Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts
Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2024

 திருக்குறள்


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை

குறள்:337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

விளக்கம்:

 ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.

பழமொழி :

Look before you leap

ஆழம் தெரியாமல் காலை விடாதே

இரண்டொழுக்க பண்புகள் :1

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். --ஆஸ்கார் வைல்ட்

பொது அறிவு :

1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

விடை: பன்னா 

2. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

விடை: சேர அரசர்கள் 

English words & meanings :

 knack - an acquired or natural skill for doing something. சாமர்த்தியம். kayak – a different type of boat used mainly by Inuit people or Eskimos. . வட துருவ எஸ்கிமோக்களால் பயன்படுத்தப்படும் பனிப் படகு

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கை கீரை : சத்தில்லாத குழந்தைகள், முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி.

நீதிக்கதை

 செல்வந்தர்க்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது செல்வந்தர் தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு ஆறு மாதம் கழித்து செல்வந்தர் அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்.

இன்றைய செய்திகள்

19.01.2024

*இந்திய அளவில் 25 சதவீதம் இளைஞர்களால் சரளமாக இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட படிக்க முடிவதில்லை - ஆய்வறிக்கையில் தகவல்.

* ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்படும் 
போக்சோ சட்டம் : அடுத்த கல்வியாண்டில் அமல்.

* பிரதமர் மோடி இன்று சென்னை - நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 விளையாட்டுப் போட்டியை துவங்கி வைக்கிறார்.

* சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் - போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது ‘கழுகு’ என பெயரிடப்பட்ட இயந்திரம்.

*புரோ லீக் கபடி: ஹைதராபாத்தில் இன்று நான்கு அணிகள் மோதல்.

Today's Headlines

*25 percent of India's youth are unable to read even a second-grade subject fluently - reports from research.

 *  POCSO Act will be included in Class 7 Social Science
  : it comes into effect from next academic year.

 * Prime Minister Modi will inaugurate the Kalo India Youth Games 2023 at the Nehru Sports Arena in Chennai today.

 * An engine named 'Eagle' started the tunneling work for Chennai Metro Rail Phase 2 project from  Lighthouse - Boat Club.

 *Pro League Kabaddi: Four teams clash in Hyderabad today.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 18.12.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.12.2023


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள்:322


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.


விளக்கம்:


 இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.


பழமொழி :

Love thy neighbour as thyself. 


உன்னைப் போலவே பிறரை நேசி.


இரண்டொழுக்க பண்புகள் :


.1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்


பொன்மொழி :


ஒரு முட்டாள்

தன் நண்பர்களை

பயன்படுத்துவதை விட

ஒரு அறிவாளி தன்

எதிரிகளை நன்றாக

பயன்படுத்திக் கொள்வான்


பொது அறிவு :


1. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?


விடை: நீலாம்பரி


2.பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?


விடை: முகமது ஜின்னா


English words & meanings :


 In the neck of time - just in time, கடைசி நேரத்தில், 


in the dark - not aware of something, சுற்றி நடக்கும் காரியங்கள் குறித்து அறியாமல் இருப்பது


ஆரோக்ய வாழ்வு : 


இலுப்பை பூ :இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியுண்டாக்கும்.


டிசம்பர் 18 இன்று


ஜெ.ஜெ. தாம்சன்  அவர்களின் பிறந்தநாள்


ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.


நா.பார்த்தசாரதி  அவர்களின் பிறந்தநாள்


நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்


நீதிக்கதை


 காகமும் அன்னபறவையும்


ஒரு கடற்கரையில் கோவிந்தன் என்பவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் வசதி வாய்ந்தவன், அவனிடம் ஒரு காகம் இருந்தது. தினமும் அவன் அந்த காகத்திற்கு நிறைய உணவு கொடுப்பான். அவன் கொடுத்த உணவை உண்டு அந்த காகம் மிகவும் பருத்தது.


