Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts
Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts

School Morning Prayer Activities - 08.02.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.02.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்


குறள்:352


இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.


விளக்கம்:


 மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.


பழமொழி :

Money makes many things


பணம் பாதளம் வரைக்கும் பாயும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

அன்பு என்பது எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் ஒரு பழம், மேலும் எல்லோர் கைகளுக்கும் எட்டும் தூரத்தில் தான் உள்ளது. --அன்னை தெரசா


பொது அறிவு :


1. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?


விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)


2. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்

லாலா லஜபதி ராய்


English words & meanings :


 whammed(n)- Hammer சம்மட்டி,சுத்தியல்; wandering (v) - walking or moving in a aimless way நோக்கம் இல்லாமல் சுற்றித் திரிதல்.


ஆரோக்ய வாழ்வு : 


கோவை கீரை : கோவைக்கீரை குளிர்ச்சியானது. இந்த கோவை இலையை நிழலில் உலர்த்தி எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, அந்த பொடியைப் போட்டு நன்கு காய்ச்சி கஷாயமாக எடுத்துக் கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியடையும்.


பிப்ரவரி 08 இன்று


சாகிர் உசேன் அவர்களின் பிறந்த நாள்


சாகிர் உசேன் (Zakir Hussain, 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.


கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.


நீதிக்கதை


 நாயும் அதன் நிழலும்


முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.


செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம். "எலும்புத்துண்டை தருமாறு" கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ "இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்", என்று கூறி விட்டுச்சென்றது.செல்லும் வழியில் ஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.


அதைக் கண்ட நாய் இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்" என்று நினைத்தது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.


அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.


நீதி: பேராசை பெரு நஷ்டம்.


இன்றைய செய்திகள் - 08.02.2024


*பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் ஆனது உத்தரகண்ட்; கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகிவிடும்.


*உதகை மண் சரிந்து விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்தார் மு க ஸ்டாலின்.

*இந்தியர்கள் இனி ஈரானுக்கு செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


*இந்தியாவில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று.


*தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; நியூசிலாந்து அபார வெற்றி;


Today's Headlines


* Uttarakhand became first state to enact Common Civil Code;  The Bill will become a law after the assent of the Governor.


 * Landslide accident in Ooty: C.M. , M.K. Stalin announced a relief fund for the families of the victims.


 * The government of Iran  has announced that Indians will no longer need a visa to travel to Iran.


 * 157 more people infected with corona virus in India.


 *First Test cricket match against South Africa;  New Zealand won big.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 07.02.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்


குறள்:351


பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.


விளக்கம்:


 பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.


பழமொழி :

Might is right


வல்லன் வகுத்ததே சட்டம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


ஒரு வார்த்தை நம்மை வாழ்வின் அனைத்து சுமைகளிலிருந்தும் வலிகளிலிருந்தும் விடுவிக்கிறது: அந்த வார்த்தைதான் அன்பு. --சோஃபோக்கிள்ஸ்


பொது அறிவு :


1. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?


விடை: லக்னோ


2. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?


விடை: பி.டி. உஷா


English words & meanings :


 veils (v)- to hide or cover திரை, முகமூடி ; vexation (n)- worry or anger துயரம் (அ) எரிச்சல்


ஆரோக்ய வாழ்வு : 


கோவை கீரை : கோவைக்கீரையின் சாறினை காலை, இரவு முறையே 2 ஸ்பூன் குடித்து வர நாள்பட்ட நெஞ்சு சளி, இருமல் ஆகியவை குணமடையும். அதோடு இந்த சாறு நாள்பட்ட புண்களையும் ஆற்ற உதவுகிறது.


பிப்ரவரி 07 இன்று


தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்

Devaneya_Pavanar_2006_stamp_of_India

தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.


நீதிக்கதை


 இரண்டு ஆட்கள் ஒருவர்க்கு ஒருவர் துணையாய்ப் பயணம் செய்து கொண்டிருந்தனர். வழியில் ஒரு கோடாரி கிடந்தது.


அதை முதலில் பார்த்தவர் "நான் ஒரு கோடாரியைக் கண்டெடுத்தேன்" என்று சொல்லிக் கொண்டு அதனை எடுத்தார்.


உடனே மற்றவர், "அப்படிச் சொல்லக்கூடாது, நண்பரே. நான் நீ என்று பிரித்துப் பேசக் கூடாது. 'நாம் கண்டெடுத்தோம்' என்று தான் இனி சொல்ல வேண்டும்” என்றார்.

அவர்கள் சிறிது தூரம் செல்வதற்குள் அந்தக் கோடாரியைத் தொலைத்தவர் எதிரே வந்தார். இவர்களிடம் கோடாரி இருப்பதைக் கண்டு, 'கோடாரியை எடுத்தது யார்?' என அவர் கேட்டார்.


