B.E / B.Tech / B.Arch படிப்புகளுக்கு விண்ணப்பிக்கு முறை!

 முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் இடங்களுக்கான 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


NMMSS (2022-2023) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து சான்று வழங்கக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


NMMSS (2022-2023) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து சான்று வழங்கக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


CoSE - NMMSS Covering Letter.pdf - Download here 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

மாணவர்கள் , ஆசிரியர்களுக்காக ஐ.ஐ.டி.,யில் புதிய திட்டம்

 

மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரின் ஆரோக்கியத்துக்காக, 'குஷல் புரோகிராம்' என்ற நல்வாழ்வு திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்பட்டு உள்ளது.


இதுகுறித்து, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதற்காகவே, சுதந்திரமான நல்வாழ்வு கணக்கெடுப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மாணவர்களுடன் தொடர்பில் இருக்க, 'மகிழ்ச்சியாக இருங்கள்' என்ற வகையில், behappy.iitm.ac.in என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தில், தமிழகத்தில் செயல்படும் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் ஆதரவுடன், மாணவர்களிடம் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.


இதற்காக, 30க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும், மாணவர்களை தனித்தனியே சந்தித்து பேசி, கணக்கெடுப்பு நடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த கணக்கெடுப்பின் முடிவுப்படி, ஐ.ஐ.டி., வளாகத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் பணிகளை கவனிப்பதற்கான அனைத்து வசதிகளையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,000 பேருக்கு, தொல்லியல் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தமிழின் தொன்மை, அதன் சிறப்புகள் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறை வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


கோடை விடுமுறையின்போது, ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா, ஆறு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய, 11 மண்டலங்களில், 1,000 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.


உண்டு, உறைவிட வசதியுடன் பயிற்சி பெறும் ஆசிரியர்கள், புதிய கல்வி ஆண்டில் இருந்து, மாணவர்களுக்கு தொல்லியல் தொடர்பான பாடங்களை நடத்த உள்ளனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News  

EMIS Online TC Generate செய்வதற்கான வழிமுறைகள்!!!

 


EMIS Online TC Generate செய்வதற்கான வழிமுறைகள்...

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

 

தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2023 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2010 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை நடுநிலைப்பள்ளி தற்காலிக தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

 


பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: மாவட்ட வாரியாக ஆசிரியர்களின் பட்டியல்..


SCERT Proceeding & Training Teachers List - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

உயர்கல்வி குறித்து ஆலோசனை: ஆசிரியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் அன்பில் மகேஷ்

 

தஞ்சாவூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் புதிய அங்கன்வாடி கட்டடம், குழந்தைகள் பூங்கா, பள்ளி கட்டடம், ஊராட்சி அலுவலக கட்டடம் ஆகியவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி ஊராட்சியில் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் பூங்காவை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். வரும் 8ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயம் இருக்கக் கூடாது. தன்னம்பிக்கையோடு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்நோக்க வேண்டும். அதற்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். 


12ம் வகுப்புக்குப் பிறகு, மாணவர்கள் படிக்க வேண்டிய உயர்கல்வி குறித்து தங்களது பள்ளி ஆசிரியர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதுகுறித்து ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர்" என்றார். 

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் அதிகரிப்பு.

 பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.


ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியது.


மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் வழக்கமான எண்ணிக்கையை விட இந்தாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

கனவு ஆசிரியர் மைய அடிப்படையிலான இரண்டாம் நிலை தேர்வு ஒத்திவைப்பு!

 

அன்புள்ள ஆசிரியருக்கு , 

தற்போது நடைபெற்று முகாம் வரும் தேர்வு காரணமாக மே 4 ஆம் தேதி நடைபெறவிருந்த கனவு ஆசிரியர் மைய அடிப்படையிலான இரண்டாம் நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . தொடர்பான பின்னர் இது தகவல்கள் உங்களுக்கு அறிவிக்கப்படும்.


பாடத்திட்டங்கள் மற்றும் மாதிரி வினாக்கள் கனவு ஆசிரியர் Menu வின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 


Teachers General Transfer Councelling Revised schedule - May 2023

 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய 01.05.2023 மாலை 5 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. 