அந்த காகம் மிகவும் அகங்காரம் பிடித்தது. அது எப்பவுமே எல்லோரிடமும் கர்வமாக பேசிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் அந்த கடற்கரையில் சில அன்னப்பறவைகள் நிற்பதை பார்த்த காகம், அந்த அன்ன பறவைகளிடம் சென்று சொன்னது, "நீங்கள் பார்ப்பதற்கு தான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் என்னைப்போல் உங்களால் பறக்க முடியாது" என்று கர்வமாக சொன்னது.


அப்போது ஒரு அன்னப்பறவை சொன்னது, "நண்பா! நாங்கள் இங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க தான் வந்துள்ளோம், உன்னுடன் எந்த வாக்குவாதமும் செய்வதற்கு எங்களுக்கு நேரமில்லை" என்றது. உடனே அந்த காகம், "இல்லை, உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் போட்டி போடுங்கள்" என்றது.


அதற்கு ஒரு அன்னப்பறவை சரி என்ன போட்டி என்று கேட்டது. அதற்கு காகம் சொன்னது, "நாம் இருவரும் இந்த கடற்கரையில் இருந்து சில மைல்கள் பறந்து செல்வோம், யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் தான் சிறந்தவர்கள்" என்று சொன்னது. உடனே அந்த அன்னப்பறவையும் சரி என்றது. இந்த காகம் தான் பருத்து இருப்பதை மறந்து விட்டு மிகவும் வேகமாக பறந்து சென்றது. அன்னப்பறவையும் அதனால் முடிந்த அளவிற்கு வேகமாக பறந்து சென்று கொண்டு இருந்தது.


சிறிது தூரம் சென்ற பிறகு காகம் மிகவும் சோர்வடைந்தது. அதனால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. கீழே சென்றால் கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்று அதற்கு நன்றாகவே தெரியும். காகம் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் களைப்பாக பறந்து கொண்டே இருந்தது.அதை பார்த்த அன்ன பறவை, "நண்பா, நான் உன்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உனக்கு என்ன ஆயிற்று மிகவும் களைப்படைந்து விட்டாயே" என்றது. அதற்கு காகம் சொன்னது, "என்னால் முடியவில்லை. இன்னும் சிறிது தூரம் சென்றால் நான் நிச்சயமாக இந்த கடலில் விழுந்து இறந்து விடுவேன்" என்றது.


உடனே அன்னப்பறவை, "சரி நீ கவலை படாதே. என் முதுகில் ஏறிக்கொள். நான் உன்னை கரையில் கொண்டு சேர்க்கிறேன்" என்றது. உடனே காகமும் அன்னப்பறவை முதுகில் ஏறி கரைக்கு பத்திரமாக சென்றது. கரைக்கு சென்ற காகம் அன்னப்பறவையிடம் "நண்பா என்னை மன்னித்துவிடு நான் மிகவும் அகங்காரம் பிடித்து உன்னிடம் பேசி விட்டேன், நான் அவ்வாறு உன்னிடம் பேசி இருக்கக் கூடாது. நீ மட்டும் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் நான் நிச்சயமாக இன்று இறந்து இருப்பேன்" என்று அன்னப்பறவையிடம் மன்னிப்பு கேட்டது.


நீதி: கர்வம் என்றைக்கும் உதவி செய்யாது.


இன்றைய செய்திகள் - 18.12.2023


*நான்கு மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை எதிரொலி சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு.


* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.



* தற்போது புதுவகை கொரோனா எந்த விதத்தில் உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்-  அமைச்சர் தகவல்.


* சாய் சுதர்சன், ஸ்ரேயஸ் அரை சதம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.


Today's Headlines


* Health department in action order due to heavy rain in four districts.


 * Postponement of Manonmaniam Sundaranar University exams scheduled to be held today.


 *  How the newly developed corona virus is getting mutated –a research is going on this virus and mutation information by Health Minister .


 * India beat South Africa with Sai Sudarsan, Shreyas half-centuries and 8 wickets.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 15.12.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.12.2023


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள்:321


அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்.


விளக்கம்:


 அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.


பழமொழி :

Hunger is the best source


பசி ருசி அறியாது


இரண்டொழுக்க பண்புகள் :1


.  1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் .


பொன்மொழி :


கடினமாக உழைத்தவர்கள்

எல்லாம் முன்னேறி விடவில்லை.