அதற்கு எடுத்தவர், "நாங்கள் எடுத்தோம்" என்றார். உடனே சற்று நேரத்திற்கு முன் அவருக்கு பேசக் கற்றுக் கொடுத்தாரே, மற்றவர், அவர், "தப்பு தப்பு அப்படிச் சொல்லக் கூடாது. கண்டெடுத்தவுடன் நீங்கள் சொன்னீர்கள் பாருங்கள், 'நான் கண்டெடுத்தேன்' என்று அதுதான் சரி. இப்போதும் அதைத் தான் சொல்ல வேண்டும். நாங்கள் என்று சொல்லக் கூடாது" என்று சொன்னார்.


நீதி : தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் ஒருமாதிரியும். இழப்பு கிடைக்கும் என தெரிந்தால் ஒருமாதிரியும் பேசுவது மனித குணம். அது தான் 'எலும்பில்லாத நாக்கு எதையும் பேசும்.


இன்றைய செய்திகள் - 07.02.2024


*மியான்மர் எல்லை பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு.


* மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் தீ; ஆறு பேர் பலி 60 பேர் காயம்.


* 2026 அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு.


* மதுரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பூரணம்மாள் மேலும் ரூபாய் மூன்று கோடிக்கு நிலம் தானமாக வழங்கினார்.


* உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ சென்னையை இசை நகரமாக அறிவித்ததை கொண்டாடும் வகையில் இசை விழா நடைபெற்றது. இதில் 18 பேருக்கு கலை செம்மல் விருது வழங்கப்பட்டது.


* இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.


Today's Headlines


The central government decided to fence the entire Myanmar border area.


 * Firecracker factory got fire in Madhya Pradesh;  Six dead and 60 injured.


 * Target to complete AIIMS, Madurai by October 2026.

 * Pooranammal also donated three crore rupees worth of land to Panchayat Union Middle School in Madurai.


 * A music festival was held to celebrate the declaration of Chennai as a City of Music by the World Heritage Organization UNESCO.  In this, 18 people were given the Kalai Semmel Award.


 * The Indian team won the second Test cricket match against the England team.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளி காலை வழிபாட்ணு செயல்பாடுகள் - 06.02.2024

 

இந்திய அறவியற் கழகம்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:350

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

விளக்கம்:

 ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.


பழமொழி :

It is the pace that kills.

வேகம் விவேகம் அல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

அன்பும் இரக்கமும் நிறைந்த இதயமே மன வலிமை, மன உறுதி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும். --தலாய் லாமா

பொது அறிவு :

1. இந்திய அறிவயற் கழகம் அமைந்துள்ள நகரம்?

விடை: பெங்களூர்

2. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

விடை: 1919

English words & meanings :

 when an ant becomes a spy we call him/her - inform-ant-informant

ஆரோக்ய வாழ்வு : 

கோவை கீரை : சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு கண்ட மருந்துகளைத் தடவத் தேவையே இல்லை. கோவைக்காயின் இலையை அரைத்து சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீதிக்கதை

 வலிமை மட்டும் போதாது

எருது ஓரிடத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அது வழியாக நகர்வலம் வந்த எலிக்குஞ்சு ஒன்று, ஓடி வந்து எருதின் மீது விழுந்தது. இதனால் தூக்கம் கலைந்து பார்த்தது.

"டேய். எலிப் பயலே என் மீது விழுந்தா தூக்கத்தைக் கலைத்தாய், உன்னை என்ன செய்கின்றேன் பார்" என்றது.

பலசாலியான எருது முன்னால் பயந்தபடி நின்றது எலி. "தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று எந்தத் தவறும் செய்யவில்லை" என வேண்டியது.

"அதெல்லாம் முடியாது! என் பலம் தெரியாமல் என்னுடன் நீ விளையாடி விட்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார்", என மிரட்டியதும், பயந்து எலி அருகில் இருந்த வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.

எருதுவும், எலியை விடுவதாக இல்லை. தன் கூரிய கொம்புகளால், எலி வளையைக் குத்தி பெயர்த்து எடுத்தது.

எருதின் கோபம் அதிகமானது. எலி வளையை இடிக்க இடிக்க வளர்ந்து கொண்டே சென்றது.

எலி அதன் வளையை மிகவும் நீளமாக அமைத்து இருந்தது. அதனால் எருது, எலியைப் பிடிக்க முடியாமல் போனது.

வீரமாக மோதிப் பார்த்து விட்டு மிகவும் களைப்புடன் படுத்து விட்டது எருது. இந்த நேரத்தில் எலி வளையை விட்டு வெளியில் வந்து பார்த்தது.

எதிரில் எருது களைப்பால் படுத்திருந்ததைப் பார்த்தது. மீண்டும் எலி வந்து, எருதின் மீது ஏறி விளையாடியது. எருதுக்கு கோபம் அதிகமானது. கோபம் வந்து என்ன செய்ய, எலியைத் தான் அதனால் பிடிக்க முடியவில்லையே.

எருது முன்னால் தாவிக் குதித்து நின்றது எலி. "நான் தெரியாமல் செய்த தவறுக்கும். உன்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு விட்டேன். நீ பெருந்தன்மையாக என்னை மன்னித்திருக்கலாம் அல்லவா.

