Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts
Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts

School Morning Prayer Activities - 28.02.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்


குறள்:366


அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.


விளக்கம்:


ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.


பழமொழி :

Nothing is impossible to a willing heart


மனம் இருந்தால் மார்க்கம் உண்டு


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


மகிழ்ச்சி என்பது ஒரு பட்டாம்பூச்சி போன்றது, நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகத் துரத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்களை விட்டு தப்பிச் செல்லும், ஆனால் நீங்கள் வேறு விடயங்களில் கவனம் செலுத்தினால், அது மெதுவாக உங்கள் தோளில் வந்து அமரும். --ஹென்றி டேவிட் தோரே


பொது அறிவு : 


1. மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?


விடை: 8


2. சோப்பு தயாரிக்கப் பயன்படுவது எது?


விடை: சோடியம் ஹைட்ராக்சைடு


English words & meanings :


 Indigenous (adv) - natural இயற்கையானது


Indulge - took care of கவனித்துக் கொள்


ஆரோக்ய வாழ்வு : 


கொடி பசலை கீரை :கொடி பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.


பிப்ரவரி 28 இன்று


தேசிய அறிவியல் நாள்


தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.


தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


நீதிக்கதை


 சொர்க்கமும் நரகமும்


ஒரு ஊரில் ஒரு மிகப் பெரிய பணக்காரன் இருந்தான். ஆனால் என்ன பயன்? யாருக்கும் ஒன்றுமே கொடுத்து உதவாத ஒரு கருமியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு


சொர்க்கத்தையும் நரகத்தையும் காண வேண்டும் என்று மிகுந்த ஆசை.


ஒருநாள் உறங்கும் பொழுது அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனது ஆசை அறிந்து அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவர் சொற்படியே அவருடன் சென்றான் அந்தக் கருமி. முதலில் அவனை எங்கு அழைத்துச் சென்றார் தெரியுமா? அவனை நரகத்திற்குக் கூட்டிச் சென்றார். அவர்கள் சென்றபோது அங்கு உணவு உண்ணும் நேரமாக இருந்தது. பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவை மிக்க பல பதார்த்தங்களும் யாவும் இருந்தன. அவரவர்களுக்கு சாப்பிட தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு கூட பரிமாறப்பட்டது. அந்த உணவைக் கண்டவுடன் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால் அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்கவே முடியவில்லை, தவிர கையை மடக்கி வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்லக் கூட முடியவில்லை. பரிதாபமான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதானோ?


அறுசுவை உணவு எதிரே இருந்தால் கூட அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு அவற்றில் உள்ள உணவை வீணாக்கிவிட்டனர். பின்னர் தாங்க முடியாத பசியினால் கீழே உட்கார்ந்து அழுதார்கள். இது தினமும் நடக்கும் சம்பவம்.


பிறகு அந்த பெரியவர் அந்தப் பணக்காரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதே போல உண்ணும் வேளைதான். நரகத்தில் இருந்தது போலவே அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடுகள் எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்தவர்களுக்குக் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கு அருகே கொண்டு செல்வதற்காக அவர்கள் கையை மடக்கமுடியவில்லை. நீட்டியபடியே இருந்தது. ஆனால் அவர்களுக்கு உக்தி தெரிந்தது. நீட்ட முடியும் ஆனால் மடக்கத்தானே முடியவில்லை என்று எண்ணி, ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாய் அருகில் நீட்டி அவருக்கு ஊட்டினார். மடக்கத்


தானே முடியாது கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாம் அல்லவா? எவ்வளவு சாமர்த்தியம்? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.


இத் தருணத்தில் கருமி கனவில் இருந்து மீண்டான். சொர்க்கம் என்பது தனியே எங்கும் கிடையாது. ஒருவருக் கொருவர் உதவி செய்து வாழ்வதையே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். யாவருக்கும் பகிர்ந்து உண்ணாமல் தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது தான் நரகம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.


அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான். அதனால் நாமும் பலருக்கு அவர்கள் தேவை புரிந்து பல நன்மைகள் புரிந்தால் நாம் சொர்க்கத்தை இந்த வாழ்விலேயே கண்டுவிடலாம். ↓


இன்றைய செய்திகள் - 28.02.2024


*மதுரையில் சிறு, குறுந்தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாடு- பிரதமர் மோடி பங்கேற்பு.


*வருவாய் துறை அலுவலர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்.


*கடலோர காவல் படையில் பெண்களுக்கு நிரந்தர பணி; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.


*கீழடி அகழாய்வு அறிக்கை 9 மாதங்களில் வெளியாகும் - மத்திய அரசு தகவல்.


*கிரிக்கெட்: ராஞ்சி டெஸ்டில் சுப்மன் கில், துருவ் ஜூரல் கை கொடுக்க இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


Today's Headlines


* Digital conference of small and micro entrepreneurs in Madurai - Prime Minister Modi will participate.


 *Revenue department officers are on strike from yesterday.


 *Permanent employment for women in the Coast Guard;  Supreme Court order to Central Govt.


 *Keezhadi Excavation Report to be released in 9 months - Central Govt.


 *Cricket: Subman Gill, Dhruv Jural help India won Ranchi Test by five wickets.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 27.02.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்


குறள்:365


அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர்.


விளக்கம்:


ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.


பழமொழி :

No smoke with out fire


நெருப்பில்லாமல் புகையாது


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


நான் என் வலியை பொறுமை எனும் வயலில் விதைத்த போது அது மகிழ்ச்சி எனும் பழத்தைத் தந்தது. --கலீல் ஜிப்ரான்


பொது அறிவு : 


1. அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?


விடை: 22 மொழிகள்


2.உலகின் பெரிய ரயில்நிலையம் எது? 


நியூயார்க் (கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்)


English words & meanings :


 Holster (n)- a holder made of leather for carrying hand gun கைத்துப்பாக்கி வைக்கப் பயன்படும் ஒரு தோல் உறை

Hysterical (adj) - affected by wildly uncontrolled emotion கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சியால் பாதிக்கப்படுதல்


ஆரோக்ய வாழ்வு : 


கொடி பசலை கீரை: கொடி பசலைக் கீரைச் சாறு  ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால்  குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.


நீதிக்கதை


 கற்றது எவ்வளவு?


பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிற கங்கை நதியில் ஒரு படகில் ஓடக்காரனும் சில பயணிகளும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பயணிகளுள், பண்டிதர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவர், தான் படித்ததைப் பிறருக்குப் போதித்தாலே அவர் இன்னும் பலவற்றைக் கற்றிருக்க முடியும். ஆனால் தான் எல்லாவற்றையும் கற்று விட்டோம் என்ற கர்வம் அதிகம்  தோன்ற அதில் பயணித்தார். அவர் ஓடக்காரனிடம் தனது அறிவை பறைசாற்றத் தொடங்கினார்.


"ஏய் ஓடக்காரா, இப்படி ஒன்றும் தெரியாமல் நீ தற்குறியாக இருக்கிறாயே? பகவத்கீதையை நீ படித்திருக்கிறாயா?'' என்று ஏளனமாக கேட்டார். "ஐயா,சாமி என் அப்பன் கூட அதை படித்ததில்லையே?" என்றான் ஓடக்காரன் அடக்கமாக.''ஓஹோ! அப்படியா? அப்படியானால் உனது வாழ் நாளில் கால் பங்கு மோசமாகிப் போச்சே" என பண்டிதர் சாபம் தருவது போல் சொன்னார்.

"சரி ! அது போகட்டும்! இந்த உலகம் போற்றும் ஒண்ணே முக்கால் அடி திருக்குறளையாவது நீ படித்திருக்கிறாயா?" எனக் கேட்டார்.


அதற்கு ஓடக்காரன் "அதை நான் தொட்டது கூட கிடையாதே,சாமி" என்று வெட்கத்துடன் சொன்னான்.


"தண்டமே ! தண்டமே! இரண்டு பங்கு உன் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே!, அது போகட்டும்


பாகவதமாவது வாசித்திருக்கிறாயா?" என்று கேட்டார்.


சிரமத்துடன் படகு செலுத்திக் கொண்டிருந்த ஓடக்காரன் தலை குனிந்து நின்றான்.


"போச்சு! அதுவும் இல்லையா? உன் வாழ்க்கையில்  முக்கால்வாசி நஷ்டமாகி விட்டதே!. இனி நீ என்ன செய்யப்போகிறாய்? கடவுளுக்குத் தான் வெளிச்சம்" என்று பண்டிதர் தன் வருத்தத்தைச் சொல்லி முடித்தார்.


அப்பொழுது கரை புரளும் வெள்ளம் வந்தது. அலை ஒன்றோடொன்று மோதி படகு கவிழ்ந்து விடும் என்ற நிலை தெரிந்தது. நீந்தத் தெரிந்தவர்கள் யாவரும் நதியில் வேகமாகக் குதித்து நீந்திக் கரையேறினார்கள்.


