🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
Education and Information
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும்.
வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- மாவட்ட ஆட்சித்தலைவர்
தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Click here t o join whatsapp group for daily kalvinews update
கனமழை காரணமாக நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்
Click here t o join whatsapp group for daily kalvinews update
அதிகனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 18.12.2023 ) விடுமுறை அறிவிப்பு..
⭕ சிவகங்கை ( பள்ளிகள் மட்டும்...).
⭕ கொடைக்கானல் வட்டம் ( பள்ளிகள் மட்டும்...).
⭕ தேனி ( பள்ளிகள் மட்டும்...).
⭕ விருதுநகர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு..).
⭕ இராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்...).
⭕ நெல்லை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
⭕ தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
⭕ கன்னியாகுமாரி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
⭕ தென்காசி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
Click here t o join whatsapp group for daily kalvinews update
மழை பாதிப்பு - நாளை ( 07.12.2023 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.07) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ( 06.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புயல் மழை - நாளையும் (05.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
⭕ ராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
கனமழை காரணமாக ( 04.12.2023) திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
( 04 DEC 2023 , காலை 7.20 மணி நிலவரப்படி)
⭕ செய்யாறு , வந்தவாசி ஆகிய வருவாய் கோட்ட ( திருவண்ணாமலை) வட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ( திருவண்ணாமலை மாவட்டம்)
⭕ சென்னை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
⭕ காஞ்சிபுரம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
⭕ செங்கல்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
⭕ திருவள்ளூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
⭕ விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை-
⭕ இராணிப்பேட்டை - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை..
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
Public Holiday on 04.12.2023 ( Monday ) for the Districts of Chennai , Tiruvallur , Kancheepuram and Chengalpattu declared under Negotiable Instruments Act , 1881 - Orders - Issued .👇
GO NO : 751 , DATE : 03.12.2023 - Download here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
சென்னை - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
இந்நிலையில், சென்னையில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மழை அச்சம் ஒருபுறம் இருந்தாலும் இந்த விடுமுறைக்கான காரணம்,
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி இருப்பதன் காரணமாக, சென்னை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வானிலை மையம் அறிவிப்பை அடுத்து புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் பருவமழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் இருக்கிறது.
அதன்படி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை, மழை பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையின்படி பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது.
இந்தச் சூழலில் நிகழாண்டு மழை காலங்களில் விடுமுறை விடுவதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு சா்ச்சையானது. இதனால் பள்ளி தலைமையாசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் அதிருப்தி அடைந்தனா்.
அதேபோன்று வியாழக்கிழமை பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை தரப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய சில பகுதிகளும் வருகின்றன.
இதனால் அந்தப் பகுதிகளில் உள்ளவா்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சிக்கல்களை சரிசெய்வதற்கான மாற்று நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்..
1) சென்னை மாவட்டத்தில் நாளை (30.11.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
கனமழை காரணமாக நாளை (25.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
⭕ செங்கல்பட்டு (பள்ளிகள்)
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
கனமழை விடுமுறை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
- மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி
மழைக் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்படுவது எப்பொழுதும் உள்ள நடைமுறை. விடுமுறை விடப்படுவதற்கான முக்கிய காரணம் மாணவர்கள் மழையில் நனைந்து அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுக்காமல் இருப்பதற்காகவும் தான்.
தற்போது உள்ள தகவல் தொடர்பு வசதியில் தொலைக்காட்சி வழியாக மாவட்ட ஆட்சியர் விடுப்பு அறிவித்தால் மாவட்டம் முழுவதும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது.
இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பொருந்தும் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பம் இன்றி முடிவெடுக்க முடியும்.
சூழலுக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும்.
பள்ளி தலைமை ஆசிரியரால் பள்ளி விடுமுறை என்ற தகவலை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க முடியாது. முதல் நாள் மாலை 4:30 மணி வரையில்தான் தகவல்களை மாணவர்களுக்கு சேர்க்க முடியும்.
காலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விடுப்பு விட நினைத்தாலும் மாணவர்களுக்கு அந்த தகவல் சென்று சேர வாய்ப்பு இல்லாததால் மாணவர்கள் நனைந்து பள்ளிக்கு வந்து பள்ளி விடுப்பு என்று தெரிந்து மீண்டும் இல்லம் திரும்ப நேரிடும்.
இந்த குழப்பமான நடைமுறையினால் விடுமுறை அளிக்கும் நோக்கமே சிதைந்து விடுகிறது.
பள்ளி வேலை நாட்கள் கணக்கிடுவதிலும் ஒரு மாவட்டத்தில் சீரற்ற முறையில் இருக்கும். ஈடுசெய்யும் வேலை நாள் அறிவிப்பதிலும் குழப்பம் ஏற்படும்.
மழைக்காக விடப்படும் விடுமுறைகளை மாவட்டம் அல்லது தாலுக்கா முழுமைக்கும் மாவட்ட நிர்வாகமே அறிவித்த முன்பிருந்த நடைமுறையே சிறப்பானதாகும்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 22.11.2023 ) விடுமுறை அறிவிப்பு
* நாகை ( மழை சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்)
* மயிலாடுதுறை ( மழை சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்)
* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும்
* புதுச்சேரி - பள்ளிகளுக்கு மட்டும்
விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டம்
* சென்னை
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், “அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும், மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாள்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாள்களில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
விடுமுறை காரணமாக எந்தப் பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பு: பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தல் கூடாது. அவ்வாறு தேங்கியிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்பின்னர்தான் பள்ளிகள் செயல்பட வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் கடிதம் - ஆண்டு 2018 Letter No.30354 / SE5(2)/ 2018-1, Dated: 28-11-2018 -
>>> பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் கடிதம் - Letter No.30354 / SE5(2)/ 2018-1, Dated: 28-11-2018 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
கனமழை காரணமாக நாளை (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update