உனக்கு எவ்வளவு தான் பலம் இருப்பினும் அவமானம் அடைந்தாயே! உடல் பலத்தால் மட்டும் யாரையும், வென்று விட முடியாது புரிந்து கொள்" என்றபடி எலி தாவிக் குதித்து வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.

எருதும் தன் தவறை உணர்ந்து வருந்தியது.


நீதி : எளியவரை எப்பொழுதும் வென்று விடலாம் என தவறாக நினைத்து விடக் கூடாது. உடல் வலிமையை விட மனவலிமையே வெற்றி பெறும்.

இன்றைய செய்திகள்

06.02.2024

*அரசியல் கட்சி பிரசாரங்களில் குழந்தைகளை பயன்படுத்த தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு.

*ஜார்க்கண்ட் சட்டப்பேரவை- நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி.

*பெண் விவசாயிகள் கருத்தரங்கு; 8ஆம் தேதி சின்னமனூர் வருகிறார் கவர்னர்.

*இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் கோஷ், ஆஸ்திரேலிய பாராளுமன்ற எம்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்; வானிலை ஆய்வு மையம்.

*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி.

Today's Headlines

*Prohibition of using children in political party campaigns;  Election Commission order.

 *Jharkhand Assembly- Sambhai Soren won the trust vote.

 *Women Farmers Seminar;   Governor is coming to Chinnamanur on  8th.

 *Varun Ghosh, of Indian origin, has been appointed as an Australian MP.

 *Dry weather likely to prevail in Tamil Nadu till February 11;  Meteorological Centre.

 *Second Test against England: Indian team got tremendous victory
 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 20.01.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் :  நிலையாமை


குறள்:338


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.


விளக்கம்:


 உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.


பழமொழி :

Love well, whip well


அடிக்கிற கைதான் அணைக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண்படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கை வாழ அடிப்படை கருவி – ஜோசப் அடிசன்


பொது அறிவு :


1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்? 


விடை: பாஸ்கல்


2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது? 


விடை: நீலகிரி தாஹ்ர் மான்


English words & meanings :


 loyalty: faithfulness towards a person or to his responsibility, விசுவாசம். legacy – inheritance from the ancestors or a great amount of money gifted, பரம்பரை சொத்து அல்லது பிறரால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட பணம்


ஆரோக்ய வாழ்வு : 


அயோடின் நமது உடலுக்கு தேவையான ஒரு தாது உப்பு. இது குறைபாட்டை எவ்வாறு கண்டறியலாம்? உடல் எடை கூடும். சோர்வு ஏற்படும். ஆற்றலின்மை. முடி உதிர்தல். சருமம் வறண்டு போதல். இதை சரி செய்ய மீன் ஒரு சிறந்த உணவு. முழு தானியங்கள், நார் சத்து மிக்க உணவுப் பொருட்கள் அயோடின் குறைபாடு நீக்க சிறந்த உணவு


ஜனவரி 20 இன்று


எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 


எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்


நீதிக்கதை


 ஒட்டுண்ணிகள்


"ஒரு ஈ தேரின் அச்சு மரத்தில் உட்கார்ந்திருந்தது. அது, அந்தத் தேரை இழுத்துச் செல்லும் கோவேறு கழுதையைப் பார்த்து, என்ன இப்படி அசமந்தமாக நடக்கிறாய். உன் கழுத்தில் கொட்டாமல் இருக்க வேண்டும் என்றால் வேகமாக ஓடு" என்றது.


அதனிடம் கோவேறு கழுதை "நான் உனது பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. உனக்கு மேலே பீடத்தில் உட்கார்ந்திருக்கிறான் பார் ஒரு ஆள், அவனுக்குத் தான் நான் கட்டுப்பட்டவன்.


அவன் சாட்டையால் சுண்டினால் "நான் வேகமாக ஓடுவேன். கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தால் மெல்லப் போவேன். ஆகவே எப்போது வேகமாகப் போக வேண்டும். எப்போது மெதுவாக போக வேண்டும் என்பது எனக்குத் தெரியும் நீ உன் வேலையைப் பார்" என்றது.


நீதி : ''வாய் இல்லாவிட்டால் நாய் கூடச் சட்டை செய்யாது" என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் பேச வேண்டிய இடங்களில் பேச வேண்டியது அவசியம்.


இன்றைய செய்திகள் - 20.01.2024


*ஸ்விஸ் ரயில் சேவை தரத்திற்கு மாறும் இந்திய ரயில்வே.


*அண்ணா சாலையில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.


*போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் பிப்ரவரி 7ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை.


*இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சி - அனுராக் தாக்கூர்


*விளையாட்டுகளின் தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே அரசின் குறிக்கோள் முதல்வர் மு க ஸ்டாலின்.


Today's Headlines


*Indian Railways are transforming into Swiss train service standards.


*Chief Minister M. K. Stalin inaugurated the new flyover construction team on Anna Road.

* There will be a Re-talk with transport unions on 7th February.


*Trying to hold Olympics in India - Anurag Thakur


* CM Stalin said the goal of TN government is to promote Tamil Nadu as a sports capital.


 Prepared by


Covai women ICT_போதிமரம்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News