🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
Education and Information
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நவம்பர் 28-ல் தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், மாநில மதிப்பீட்டுப் புலம் என்ற பெயரில் திறனறித் தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தற்போது திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நவ.28 முதல் டிச.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக மதியம் 2 முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அந்த வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வினாத்தாள் பதிவிறக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
ஒவ்வொரு தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத் தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களை கொண்டிருக்கும். மாணவர்களுக்கு தனித்தனியாக அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்தத் தாள்களிலேயே மாணவர்களை குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
தமிழகத்தில் நவ.3-ஆம் தேதி 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாநில கற்றல் அடைவு திறனாய்வுத் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு மாணவா்களை தயாா்படுத்துமாறு பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய கற்றல் அடைவு திறனாய்வுத் தோ்வு மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வு பள்ளி மாணவா்களுக்கு அவ்வப்போது நடத்தப்பட்டு, அவா்களின் கற்றல் நிலையைக் கண்டறிந்து தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிகழாண்டில் 3, 6, 9 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு மாநில கற்றல் அடைவு திறனாய்வு - 2023 தோ்வு நவ.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் 27,047 பள்ளிகளில் இருந்து மொத்தம் 7.42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இந்தத் தோ்வு கண்காணிப்பு பணிக்காக பி.எட்., எம்.எட். பயிற்சி மாணவா்கள் உள்பட 29,775 கள ஆய்வாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இந்த ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், 20 பள்ளிகளுக்கு ஒருவா் வீதம் மொத்தம் 1,356 போ் வட்டார ஒருங்கிணைப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பாடத் திட்டம் என்ன? அதன் தொடா்ச்சியாக தோ்வுக்கான பாடத் திட்ட விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு தமிழ், கணக்கு ஆகிய பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும். மேலும், ஆங்கில வழிக்கல்வி எனில் ஆங்கிலம், கணக்கு பாடங்களில் கேள்விகள் இருக்கும். வினாக்கள் முந்தைய வகுப்புகளில் பாடத்திட்டம் அடிப்படையில் கேட்கப்படும்.
அதாவது, 3-ஆம் வகுப்புக்கு 1, 2-ஆம் வகுப்பு பாடத்திட்டம், 6-ஆம் வகுப்புக்கு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டம், 9-ஆம் வகுப்புக்கு 1 முதல் 8-ஆம் வகுப்பு பாடத்திட்டம் வரையறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவா்களைத் தோ்வுக்கு தயாா்படுத்த வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
15-10-2023 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வில் 100 - க்கு 97 - வினாக்கள் நமது TCA வழங்கிய முதல் பதிப்பு புத்தகத்தில் இருந்து நேரடியாக கேட்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
TEACHER'S CARE PUBLICATION]
[KANCHIPURAM, TRICHY, SALEM, MADURAI]
15-10-2023 அன்று நடைபெற்ற தேர்லின் வினா , விடை , விளக்கம்👇
தமிழ் திறனறித் தேர்வு 2023 - Solved Question Papers - Download here
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
07.10.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) மற்றும் 15.10.2023 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுகளுக்கான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடபட்டுள்ளது.
இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் தெரிவிக்க விரும்பினால் அவற்றை 27.10.2023 - க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tentative Key Answer - Download here
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள் - தேசிய அடைவுத் தேர்வு (NAS) 2015 - வினாத்தாள்கள் தொகுப்பு...
Std 3, 5 and 8 - National Achievement Survey 2015 - Question Papers Collection - Download here
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழ் திறனறித் தேர்வுக்கான அசல் வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புகள்.
TTSE - Tamil Talent Search Exam - 15.10.2023 - Question Papers - Answer Keys - PDF - Download here
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11-ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்த உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட்30-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் (செப். 29) நிறைவடைகிறது. மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தாமதக்கட்டணத்துடன் அக். 13 வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, நவம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் மார்ச் 16-ம் தேதி வெளியாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Click here to join whatsapp group for daily kalvinews update
TNPSC - துறைத்தேர்வு டிசம்பர் - 2023 அறிவிப்பு
துறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு...
* ஆதார் எண்ணை கட்டாயமாகப் பதிய வேண்டும்.
* டிசம்பர் - 2023 - ற்கான துறைத்தேர்வுகள் 09.12.2023 முதல் 17.12.2023 வரை தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன.
* விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 27.09.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.
* இணைய தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள் 26.10.2023 அன்று 11.59 பிற்பகல் வரை.
* அனைத்து கொள்குறி வகை தேர்வுகளும் ( 100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 40 சதவீதம் / 60 சதவீதம் / 80 சதவீதம் ) கணினி வழி முறையிலும் அனைத்தது விரிந்துரைக்கும் வகை தேர்வுகளும் ( 100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 20 சதவீதம் / 40 சதவீதம் / 60 சதவீதம் ) ஏற்கெனவே உள்ள முறையான தேர்வுத் தாளில் எழுதும் வகை தேர்வாக நடைபெறும்.
