Alphabets Flashcards - PDF

CBSE Exam 2023: அடுத்த ஆண்டு முதல் CBSE பாடத்திட்டத்தில் மாற உள்ள சில முக்கிய தகவல்கள்

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2022-23 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பாடத்திட்டத்தை வாரியம் 50-50 சதவீதம் பிரித்து (CBSE Syllabus) இரண்டு பருவங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், 2023 இல் முந்தைய ஆண்டுகளைப் போலவே ஒரு தேர்வு நடத்தப்படும்.

2022 ஆம் ஆண்டில், CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வை இரண்டு பருவங்களாக நடத்தியது. முடிவைத் தயாரிக்க, தியரி பேப்பர்களில் டேர்ம் 1-க்கு 30 சதவீத வெயிட்டேஜும், டெர்ம் 2-க்கு 70 சதவீத வெயிட்டேஜும் வாரியம் வழங்கியிருந்தது. மறுபுறம், நடைமுறையில், இரண்டு விதிமுறைகளுக்கும் சமமான வெயிட்டேஜ் வழங்கப்பட்டது.


இருப்பினும், இந்த ஏற்பாடு அடுத்த ஆண்டு தொடராது, முந்தைய ஆண்டுகளில் இருந்தது போல் 2023 இல் ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருக்கும் என்று வாரியம் அறிவித்துள்ளது.

30% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது..

தேர்வை ஒரே கட்டமாக நடத்துவதை தவிர, CBSE 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தையும் சுமார் 30% குறைத்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


இந்த ஆண்டுக்கான அத்தியாயங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக, சில பாடங்களில் இருந்து பல அத்தியாயங்கள் மற்றும் அலகுகள் அகற்றப்பட்டுள்ளன, மற்றவை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.


2023 ஆம் ஆண்டு வாரியத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான படிப்புப் பொருள், மதிப்பெண் திட்டம், மாதிரி வினாத்தாள், கேள்வி வங்கி போன்றவற்றை வாரியம் விரைவில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும். மாதிரித் தாளில் இருந்து, மாணவர்கள் தேர்வைப் பற்றிய ஒரு யோசனையைப் பெறுவார்கள், மேலும் அது தயாரிப்பில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மாதிரி தாள், குறிக்கும் திட்டம்...

மாதிரி வினாத்தாள், மதிப்பெண் திட்டம், கேள்வி வங்கி போன்றவை, சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் அங்கு அனைத்து விவரங்களையும் சரிபார்க்க முடியும்.


இந்த ஆண்டு வாரியத் தேர்வுகள் தாமதமானது, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தை எழுதுவதற்கும், 12 ஆம் வகுப்பிற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் குறைந்த நேரமே உள்ளது. இது தீவிர திட்டமிடல் மற்றும் கூடுதல் வகுப்புகள் தேவைப்படும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு.

 தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை 09.08.2022 (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு!


பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 2022 ஆம் ஆண்டு 01.01.2022 நிலவரப்படி மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் ( seniority List ) தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2021 க்குள் முழுத்தகுதி பெற்ற அரசு / நகராட்சி ! ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


DEE Proceedings - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா - வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 சுதந்திரத் திருநாள் அமுதடப் பெருவிழா வினாடி வினா போட்டிகள் சார்பான கடிதம் நகல் , இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


மேற்கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு போட்டிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்ற மாணவர்களின் விவரங்களை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு : பார்வையில் கண்டுள்ள கடிதம் நகல் .


Dir Proceedings - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பயிற்சி - ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது

 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பயிற்சி - ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: எஸ்எம்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 2 முதல் 31-ம் தேதி வரை பல்வேறு நிலைகளாக நடைபெற உள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் அனைத்துவித அரசுப் பள்ளிகளிலும் உள்ள பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, பாலினப் பாகுபாடு, எஸ்எம்சி நிதியைப் பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அளவிலான உண்டு உறைவிடப் பயிற்சி ஆக. 2,3-ம் தேதிகளில் மதுரையில் நடைபெறும். மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் ஆக. 8 அல்லது 9-ம் தேதியில் நடைபெறும். பங்கேற்பாளர்களின் போக்குவரத்து வசதிக்கேற்ப மையம் தேர்வு செய்யப்படும். மேலும், பள்ளி அளவிலான பயிற்சி ஆக. 11 முதல் 31-ம் தேதி வரை வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை திட்டம்.. பள்ளிப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்

Minority Scholarship Scheme: 2022- 23 கல்வியாண்டிற்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டம், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டம், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ஆகிய மூன்று திட்டங்களுக்கு  மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினர் நல இயக்ககம் தெரிவித்துள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்:

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி பற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவ/ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகைகள்:


இந்திய அரசு/மாநில அரசு/ அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ/மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த கல்வித் தொகையைப் பெற, மாணவர்கள் தங்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

முதல் இரண்டு திட்டங்களிலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை விட குடும்ப வறுமைக்கு முக்கியத்துவம் அளித்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  மூன்றாவது திட்டத்தில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

முக்கியமான நாட்கள்:

பள்ளிப் படிப்பு  கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு புதிதாக பதிய அல்லது புதுப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரை 30.09.2022 வரையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மேற்படிப்பு  மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 31.09.2022 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கடந்த 2006ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான குறைந்தபட்ச ஆதரவு திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகை திட்டங்கள் தொடங்கப்பட்டன. மத்திய அரசின் 100%  நிதிப் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  மாணவ/ மாணவியரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். மேற்படி, தகவல்களுக்கு minorityaffairs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

இல்லம் தேடி கல்வித் திட்டம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

 இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறுசீரமைத்துள்ளது.

