Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts
Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.03.23


   

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் : 156
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

பொருள்:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் என பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

பழமொழி :

He who eats crumbs will live a hundred years.

நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 

2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்

பொன்மொழி :

ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.

பொது அறிவு :

1. கப்பல் படைத்தலைவர் நம் நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

 அட்மிரல் . 




 2. இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண் யார்?

 பமீலா தேவி.

English words & meanings :

hammock – a hanging bed between two trees. noun. when I called him he was sleeping in the hammock. வழியிலான தொங்கு மஞ்சம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, அதன் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது எந்த வகையான வைரஸ் தொற்றையும் தவிர்க்க உதவும்.

 எடை இழப்புக்கு கொத்தமல்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நீரில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதன் விளைவாக, உடலில் கொழுப்பு குறையத் தொடங்குகிறது.

கணினி யுகம்

Ctrl+Z: It is used to get back the deleted item. For example, if you have deleted the data by mistake, you can press Ctrl+Z to retrieve (Undo) the deleted data. Ctrl + P: Prints a note. 

மார்ச் 15


ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. 

நீதிக்கதை

கருப்பங்கழி!

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.

ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா? என்றார்.

உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர் என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ அரசே! அவர் உங்களை அவமானப்படுத்துகிறார். அவர், எங்கள் அரசர் பலவீனமானவர். எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார் என்றார்.

இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார் என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். 

அரசே! என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்? என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, நான் உன்னிடம் பிரியம் வைத்திருப்பதற்குக் காரணமே இதுதான் என்று புகழ்ந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.

இன்றைய செய்திகள்

15.03. 2023

* முன்னாள் மாணவர்களை இணைந்து பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின்தேவை 17,647 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

* கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

* டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் - மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது.

* ரூ.15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இறுதிக் கட்ட பரிசீலனை.

* மீண்டும் ஏவுகணை சோதனை - தென் கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.

* இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

* Education Minister Anbil Mahes has appealed to the headmasters to share their views on carrying out activities for the development of the school along with the former students.

 * Due to the increase in power consumption in Tamil Nadu, the daily power demand has reached a new high of 17,647 MW.  It is expected to increase further in the coming days.

 * Due to the increase in the spread of corona infection, it is necessary to wear face mask and observe personal distance: Information of Minister M. Subramanian.

 * Farmers strike again in Delhi - March 20 begins.

 * Rs 15,000 crore production of 200 BrahMos missiles: Ministry of Defense finalizes final phase

 * Missile Test Again - North Korea Threatens South Korea.

 * After 20 years, India and Australia will meet in the final of a series organized by the International Cricket Council.

 England Open Badminton - Indian player Pranai advances to next round.

 Pro Hockey League: India beat Germany again.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 01.03.2023

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 01.03.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

 அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் எண்: 136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.


பழமொழி :
The early bird catches the worm 

முந்தி முயல்வோர்க்கே முதல் வெற்றி.


இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.


பொன்மொழி :

ஒருவனை அகந்தை ஆட்கொண்டால் – அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும்.


பொது அறிவு :

1. கடித உரைகளை கண்டுபிடித்தவர் யார்? 

 பியர்சன்.

 2. ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் யார்? 

 Dr. மன்மோகன் சிங்.


English words & meanings :

catheter - a flexible tube inserted into bladder to remove fluid. noun. medicine. சிறுநீர் நீக்க குழாய். பெயர்ச் சொல். மருத்துவம்


ஆரோக்ய வாழ்வு :

சீனாவில் நடந்த ஆய்வில், பிற்பகலில் தூங்குவோருக்கு இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். அத்துடன் பேசுவதை சரளமாகவும் பேசவும், நினைவாற்றலுக்கும் தொடர்புடையதாக பகல் தூக்கம் விளங்குகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட அறிவாற்றல் செயல்திறன் சோதனையில் பிற்பகலில் தூங்குவோரே அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பிற்பகலில் தூங்குவோருக்கு செயல் திறன்கள் அதிகரிப்பு, நினைவாற்றல் அதிகரிப்பு, சிக்கலான சூழ்நிலைக்கு தீர்வு காண்பது, இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சரளமான பேச்சு போன்றவை அதிகமாக காணப்பட்டது. பிற்பகலில் தூங்காதவர்களுக்கு, அவர்களைக் காட்டிலும் இவை அனைத்தும் குறைவாகவே காணப்பட்டது.


  மார்ச் 01 இன்று


பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

பாகுபாடுகள் ஒழிப்பு நாள் (Zero Discrimination Day)  என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும்  மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது.  இந்த நாள் 2014 மார்ச் 1 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இதை   பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பின் (யுனெய்ட்ஸ்) நிறைவேற்று இயக்குனரான மைக்கேல் சிடிப் என்பவரால் தொடங்கப்பட்டது


நீதிக்கதை

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான். அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். அப்போது அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார். ராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் சென்றான். 

அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. இராமா! போயும், போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? உடனே ராமனுக்கு ரோஷம் வந்து விட்டது. 
அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை பயன் படாது. என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். எப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா? முடியும், வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன். அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன் செய் பார்க்கலாம். என்றார். 

இருவரும் பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர். அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு சென்றார். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை நீருக்குள் தள்ளி விட்டுடான். அரசர் பதறினார். 

இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள். 

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார். அரசர், இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா? என்றார். அரசர் வருத்தத்தோடு. அரசே! நோய்வாய்ப்பட்டு வயோதியான நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள். 

இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் செலவும் இனி இல்லை. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது. எனவேதான் இப்படிச் செய்தேன். என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. என்றான்.


இன்றைய செய்திகள் - 01.03.2023

* 1.50 கோடி பேர் ஆதாரை இணைக்கவில்லை; இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி.

