Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts
Showing posts with label SCHOOL MORNING PRAYER ACTIVITIES. Show all posts

School Morning Prayer Activities - 11.12.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2023




திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:317


எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.


விளக்கம்:


எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.


பழமொழி :

Hoist your sail when the wind is fair


கற்றுள்ள போதே தூற்றிக் கொள்


இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளச் செய்வேன் .


பொன்மொழி :


உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள் – இங்கிலாந்து


பொது அறிவு :


1. எந்த ஆண்டு ஜன-கன-மன முதலில் பாடப்பட்டது?


விடை: 1911


2. இந்திய கடற்படை தினத்தை நாம் எப்போது கொண்டாடுகிறோம்?


விடை: டிசம்பர் 4 -ம் தேதி


English words & meanings :


 Native (n) - someone born in a particular region பூர்வீகம், பிறந்த இடம் அல்லது ஊர். Nifty (adj) - something that is good or great புதுமையான, மிகச் சிறந்த.


ஆரோக்ய வாழ்வு : 


ஆவாரம் பூ: ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவர மூலிகைகள் எல்லாம் நமக்கு எளிமையாக கிடைக்க கூடியவை. அதில் ஒன்று ஆவாரம்பூ.

ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பூவை கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கலாம்.


டிசம்பர் 11 இன்று


சுப்பிரமணிய பாரதி  அவர்களின் பிறந்தநாள்

images%20(20)

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.


பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[3] இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.


பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்

.com/img/a/

பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.


பன்னாட்டு மலை நாள்


பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.[1]


மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.[2]


நீதிக்கதை


 சேந்தங்குடியில் டேவிட் என்ற சிறுவன் இருந்தான். குறி தவறாமல், கவண் கல் எறிவதில் வல்லவன். இருட்டுக்கும் பேய்க்கும் பயப்படாதவன்.

ஆனாலும், அவனைப் பாராட்டுவோரும் இல்லை. நட்புடன் விளையாடவும் யாரும் இல்லை.

அவனது பரிகாசப் பேச்சு மற்றவர்களைத் தொல்லைக் குள்ளாக்கும். அவனது சில்மிஷ விளையாட்டுகளும் தான் அதற்குக் காரணம்.
டேவிட்டுக்கோ, ஜெனி தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஒரு எண்ணம்.

ஜெனியும் சேந்தங்குடியில் தான் வசித்து வந்தாள். அன்பும் அறிவும் ஒருசேரப் பெற்ற அவளுக்கு ஊர்க்குழந்தைகள் அனைவரும் நண்பர்கள்தான்.

எப்போதும் ஏதாவது புத்திசாலித்தனமாகச் செய்து பெயர் வாங்கி விடுகிறாள் ஜெனி. அவளுக்குத் தான் எவ்வளவு நண்பர்கள் … டேவிட் எரிச்சலுற்றான்.

ஜெனியின் நண்பர்களைப் பிரித்து அவளை வெற்றி கொள்ள வேண்டும் என நினைத்தான்.

ஜெனியின் நண்பர்களான வரதனிடமும் சிவாவிடமும் சென்று, “நீங்கள் ஏன் ஜெனியுடன் மட்டும் நட்பாக உள்ளீர்கள் ? நானும் திறமையானவன் தான் “ என்றான்.

இதோ பாருங்கள் என் திறமையை எனச் சொல்லியபடி, தூரத்தில் வந்து கொண்டு இருந்த ஒரு மூதாட்டியின் பானை மீது கவண்கல் எறிந்து, பானையை உடைத்தான்.

ஜெனி அங்கு வந்தாள்.டேவிட் ஏன் பானையை உடைத்தாய் ? பாட்டி தயிர் வியாபாரம் செய்ய இருந்த ஒரு பானையையும் உடைத்துவிட்டாயே ?

“திறமையை நற்செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும், டேவிட் என்றாள்.

“ஜெனி அங்கே பார், அச்சிறுமியின் கையில் இருக்கும் பட்சணத்தை அந்த வெறிபிடித்த நாய் பிடுங்க வருகிறது. “வரதன் சொல்லி முடிக்கும் முன், ஜெனி ஒரு கல் எடுத்து அந்த நாயின் அருகே வீசினாள்.

நாய் வேகமாய் நகர்ந்து ஓடியது.

சிறுமி சந்தோஷமாக துள்ளிக் குதித்துச் சென்றாள்.

”யாரடா என் பானையை உடைத்தவன்?” என கர்ஜித்தபடி வந்தாள் மூதாட்டி.

“பாட்டி, தெரியாமல் கல் தங்கள் பானை மேல் பட்டுவிட்டது. மன்னியுங்கள். ஒரு நல்ல பானை காலையில் உங்கள் வீட்டுக்கு வந்து விடும்” என்றாள் ஜெனி.