கொரோனா பொது முடக்க காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்புகளைக் குறைத்திடும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி"திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி வளாகங்களுக்கு வெளியே உள்ள இல்லம் தேடி மையங்களில் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தும் விதமாக,  மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவிலான நான்கு  அடுக்கு குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களுக்கும் தலைவர், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுக்களும் தங்கள் அளவில் கொடுக்கப்பட்ட பிரத்தியோக பணிகளை செயல்படுத்தி வருகின்றன.

வட்டார அளவிலான குழுவில் இரண்டு ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி தொடர்பான வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கவனித்து வந்தனர். இந்த ஒருங்கிணைப்பு பணிகளை முழு நேரப் பணியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது . அதேபோன்று, மாவட்ட அளவிலும் ஆசிரியர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறு சீரமைத்துள்ளது. அதன்படி, மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும்  என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தூத்துக்குடி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு எழுதிய கடிதத்தில், "  தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ( 15.07.2022 ) இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும் என்று முடிவெடிக்கப்பட்டது.

அதன்படி மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில் ஈடுபடவும்" என்று தெரிவிக்கப்பட்டது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

TNSED (SMC) Parents Mobile App - பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

 TNSED (SMC) Parents Mobile App :


29.07.2022 நடைபெறவுள்ள SMC உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் SMC Parents App - ஐ Google Play Store -ல் பதிவிறக்கம் செய்து அதில் தங்களது வருகையினை பதிவு செய்ய வேண்டும்.


User Name : உறுப்பினர்களது பதிவு செய்த Phone Number


Password : Smc & Phone Number last 4 Digit ( S Capital ) 


TNSED (SMC) Parents Mobile App - Download here...


The username is the mobile number and password is Smc@last four digits. 

The message will be passed on to all HMs via EMIS inbox module and the SMC and EMIS DCs as well.

SMC பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு

 பள்ளி மேலாண்மைக் குழுவில் (எஸ்எம்சி) தெரிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள எஸ்எம்சி குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம், குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, பாலினப் பாகுபாடு, எஸ்எம்சி நிதியை பயன்படுத்துதல் குறித்து மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம்களுக்கு கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. 


மாநில அளவிலான உண்டு உறைவிடப் பயிற்சி ஆக.2, 3 ஆகிய நாள்களில் மதுரை பில்லா் மையத்தில் நடைபெறும். மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி ஆக.8 அல்லது 9 ஆகியவற்றில் ஏதாவது ஒருநாளில் நடைபெறும். பங்கேற்பாளா்களின் போக்குவரத்து வசதிக்கேற்ப மையம் தோ்வு செய்யப்படும். பள்ளி அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் ஆக.11 முதல் ஆக. 31 வரையிலான நாள்களில் நடைபெறவுள்ளது.

SMC Empty letter pad pdf

  SMC letter pad அனைத்து பள்ளிகளிலும்  இருக்க வேண்டும்...


அந்த வகையில் Smc empty format கீழே உள்ள link ஐ click செய்து downlaod செய்து கொள்ளுங்கள்.....


👇👇👇👇👇👇👇👇👇👇


Click SMC Empty letter pad pdf

Ennum Ezhuthum Lesson Plan - August 2022

Ennum Ezhuthum -  August 1st Week Lesson Plan 








ஆகஸ்ட் 10 - உள்ளூர் விடுமுறை

 

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த திருவிழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன் முக்கிய திருவிழா ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு பொருந்தாது எனவும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதனை ஈடு செய்யும் வகையில் செப்டெம்பர் 3 ஆம் தேதி (சனிக்கிழமை ) முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து திருவிழாவில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: சிற்றுண்டி மெனு முதல் குறிக்கோள் வரை - முழு விவரம்

 

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம்.

 முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரம்:

1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தபடவுள்ளது.

இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

உணவு விவரம்

 திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

செவ்வாய் - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி

புதன் - வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்

வியாழன் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளி - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.

வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி

குறிக்கோள்கள்

மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்

ஊட்டச்சத்தை உயர்த்துதல்

வருகை அதிகரித்தல்

வேலைக்கும் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை குறைத்தல்

வழிமுறைகள் 

உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் FSSAI நெறிமுறைகளின் படி இருக்க வேண்டும்

உணவு தயாரிப்பதில் வேறு வெளி மூலப் பொருட்களை சேர்க்கக் கூடாது.

உள்ளூர் சமையல் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்

காய்கறிகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்

பள்ளி மேலாண்மை குழு தினசரி உணவை ருசி பார்க்க வேண்டும்

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்

கண்காணிப்பு

இந்த திட்ட செயல்பாட்டை கண்காணிக்க சமூக நலன், ஊரக வளர்ச்சி, நகர்புறம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழு மாநில, மாவட்ட, பள்ளி அளவில் அமைக்க வேண்டும்.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

 

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 28.07.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடு - Morning prayer




1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு.

 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.


முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை- அரசாணை வெளியீடு.


GO NO : 43 , DATE : 27.07.2022 - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை

 பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.


பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!


எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஏற்படும் ஐயங்களுக்கான தெளிவான விளக்கங்கள் - FAQ

 எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஏற்படும் ஐயங்களுக்கான விளக்கங்கள்


 FAQ Pdf - Download here..



Click here to Join WhatsApp group for Daily kalvi news