தொடர் விடுமுறை மற்றும் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் கொண்டு வருவதை கருத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 02.05.2023 மாலை 05.00 மணி வரை நீட்டித்தும் , பிறகு பதிவேற்றம் செய்யப்பட்ட இம்மாறுதல் விண்ணப்பங்களின் நகல்களை அலுவலரிடம் ( BEO / DEO / CEO ) நடைபெற்று சம்மந்தப்பட்ட ஒப்படைப்பதற்கான காலக்கெடு 03.05.2023 வரையும் நீட்டித்தும் இதனைத் தொடர்ந்து முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 08.05.2023 காலஅட்டவணைப்படி மாறுதல் கலந்தாய்வு & பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் . அதற்கான திருத்திய காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

Teachers General Transfer Councelling Revised schedule -reg.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

12,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி வெளியிடப் பணிகள் தீவிரம்!

 தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2022-23ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதினர். அதே போல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 7 லட்சத்து 87 ஆயிரத்து 700 மாணவர்களும் எழுதினர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்காக மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 10ஆம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மை தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியைத் துவக்கினர்.


இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்காக மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 10ஆம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மை தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியைத் துவக்கினர்.அதனைத்தொடர்ந்து 11ஆம் தேதி முதல் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு விடைத்தாள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ஆம் தேதி துவங்கி நாளையுடன் முழுவதும் முடிக்கப்படுகிறது. எனவே ஏற்கனவே திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்காெண்டு வருகிறது.பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 8ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுகிறார்.தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.inwww.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 


காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல் படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல் முறைகள்

 அனுப்புநர்: க.இளம்பகவத். இ.ஆ.ப, திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்/ மாநிலத் திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை 06. 

பொருள்: 
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, தமிழ்நாடு பார்வை: 

பெறுநர்: முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள், 

நக.எண்:1519/முகஉதி/ஒபக/2023, நாள்: 21.04.2023 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து வகை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துதல்-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் தொடர்பாக. 
1. அரசாணை நிலை எண்: 43, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந 4 -1) துறை, நாள்: 27.07.2022 2. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - முதலைமைச்சரின் காலை உணவுத் திட்டம் சார்ந்த திட்ட செயலாக்க வழிகாட்டு நெறிமுறைகள், நாள்: 27.08.2022. 3.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் கடித ந.க.எண்:2223/C7/SMC/ஒபக/2022, நாள்:07.09.2022 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குதல் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக 2022-23ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி, நகராட்சி. கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டமானது 2023-24ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் கீழ்க்காணும் குறிக்கோள்களை அடையும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

9ம் வகுப்பு வரை மே 5க்குள் தேர்வு முடிவுகள் வெளியிட உத்தரவு.

 தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும், 5ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


ஒன்று முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி வழங்கப்பட வேண்டும்.


மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் வருகைப்பதிவு சதவீதம், மாவட்ட அளவிலான தேர்வுகளின் மதிப்பெண் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், பள்ளிகளின் தேர்வு கமிட்டி வழியே, தேர்ச்சியை முடிவு செய்து கொள்ள வேண்டும்.


வரும், 5ம் தேதிக்குள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அழைத்து, தேர்ச்சி முடிவை அறிவிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள், இந்த மாதம் வெளியிடப்பட உள்ளன.


Click here for latest Kalvi News 

நான் முதல்வன் - பள்ளிக் கல்வித் துறையின் உயர்கல்வி வழிகாட்டி மையம்!

 

நான் முதல்வன் - பள்ளிக் கல்வித் துறையின் உயர்கல்வி வழிகாட்டி மையம்

உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் ( 29.04.2023 )

 உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!


CoSE - Deployment Counselling Instruction.pdf - Download here


Click here for latest Kalvi News 

முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவு

 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு : 111 ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது

முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் உத்தரவு





Click here for latest Kalvi News 

Income Tax - TDS 2023 Guide in Tamil

 ருமானத்தில் வரி பிடித்தம் ( TDS ) செய்பவர்களுக்கான கையேடு 2023

 INCOME TAX - TDS 2023 - IN TAMIL.pdf - Download here


Click here for latest Kalvi News 

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜேஇஇ முதல்நிலை தேர்வு கட்-ஆப் மதிப்பெண் உயர்வு

 நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பில் சேர்வதற்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு என்ற பெயரில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ஜேஇஇ மெயின் எனப்படும் முதல்நிலை தேர்வில் தகுதி பெற வேண்டும்.


