பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை: மத்திய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு

   hindutamil-prod%2F2026-09-07%2F6xtl8b0w%2F10

பிளாஸ்டிக் டெக்​னாலஜி தொடர்​பாக டிப்​ளமா படிப்​பு​களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடை​பெற்று வரு​வ​தாக மத்​திய அரசின் சிப்​பெட் கல்வி நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

மத்​திய பெட்ரோ கெமிக்​கல்ஸ் இன்​ஜினியரிங் அண்ட் டெக்​னாலஜி (சிப்​பெட்) கல்வி நிறு​வனம் சென்னை கிண்டி ஈக்​காட்​டுத்​தாங்​கல் திரு.​வி.க. தொழிற்​பேட்​டை​யில் இயங்கி வரு​கிறது..

இந்த நிறு​வனம், பிளாஸ்​டிக் மோல்ட் இன்​ஜினியரிங் டிப்​ள​மா, பிளாஸ்​டிக் டெக்​னாலஜி டிப்​ள​மா, பிளாஸ்​டிக் மோல்ட் டிசைன் முதுகலை டிப்​ளமா படிப்​பு​களை வழங்கி வரு​கிறது.


3 ஆண்டு கால டிப்​ளமா படிப்​பில் எஸ்​எஸ்​எல்சி தேர்ச்சி பெற்​றவர்​களும் ஒன்​றரை ஆண்டு கால முதுகலை டிப்​ளமா படிப்​பில் பொறி​யியலில் டிப்​ளமோ (மெக்​கானிக்​கல், பிளாஸ்​டிக் டெக்​னாலஜி, மெக்​கட்​ரானிக்​ஸ், ஆட்​டோமொபைல் இன்​ஜினியரிங்) முடித்​தவர்​களும் சேரலாம்.

மேற்​கண்ட டிப்​ளமா படிப்​பு​களு​டன் லேட்​ரல் என்ட்ரி முறை​யில் பிளாஸ்​டிக்ஸ் மோல்டு டெக்​னாலஜி டிப்​ள​மா, பிளாஸ்​டிக்ஸ் டெக்​னாலஜி டிப்​ளமா படிப்​பு​களை​யும் வழங்கி வரு​கிறது.

இரண்டு ஆண்டு கால இந்த படிப்​பு​களில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்​றவர்​களும் (இயற்​பியல் வேதி​யியல், கணிதம் பாடங்​கள் படித்​தவர்​கள்) எஸ்​எஸ்​எல்​சி-யைத் தொடர்ந்து 2 ஆண்டு கால ஐடிஐ படிப்​பில் டூல் அண்ட் டை, ஜெனரல் மெஷினிஸ்ட், டிராப்ட்​ஸ்​மேன், மெக்​கானிக்​கல், ஃபிட்​டிங், பிளாஸ்​டிக், பாலிமர், கெமிக்​கல் டெக்​னாலஜி உள்​ளிட்ட பாடப்​பிரிவு​கள் படித்​தவர்​களும் சேர தகு​தி​யுடைய​வர் ஆவர்.தற்​போது மேலே குறிப்​பிடப்​பட்ட டிப்​ளமா மற்​றும் முது​நிலை டிப்​ளமா படிப்​பு​களுக்​கான நேரடி சேர்க்கை (Spot Admission) நடை​பெற்று வரு​கிறது.

இந்த படிப்​பு​களில் சேர விரும்​பும் மாணவர்​கள் தேவை​யான கல்​விச்​சான்​றிதழ்​களு​டன் சிப்​பெட் நிறு​வனத்​துக்கு நேரடி​யாகச் சென்று உடனடி​யாக சேர்க்கை பெறலாம். கூடு​தல் விவரங்​களுக்கு 94449-19183, 9363866518 ஆகிய மொபைல் எண்​களில் தொடர்பு கொள்​ளலாம் என சிப்​பெட் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

செய்முறை தேர்வாளர் பணிக்கு இடைத்தரகர்களிடம் ஏமாறாதீர்: கல்வியியல் பல்கலை எச்சரிக்கை

