9 வட மாவட்டங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

9 வட மாவட்டங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!


Additional 3000 posts- pay authorization letter.pdf 

'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022

 'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022


6th, 7th, 8th -Std 3rd Term Science Model Question Paper (TM) | அறிவியல் மாதிரி வினாத்தாள்

 



6 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் - Click here to download 

 7 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் - Click here to download
 
 8 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் - Click here to download

மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் எரிசக்தி ஆற்றல் குழுக்கள் (Energy Clubs) நிறுவுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!

மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் எரிசக்தி ஆற்றல் குழுக்கள் (Energy Clubs) நிறுவுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!






1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்: தமிழக பள்ளிக்கல்வித் துறை

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது. 1 -9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.




10,11,12th Public Exam Hall Supervisor Guide - May 2022

 10,11&12 வகுப்பு தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கான கையேடு.


10,11,12th Public Exam Hall Supervisor Guide - May 2022 - Download here

6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை கணக்கு மாதிரி வினாத் தாள்- pdf

6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை கணக்கு மாதிரி வினாத் தாள்- pdf

அடிப்படை விதி 56(1)ன் படி ஓய்வு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு விளக்கம்!!!

அடிப்படை விதி 56(1)ன் படி ஓய்வு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு விளக்கம்!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மே 4 முதல் ஜூன் 20ம் தேதி வரை 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மே 4 முதல் ஜூன் 20ம் தேதி வரை 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் Baseline survey மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும்

தன்னார்வலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு :

உங்கள் மையத்தில் பயிலக் கூடிய குழந்தைகளுக்கு பேஸ்லைன் சர்வே(Baseline survey) ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பேஸ்லைன் சர்வே(Baseline survey) மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும் நமது இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலரால் கீழே உள்ள PDF file-ல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Baseline survey FAQ - Download here...

மேற்கண்ட file-ஐ download செய்து Baseline survey-வை சிறப்பாக முடிக்கவும்.


ஊக்க ஊதிய உயர்வு - ஒவ்வொரு தனி நபர் சார்ந்தும் இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகல்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

ஊக்க ஊதிய உயர்வு - ஒவ்வொரு தனி நபர் சார்ந்தும் இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகல்கள் குறித்து 

பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள்

பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள்





பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள்


 பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள் ந.க.எண். 069381 /கே/இ1/2018 நாள்.26.04.2022) உத்தரவு!!!*

 

8462 தற்காலிக பணியிடங்களுக்கு (BC தலைப்பு) ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை!!!

8462 தற்காலிக பணியிடங்களுக்கு (BC தலைப்பு) ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை!!!


Click here to download pay order pdf 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பொத்தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எந்த பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். எனவே தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் கூறியுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ளது. 2021- 2022ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகளுக்கான செயல்முறை தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த கல்வியாண்டுக்கான  பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் அனைத்து பாடங்களில் இருந்துகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்த ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான வினாக்கள் 2021- 2022ம் ஆண்டிற்கான மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதன் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் சற்று கூடுதலாக கவனம் செலுத்தி அனைத்து பாடங்களையும் படித்து தெரிந்து இருக்க வேண்டும். இதற்கு உறுதுணையாக ஆசிரியர்கள் நல்வழிகாட்டுவார்கள். பிள்ளைகளின் கவனம் படிப்பில் இருக்கும்படியாக அவர்களின் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கே.வி., பள்ளி மாணவர் சேர்க்கை; புதிய வழிகாட்டுதல் வெளியீடு

நாடு முழுதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு, மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.நாடு முழுதும் உள்ள, 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது.