அந்த வகையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வை 11,13,325 பேர் எழுதினர். இதில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதுவதற்கு 2,51,673 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 2,685 பேர் மாற்றுத் திறனாளிகள். 98,612 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 67,613 பேர் ஓபிசி, 37,563 பேர் எஸ்.சி., 18,752 பேர் எஸ்.டி., 25,057 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினர் (இடபிள்யுஎஸ்) ஆவர்.


இந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 90.7 பர்சன்டைல் ஆகி உள்ளது. இது 2022-ல் 88.4, 2021-ல் 88.8,


2020-ல் 90.3 பர்சன்டைலாக இருந்தது. இதுபோல இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களின் கட்-ஆப் மதிப்பெண் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


குறிப்பாக ஓபிசி பிரிவினருக் கான கட்-ஆப் இந்த ஆண்டு 73.6 பர்சன்டைலாக அதிகரித்துள்ளது. இது 2022-ல் 67, 2021-ல் 68 பர்சன்டைலாக இருந்தது.


கடந்த ஆண்டு 63.1 ஆக இருந்த இடபிள்யுஎஸ் பிரிவினருக்கான கட்-ஆப் இந்த ஆண்டு 75.6 பர்சன்டைலாக அதிகரித்துள்ளது. எஸ்.சி. பிரிவினருக்கான கட்-ஆப் 43-லிருந்து 51.9 ஆக அதிகரித்துள்ளது. எஸ்.டி.பிரிவினருக்கான கட்-ஆப் 26.7-லிருந்து 37.2 ஆக அதிகரித்துள்ளது.


கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டு களில் மாணவர்களுக்கு இணைய வழியில் பாடம் நடத்தப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் களுக்கு முழுமையாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்: தன்னார்வலர்களை பயன்படுத்த உத்தரவு

 அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப்.17-ம்தேதி தொடங்கி வைத்தார்.


இதையடுத்து சேர்க்கைப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்பதிவு செய்து வருகின்றனர்.


இதுதவிர, கிராமப்புறங்களில் அரசுப் பள்ளியில் சேருவதில் உள்ள பயன்கள், அரசின் நலத்திட்டங்களை முன்வைத்து ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாணவர் சேர்க்கைப் பணிகளில் இல்லம்தேடிக் கல்வி தன்னார்வலர்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களில், ‘இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் ஆர்வத்துடன் பங்களிப்பாற்ற வேண்டும். தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் மழலையர் அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்க்க தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களை அணுகி, அவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


சேர்க்கைக்கு விருப்பம் தெரிவிக்கும் குழந்தைகளின் விவரங்களை சேகரித்து, பள்ளிக்கல்வி தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், அந்த தகவலை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

நீண்டகாலம் பள்ளிக்கு வராதவர்களின் விவரங்களை தர உத்தரவு

 இந்த ஆண்டு 10, 11, 12-ம்வகுப்பு பொதுத் தேர்வுகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.


இவற்றில் பெரும்பாலான மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராதவர்கள் என்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து இடைநின்றவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வெழுத வைப்பதற்கான பணிகளில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


அதேநேரம் வரும் கல்வியாண்டிலும் இந்நிலை தொடரக்கூடாது என்ற அடிப்படையில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகளின் விவரங்களை பள்ளிகளிடம் இருந்து பெற்றுமே 2-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவுறுத்திஉள்ளது.


மேலும், முதல்வரின் மண்டல ஆய்வு கூட்டத்திலும் இந்த விவகாரம் சார்ந்து விவாதிக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்

 நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்


1.மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

இதில் இயற்பியல் (Physics)50, வேதியியல் (Chemistry)50, தாவரவியல் (Botany)50 மற்றும் விலங்கியல் (Zoology) 50 என அமைந்திருக்கும்‌.


2. ஒவ்வொரு  பாடத்திலும் பகுதி 'A' மற்றும் பகுதி 'B' என இரண்டு வகை இருக்கும்.


3.'A' பகுதியில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.


4.பகுதி 'B' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 15 வினாக்களில் ஏதேனும் 10  வினாக்களுக்கு விடையளித்தால் போதும். 5 வினாக்கள் சாய்ஸ் ஆகும்.