ஓடக்காரனும், பண்டிதரும் மட்டும் தத்தளிக்கும் படகில் இருந்தனர். “சாமி! தண்ணீரில் குதிங்க சாமி. இல்லேன்னா படகு கவிழ்ந்து மூழ்கிடுவீங்க." என்று ஓடக்காரன் எச்சரித்தான். "ஐயோ! என்னப்பா சொல்கிறாய்?, எனக்கு நீச்சல் தெரியாதே அப்பா!" என்று பண்டிதர் சொன்னார். அந்த அவசரத்திலும் ஓடக்காரன், பண்டிதரிடம், "சாமி. எனக்குக் கீதை, பாகவதம் திருக்குறளென்று எதுவுமே தெரியாது. ஆனால் நீச்சல் நன்றாகத் தெரியும். எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்போ முழு வாழ்க்கையையும் இழக்கப் போறீங்களே! மிகவும் வருத்தமா இருக்கு" என்று கூறி நதியில் குதித்துக் கரை சேர்ந்தான். பலவற்றைக் கற்ற பண்டிதர் பரிதவித்துக் கொண்டிருந்தார்.


எல்லாம் அறிந்தவர் என்பது உலகில் இல்லை. "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு".


இன்றைய செய்திகள் - 27.02.2024


*மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.


*சிக்கிமின் முதல் ரயில் நிலையம் : அடிக்கல் நாட்டினார் மோடி.


*"ஜி" மெயிலுக்கு போட்டியாக "எக்ஸ்" மெயில்: எலான் மஸ்க் திட்டம்.

*இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


*ரஞ்சித் கோப்பை காலிறுதியில் மத்திய பிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தியது.


Today's Headlines


* CM Stalin inaugurated kalaingar 's memorial at Marina.


 *Sikkim's first railway station: Modi laid the foundation stone.


 *"X" Mail will compete with "G" Mail: Elon Musk's plan.


 *India won the 4th Test against England by 5 wickets.


 *Madhya Pradesh beat Andhra Pradesh by 4 runs in Ranjith Trophy quarter finals.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 13.02.2024

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்


குறள்:355


எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.


விளக்கம்:


 எந்த பொருள் எந்த தன்மையுடையாதாக இருப்பினும் அந்த பொருளின் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்வதே அறிவு.


பழமொழி :

Necessity is the mother of invention


தேவையே கண்டுபிடிப்பின் தாய்


இரண்டொழுக்க பண்புகள் :


1 . மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 


2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.


பொன்மொழி :


இந்த உலகை வெல்வதற்கு நாம் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்த வேண்டாம். அன்பையும் இரக்கத்தையும் பயன்படுத்துவோம். --அன்னை தெரசா


பொது அறிவு : 


1. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?


விடை: 33


2. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?


விடை: நாக்கு


English words & meanings :


 waggish - witty or joking சிரிப்பூட்டுகின்ற; waif - homeless children , orphaned ஆதரவற்ற குழந்தை


ஆரோக்ய வாழ்வு : 


பசலை கீரை: கால், கை, மூட்டுக்களில் வரக்கூடிய வாதத்தையும் போக்கக் கூடிய தன்மை இந்த பசலைக் கீரைக்கு உள்ளது.


பிப்ரவரி 13 இன்று


உலக வானொலி நாள்


உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1] வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்


சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா [1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும்[2] உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.[3] அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை


 கடிதம் சொல்லும் கதை


ஒரு கிராமத்தில் வசித்துவந்த பண்ணையாரின் நிலத்தில் ஏராளமாக கரும்பு விளைந்தது. கரும்பை, ஒருவருக்கு விற்றதுபோக இருபத்து ஐந்து கரும்புக் கழிகள் மீதி இருந்தன. அடுத்த கிராமத்தில் வசித்து வரும் நண்பருக்கு அவற்றைக் கொடுக்க எண்ணினார். அடுத்த கிராமத்துக்குச் செல்ல சாலை வசதிகள் இல்லை. எனவே ஒரு வேலையாளிடம் கொடுத்து அனுப்ப நினைத்தார். வேலு என்பவன் அவ்வூரில் வசித்து வந்தான். அவன் படிப்பறிவு இல்லாதவன். ஆனால் நல்ல உழைப்பாளி.


பண்ணையார் வேலுவை அழைத்தார். "வேலு! கரும்புக் கழிகளைக் கட்டி வைத்துள்ளேன். அவற்றை அடுத்த கிராமத்திலுள்ள சுப்பையாவிடம்சேர்த்து விட்டு வர வேண்டும். போய் விட்டு வந்ததும் உனக்குக் கூலி தருகிறேன்" என்றார்.