* 5 ஆண்டுகளில் இந்தியர்களும் விண்வெளிக்கு செல்வார்கள் என முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளர் வி.கே.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

* நீர்வாழ் உயிரினங்களின் நோய்களை கண்டறிய தேசிய அளவிலான கண்காணிப்பு திட்டம்: மத்திய அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

* அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை: உச்ச நீதிமன்றம்.

* நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

* ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்.

* வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார்.

* சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 378 வாரங்கள் முதலிடம் வகித்து ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்துள்ளார்.

* சிறந்த ஃபிஃபா வீரர் விருது வென்றார் லயோனல் மெஸ்ஸி.


Today's Headlines

* 1.50 crore people have not linked Aadhaar;  No more time will be given: Minister Senthil Balaji.

*  Former space researcher VK Hariharan has said that Indians will also go to space in 5 years.

 * National Surveillance Program for Aquatic Diseases: Union Ministers Launch

 * Duty of Governor to accept recommendation of Cabinet: Supreme Court.

 * In the context of increasing heat wave across the country, the Central Health Department has written to the state governments to monitor the diseases caused by heat wave.

 * Chinese Foreign Minister arrives in India to participate in G20 summit.

*  Following North Korea's food shortages, President Kim has called for a drastic change in agricultural production.

 * Serbia's Novak Djokovic has topped Steffi Graf's record for 378 weeks at the top of the international tennis rankings.

*  Lionel Messi won the best FIFA player award.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here for latest Kalvi News 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொருள்:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது

பழமொழி :

It is no use crying over split milk

முடிந்த காரியத்தை நினைத்து பயன் இல்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.

பொது அறிவு :

1. தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் யார்?

 கலிலியோ

 2. நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது? 

 பாதரசம்.

English words & meanings :

bland - tasteless food. adjective. Porridge is a bland food. சப்பென்று இருக்கும் ருசியற்ற உணவு . பெயரடை 

ஆரோக்ய வாழ்வு :

தூக்கமானது சரியான நேரத்தில், சரியான அளவில் நமக்கு தினந்தோறும் கிடைக்குமேயானால், உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.



தூக்கம் குறித்த புதிய ஆய்வில், வழக்கமாக நாம் எப்போதும் பிற்பகலில் சிறிது நேரம் தூங்குவதால் நமது மூளையை கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது.  பிற்பகல் தூக்கம் சோம்பேறித்தனம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பகலில் தூங்கினால் மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.


பிப்ரவரி 28


தேசிய அறிவியல் நாள்




தேசிய அறிவியல் நாள் (National Science Dayஇந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.[3]

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

நீதிக்கதை

புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு, சகல சாஸ்திரங்களையும் அறிந்த வித்யாசாகர் என்ற ஒரு புலவர் வந்திருந்தார். தம்மை போல் புலமை வாய்ந்தவர்கள் யாரும் இல்லை என ஆணவம் கொண்டிருந்தார். அதனால் ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள புலவர்களை எல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். 

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராததைக் கண்ட வித்யாசாகர் ஆனவமுற்றார். 


தன் அவையில் சிறந்தவர்கள் யாரும் இல்லையா என இராயருக்கோ வருந்தினார். அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார் என்றார். இதை கேட்டதும் அனைவரும் உற்சாகமாக இருந்தனார். 

அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் வந்தது. மறுநாள் இராமன் ஆஸ்தான பண்டிதரைப் போல் விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். 


இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தார். வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? என்று கேட்டார். இராமன் கம்பீரமாக இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல் என்றார். 

இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்! என்றார். வித்யாசாகருக்கு குழப்பம் இதுவரை எத்தனையோ நூல் படித்திருக்கிறார்! கேட்டிருக்கிறார்! ஆனால் இராமன் கூறியது போல் இந்த நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை.

வித்யாசாகர்கு பயம் ஏற்பட்டது. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் வந்தது. அதனால் வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். 

அன்றிரவு வித்யாசாகர் சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. அதனால் அன்றிரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார். மறுநாள் அனைவரும் வந்து கூடினார்கள். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. 

அப்பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்தி கிடைத்தது. அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர். 

மன்னர் இராமனிடம்! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு! என்றார். இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை.


அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. 

இதன் உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார் அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார். 

நீதி :
நமக்கு எல்லாமே தெரியும் என்று ஆணவத்துடன் இருக்கக் கூடாது...

இன்றைய செய்திகள்

28.02. 2023

* 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

* தோட்டக்கலைத் துறையின் முயற்சியால் உதகையில் பூத்த ஹாலந்து துலிப் மலர்கள்.

* தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவிலான செல்போன் செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

* தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

* விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 13-வது தவணை நிதியாக ரூ.16 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.

* அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

* 1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்: துருக்கியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்.

* உலக குத்துச்சண்டை தொடர்: இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கம்.

* உலக டேபிள் டென்னிஸ் போட்டி கோவாவில் நேற்று தொடங்கியது.

Today's Headlines

* Assembly Speaker Appavu said that Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan is going to present the financial report for the year 2023-24 in the Legislative Assembly on March 20.

* Holland tulips bloomed in Utagai thanks to the efforts of the horticulture department.

* The Central Institute of Classical Tamil Studies has released a mobile application that is an audio version of Tolkappiyam.

 * Chance of rain for 3 days in south coastal districts of Tamil Nadu.

*  Prime Minister Narendra Modi has released Rs.16 thousand crores as the 13th tranche of funds under the Prime Minister's Financial Assistance Scheme for Farmers.

* The Delhi High Court has ruled that the Agnibad project will go ahead according to law.

 * 1.60 lakh buildings have been collapsed due to the earth quake: Construction of houses in Turkey begins.

 * World Boxing Series: 3 silver medals for India.

 * The World Table Tennis Tournament started yesterday in Goa.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்