5.ஓவ்வொரு பாடத்திலும் உள்ள 'B'பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் ‌ஏனெனில் இவை அனைத்தும், சிந்தித்து விடை எழுதும் சிந்தனையை தூண்டும் திறனறி வினாக்கள் ( HOT -Higher Order Thinking Skills Questions)வகை ஆகும்.

எனவே மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும்.


6.மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 200 வினாக்களில் 180 வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும்.

ஓவ்வொரு வினாவிற்கும்  4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் ஆகும்.


7. தவறான விடைகள் ஒவ்வொன்றிற்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும்.எனவே வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து புரிந்து சரியான விடையை தேர்வு செய்து எழுத வேண்டும். அவசரப் படுதல் கூடாது. ஓ.எம்.ஆர்.சீட்டில் (OMR) விடையை ஒருமுறை குறித்த பிறகு மாற்றம் செய்ய இயலாது.


8. அதிக மதிப்பெண் பெற உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முதலில் மிகவும் நன்கு பதில் தெரிந்த தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு விடை அளிக்கவும்.


9. இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடை அளித்தால் மட்டுமே 650 மதிப்பெண்களுக்கு மேலாக மதிப்பெண்கள் பெற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


10.முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு ( Doubtfull Answer)  பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இல்லையெனில் நெகடிவ் மதிப்பெண் ஆகிவிடும்.


11.நீட் தேர்வில் கேட்கப்படும் அனைத்துமே MCQ ( Multiple Choice Questions)  வகைதான்.ஆனால் ஒவ்வொரு வினாவும் ஒவ்வொரு வகையாக  இருக்கும்.குறிப்பாக 

1)சரியான கூற்றினை தேர்ந்தேடு 

2) தவறான கூற்றினை தேர்ந்தேடு 

3) சரியான இனை எது? 

4) தவறான இனை எது ?

5) சரியானவற்றை  பொருத்தி விடை காண்க 

6) கொடுக்கப்பட்டுள்ள படங்களின் சரியான வரிசை எது ? 

7) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப் பட்டுள்ள X,Y மற்றும் Z ன் பெயரினைக் கண்டறி 

8) பின்வருவனவறில் எது சரியான ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் அமைந்துள்ளது ? 

9) கொடுக்கப்பட்டுள்ள வினாவின் அடிப்படையில் கூற்று மற்றும் காரணம் எவ்வாறு உள்ளது?

 10) அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், புத்தகங்களின் பெயர்கள்,வேறு பெயர்கள், வினைகள் நடைபெறும் இடம்,சுவாச ஈவு , சுவாச நிறமிகள், இதய அறைகள் மற்றும் செவுள்களின் எண்ணிக்கை,மூட்டுக்களின் வகைகள் மற்றும் எடுத்துக் காட்டு, சரியான Abbreviation  எது ? சுவாசக் கொள்ளளவு கள் மற்றும் கொள்திறன்களின் அளவுகள், தாவர ஹார்மோன்கள் மற்றும் அதன் பணிகள் , தாவரங்களில் காணப்படும் வேர்,தண்டு மற்றும் இலையின் மாற்றுருக்களுக்கான எடுத்துக்காட்டுகள் என நேரடியான வினாக்களும் கேட்கப்படும்.

 எனவே 

அன்பான மாணவச் செல்வங்களே தன்னம்பிக்கையுடன், பொறுமை மற்றும் சிந்தித்து விடை எழுதும் தெளிவான பகுத்தறிவுடன் நீட் தேர்வினை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று தகுதியான மருத்துவர் ஆகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்


- NEET ஆசிரியர் குழு



Click here for latest Kalvi News 

பள்ளிக்கல்வி பயணிக்க வேண்டிய பாதை

 ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசுப்பள்ளி மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பதினைந்திற்கும் மேற்பட்ட வகையான நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருவது அறியத்தக்கதே. அவற்றுள் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், கணித உபகரணப்பெட்டி, வண்ண எழுதுகோல்கள், உலக வரைபடப் புத்தகம் போன்றவை மிகவும் தரமானவையாக இருப்பது சிறப்பாகும். அதேவேளையில், தரமற்ற, எளிதில் கிழிந்து விடக்கூடிய, அளவு சரியில்லாத பருவ வாரியாக வழங்கப்படும் இலவச சீருடைகளுக்கு மாற்றாக நல்ல தரமான, எளிதில் கிழியாத, ஓரளவிற்கு பொருந்தக்கூடிய அளவிலான இரண்டு இணைச் சீருடைகள் முன்கூட்டியே வழங்குவதை உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.

