கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

 1130401


நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கணினி வழியிலான கேட் தேர்வு, இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 29பாடப் பிரிவுகளில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.


2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11-ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்த உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட்30-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.


இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் (செப். 29) நிறைவடைகிறது. மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தாமதக்கட்டணத்துடன் அக். 13 வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, நவம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.


தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் மார்ச் 16-ம் தேதி வெளியாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment