Showing posts with label Education News. Show all posts
Showing posts with label Education News. Show all posts

4% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு - G.O.Ms.No.132

 


IMG_20240313_153138

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , மாநில அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 01-01-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் , அகவிலைப்படியினை 4 சதவீதம் கூடுதல் உயர்வளித்து கீழே குறிப்பிட்டுள்ளபடி , அனுமதித்து அரசு ஆணையிடுகிறது .

 G.O.Ms.No.132, Fin (All) Dt.12.03.2024  D.A - Tamil - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள் : செப்டம்பரில் கலந்தாய்வு

 இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (பிஎன்ஒய்எஸ்) கலந்தாய்வு செப்டம்பா் மாதத்தில் தொடங்கும் என இந்திய மருத்துவ தோ்வுக் குழு அறிவித்துள்ளது.


அதேபோன்று சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது தொடா்பான அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன.

இதைத் தவிர, 17 தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 993 இளநிலை இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்களும் உள்ளன. மொத்தம் உள்ள 1,710 இளநிலை யோகா-இயற்கை மருத்துவ இடங்களும் ஒவ்வோா் ஆண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பிளஸ்-2 தோ்வு அடிப்படையில் இந்த மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.


ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்த படிப்புக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்ப விநியோகம் கடந்த வாரம் தொடங்கியது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளத்தில் ஆக.14-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மாணவா்கள் தற்போது அப்படிப்புக்கு ஆா்வமாக விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்திய மருத்துவக் கல்வி தோ்வுக் குழுச் செயலா் மலா்விழி கூறியதாவது: யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பு உள்ளது. நிகழாண்டிலும் அந்தப்படிப்புக்கு அதிக எண்ணிக்கையிலானோா் விண்ணப்பிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் 14-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு அடுத்த சில நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பரில் கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடங்கும். நீட் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் சித்தா, யுனானி, ஆயுா்வதேம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. அதற்கான அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றாா் அவா்.


 Click here for latest Kalvi News 

மணற்கேணி எனும் புதிய செயலி பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகம் - 25.07.2023 அன்று வெளியீடு

 

நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது . நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும் இருப்பில் வைப்பதும் வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.

Invite-Manarkeni-App-launch.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது - மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை.!

 கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆபாசமாக பேசுவது, மிரட்டுவது, மேஜை , நாற்காலிகளை உடைப்பது, ஆசிரியர்கள் முன்பு நடனமாடுவது, மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடுதல் போன்ற வீடியோக்களை பார்ப்போரை அதிர வைக்கிறது.

மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பதை வைத்துக்கொண்டு, ஆசிரியர்களிடம் அத்துமீறுவது கண்டிக்கத்தக்கது. மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும், அதிகமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாணவர்களின் செயல்களுக்கு கொரோனா ஊரடங்கு, போதைப்பழக்கத்திற்கு அடிமை போன்றவை காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.இதனை தடுத்திட பள்ளி கல்வித் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.

இதுதொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். அதேபோல், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது எனவும் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் தரநிலை மதிப்பீடு : வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் (‘சமக்ரசிஷா’) சாா்பில் நிகழ் கல்வியாண்டுக்கான ‘பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு’ சாா்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ‘சமக்ரசிஷா’ மாநிலத் திட்ட இயக்குநா் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் வழிகாட்டுதல் படி, தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிா்வாக பல்கலைக்கழகம் (‘என்ஐஇபிஏ’) பள்ளிகள் தரம் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை வழிநடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு சுய முன்னேற்றத்துக்கான உத்தரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு திட்டத்தில் தற்போது 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான சுய மதிப்பீடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஜன.21-ஆம் தேதி முதல் பிப்.10-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுய மதிப்பீடு முடிவடைந்த அடுத்த 30 நாள்களுக்குள் ஒன்றியத்துக்கு 40 பள்ளிகள் வீதம் மொத்தம் 413 ஒன்றியங்களில் 16,520 பள்ளிகளில் புற மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். புற மதிப்பீட்டுக்கு ஒரு பள்ளிக்கு ரூ.600 வீதம் 16,520 பள்ளிகளுக்கு ரூ.99.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கணினி, மின்வசதி, சாய்தளம், மதிய உணவு பொருள்கள், குடிநீா் வசதி, கழிப்பறை, கை கழுவும் வசதிகள் போன்ற பள்ளி வளாகங்களை கையாளுதல் குறித்து சுயமதிப்பீடு செய்யப்படவுள்ளது. மேலும், பள்ளித்தலைமை மற்றும் மேலாண்மை, உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, ஆக்கப்பூா்வமான சமுதாய பங்கேற்பு போன்றவையும் ஆய்வு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வட்டாரத்திலுள்ள கல்வித்துறை அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள் மூலமாக இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.