ஆசிரியர், மாணவர் வருகைப் பதிவு  உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட அனைத்துப் பதிவுகளையும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய செயலியிலும் வழக்கமாகப் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளிலும் கற்பித்தல் பணிக்கு இடையூறாகக் கட்டாயமாக மேற்கொள்ள அறிவுறுத்தும் போக்குகள் எளிமையாக்கப்பட வேண்டும். இணைய வழியிலான பதிவே  போதுமானது. நிரந்தரமானதும் கூட.

பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கலைத்திருவிழா, சிறார் திரைப்படப் போட்டிகள், விநாடி வினா, வானவில் மன்றம் சார்ந்த பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உரிய சான்றிதழ், கேடயம் மற்றும் அயல்நாட்டுச் சுற்றுலா ஆகியவை அரசால் ஏற்பாடுகள் செய்யப்படுவது என்பது வரவேற்கத்தக்க நிகழ்வுகளாகும். இருப்பினும், இப்போட்டிகள் அனைத்திலும் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பது உண்மை. 

பல்வேறு பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் வழியாக வழங்கப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது. சில போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பு என்பதே இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகள் நிறைந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டி நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 10% பள்ளிகளே அங்குள்ள ஆசிரியர்கள் சிலரின் தன்னார்வ முயற்சியில் கலந்து கொள்ளும் சூழல் எதிர்வரும் காலங்களில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாகும். 

கல்வி உரிமைச்சட்டம் காரணமாக அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க விரும்பாத தனியார் மெட்ரிக் பள்ளிகளை மோகிக்கும் 25% பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்பதும் அதற்காக கோடிக்கணக்கான தொகையை வாரி வழங்குவதும் நல்ல செயலாகாது. ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வரிப்பணம் இதுபோன்ற காரணங்களுக்காக வீணாகச் செலவிடுவது ஏற்புடையதல்ல. ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் தனியார் பள்ளிகளுக்குக் கொட்டி அழிக்கப்படும் பொதுமக்கள் வரிப்பணத்தை அரசுப் பள்ளிகளின் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனத்திற்கு பயன்தரத்தக்க வகையில் செலவிடுவதே சாலச்சிறந்தது. அரசுப் பள்ளிகளுக்கு எதிரான இந்த நடைமுறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட மழலையர் வகுப்புகளால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அடையாளம் கண்டறியப்பட்ட உபரி இடைநிலை ஆசிரியர்கள் தற்காலிகமாக இவ்வகுப்புகளுக்குப் பணிநியமனம் செய்யப்பட்டனர். அதுபோல், அனைத்துக் குழந்தைகளுக்கும் பாடப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பைகள், எழுதுபொருள்கள், காலணிகள் முதலானவை வழங்கப்பட்டன. 

இத்தகைய வகுப்புகள் மீண்டும் சமூக நலத்துறையின் கீழ் அங்கன்வாடிப் பணியாளர்களைக் கொண்டு அங்கன்வாடி மையங்களிலேயே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டதும் அதற்கு பல்வேறு தரப்பினரும் தெரிவித்த எதிர்ப்புகளால் மீண்டும் அரசுப் பள்ளிகளிலேயே இயங்கும் என்று அறிவித்ததும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளூர் படித்த, பட்டதாரி பெண்களைப் பகுதிநேர தன்னார்வ ஆசிரியராக நியமித்துள்ளதும் அனைவரும் அறிந்ததே. அஃது ஒரு வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்துவிடக் கூடாது. அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செவ்வனே இயங்க தக்க தகுதி மிக்க ஆசிரியர்களையும் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்களையும் தரமான சீருடைகள் உள்ளிட்ட பொருட்களையும் உரிய காலத்தில் வழங்குவது இன்றியமையாதது. 

மாண்டிசோரி உள்ளிட்ட கல்வி வல்லுநர்கள் பரிந்துரைத்த எளிய விளையாட்டு வழி கற்றலில் இனிமை அடிப்படையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் உற்சாகத்துடன் இக்குழந்தைகள் கற்க தொடங்கப்பட்ட்டுள்ள அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் திறன்மிகு தொலைக்காட்சி வழி காணொலிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுதல் இன்றியமையாதது. இது அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர் பணிப்பதிவேடுகளில் எண்ணற்ற விடுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு முழுமுதற் பொறுப்பு அவ்வக்காலங்களில் பணிபுரிந்த கல்வி அலுவலர்களின் மெத்தனம் மற்றும் அசட்டைப் போக்குகளே காரணங்களாகும். அதற்கு சம்மந்தப்பட்ட ஆசிரியர் பெருமக்களைப் பலிகடா ஆக்குவது தொழிலாளர் சட்டத்திற்கு புறம்பானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய இட மாறுதல் மற்றும் பணி ஓய்வு காரணங்களால் அலுவலகத்தை விட்டு நீங்கிய அலுவலர்கள்தாம் விடுபட்ட பதிவுகளுக்குப் பொறுப்பு என்பதை வலியுறுத்திக் கற்பித்தல் பணிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஆசிரியர்களை வீணாக அலைய விடும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தற்போது பணியில் உள்ள அலுவலர்களே இத்தகைய குறைகளைக் களைந்து நல்ல தீர்வு காண வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வழங்கப்படுதல் முக்கியமானது.

கற்றல் இழப்புகளாலும் ஊரடங்கு கால கவனச் சிதறல்களாலும் இயல்பான மறதியினாலும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் மிகவும் பின்னோக்கிச் சென்று விட்ட மாணவர்களை ஓரிரவில் தம் மாயவித்தைகளால் யாராலும் ஒரேயடியாக முன்னோக்கித் தள்ளிவிட இயலாது என்பது கசப்பான உண்மையாகும். இந்த நெருக்கடி நிலையை மாநில அளவிலான பள்ளியை ஆய்வு செய்யும் குழுவினர் உணருதல் நல்லது. 

இயல்பாகவே பதின்ம வயதில் எழும் உளவியல் சார்ந்த மனவெழுச்சிகளுக்கு எப்போதும் வடிகால்களாக இருப்பவை கலையும் இலக்கியமும் ஆகும். படைப்பாற்றல் திறன்கள் இத்தகையோரிடம் எப்போதும் மேலோங்கிக் காணப்படும். பள்ளி நூலக வாசிப்பும் பேச்சு, எழுத்து, ஓவியம், நடிப்பு சார்ந்த தனித்திறன் வெளிப்பாடும் மானுடத்தை அறிய வைக்கும். கைத்தொழில் வகுப்பில் வாழ்க்கையின் மீதான தன்னம்பிக்கை மிளிரும். இவற்றுக்கெல்லாம் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு மாணவருக்கும் தக்க களம் அமைத்துத் தரவேண்டியது இன்றியமையாதது. இதுபோன்ற நற்செயல்களில் மாணவரை ஈடுபடுத்தும் போது நற்பண்புகள் வளர்வதுடன்  நெறிபிறழ்ந்து தவறான பழக்கவழக்கங்களில் தம்மை வேறு வழியின்றி ஆட்படுத்திக் கொள்வது பெருமளவு குறையும். 

இதனைக் கருத்தில் கொண்டு தமிழகக் கல்வித்துறை அண்மையில் 1 முதல் 12 வகுப்புகளுக்கான பாட கால அட்டவணையில் பிற்பகல் கடைசிப் பாடவேளைகளில் தனித்திறன் வெளிப்பாட்டிற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் விதமாக வாரந்தோறும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூறியதைப் போல இவற்றைக் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். பள்ளிகள்தோறும் கலை, இலக்கியம் சார்ந்த போட்டிகளும் விழாக்களும் கடமைக்காக அல்லாமல் ஆசிரியர் மாணவர் நல்லுறவைப் பேணி வளர்க்கும் வகையில் அமைந்திடுதல் சாலச்சிறந்தது. திசைமாறிப் போகும் இளைய பாரதத்தினரை நல்வழியில் மட்டுமல்லாமல் நேர்வழியிலும் பயணிக்க வைக்க பள்ளிகளை விட்டால் சமுதாயத்தில் வேறில்லை. கல்வித்துறையில் காணப்படும் இவைபோன்ற எண்ணற்ற களைகள் களையப்படுவதும் புதிய மாற்றங்களைச் திறந்த மனத்துடன் செயற்படுத்துவதும் அவற்றை ஏற்றுக் கொள்வதும் அனைவரின் கடமையாகும்.

- எழுத்தாளர் மணி.கணேசன்.