

கனவு ஆசிரியர் 2ம்நிலை தேர்வு Hall Ticket வெளியீடு

 

கனவு ஆசிரியர் 2ம்நிலை தேர்வு Hall Ticket வெளியீடு

DOWNLOAD செய்து PRINT எடுக்கும் வழிமுறை


 Click here for latest Kalvi News 

அரசு மேல்நிலை பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு: மே 5 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

 


அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டுதல் குழு, மே 5-ம் தேதி முதல் செயல்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம் பகவத், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்தக் குழுவில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர், முன்னாள் மாணவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் மற்றும் என்எஸ்எஸ் மாணவர் இடம் பெற்றிருப்பர். இந்த குழுவின் மூலம் உயர்கல்வியில் சேருவதற்கான ஆலோசனைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.


கருத்தாளர்களுக்கான பயிற்சி


மேலும், இடைநின்ற மாணவர்களை மீட்பதற்கான பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும். இந்த குழு, மே 5-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதுகுறித்துமாநில, மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி தரப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுதவிர, உயர்கல்வியில் எத்தனை விதமான படிப்புகள் உள்ளன, அதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய காணொலியை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.


அதில், உயர் கல்வி படிப்புகள், தேசிய நுழைவுத் தேர்வுகள் சார்ந்து பல்வேறுதகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதை மாணவர்களுக்கு எடுத்துரைத்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

 Click here for latest Kalvi News 

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் - திருத்தம் செய்த புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022)

 உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022) வெளியீடு 


(School Education - Announcement for the year 2021-2022 General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders issued.


G.O.(Ms) No. 12 Dated: 03.02.2022) - Download here


 Click here for latest Kalvi News 

CRC Days for Primary School Teachers - Tentative List 2023 - 2024

 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2023 - 2024 கல்வி ஆண்டுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (CRC) நாட்கள் - உத்தேச பட்டியல்


ஜூன் 17

1-5 வகுப்பு ஆசிரியர்கள்

ஜூலை 8

1 - 3 வகுப்பு ஆசிரியர்கள்

ஜூலை 15 

4,5 வகுப்பு ஆசிரியர்கள்

ஆகஸ்ட் 5

 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்

ஆகஸ்ட் 12 

4,5 வகுப்பு ஆசிரியர்கள்

நவம்பர் 18

 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்

நவம்பர் 25

4,5 வகுப்பு ஆசிரியர்கள்

பிப்ரவரி 10

1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்

பிப்ரவரி 17

4,5 வகுப்பு ஆசிரியர்கள்

 Click here for latest Kalvi News 

Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை


🖨️Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை


▪️ஒரு ஆசிரியர் within block & district to district என transfer apply செய்திருந்தால்..


▪️ஒரே நேரத்தில் இரண்டிற்கும் apply செய்ய முடியும்.


▪️ஆனால் print எடுக்கும் போது கலந்தாய்வு என்ற இடத்தில் please select counseling என்பதில் within block select செய்து முதலில் print எடுக்கவும்.


▪️மீண்டும் அதே இடத்தில் district- district என select செய்து அதையும் print எடுத்து இரண்டு Application - னையும் HM யிடம் கொடுக்கவும்..


HM -Approval


▪️within block & district- district என இரண்டையும் approval செய்ய வேண்டும்..


▪️இரண்டையும் தனித்தனியாக print எடுக்க வேண்டும்..


HM Approval செய்த பின்பும்  transfer Application - யில் தவறு இருந்தால் view details click செய்து edit & reject செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன்...


முயற்சி செய்து பார்க்கவும்....

 Click here for latest Kalvi News 

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிப்பு

 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.


இந்நிலையில், தமிழகத்தில்  உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 13 தொடங்கி ஏப்.3 வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவா்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தோ்வா்கள் 23 ஆயிரத்து 747 பேரும் எழுத விண்ணப்பித்திருந்தனா். 


மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி மதிப்பெண் சான்றிதழ்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவ்க்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.