   


kalvi_L_260907094710000000
பி.எட்., செய்முறை தேர்வுக்கான தேர்வாளர் பணிக்கு, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், தமிழகம் முழுதும், 500க்கும் அதிகமான கல்வியியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும், பி.எட்., படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் செமஸ்டர் முழுதும் செயல் முறை பாடத்திட்டங்களாக நடத்தப்படும். அந்த வகையில், 16 வாரம் பள்ளியில் நேரடி பயிற்சி வழங்கப்படும். அதன்பின், செயல்முறை தேர்வு நடத்தப்படும். இந்த செயல்முறை தேர்வை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் என, இரண்டு பேர் கொண்ட தேர்வாளர்கள் குழு கண்காணிக்கும். இந்த இரண்டு உறுப்பினர்களையும், பல்கலையே நேரடியாக நியமிக்கிறது.அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்களே, செய்முறை தேர்வை கண்காணிக்கும் தேர்வாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டுகளில், செய்முறை தேர்வுக்கான தேர்வாளர் தேர்வில், இடைத்தரகர்கள் வாயிலாக வசூல் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் இது போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பல்கலை எடுத்துள்ளது.'செய்முறை தேர்வுக்கான தேர்வாளர்கள் நியமனம், பல்கலை விதிகளுக்கு உட்பட்டு, வெளிப்படை தன்மையுடன் நடக்கும்' என, கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கண்மணி தெரிவித்துள்ளார்.தேர்வாளர் நியமனத்திற்கு யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், பல்கலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஐஐடி மெட்ராஸ் SCHOOL CONNECTE: 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு!

   1123128

ஐஐடி மெட்ராஸ் SCHOOL CONNECTE: 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு!

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 2026 தொகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

17 துறைகளில் 8 வார ஆன்லைன் படிப்புகள் வழங்கப்படுகின்றன.


Data Science & Al, Cybersecurity, Aerospace, Electronics உள்ளிட்ட துறைகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். 


படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு IIT Madras CODE சார்பில் மின்-சான்றிதழ் வழங்கப்படும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30, 2026.


வகுப்புகள் தொடக்கம்: அக்டோபர் 5, 2026.


: IIT Madras CODE School Connect இணையதளம் வழியாக பதிவு செய்யலாம்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்

 மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டா டப்படுகிறது. அதையொட்டி, மாநில அளவில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி நடப்பாண்டில் 396 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது: தன்னிடம் படித்த மாணவர்கள் தன்னைவிட உயரத்துக்குச் செல்லும்போது எவ்வித பொறாமையும் இல்லாமல் பெருமைப்படும் சான்றோர்கள்தான் ஆசிரியர்கள். அனைத்து ஆசிரியர்களுமே சிறந்த ஆசிரியர்கள் தான். பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளின் வாழ்க்கையை ஆசிரியர்கள் சிறப்பாகக் கவனித்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஆசிரியர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான அனைத்து விஷயங்களையும் உயிரைக் கொடுத்தாவது செய்வோம்.

இந்த அரசு அறிமுகப்படுத்தும் புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த பாடத்திட்டம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் என்.லதா, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், தமிழக பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் சாந்தா பப்ளிஷர்ஸ், ஆசிரியர் கல்வியாளர் கூட்டமைப்பு, தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ராஜ்மோகன், எஸ்.ராஜேஸ்குமார் ஆகி யோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளிமற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முதல்வர் வாழ்த்து: ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘மாணவர்களின் மனங்களில்அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப்பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, எதிர்கால வாழ்வுக்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதுடன்,நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப்பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களின் மகத்தான பணிகளை போற்றுவோம்’’ எனக் கூறியுள்ளார்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிகபொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரும் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

TNSED Attendance New Version 8.1 வெளியீடு! | SDK & Performance Update என்றால் என்ன? | முழு விளக்கம்

   

TNSED Attendance New Version 8.1 வெளியீடு! | SDK & Performance Update என்றால் என்ன? | முழு விளக்கம்


வணக்கம் ஆசிரியர்களே! 