“மகராசி, நீ நல்லா இரும்மா” என வாழ்த்தினார் பாட்டி.

“டேவிட் நம் திறமை மற்றவர் நம்மை போற்றும்படி இருக்க வேண்டும்… தூற்றும்படி அல்ல…”

“புரிந்து கொண்டேன் , ஜெனி"

“நாம் எல்லோரும் ஒன்றாக நண்பர்களாக இருப்போமே ? நமக்குள் என்ன பகை ?” என்றாள் ஜெனி.

“வா, டேவிட் நாவல் மரத்தடிக்குச் சென்று விளையாடலாம்” என சிவாவும் வரதனும் சொன்னார்கள்.

அக்கணம் முதல் டேவிட்டும் ஜெனியின் நண்பர்கள் குழுவில் ஐக்கியமானான்.


இன்றைய செய்திகள் - 11.12.2023

*குறையும் வேலை வாய்ப்புகள் தவிக்கும் இந்திய பட்டதாரிகள்

* கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

* அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு; மாணவர்களின் தேவையை அறிந்து 12ஆம் தேதி பாட புத்தகம் வழங்கவும் உத்தரவு.

* நான்கு மாவட்டங்களில் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் இன்று திறப்பு.

* இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடர் : மூன்றாவது போட்டியில் வென்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்.


Today's Headlines

*Decreasing job opportunities and disturbed youth graduates of India 

 * Chance of rain in eight districts of Tamil Nadu due to low layer air circulation - Meteorological Department.

 * New schedule for half-yearly examination is Published by education department; as per  the need of the students, order to provide textbooks on 12th.

 * Schools and colleges open today after a week's holiday in four districts.

 * England West Indies One Day Cricket Series: West Indies won the third match and won the one day series.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2023

 



 


திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:315

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

விளக்கம்:

 அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.


பழமொழி :

Well began is half done

நல்ல தொடக்கம் பாதி வெற்றி

இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

ஐந்துக்கு எழுந்திரு ஒன்பதுக்கு உணவருந்து ஐந்துக்கு சாப்பிடு ஒன்பதுக்கு உறங்கு – பின்லாந்து

பொது அறிவு :

1. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்?

விடை: தொல்காப்பியம் 

2. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது?

விடை: கருவிழி 

English words & meanings :

 legacy - a gift of personal property by will பரம்பரைச் சொத்து. lexicographer - a compiler or writer of a dictionaryஅகராதி தயாரிப்பவர்

ஆரோக்ய வாழ்வு : 

பாரிஜாத பூக்கள்: நான்கு முதல் ஐந்து பாரிஜாத பூக்கள், இரண்டு முதல் மூன்று பாரிஜாத மரத்தின் இலைகள் மற்றும் 2 முதல் 3 துளசி இலைகளை சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி தேநீராக குடிக்கவும் இனிப்பு தேவை என்றால் தேன் சேர்த்து குடிக்கலாம்.

டிசம்பர் 07

கொடி நாள் (இந்தியா) 

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 The Fox & the Lion – சிங்கமும் குட்டி நரியும் :- ஒரு குட்டி நரி ஒன்னு காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சு.பிறந்ததுல இருந்து அந்த நரி சிங்கத்தை பார்த்ததே இல்ல.அதனால சிங்கத்தை நினச்சு அதுக்கு பயம் எப்பவும் இருந்தது இல்லை.

ஒருநாள் காட்டுப்பகுதியில் தண்ணி குடிக்க போன நரி, சிங்கத்தை நேருல சந்திச்சுச்சு.உடனே அதுக்குள்ள பயம் வந்துடுச்சு ,ஓடி வீட்டுக்கு போய்டுச்சு அந்த நரி.

வீட்டுக்கு வந்த நரி பயந்து போய் வீட்டுக்கு ஓடி வந்தத நினைச்சு வருத்த பட்டுச்சு ,இனிமே அந்த சிங்கத்த பார்த்தா பயப்பட கூடாதுனு முடிவு பண்ணுச்சு.ஆனா மறுநாளும் அந்த சிங்கத்தை பார்த்ததும் பயத்துல வீட்டுக்கு ஓடி வந்துடுச்சு அந்த நரி.

அத பார்த்த தாத்தா நரி ஏன் ஓடி வர்றன்னு கேட்டுச்சு ,அதுக்கு அந்த குட்டி நரி நடந்தத சொல்லுச்சு.அதுக்கு அந்த தாத்தா நரி சொல்லுச்சு பயப்படுகிறது  கடவுள் நமக்கு கொடுத்த முன்னெச்சரிக்கை செய்தி .பயம் வந்ததும் அந்த இடத்துல இருக்குற ஆபத்தை முதல்ல உணர்ந்து ஓடி வந்த நீ ரொம்ப கெட்டிக்காரன்.