Click here for latest Kalvi News 

மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என பெயர் வைத்து அரசாணை வெளியீடு.

 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 20.03.2023 - ஆம் நாளன்று 2023-2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை முன்வைத்து மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையில் ஏனையவற்றுடன் மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் குறித்து கீழ்க்கண்டவாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

பணிமாறுதல் செய்திகள்: மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)

 பணிமாறுதல் செய்திகள்:

மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)

1. முற்றிலும் கண் பார்வையற்றவர் (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)


2. மாற்றுத்திறனாளிகள் (40%க்கும் மேல் உள்ளவர்கள்)- (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)


3. மனவளர்ச்சி குன்றிய/ மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் - (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)


4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை/ டயாலிசிஸ் சிகிச்சை/ இருதய அறுவை சிகிச்சை/ புற்றுநோயாளிகள் / மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - (அரசு/தனியார் சிவில் சர்ஜன் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ ஆவணம்)


5. இராணுவத்தில் பணிபுரியும் துணைவர் உடையவர்கள் (சான்று)


6. கணவன்/ மனைவியை இழந்தவர்கள் (வருவாய் கோட்டாட்சியர் சான்றிதழ்)


7. தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் (பதவி உயர்வு/ மாறுதல் ஆணை)


8. கணவன் மனைவி பணி முன்னுரிமை (Spouse certificate) CLICK HERE 


Click here for latest Kalvi News 

மாற்றுப் பணியில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு.

 மாற்றுப் பணியில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பணியிலிருந்து விடுவிக்க இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...


Monthly wise School Working Days 2022 - 2023

 Monthly wise School Working Days 2022 - 2023

 மாதவாரியாக பள்ளி வேலை நாட்கள்


Monthly wise School Working Days 2022 - 2023 - Download here




Click here for latest Kalvi News 

9ம் வகுப்பு தேர்ச்சிக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்

 

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, தேர்ச்சி செய்வதற்கு, 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி முறை பின்பற்றப்பட்டது. தற்போது, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே, ஆல் பாஸ் என்ற நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, 10ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்வதற்கு, சில கட்டுப்பாடுகள் விதித்து, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:


ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சிக்கு, அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும். விதிகளுக்கு அப்பால் தேர்ச்சி வழங்கினால், அதற்கு முதன்மை கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அடுத்த வகுப்புக்கு செல்ல தகுதியுடையோர் ஆவர். 9ம் வகுப்பு தேர்வில், ஒரு மாணவர், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து, மொத்தம், 150க்கு குறையாமல் மதிப்பெண் பெற வேண்டும்.


ஆண்டு இறுதி தேர்வில் ஒரு பாடத்திலோ அல்லது அனைத்து பாட தேர்வுகளுக்குமோ வராவிட்டால், தக்க மருத்துவ சான்றிதழ் கொடுத்த பின், அந்த மாணவரின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், ஒன்பதாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, வருகைப்பதிவு, 75 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here for latest Kalvi News 

பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி - சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டையில் இன்று முதல் அமல்

 சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த 2023-24 ம் நிதியாண்டுக்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘‘மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதற்காக, பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்" என அறிவித்தார்.


அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரசு துரித நடவடிக்கை எடுத்து, அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி இன்று முதல் (ஏப்.26) நடைமுறைப்படுத்தப்படுகிறது.


இ-சலான்: பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற, கட்டணத்தை இ-சலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

EMIS - அடையாளச்சான்றிதழை பதிவு செய்ய புதிய வழிமுறை கல்வித்துறை அறிவிப்பு

  1 முதல் பிளஸ்-2 வகுப்புவரை எமிஸ் என்று அழைக்கப்படும் கல்வி மேலாண்மைத்தகவல் அமைப்பு என்ற அடையாளச்சான்றிதழை பதிவு செய்து பராமரிப்பது அவசியம் என்று கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது.


அந்த வகையில் எமிஸ் அடையாளச் சான்றிதழை முறையாக பராமரிக்க புதிய வழிமுறைகளை கல்வித்துறை வகுத்து உத்தரவிட்டுள்ளது. 