💁‍♂️தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் TNSED Attendance செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் 

💁‍♂️புதிய பதிப்பான Version 8.1-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது (Updated on Sep 4, 2026). 

💁‍♂️இந்தப் புதிய பதிப்பில் வந்துள்ள மாற்றங்கள் என்ன? 

"💁‍♂️SDK Version Update" மற்றும் "App Performance" என்றால் என்ன? 

💁‍♂️பழைய பதிப்பிற்கும் புதிய வெர்ஷன் 8.1-க்கும் உள்ள தொழில்நுட்ப வித்தியாசங்கள் 

💁‍♂️மற்றும் ஆசிரியர்கள் ஏன் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த


💁‍♂️ வீடியோவில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது


APP LINK 👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis


https://youtu.be/Hkh7zwxfFmc


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Dr', 'Er' போல இனி ஆசிரியர்களுக்கு ‘Tr'!

   1117903


ஆமாம், ஆசிரியர் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கர்நாடக அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது! 
மருத்துவர்களுக்கு 'Dr' (Doctor) மற்றும் பொறியாளர்களுக்கு 'Er' (Engineer) என இருப்பது போல, இனி ஆசிரியர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் 'Tr' (Teacher) என்ற சிறப்பு முன்னொட்டைப் (Prefix) பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவகுமார் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:
  • கௌரவம்: மருத்துவர்கள், பொறியாளர்கள், தலைவர்கள் என அனைவரையும் உருவாக்கும் உன்னதமான ஆசிரியர் பணிக்குச் சமூகத்தில் தனி அங்கீகாரமும் மரியாதையும் அளிக்கும் வகையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது. 
  • அதிகாரப்பூர்வ அனுமதி: ஆசிரியர்கள் தங்களது அதிகாரப்பூர்வப் பதவிகளிலும், பெயர்களிலும் இந்த 'Tr' என்ற அடைமொழியை இனி தாராளமாகப் பயன்படுத்தலாம். 
  • ஆசிரியர் தினப் பரிசு: கடந்த ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு (செப்டம்பர் 5, 2026) இந்த முக்கிய அரசாணை வெளியிடப்பட்டது. 
இந்த முயற்சியைப் பாராட்டிப் பலரும் சமூக வலைத்தளங்களில் வரவேற்று வரும் நிலையில், "இதே போன்ற அறிவிப்பைத் தமிழ்நாடு அரசும் வெளியிட வேண்டும்" என்ற கோரிக்கைகளும் பரவலாக எழுந்து வருகின்றன. 
இந்த மாபெரும் மாற்றத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழ்நாட்டிலும் ஆசிரியர்களுக்கு இதே போன்ற 'Tr' அங்கீகாரம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்து!!!

 

1044901

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் சனிக்கிழமை (ஆக. 22) வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில், 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.


இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுள்ளதாவது:


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.


இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்! நல்வாழ்த்துகள்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.


2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதானது, நாடு முழுவதும் மொத்தம் 48 ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் விரைவில்

 சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் விரைவில்

செப். 10-க்குள் வெளியாகும் என தகவல்

24-ஆம் தேதி அரசு கொள்கை முடிவு தாக்கல்


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் பணி செய்யும் ஆசிரியர்களுக்கான TET தேர்வை நடத்தியது.


தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இத்தேர்வில் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை எழுதினார்கள்.


இதனிடையில் தேர்வர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதித்தது.


TET தேர்வு


செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முடிவிற்காக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத்தின் இந்த தடையின் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி விடைக்குறியீட்டை தயார் செய்து அனைத்து OMR விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்துவிட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன.

ஆகவே வருகின்ற 24-ஆம் தேதி தமிழ்நாடு TET தேர்வு மதிப்பெண் குறைப்பு தொடர்பான கொள்கை முடிவை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கும் போது, TET தேர்வு முடிவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.


1044896



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க