Click here to join whatsapp group for daily kalvinews update
தேசிய கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, வரும் டிச. 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின்கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில்இயங்கிவரும் இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர ‘கிளாட்’ எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
அதேபோல தேசிய சட்டப்பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின்அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
இந்நிலையில், 2024-25-ம் கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க இருப்பதையொட்டி, கிளாட் தேர்வு வரும் டிச.3-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் நவ.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.4 ஆயிரமும், எஸ்சி, எஸ்டிபிரிவினர் ரூ.3,500-ம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8047162020 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
Click here for latest Kalvi News
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!
Click here to join whatsapp group for daily kalvinews update
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவா் 2014-இல் இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டாா்.
இவரது நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி பள்ளி நிா்வாகம் சாா்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டதன் பேரில், 2017-இல் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஜேசுபிரபா தனது பணி நியமனத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அங்கீகரித்து, சம்பளப் பாக்கி, பணப் பலன்களை வழங்கக் கோரி வழக்குத் தொடுத்தாா். அப்போது, அவரது பணி நியமனத்தை 2014-ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டாா்.
இதை எதிா்த்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறையின் செயலா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், ஆா்.தாரணி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியா்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பணி நியமனங்கள் அந்தந்த மறை மாவட்டங்கள் பராமரித்து வரும் பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மறை மாவட்டங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு இணையாக பதிவேட்டை பராமரித்து வருகின்றன.
இந்தக் கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவா்கள் விவரங்களை ஆராய்ந்தால், அவா்கள் ஒரே மதத்தைச் சோ்ந்தவா்களாகவோ, அதே மதத்தில் உள்ள ஒரு பிரிவினராவோ இருப்பா்.
கல்வித் துறை, உபரி ஆசிரியா் பிரச்னையை சந்தித்து வருகிறது. ஆனால், இது போன்ற கல்வி நிறுவனங்கள், தங்களது பள்ளியில் ஒரு காலியிடம் ஏற்பட்டால் கூட உடனடியாக நிரப்பி விடுகின்றனா். அவா்கள் மற்றொரு பள்ளியில் உபரி ஆசிரியா்கள் இருப்பதைக் கண்டு கொள்வதில்லை.
எனவே, வரும் காலங்களில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற்றே ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி சிறுபான்மை கல்வி நிறுவனம் அனுப்பும் பரிந்துரைகளை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. அதாவது, ஆசிரியா் நியமன ஒப்புதல் தொடா்பாக கல்வி நிறுவனங்களிடமிருந்து பரிந்துரை கிடைக்கப் பெற்றால், அதன் மீது 10 வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவிலும், அமா்வு உத்தரவிலும் தலையிட வேண்டியதில்லை. மறுசீராய்வு மனு முடித்து வைக்கப்படுகிறது என்றனா்
Click here to join whatsapp group for daily kalvinews update
எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்(நெக்ஸ்ட்) தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) சட்டத்தின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது ஒரு பொதுவான தகுதி இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வாகவும், நவீன மருத்துவம் மற்றும் முதுகலைப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான உரிமத் தேர்வாகவும் இருக்கும்.
மேலும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான ஸ்கிரீனிங் தேர்வாகவும் ‘‘நெக்ஸ்ட்’’ இருக்கும்.
...Click here to join whatsapp group for daily kalvinews update
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, 2023-24-ம் கல்விஆண்டுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
முதல்கட்டமாக, நாளை முதல் வரும் 8-ம் தேதி வரை தேர்வெழுத உள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சந்தேகங்களுக்கு 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-pg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.
Click here to join whatsapp group for daily kalvinews update
அன்புள்ள ஆசிரியருக்கு ,
தற்போது நடைபெற்று முகாம் வரும் தேர்வு காரணமாக மே 4 ஆம் தேதி நடைபெறவிருந்த கனவு ஆசிரியர் மைய அடிப்படையிலான இரண்டாம் நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . தொடர்பான பின்னர் இது தகவல்கள் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
பாடத்திட்டங்கள் மற்றும் மாதிரி வினாக்கள் கனவு ஆசிரியர் Menu வின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
Click here to join whatsapp group for daily kalvinews update
Click here for latest Kalvi News
எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் இணையவழியில் நடத்தப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டு சிமேட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 13-ல்தொடங்கி மார்ச் 13-ம்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுகால அட்டவணையை என்டிஏதற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி சிமேட் தேர்வு மே 4-ம்தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வானது 3 மணிநேரம் நடைபெறும். ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை cmat.nta.nic.in, www.nta.ac.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். சந்தேகம் இருப்பின் 011- 4075 9000 என்றதொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Click here for latest Kalvi News
நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில், முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு, ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர, கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக கடந்த மாதம் 20ம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில், முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேதிகளை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள், வரும் ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை நடக்கவுள்ளன. தேர்வுகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடத்தப்படும்.
இது தொடர்பான விபரங்களுக்கு, www.cuet.nta.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்., 19 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Click here for latest Kalvi News
அரசு பள்ளிகளில் படிக்கும், 260 மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட், கியூட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்காக, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களில் பலர், ஜே.இ.இ., பிரதான தேர்வில் பங்கேற்றனர்; 260 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நேரடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
எனவே, அந்த மாணவர்களுக்கு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், உணவு, இருப்பிட வசதி அளித்து, ஜூன் முதல் வாரம் வரை, இலவச பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest Kalvi News
பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு ( Career Guidance Cell ) 5 உறுப்பினர்கள்
Click here for latest Kalvi News