அதன்படி, கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-


யு.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் மற்றொரு பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் ஏற்கனவே எமிஸ் அடையாளச் சான்றிதழ் உள்ளதா என்பதை சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர் உறுதி செய்த பின்னரே புதிய எமிஸ் அடையாளச் சான்றிதழ் வழங்கவேண்டும்.


எமிஸ் இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர் பதிவிறக்கம் செய்து பெற்றோருக்கு வழங்க வேண்டும். அதனை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.


மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றில் மாற்றம் இருப்பின் பெற்றோர் தொலைபேசி எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்பப்படும். அதன் மூலமே மாற்றங்கள் மேற்கொள்ள இயலும்.


 2-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள் பள்ளி மாற்றம் செய்து சேரும்போது அவர்களுக்கு புதிய எமிஸ் அடையாளச்சான்றிதழ் உருவாக்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.


மாணவர்களுடைய பள்ளியின் விவரம் மற்றும் எமிஸ் அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றை புதிதாக பள்ளியில் சேரும்

மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று வெளியிடப்படுகிறது - தேர்வுத்துறை

 மேல்நிலை இரண்டாமாண்டு ( 2 ) -மார்ச் / ஏப்ரல் 2023. பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.






Click here for latest Kalvi News 

பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தின் [01.05.2023] கூட்டப் பொருளாக இணைத்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 


கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி , கற்றல் கற்பித்தல் , உட்கட்டமைப்பு , மாணவர் பாதுகாப்பு , பள்ளி இடைநிற்றல் தொடர்பாகப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமாகும் . எதிர்வருகின்ற 2023 , மே மாதம் 1 - ஆம் தேதி " உழைப்பாளர் தினத்தன்று " நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது சம்பந்தமாகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.


Click here for latest Kalvi News 

பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டிக் குழு - தலைமை ஆசிரியரின் பங்கு

 

பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டிக் குழு (Career Guidance Cell) - தலைமை ஆசிரியரின் பங்கு 

Role of Head Master) (School Level Higher Education Guidance Committee - Role of Head Master - Download here

Click here for latest Kalvi News 

28.04.2023 CEOs & DEOs அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தின் கூட்டப்பொருள்!

 

28.04.2023 அன்று நடைபெற உள்ள  முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தின் கூட்டப்பொருள்!

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மே'23 : பருந்துப் பார்வை!

 தொடக்கக் கல்வித் துறையின் 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் இருப்பதும் இல்லாததும் குறித்து பருந்துப் பார்வையாக. . .


Minimum 1Year Service-க்கு டாட்டா!


மாறுதலுக்கு விண்ணப்பிக்க தற்போது பணியாற்றும் பள்ளியில் குறைந்தது ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கடந்த 4 மாதங்களாக நிருவாக மாறுதல் எனும் பெயரில் பல இலட்சங்கள் செலவு செய்து தென்மாவட்டங்களுக்குள் சென்ற ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்தமுறை இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் எவ்வித முறையான ஆணையுமின்றி சமூகநீதிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட Appointment Seniority மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் உட்பட சென்றமுறை மாறுதல் பெற்ற அனைவரும் ஒன்பதே மாதங்களில் மீண்டும் மாறுதல் கோரி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


BT PROMOTION இல்லை!


தொ.க.துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்குக் கலந்தாய்வு நடத்த தேதி அறிவிக்கப்படவில்லை. TET தொடர்பான வழக்கு காரணமாகத்தான் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்குமாயின் அதுகுறித்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவிதத் தகவலும் செயல்முறைகளில் இல்லை.


