Showing posts with label STD 11. Show all posts
Showing posts with label STD 11. Show all posts

11th & 12th Paper Valuation Camp Schedule - 2024

 HSE Paper Valuation Camp Schedule - 2024

12th Paper Valuation Camp Schedule - 2024

Time Table : 01.03.2024 ( Friday ) TO 22.03.2024 ( Friday )







11th Paper Valuation Camp Schedule - 2024

Time Table : 04.03.2024 ( Monday ) TO 25.03.2024 ( Monday )




🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

12.02.2024 முதல் 10, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு

  தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு தொடங்க உள்ளன. திருச்சியில் தேர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு, எந்த குளறுபடிகளும் நடக்காத வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.




அதன் தொடர்ச்சியாக மாவட்ட வாரியாக தேர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் இன்று நடக்கிறது. பிளஸ்2 பொதுத் தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்விற்கான முதன்மை விடைத்தாள்களின் வகைகள், அதனுடன் தைக்கவேண்டிய வரைகட்டத்தாள் மற்றும் வரைபடங்கள் விவரம் ஆகியவை தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் இறுதி வாரத்திலும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

 

exam1.jpg?w=360&dpr=3


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு தேதிகள், வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.


தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்குமுன் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப்.12 முதல் 24-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப். 12 முதல் 17-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப். 19 முதல் 24-ஆம் தேதி வரையும் செய்முறைத் தோ்வு நடத்தி முடிக்க வேண்டும்.


இதையடுத்து மாணவா்களின் செய்முறைத் தோ்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பிப்ரவரி 5 முதல் 17-ஆம் தேதிக்குள் தோ்வுத் துறை (‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவா்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூா்த்தி செய்து மாவட்ட தோ்வுத்துறை அலுவலகங்களில் சமா்பிக்க வேண்டும். தோ்வின் போது மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.


அதேபோல், தோ்வுக்கு வருகை புரியாதவா்களின் விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் பூா்த்தி செய்து வழங்க வேண்டும். தோ்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியா்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முறையாக செய்ய வேண்டும்.


இதுதவிர செய்முறை தோ்வுக்கான புறத்தோ்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியா்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

11th Std - Half Yearly Examination 2023 - Answer key Download

 11th Std - Half Yearly Examination 2023 - Answer key


11th English - Answer Key - Download here

Prepared by 

Mr.W.Robert & Mr.A.John Emmanuel, PG Assistant Teachers.



 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10, , 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

 1156254

தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் வரும் 30-ம் தேதிக்குள் சரிபார்க்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


எமிஸ் வலைதளத்தின் விவரங்கள் அடிப்படையிலேயே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் உள்ளிட்ட 13 தகவல்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை நவ.30-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.


பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும். அதனால், இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் தங்கள் நேரடி கவனத்தில் மேற்கொள்ள வேண்டும்.


பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மேலும், எக்காரணம் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு, திருத்தங்கள் கோரி தேர்வுத் துறைக்கு விண்ணப்பம் அனுப்பக் கூடாது.


10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பகுதி 1-ல் தமிழை மொழிப் பாடமாக எழுதியாக வேண்டும். எனினும், சிபிஎஸ்இ போன்ற பிற பாடத் திட்டத்தில் படித்து நேரடியாக 9, 10-ம்வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழிப் பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

11th Public Exam Time Table 2024 Download

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - SPD செயல்முறைகள்!

 IMG_20230913_121421

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - SPD செயல்முறைகள்!

CG Book Distribution Proceedings - Download 


Click here for latest Kalvi News 

10ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் - SPD செயல்முறைகள்!

 10ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


 Click here for latest Kalvi News 

11th - Tamil New Guide Study Material

11th - Tamil New Guide - Mr.A.Ezhilarasan Pgt, GHSS ELAPAKKAM - Download here
--------------------------------------

11th Month Wise Content 2023 - 2024 | Download here

11th Physics - Important Questions & Problems - Mr Rajendran - E/M - Download here

11th Chemistry - One Mark Question - Test 1 Download here | Test 2 Download here - EM - Mr S.Manikandan

11th Chemistry - Full portion One Mark Test Question Paper 1 - Download here |Question paper 2 - Download here

11th Chemistry - Full portion Revision Test 3 - EM - Mr S.Manikandan - Download here

11th Chemistry - Full portion Revision Test 2 - EM - Mr S.Manikandan - Download here


11th Chemistry - Chapter Wise Evaluation And MCQ Question With Answer Key ( EM ) - Mr G.Suresh - Download here 

11th English - Quarterly Exam Sep 2022 - Model Question Paper Download - Answer Key Download ( Rasi English Guide ) 

11th Std All Subject Instant Supplementary Exam Question Papers and Answers June 2023 - Download here


 Click here for latest Kalvi News 

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - இளநிலை பட்டப் படிப்பு வரை உதவித்தொகை வழங்க ஏற்பாடு ( முழு விபரம் )

 அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-2024 - ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது . 

அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் . இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றி 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ .10,000 / - ( மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இருதாள்களாக தேர்வு நடத்தப்படும் . ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும் , முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . 


முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் , இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும் . 18.08.2023. 23.09.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு 2023-2024. ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் , விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது . மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.08.2023 முதல் 18.08.2023 வரை பதிவிறக்கம் செய்து . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ .50 / - சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . 


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் .18.08.2023

 TN CM Talent Search Examination - Details - Download here



 Click here for latest Kalvi News 

+1 & +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31.07.2023 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

 மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 10.07.2023 மற்றும் 20.07.2023 அன்று இவ்வலுவலகத்திலிருந்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.


 உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை உறையிடும் பணியினை முடித்து அதனை மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கும் நாள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கும் நாள் மற்றும் பள்ளித் தலைைமயாசிரியர்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கும் நாள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

 Click here for latest Kalvi News 

+1 மறுமதிப்பீட்டில் 236 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம்!

 +1 மறுமதிப்பீட்டில் 236 தேர்வர்களின் மதிப்பெண்களில் மாற்றம் செய்து தேர்வுத்துறை பட்டியல் வெளியீடு.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

11th Month Wise Content 2023 - 2024 | School Education

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் குறித்த வழிமுறைகள் வெளியீடு!

 

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தல் குறித்த வழிமுறைகள் வெளியீடு!

10, 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

 


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்.5-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதேபோல், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம்தேதி வரை நடத்தப்பட்டது.


இதையடுத்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.


இதைத் தொடர்ந்து 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19)வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், 11-ம் வகுப்பு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தாங்கள்படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.


ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு - முடிவுகள் மே 19-ல் வெளியீடு

 பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்றது. இறுதி நாளில் நடைபெற்ற கணித பாடத்தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங், ஆடை வடிவமைப்பு உள்ளிட்டபாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் கணிதப் பாடத் தேர்வு மிகக் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிளஸ்-2 கணிதபாடத் தேர்வும் கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபசார விழாக்களும் நடத்தப்பட்டன.


பிளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15 முதல் மே 4-ம் தேதிவரை நடைபெற உள்ளன. இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடஉள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளைமுடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாதிரித் தேர்வு: இதற்கிடையே, 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அந்தந்த மாவட்ட வாரியாகஅடுத்த வாரம் தொடங்கி நடைபெறஉள்ளது. இந்நிலையில், ஆண்டுஇறுதித் தேர்வுக்கு முன்னதாக 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு ஒன்றை நடத்தி முடிக்க வேண்டுமென கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இந்த தேர்வுக்கான வினாத்தாள் பிரத்யேகமாக பள்ளிகளுக்குஅனுப்பப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest Kalvi News 

+1 , +2 - விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக (MVO) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

 

மேல்நிலைத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக (MVO) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

Click here for latest Kalvi News 

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்துவோருக்கு திடீர் கட்டுப்பாடு

 எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.


தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததும் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கும். இந்நிலையில், விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.


அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:


> முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிக வேறுபாடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின் போது கண்டறியப்பட்டு, தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் வகையில், மதிப்பீடு செய்யும் போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும்.


> மாணவர்கள் விடைத்தாளில் நடுவில் 2 பக்கங்களில் எழுதாமல் விட்டு, அடுத்து வரும் தாளில் எழுதியிருந்தால், அதனை மதிப்பீடு செய்யாத நிகழ்வும் நேரிடுகிறது. இதன்மூலம், முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் தங்கள் பணியை சரிவர கவனிக்கவில்லை என்பது தெரிய வருகிறது.


> உதவி தேர்வாளர்களால் விடைக்குறிப்பின்படி, மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மை கண்காணிப்பாளர், கூர்ந்தாய்வு அலுவலர் மீளச் சரிபார்க்கும் போது கவனக்குறைவால் அதிகபட்ச மதிப்பெண்களை விட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரிய வந்தது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் தவறுகளுக்கு முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்.


> விடைத்தாள் மதிப்பீட்டு பணியின்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் செல்போனை விடைத்தாள் திருத்தும் அறையில் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


> மதிப்பீடு செய்ததில் அதிகளவில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப் பேற்க வேண்டும். மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.


Click here for latest Kalvi News 

+1 & +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் - அட்டவணை வெளியீடு!!!

+1 & +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் - அட்டவணை வெளியீடு!!!

 DOWNLOAD PDF மதிப்பீட்டு முகாம் - அட்டவணை


Click here for latest Kalvi News