"சரி, ஐயா, இதில் எவ்வளவு கரும்புக் கழிகள் இருக்கின்றன?" என்றான் வேலு.


"அதெல்லாம் இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளேன். இதையும் சுப்பையாவிடம் கொடு. கடிதம் விவரம் சொல்லும்" என்றார்.பண்ணையார் தந்த கரும்புக் கழிச் சுமையை தலையில் ஏற்றிக் கொண்டு வேலு அடுத்த கிராமத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றான். சுட்டெரிக்கும் வெயில் காலம். வேலுவுக்கு தாகம் எடுத்தது. கரும்பு ஒன்றைக் கடித்துத் தின்று தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என எண்ணினான். சுமையைக் கீழே இறக்கி வைத்தான். கரும்பை எடுத்துத் தின்பதற்கு முன்னால் ஒரு யோசனை தோன்றியது.

ஒரு கரும்பை எடுத்துத் தின்று விட்டால், எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விடும். அதை இந்தக்கடிதம் மூலமாக அறிந்து கொண்டு சுப்பையாவிடம் தெரிவித்து விட்டால் என்ன


செய்வது என்ற சந்தேகம் வேலுவுக்குத் தோன்றியது. சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் கடிதத்தை எடுத்தான், “ஏ, கடிதமே நான் இப்போது கரும்பு ஒன்றைத்


தின்னப்போகிறேன். இந்தச் சுமையில் எத்தனைகழிகள் இருக்கின்றன என்று சொல் பார்ப்போம்" என்று கடிதத்தைப் பார்த்துக் கேட்டான். கடிதம் எதுவும் பேசவில்லை.

"இதென்ன? கடிதம் விவரம் சொல்லும் என்றாரே! இப்போது கேட்டதற்கு பதிலே சொல்ல வில்லையே!” என்றெண்ணிய வேலு கரும்புக்கழி ஒன்றை எடுத்துக் கடிக்கலானான். மற்றொரு கரும்பையும் கடித்து சாற்றை உறிஞ்சியபின்பே அவனுடைய தாகம் தணிந்தது.


வேலு சுறுசுறுப்படைந்து கிராமத்தை அடைந்து சுப்பையாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவரிடம் கரும்புக் கழிகளையும், பண்ணையார் கொடுத்த கடிதத்தையும் தந்தான். சுப்பையா கடிதத்தைப் படித்துப் பார்த்து விட்டு சுமையிலிருந்த கழிகளை எண்ணிப் பார்த்தார்.

இருபத்தைந்துக்கு பதிலாக இருபத்திமூன்று கரும்புகளே சுமையில் இருந்தன. “வேலு!, இரண்டு கழிகள் குறைவாக இருக்கிறதே" என்றார்.


"உங்களுக்கு இந்தக் கடிதம் பதில் சொல்லியதா?" என்றான்.


"வேலு! படிக்கத் தெரிந்தால் கடிதம் விவரம் சொல்லும். உனக்குத்தான் படிக்கத் தெரியாதே. அதனால் எதுவும் சொல்லவில்லை" என்றார் சுப்பையா.


வேலு தான் இரண்டு கரும்புகளைத் தின்றதை ஒப்புக்கொண்டான். சுப்பையா அவனை மன்னித்து "இனியாவது படிப்பதற்கு முயற்சிசெய்" என்று கூறினார்.


இன்றைய செய்திகள் - 12.02.2024


*செலவினங்களை குறைக்க 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்பைஸ் ஜெட் விமானம்.


*வரும் 15ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.


*மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; சபாநாயகர் அப்பாவு.


*ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகும் வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.


*ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசுபள்ளிகளுக்கு 100% குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசின் குடிநீர் வழங்கல் துறை செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


*19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.


Today's Headlines


*SpiceJet lays off 1400 employees to cut costs


 *Legislative Session will last till 15th -  Speaker Appavu informed.


 *All measures will be taken to prevent construction of Meghadahu Dam –  Speaker Appavu.


 * Motorists are suffering due to heat recorded above 100 degrees in Erode.


 *Secretary of Drinking Water Supply Department of Central Government has expressed appreciation for providing 100% drinking water connection to government schools in Tamil Nadu under the Jal Jeevan initiative.


 *India lost the Under-19 World Cup final against Australia by 79 runs.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2024

 திருக்குறள்


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

விளக்கம்:

 மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.


பழமொழி :

Necessity has no law

ஆபத்துக்கு பாவமில்லை.

இரண்டொழுக்க பண்புகள் :1

. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.