12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணம் செலுத்த தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  


கொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், அன்றாட தொழில்களும் பாதிப்புக்குள்ளான நிலையில், மாணவர்களின் கல்வியும் பெரிதளவில் பாத்திற்கு உள்ளாகியுள்ளது.  இந்த பெருந்தொற்று பல மடங்கு பெருகி வருவதால், மாணவர்களை பாதுகாக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. 

பின்னர் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, அரசு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கியது.  இருப்பினும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது.  தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.


கல்வியாண்டில் இடையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று பரவலாக கேள்வி எழுந்தது, இதற்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படும் என்று கூறினார்.  இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் மீண்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று குழப்பம் எழுந்ததையடுத்து, நேற்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு நடத்துவதில் மாற்றம் இல்லை நிச்சயமாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


இதனையடுத்து  12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20-ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்துமாறு அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  செய்முறை தாள் கொண்ட பாடங்களுக்கு ரூ 225 கட்டணம் செலுத்துமாறும், செய்முறை தேர்வு அல்லாத பாடங்களுக்கு ரூ 175 கட்டணம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய திட்டம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. பெயரளவுக்கு பாடங்களை நடத்திவிட்டு மாணவர்களை பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதிலேயே தீவிரம் காட்டுகின்றன. ஆனால், உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத சூழல் நிலவுகிறது.




இதுதவிர தனியார் பள்ளிகள் இடையே நிலவும் போட்டி மனப்பான்மை மாணவர்கள், பெற்றோர்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இவற்றைக் கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற புதிய நடைமுறை, 2017-18-ம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்தத் தேர்வு மதிப்பெண்களை 1,200-ல் இருந்து 600-ஆக குறைத்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படியே உயர்கல்வி சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

இதற்கிடையே, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால், அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாது. மதிப்பெண் சான்றிதழ் தனியாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை 2018-ம் ஆண்டு அறிவித்தது. தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தால் இந்த முடிவை மேற்கொண்டதாக தமிழக அரசின் மீது அப்போதே பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்போது 10, 12-ம் வகுப்புகளைப் போல பிளஸ் 1-க்கும் 2018-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைமுறை அமலில் உள்ளது. கரோனா பரவலால் 2020-21-ம் கல்வியாண்டில் மட்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

10, 11, 12-ம் வகுப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதுதவிர நீட், ஜேஇஇ உ்ளளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகவும் போதுமான அவகாசம் கிடைப்பதில்லை.

தமிழகம் தவிர்த்து, சிபிஎஸ்இ மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை இல்லை. இதனால் பல்வேறு காரணங்களால் பள்ளிகள் மாறும்போது மாணவர் சேர்க்கையிலும் குழப்பங்கள் நிலவுகின்றன.

இவற்றைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வை ரத்து செய்தாலும் தனியார் பள்ளிகள் ஆதிக்கத்தை தவிர்க்க மாவட்ட அளவிலான தேர்வை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பரிந்துரை அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு | 9th class students Rural Performance Examination - Application date Extension

ஊரக திறனாய்வு தேர்வுக்கு 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வு எழுத ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தகுதி உடையவர் ஆவர். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கடந்த டிசம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, சென்னையை நீங்கலாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரகத் திறனாய்வு தேர்வு 30ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பல பள்ளிகளிலிருந்து தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தேவை என்று தகவல் பெறப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்களின் நலன் கருதி விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்த விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.


 விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பினைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி நடக்க இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) 20ம் தேதி நடக்கும்.