கவனமாகவும் நம்பிக்கையுடனும்

உழைத்தவர்களே வாழ்க்கையில்

முன்னேறி உள்ளனர்._____ அப்துல் கலாம்


பொது அறிவு :


1. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?


விடை: சகாரா


2. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது?


விடை: நைட்ரஸ் ஆக்சைடு


English words & meanings :


 Draw the line - to set a limit, சில காரியங்களுக்கு எல்லைக் கோடு அமைத்தல், 


carry the can - taking the blame for the things which we didn't do, செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தல்


ஆரோக்ய வாழ்வு : 


ஆவாரம் பூ : ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்களுக்கு சிறுநீரகம் சேதமாகாமல் பாதுகாக்கிறது.


டிசம்பர் 15 இன்று

Walt_disney_portrait

வால்ட் டிஸ்னி அவர்களின் நினைவுநாள்


வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.


நீதிக்கதை


 கர்வம் கொண்டவர் துன்பமே அடைவர்.


காட்டில் ஒரு நாள் பெரிய பூனை ஒன்றும் நரியும் சந்தித்தன. அவை இரண்டும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன.


அப்பொழுது நரி பூனையிடம் “நண்பரே! தந்திரத்திற்குப் பேர் போனவன் நான் எவ்விதத் தீங்கிலிருந்தும் தந்திரமாய் தப்புவேன்" என்று இறுமாப்புடன் கூறியது.

அதற்கு பூனை "நண்பரே! தங்களைப் போல் பல தந்திரங்கள் எனக்கு தெரியாது. சில தந்திரங்கள் தான் தெரியும். தங்களைப் போல் சாமர்த்தியம் எனக்குக் கிடையாது” என்று அடக்கத்துடன் பதில் கூறியது.பூனையைக் கண்டு நரி ஏளனமாய் "ஒன்றும் தெரியாத நீ எவ்வாறு ஆபத்திலிருந்து தப்புவாய்" என்று ஏளனம் செய்தது.


அச்சமயம் திடீரென்று அப்பக்கம் சிலவேட்டை நாய்கள் வந்தன. உடனே பூனை ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறிக்கொண்டது. ஆனால் நரியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. ஆனால் வேட்டை நாய்கள் வேகமாய் ஓடித் தாவி நரியைப் பிடித்துக் கொன்றன. பூனையோ தப்பிப் பிழைத்தது. கர்வம் கொண்டவர் துன்பமே அடைவர்.


இன்றைய செய்திகள் - 15.12.2023


*74.1% இந்தியர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை அதிர்ச்சி தகவல்.


* 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்-தமிழக அரசு உத்தரவு.

*இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா... அஞ்சி நடுங்கும் மக்கள்.


*16, 17 -ஆம் தேதிகளில் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


* ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், விமர்சனங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்த டேவிட் வார்னர்.


Today's Headlines


*74.1% of Indians do not have access to healthy food shocking information.


 * 11 IPS  Transfer of Officers-Tamil Govt Order.


 *Corona is picking up speed again in India...People are trembling with fear.


 * Chance of heavy rain in Delta and Southern districts on the 16th and 17th.

 * David Warner's record-breaking 3-match Test cricket series in Australia, amid criticism.

 Prepared by


Covai women ICT_போதிமரம்



 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 12.12.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2023



திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:318


தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.


விளக்கம்:


பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.


பழமொழி :

Honesty is the best policy


நேர்மையே சிறந்த கொள்கை.


இரண்டொழுக்க பண்புகள் :1


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளச் செய்வேன் .


பொன்மொழி :


நீண்ட நாள் வாழ்வதற்கு கதகதப்பான உடை அணியவும் மிதமாக உண்ணவும் நிறைய நீர் பருகவும் – இங்கிலாந்து


பொது அறிவு :


1. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி யார்?