பொன்மொழி :

தன் குழந்தை மீதான தாயின் அன்புக்கு நிகராக இந்த உலகில் எதுவும் இல்லை. --அகதா கிறிஸ்டி

பொது அறிவு :

1. உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?

விடை: ஆண்டிஸ் மலை

2. உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி எது?

விடை: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி 

English words & meanings :

 Engrossing - interesting, ஆர்வத்தை ஈர்த்தல், 

gracious - kind, generous, கனிவான, இனிய பண்பு

ஆரோக்ய வாழ்வு : 

பசலை கீரை :பசலைக் கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. சோடியத்தின் அளவை கட்டுப் படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

நீதிக்கதை

 _ஓர் ஆற்றின் கரை அருகே ஒரு வேப்பமரம் இருந்தது. அந்த வேப்பமரத்தில் சுஸ்வரூபி என்று ஒரு குருவி. அது அந்த மரத்தில் கூடுகட்டி முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொறித்து இருந்தது. தன் குஞ்சுகளை பாசமாக பராமரித்து வந்தது.

ஒருநாள் பலத்த காற்றுடன் மழை வேகமாகப் பெய்தது. இதனால் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடி யது! சுஸ்வரூபியின் கூடு சேதமடையத் தொடங்கியது. குஞ்சுகளுக்கு பயம் கவ்விக்கொண்டது. அம்மா!.... இப்போ என்னம்மா செய்யறது!.... நாங்களெல்லாம் கீழே ஓடும் ஆற்றில் விழுந்துடுவோமா?...எங்களுக்குப் பறக்கக்கூடத் தெரியாதே.....இப்படி மழை பெய்கிறதே..... அம்மா!.... நீ எங்கேயாவது போய்விடும்மா!.... உன்னால் பறக்க முடியும்! எங்களைப் பற்றிக் கவலைப்படாதே.... நீ நினைத்தால் மேலும் முட்டைகள் இட்டுக் குஞ்சு பொறித்துக் கொள்ளலாம்.... இந்த மழையில் எங்களைத் தூக்கிக்கொண்டு உன்னால் பறக்க முடியாது!.... எங்களைக் கடவுள் காப்பாற்றுவார்!" என்றன.

சுஸ்வரூபிக்கு அழுகையே வந்துவிட்டது!.... குழந்தைகளின் பேச்சு அவளது நெஞ்சைக் கரைத்துவிட்டது. எவ்வளவு அறிவாய் பேசுதுங்க என் குஞ்சுகள்! இவைகளையா விட்டுவிட முடியும்?.... கண்ணீர் முட்டியது. கடவுளைப் பிரார்த்தித்தது.

இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "கண்மணிகளா!.... அப்படிச் சொல்லாதீங்க...... நம்மகிட்டே தன்னம்பிக்கை இருக்கிறது.... எந்தத் தடங்கல் வந்தாலும் சமாளிப்போம்!..... கவலைப்படாதீங்க...." என்றது சுஸ்வரூபி. அதன் பின் மழையும் புயலும் குறைந்தது.சுஸ்வரூபியும் குஞ்சுகளும் மகிழ்ச்சியடைந்தன.ஆபத்தில் பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் கடவுளை வேண்டி செயல்படவேண்டும்.

இன்றைய செய்திகள்

12.02.2024

*இனிமேல் தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு; உள்துறை அமைச்சகம்.

*வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டு வருகிறது என சந்திராயன் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.

*சிவகாசியைச் சேர்ந்த புவனேஸ்வரி,  ஏழ்மையிலும் சாதிக்கும் கிராமத்து மாணவி ஓவியம் வரைதலில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார்.

* கஜகஸ்தானுக்கும்
 உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' என்னும் கடல் இருந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் கடல் வறண்டு போனது.

*காமன்வெல்த் விளையாட்டு போட்டி நாளை தொடக்கம். 72 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு.

*பெண்கள் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த இந்தியாவிற்கு வாய்ப்பு.

Today's Headlines

*Henceforth Central Armed Forces Constable Examination will be held in 13 regional languages ​​including Tamil;  Ministry of Home Affairs.

 * Chandrayaan-3 project director Veeramuthuvel said that a scientific satellite is being sent for the advancement of life.

 * Bhubaneswari from Sivakasi, a village girl  has achieved countless achievements in painting despite poverty.

 * Between Uzbekistan and Uzbekistan there is a sea called 'Aral'.  Climate change caused the sea to dry up.

 *Commonwealth Games start tomorrow.  Players from 72 countries will participate.

 * Chance for India to host Women's One Day Cricket World Cup.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News