30.01.2020-ல் வெளியான ப.க.து அரசாணை 12-ல் BT பணியிடத்தை முதலில் Promotion மூலமும், பின்னர் Transfer மூலமும், இவ்விரண்டிலும் தகுதியான நபர்கள் இல்லை என்றால் மட்டுமே Direct Recruitment மூலமும் நிரப்ப வேண்டும் என்றுதான் தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்நிலைப் பணி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பதால், நேரடியாக TET-ஐ இதில் புகுத்த இயலாது. மேலும் RTE 2009 சட்டமும் BT நேரடி நியமனத்திற்குத்தான் TET தேவை என்று வரையறுத்துள்ளது எனும் போது பதவி உயர்வுப் பணியிடங்களுக்குத் தகுதித் தேர்வுகளைக் கட்டாயமாக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை மீறி வழக்காடு மன்றம் தலையிடுகிறது என்றால் அரசின் நிலைப்பாட்டில் தெளிவு தேவை. ஆனால், BT PROMOTIONக்கு தேதி வழங்காதது குறித்தோ / BT PROMOTION குறித்தோ எவ்வித குறிப்புமே செயல்முறைகளில் இல்லை எனும்போதே அரசு எத்தகைய தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.


இல்லை! இல்லை!!


❌ இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான முன்னுரிமை Station Seniorityயா? / Appointment Seniorityயா? என்ற விபரம் வழக்கம்போல இம்முறையும் எழுத்தில் இல்லை.


❌ மலைப்பாங்கான, போக்குவரத்து வசதி குறைந்த, ஆசிரியர் பற்றாக்குறையுள்ள & கற்றலில் பின் தங்கிய ஒன்றியங்களாகக் கடந்தமுறை அடையாளமிடப்பட்ட சிறப்பு முன்னுரிமை ஒன்றியங்கள் (Priority Blocks) தொடர்பான குறிப்புகள் இல்லை.


❌ ஆசிரியர்களுக்கான சிறப்பு முன்னுரிமை (Special Priority) தொடர்பான வரிசை முறைப் பட்டியல் பற்றிய குறிப்புகள் இல்லை. கடந்த ஆண்டின் வரிசை முறையில் முன்னுரிமை வழங்கப்படுமா / மாற்றமிருக்குமா என்பது Seniority List வந்தால்தான் தெரியவரும்.


❌ பதவி உயர்வுக் கலந்தாய்வு நடத்தப்படப்போவது 1.1.22 தேர்ந்தோர் பட்டியல் படியா? 1.1.23 தேர்ந்தோர் பட்டியல் படியா? என்ற விபரம் இல்லை.


❌ நலத்துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையில் இணைத்தது தொடர்பான குறிப்புகளோ, அப்பள்ளிகளுக்கான கலந்தாய்வு குறித்தோ, அதன் காலிப்பணியிடங்கள் காட்டப்படுமா என்றோ குறிப்பிடப்படவில்லை.


மாறுதலுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை :


👉 EMIS Web page-ல் Individual ID வழியே ஏப்.27 முதல் மே.1 மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


👉 ஆசிரியர் பற்றிய விபரங்களில் தவறுகள் இருப்பின் EMIS Web page-ல் School ID வழியே திருத்தம் செய்தபின் விண்ணப்பிக்க வேண்டும்.


👉 இறுதியாக மாறுதல் பெற்றோர் மாறுதல் ஆணையையும், இதுவரை மாறுதலே பெறாதோர் பணி நியமன ஆணையையும் கட்டாயம் Upload செய்ய வேண்டும்.


👉 வழக்கம் போல சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களைச் சார்ந்தோர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


👉 ஆசிரியரது விண்ணப்பங்களுக்கு HM தனது ID-ல் Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 2-ஐ BEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும். BEO தன்னிடம் வரப்பட்ட 2-ல் ஒரு பிரதியை DEO-விற்கு அளிக்க வேண்டும்.


👉 HM விண்ணப்பங்களுக்கு BEO Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 1-ஐ DEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும்.


👉 மாவட்ட மாறுதலில் பணியாற்றும் மாவட்டத்தைத் தவிர்த்து பிற மாவட்டங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க இயலும்.


👉 மாறுதலில் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. Resultant Vacancy முறை கிடையாது.


👉 40% மாற்றுத்திறனாளிகளை பணி நிரவல் செய்யக்கூடாது. 


Click here for latest Kalvi News