விடை: கிரண் பேடி


2. ரப்பர், ஸ்டாம்பு, மை, தயாரிக்க பயன்படும் சேர்மம்


விடை: கிளிசரால்


English words & meanings :


 overcome - win a victory over தடைகளைக் கடந்து வருதல். ovation - enthusiastic recognition மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்புதல்


ஆரோக்ய வாழ்வு : 


ஆவாரம் பூ :வெதுவெதுப்பான நீரில் பொடியை சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். இது நல்ல மலமிளக்கியாக செயல்படும். ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாகிறது.


நீதிக்கதை


 தவறுக்குத் தண்டனை உண்டு


குரங்கு ஒன்று மரக் கிளைகளில் தாவியபடியே ஏரிக்கரைக்கு வந்தது. ஏரிக்கரை ஓரம் இருந்த மா மரத்தில் தாவி விளையாடிக் கொண்டு இருந்தது. சற்று நேரம் மீன் பிடிப்பவர்கள், மீன் பிடிவலையுடன் வருவதைப் பார்த்தது. அவர்கள் கரைக்கு வந்ததும், தாங்கள் கொண்டு வந்திருந்த வலையை, ஏரியில் வீசினார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் வலையை கரைக்கு இழுத்தார்கள்.


வலையில் நிறைய மீன்கள் சிக்கி இருந்தன. வலையில் சிக்கிய மீன்களையெல்லாம் சேகரித்துக் கொண்டனர். மீண்டும் வலையை ஏரியில் வீசினார்கள். சிறிது நேரத்தில் மறுபடியும் சிக்கிய மீன்களை, கரைக்குக் கொண்டு வந்து சேகரித்தார்கள். இப்பொழுது மீனவர்கள் கொண்டு வந்த கூடை நிறைய மீன்கள் இருந்தன. இவை எல்லாவற்றையும் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது குரங்கு.

பிடித்த மீனை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்கள். அதற்கு முன்பாக மீன் பிடி வலையை ஏரிக் கரையோரம் வெயிலில் காயப் போட்டனர். பிறகு மீன்களை எடுத்துச் சென்றனர்.


அவர்கள் சென்றதும் குரங்குக்கு மீன் பிடிக்க ஆசை வந்து விட்டது. மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தது. மீன் வலையை எடுத்து ஏரியில் வீச முயன்றது. மீனவர்கள் வலையை வீசியதைப் பார்த்து குரங்கும் வீசியது. வலை ஏரியில் விழுகாமல், குரங்கு தலையில் விழுந்து சிக்கிக் கொண்டது. வலையில் இருந்து விடுபடப் போராடிப் பார்த்த குரங்கு, குதித்துத் தாவிய பொழுது ஏரிக்குள் விழுந்து விட்டது.

குரங்கு வலைக்குள் சிக்கிக் கொண்டதால், அதனால் தப்பிக்க முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் வலை மேலும் சிக்கலாகியது. ஏரியில் தண்ணீரும் அதிகம் இருந்தபடியால், குரங்கினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே தண்ணீரில் தத்தளித்து மூழ்கி இறந்தது. பாவம் தவறு செய்ததற்குத் தண்டனை அனுபவித்தது.


நீதி: இது தவறு எனத் தெரிந்தே செய்பவர்கள் தண்டனை பெறுவது நிச்சயம். புகைப்பழக்கமும், போதைப் பழக்கமும் உள்ளவர்கள் தவறு எனத் தெரிந்தே செய்கிறார்கள். இதன் தீயபலனை இவர்கள் நிச்சயம் ஒருநாள் அனுபவிப்பார்கள்.


இன்றைய செய்திகள் - 12.12.2023


*மிச்சாங் புயல் பாதிப்பு இதுவரை 17 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது; தமிழக அரசு.


*ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


*முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது.

இடுக்கி மாவட்டத்திற்கு எச்சரிக்கை.


*புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல் பொதுமக்கள் அச்சம்.


*இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி.


Today's Headlines


* Relief goods worth 17 crores have been provided so far for the rest of the storm damage;  Tamil Nadu Govt.


 * Chance of heavy rain in six districts.


 *The water level of Mullai Periyar dam reached 136 feet.

 Alert for Idukki District.


 *People fear the spread of corona again in Puducherry.


 *Series vs England: Consolation win for Indian Women's team.

 Prepared by


Covai women ICT_போதிமரம்




🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News