இந்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே இந்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கும், தற்போது விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

 எனவே தகுதி வாய்ந்த தேர்வர்களின் விண்ணப்பங்களை வரவேற்று, ஆய்வு செய்து பதிவேற்றம் செய்ய உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை வரும் 12ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் பேரவை அமைப்பு:மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தவும் பள்ளிக்கல்வித் துறை முடிவு

அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தவும், மாணவர் பேரவை அமைப்பை உருவாக்கவும் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,391 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 53.24 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி அரசுப் பள்ளியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிக்க, பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இருப்பர். பள்ளியின் தேவைகளை அறிந்து திட்டமிடுதல், தரமான கல்வி, பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் இதன் நோக்கமாகும். அதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனினும், இவை முறையாக செயல்படாததால் அரசின் திட்டங்கள் பள்ளிக்கு முழுமையாக சென்றடையாத நிலை நிலவுகிறது.
இதை சரிசெய்யும் விதமாக பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தவும், மாணவர் பேரவை அமைப்பை உருவாக்கவும் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது; அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தி மறுகட்டமைப்பு செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனவரி முதல் வாரங்களில் பயிற்சி:

முதல்கட்டமாக மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சமூக வளங்களை பயன்படுத்தி பள்ளியை மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுசார்ந்து முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான 4 ஆயிரம் கருத்தாளர்களுக்கு ஜனவரி 1, 2-வது வாரத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஜனவரி 3, 4-ம் வாரங்களில் பயிற்சி தரப்படும்.


இந்தப் பயிற்சி முகாம் முடிந்த பின்பு எஸ்எம்சி குழு உறுப்பினர்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்வு செய்யப்படுவர். இது தவிர, வளர்ந்த நாடுகளில் உள்ளதைபோல அனைத்து பள்ளிகளில் மாணவர் பேரவை அமைப்பு (students council) தொடங்கப்பட உள்ளன. இந்த அமைப்பு எஸ்எம்சி குழுவின்கீழ் இயங்கும். இதில் தலைமையாசிரியர், மாணவர்கள், எஸ்எம்சி குழுவில் இருந்து 2 பேர், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெறுவர். இந்தக் குழுவின் தலைவர், செயலாளர் உட்பட முக்கிய பொறுப்புகளில் மாணவர்களே இருப்பர். 

குழந்தைகள் வாக்கெடுப்பு மூலம் பேரவைக்கான தலைவர் உட்பட முக்கிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய பள்ளி வளாகத்தில் பிரத்தியேக தேர்தல் நடத்தப்படும். அந்தப் பள்ளியின் குழந்தைகள் வாக்கெடுப்பு மூலம் அவர்களைத் தேர்வு செய்வர். இந்தப் பேரவை மூலம் குழந்தைகளின் தேவைகளையும், கருத்துகளையும் அறியமுடியும். இந்தியாவில் குழந்தைநேயப் பள்ளிகளில் இந்த நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அதற்கு நல்வரவேற்பு இருப்பதால் தமிழகத்திலும் இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.


மாணவர்களுக்கு ஊக்கம்:

இந்த இரு அமைப்புகளுக்கான உறுப்பினர் தேர்வு பிப்ரவரியில் நடைபெறும். இதற்கான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கும் தேவையான பிரத்தியேக மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக பிரத்தியேக செயலி ஒன்று வடிவமைக்கப்பட உள்ளது. அதன் மூலமே அனைத்து விதமான மேம்பாட்டு திட்டப்பணிகளும் கண்காணிக்கப்படும். இது தவிர, மாணவர் பேரவை மூலம் பள்ளிக்கு தேவையான நிதியை திரட்டுதல், விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார விழாக்களை ஒருங்கிணைத்தல் உட்பட பணிகளும் முன்னெடுக்கப்படும். பள்ளி செயல்பாடுகளில் பங்கெடுப்பதன் மூலம் மாணவர்களும் ஊக்கமடைந்து திறம்பட செயல்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள்.!

 தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களுக்கு மேல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கல்வியாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் தெரிவித்து வந்தனர். மேலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகின.


இந்தநிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எனவே , தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். பள்ளித் தூய்மை, புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் ,தூய்மையாகவும் இருக்கும் வகையில் பள்ளி வளாகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .

பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் , தலைமை ஆசிரியர் அறை , சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும் . வகுப்பறை மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள தளவாட பொருட்கள் , கதவு மற்றும் ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் .

பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாமலும் , மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதை , மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் .என தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது அந்த வகையில் வருகின்ற 27ஆம் தேதிக்குள் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்