இதில், 14.35 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு ஆண்டுதோறும் தலா 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன. நேரடி வாரிசுகள்இதன் அடிப்படையில் லோக்சபாவை சேர்ந்த 543 எம்.பி.,க்கள், ராஜ்யசபாவை சேர்ந்த 245 எம்.பி.,க்கள் பரிந்துரைக்கும் 7,880 மாணவ - மாணவியருக்கு இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும், 'சீட்' வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது.மத்திய அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை ஊழியர்களின் குழந்தைகள், எம்.பி.,க்களின் நேரடி வாரிசுகள் மற்றும் பேரக்குழந்தைகள், கே.வி., பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் பேரக்குழந்தைகள், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கே.வி., பள்ளிகளுக்கான அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:கொரோனா தொற்று பாதிப்பினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, பி.எம்., கேர்ஸ் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு அளிக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள் அளிக்கும் பரிந்துரைப் பட்டியலின் அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இந்த பரிந்துரையின் கீழ், ஒவ்வொரு கே.வி., பள்ளியிலும் 10 மாணவர் வரை சேர்த்துக் கொள்ளப்படுவர். 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடு ஜூன் மாதம் வரை வழங்கப்படும்.பரம் வீர் சக்கரா, மகா வீர் சக்கரா, வீர் சக்கரா, அசோக் சக்கரா, கீர்த்தி சக்கரா, ஷவுரிய சக்கரா உள்ளிட்ட வீர தீர செயல்களுக்கான விருது பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.ஒதுக்கீடு தொடரும்'ரா' எனப்படும் உளவு அமைப்பை சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் 15 பேருக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.

அதே போல, பணியின் போது இறந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள், மற்றும் நுண் கலைகளில் சிறப்பு திறமை உள்ள பிள்ளைகளுக்கும் ஒதுக்கீடு தொடரும்.வெளிநாடுகளில் இருந்து பணியிட மாறுதல் பெற்று வருபவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 60 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கான மாணவர் சேர்க்கை நவம்பர் மாதம் வரை நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


All district unit transfer list



All district unit transfer list


Click here to download



Mutual Transfer 2022 - List!



 

Mutual Transfer 2022 - List!



Click here to download


சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்-pdf




 அரசு / அரசு உதவிபெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல்




தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 028875/ 22/ 2021, நாள்: 22-02-2022 & சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE -0. 28





இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE - 0.28 Version Available 

P.G Teachers - All Regularization Order Details Single File

முதுகலை ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை அரசாணைகள் மற்றும் உத்தரவுகள் ஒரே கோப்பில் உள்ளது.



பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் - தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். 




இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்தது. 

இந்த நிலையில் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணினியில் வைரஸ் தாக்குதலை தடுக்க Anti Virus Software Install செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 கணினியில் வைரஸ் தாக்குதலை தடுக்க Anti Virus Software Install செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!





10-ம் வகுப்பு மெல்ல கற்போருக்கான வினா - விடை வங்கி தொகுப்பு- ALL SUBJECTS

10-ம் வகுப்பு  மெல்ல கற்போருக்கான வினா - விடை வங்கி தொகுப்பு- ALL SUBJECTS

EMIS - தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...




தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...


1.RTE WEB,TRANSFER COUNSELING WEB & I.T.K APP வழக்கம் போல செயல்படும்
2.UNIT TRANSFER APPLICATION பிற்பகல் 1.00மணி வரை பதிவு செய்யலாம்.
3.CEO Loginல் இன்று இரவு 10.00மணி வரை NOC பதிவேற்றம் செய்யலாம்
4.School & staff login ஐ கலந்தாய்வுப் பணிக்கு மட்டும் இன்று பிற்பகல் 1.00மணி வரை பயன்படுத்தலாம்.மற்ற பணிகளை கட்டாயம் செய்யக்கூடாது .
5.ALL OFFICIALS login இன்று இரவு 10.00மணி வரை மட்டுமே செயல்படும்.
6.அனைத்து செயலிகள்(Apps), மாணவர்களின் Quiz portal, நான் முதல்வன் Login,E-content ,question creation உள்ளிட்ட தளங்கள்  அனைத்தும் இன்று காலை 9.00 மணி முதல் 30.4.2022 இரவு 9.00மணி வரை செயல்படாது .

100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 ஆண்டுகள் கடந்து , நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும் விதமாக , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.