உனக்கு எப்ப எல்லாம் பயம் வருதோ அப்ப எல்லாம் தெளிவா யோசிச்சு ,அந்த பயத்தை எதிர்கொள்ளணும்னு சொல்லுச்சு, அந்த தாத்தா நரி.அதுக்கு அந்த குட்டி நரி கேட்டுச்சு, அப்ப நாளைக்கு அந்த சிங்கத்தை நேருல பார்த்தா பயப்படாம நிக்கணுமான்னு கேட்டுச்சு.

அதுக்கு அந்த தாத்தா நரி சொல்லுச்சு, அப்படி இல்ல எப்ப எல்லாம் உனக்கு பயம் வருதோ, அந்த சூழ்நிலைய உணரனும் .தேவையில்லாத பயமா இருந்தா அத விட்டுடனும் . அதே நேரத்துல உனக்கு எதாவது ஆபத்து வரும்னு நிலைமை இருந்தா ஓடி வந்துடவேண்டும் என்று தெளிவா சொல்லுச்சு.

இன்றைய செய்திகள்

07.12.2023

*சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் அமைச்சர் தங்கம் தென்னரசு.

*மிச்சாங் புயல் பாதிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு தாலுகாக்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

*11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான திறனாய்வு தேர்வில் நத்தமேடு அரசு பள்ளி மாணவிகள் சாதனை.

*காஞ்சிபுரத்தில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு.

*T20 பந்துவீச்சாளர் தரவரிசை: ரஷீத்கானை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்த பிஷ்னோய்.

Today's Headlines

*The last date to pay electricity bills in four districts including Chennai is extended –Minister Thangam Thennarasu 

 * Due to Cyclone Michong's  impact: Schools and colleges are closed today in six taluks of Chengalpattu district.

 *Nathamedu  Govt. School Girls Achieved top rank in Aptitude Test for 11th std

 *Thousands of acres of agricultural land affected in Kanchipuram.

 *T20 bowler rankings: Bishnoi overtook Rashid Khan and topped the list

 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 06.12.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2023


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:314


இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.


விளக்கம்:


 துன்பம் தந்தவரை தண்டித்தல் என்பது அவர் வெட்கப்படும்படி நல்லது செய்து விடுவதே.


பழமொழி :

Cut the coat according to the cloth


வரவுக்குத்

தகுந்த செலவு செய்


இரண்டொழுக்க பண்புகள் :


1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 


2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :


உடல் நலம் உள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்து தான் – துருக்கி


பொது அறிவு :


1.தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு


விடை: பாயும் குதிரை


2. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்


விடை: குடியரசுத் தலைவர்


English words & meanings :


 knack - a special talent or skill. தனித்திறமை. knighthood - a title given to a man for his service to his country மாவீரர் பட்டம்


ஆரோக்ய வாழ்வு : 


பாரிஜாத பூக்கள்: பாரிஜாத மரத்தின் இலைகளை அம்மியில் நன்றாக அரைத்து அதன் சாறை எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமலுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.


டிசம்பர் 06 இன்று


பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்


பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.[3]


நீதிக்கதை


 வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள் பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.


அந்த அரசன் தன்னாட்டு மக்களின் செயல்களை கண்காணிக்க மாறுவேடம் அணிந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவன் மாறுவேடம் அணிந்து செல்லும்போது வழியில் உழவன் ஒருவன் வயலில் உழுது கொண்டிருப்பதை பார்த்தான். அவனைக் கண்ட மாறு வேடத்தில் இருந்த அரசன், “எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நல்ல வலிமையையும், நீண்ட வாழ்நாளையும் வழங்குவானாக” என்று வாழ்த்தினான். 


அதற்கு அந்த உழவன் மாறுவேடத்தில் இருந்த அரசனைப் பார்த்து, “தாங்கள் என்மீது காட்டும் அன்பிற்கு மிக்க நன்றி” என்றான். “நிலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது?” என்று மாறுவேடத்தில் இருந்த அரசன் அந்த உழவனிடம் கேட்டான். 


அதற்கு உழவன், “மாதத்திற்கு நூறு வெள்ளி காசுகள் கிடைக்கின்றன” என்று பதில் அளித்தான். “அவ்வளவு தொகையை என்ன செய்கிறாய்?” என்று அரசன் கேட்டான். ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்கு வரியாக செலுத்துகிறேன். இன்னொரு பங்கை நான் பட்ட கடனுக்கு அடைகிறேன். மற்றொரு பங்கை கடனாக தருகிறேன். நான்காவது பங்கை வீசி ஏறிகிறேன். இறுதிப் பங்கை எனக்காக செலவு செய்கிறேன்” என்று புதிராக பேசினான்.