9-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயப் பாடம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடமாக்கபட்டுள்ளது என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் விளையாட்டை பாடத்திட்டமாக அறிவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், 'தமிழகத்தில் விளையாட்டு பாடத் தேர்வில் செய்முறை, எழுத்து முறை என தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடமாக்கபட்டுள்ளது' என்று கூறியுள்ளது.

Fellowship கல்வி திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அழைப்பு. இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - 45 ஆயிரம் & 32 ஆயிரம் ஊதியம் - Notification pdf avail

Fellowship கல்வி திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அழைப்பு. இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - 45 ஆயிரம் & 32 ஆயிரம் ஊதியம் - Notification pdf avail



தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப் திட்டம்*

*இளைஞர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு

*சென்னை, ஏப். 23: அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட 'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது.

*இத்திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்ததிட்டத்தை செயல்படுத்த உள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளை ஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 'தமிழ்நாடு முதல்வரின்* *fellowship என்கிற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் 'தமிழ்நாடு* *fellowship கல்வி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.

கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கெனவே இல் லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல் வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் உருவாக் கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் 'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' திட்டத்தில் இணைந்து பணியாற்றஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* மாவட்டத்திற்கு ஒரு senior fellow என்கிற பணியி டத்திற்கு ஐந்து ஆண்டுகள் பணி அனுபவத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாகப் பேச எழுத தெரிந்திருப் பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

*மேற்கூறிய தகுதியின் அடிப்படையில் மாதம் ரூ.45ஆயிரம் ஊதியத்தில் 38 மாவட்டங்களில் தலா ஒரு பணியிடம் என்கிற அடிப்படையில் 38 பணியிடங்கள் உள்ளன.

*அதேபோன்று fellows என்று புதிதாக உருவாக்கப் பட்டுள்ள பணியிடத்தில் 114 நபர்கள் மேற்கூறிய அதே தகுதிகளுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர் கள் மாதம்தோறும் ரூ.32 ஆயிரம் ஊதியத்துடன் நியமிக் கப்படவுள்ளனர்.

*இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை பணிக்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பணிக் காலம் முழுவதும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழும் வழங்கப்படும்.

 இது தொடர்பான கூடுதல் தகவல்கள்.. & Apply Link

Cick here to download- pdf  

Click here to Apply


EMIS - Scheduled Down time from 25th April 9 am to 30 th April 9 pm

 EMIS - Scheduled Down time from 25th April 9 am to 30 th April 9 pm




ஆட்சியர் அலுவலகங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பு: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்



முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் 2022-ம் ஆண்டுக்கான இளம் தொழில்முனைவோர் மாநாடு சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:


திமுக அரசு இளைஞர்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக உள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவே ஒற்றைச்சாளர முறை உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதன் பலனாக தமிழகம் இதுவரை ரூ.70 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.



தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எனவே, இளைஞர்கள் காப்புரிமை பெறுவது குறித்து தெரிந்து கொள்வது அவசியம். மேலும், முதல் தலைமுறை தொழில்முனைவோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து, முதல்வரின் வழிகாட்டுதல்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


அண்மைக் காலமாக பள்ளி ஆசிரியர்களிடம், மாணவர்கள் தவறான முறைகளில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன. ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோராகத் திகழ்கின்றனர். எனவே, மூர்க்கமாகச் செயல்படும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் திருத்த வேண்டும்.


மேலும், கரோனா காலத்துக்குப் பின்பு பள்ளி மாணவர்களிடம் மனரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சரிசெய்யும் வகையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக தேர்வுத் துறை வழங்கியதுபோன்ற போலிச் சான்றிதழ் தயாரித்து, அஞ்சல் துறை உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்துள்ள வட மாநிலத்தவர் கண்டறியப்பட்டுள்ளனர். இதேபோல, அரசு அலுவலகங்களில் இருந்து அதிக அளவிலான சான்றுகள் சரிபார்ப்புக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலேயே சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.


விரைவில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்