இதை கேட்ட மாறுவேடத்தில் இருந்த அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் மாறுவேடத்தை   கலைத்தான். இதுவரை தன்னிடம் பேசியவர் அரசர் தான் என்பதை அறிந்த உழவன் அவரை பணிவுடன் வணங்கினான்.


“நீ சொன்ன பதிலில் வரியாக தருவதும், உனக்காக செலவு செய்வதும்தான், எனக்கு புரிந்தது. மற்றவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டான் அரசன். 


அதற்கு உழவன் அரசே, “என் வருமானத்தில் ஒரு பங்கை என் தாய் தந்தையருக்கு செலவு செய்கிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு செலவு செய்வதை கடனை அடைக்கிறேன் என்றேன்.இன்னொரு பங்கை என் மகனுக்கு செலவு செய்கிறேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்ற போகிறவன் அவன். அதனால், அதை கடனாக தருகிறேன் என்றேன். 


நான்காவது பங்கை என் மகளுக்கு செலவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் திருமணம் ஆகி இன்னொருவன் வீட்டில் வாழ வேண்டியவள். அதனால் அந்த செலவை வீணாகத் தெருவில் எறிகிறேன் என்றேன். 


அந்த  உழவனின் பதிலை கேட்டு மகிழ்ந்த அரசன். உன் அறிவு கூர்மை மிகவும் நன்றாக உள்ளது. “இந்த விளக்கத்தை நான் இல்லாமல் நீ யாரிடமும் கூறக்கூடாது. அப்படி கூறினால் உன் உடலில் உயிர் இருக்காது” என்று சொல்லிவிட்டு சென்றான். 


அரசவைக்கு வந்த அரசன் தான் கேட்ட புதிரை அனைவரிடமும் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டான். ஒருவராலும் அதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இந்த புதிருக்கு யார் விளக்கம் கூறினாலும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும், என்று அறிவித்தான் அரசன். 

அரசனுக்கு இந்த புதிரை கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டான் அமைச்சர்களுள் ஒருவன். அந்த அமைச்சர் நேராக இந்த உழவனிடம் சென்றான். 


“அரசு நாணய சாலையில் புத்தம் புதிதாக அச்சடித்த இந்த ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு அரசரிடம் சொன்ன புதிருக்கான விளக்கத்தை என்னிடம் கூறு” என்றான் அமைச்சர். 


கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய பொற்காசுகளை கண்ட உழவன் அரசரை எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த புதிருக்கான விளக்கத்தை கூறி பொற்காசுகளை பெற்றுக் கொண்டான்.அரண்மனை திரும்பிய அமைச்சர் நேரடியாக அரசிடம் சென்று புதிருக்கான விளக்கத்தை கூறினான். உழவன் தான் பதில் கூறி இருக்கிறான் என்பதை அரசன் அறிந்து கொண்டு, அவனை இழுத்து வருமாறு தன்னுடைய காவலர்களுக்கு ஆணையிட்டான்.


உழவனைப் பார்த்து நீ ஏன்  பதிலை கூறினாய்? நான் இல்லாமல் பதில் கூற கூடாது எனக் கூறியிருந்தேனே? என அரசர் கேட்க, அரசே, பொற்காசுகளில் உங்கள் முகம் பொறிக்கப்பட்டு இருந்தது. அதனைப் பார்த்தே நான் பதில் கூறினேன், என அரசனிடம் உழவன் கூறினான்.


உழவனின் அறிவு கூர்மையை  அறிந்த அரசன் அவனுக்கு பரிசுகள் பல தந்து அனுப்பி வைத்தான். உழவனின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றியது அவருடைய அறிவு கூர்மையே ஆகும். 


நீதி : ஒருவரிடம் இருக்கும் அறிவு மிக சிறந்த செல்வமாகும். அது தக்க சமயத்தில் அவனுக்கு உதவும். எனவே அனைவரும் அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


இன்றைய செய்திகள் - 06.12.2023


*ஆந்திராவில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது 

மிச்சாங் புயல்.


*சென்னை- நெல்லூர் சாலையில் கடும் வெள்ளம்; 4 அடி உயரம் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முடக்கம்.


*சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


*சென்னையில் மீண்டும் விமான சேவை தொடங்கியது.


*ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; மோகன் பகான் - ஓடிஸா அணிகள் இன்று மோதல்!


*புரோ கபடி: புனே மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி.


Today's Headlines


*Michong storm crossed the Andhra Pradesh coast at 110 kmph 

 

 *Heavy flood on Chennai-Nellore road;  Traffic blocked due to 4 feet height water level.


 * Today is  holiday for schools and colleges in four districts including Chennai.


 *Flight service resumed in Chennai.


 *ISL Football Series;  Match between Mohan Bagan and Odisha teams !


 *Pro Kabaddi: Pune and Bengal win.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News