10th Public Exam 2024 - Question And Answer
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
Education and Information
10th Public Exam 2024 - Question And Answer
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
பத்தாம் வகுப்புக்கான தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டு நிறைவடைந்தது.
இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,107 தேர்வு மையங்களில் 9.08 லட்சம் மாணவர்கள் எழுதவிருந்தனர். இவர்களில் 16,314 பள்ளி மாணவர்கள், 1,319 தனித் தேர்வர்கள் என மொத்தம் 17,633 பேர் நேற்று தேர்வெழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல், சென்னை மாவட்டத்தில் மட்டும் 288 மையங்களில் 66 ஆயிரம் பேர் வரை தேர்வில் கலந்து கொண்டனர். முன்னதாக தேர்வெழுத வந்த மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர தமிழ் பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற்ற சுமார் 4,000 மொழி சிறுபான்மைமாணவர்கள் கன்னடம், மலையாளம் உட்பட போன்ற பிறமொழிகளில் தேர்வெழுதினர். இதற்கிடையே தமிழ் பாடத்தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வினாத்தாளில் ஒன்று மற்றும் 5 மதிப்பெண் பகுதிகளில் தலா ஒரு வினா மட்டும் பாடப் பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டன. மற்றபடி இத்தேர்வில் சராசரி மாணவர்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 10-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 8-ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைய உள்ளன. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
வினாத்தாளில் எழுத்துப் பிழையால் மாணவர்கள் குழப்பம்
மதுரை: தமிழகத்தில் நேற்று தொடங்கிய தமிழ் மொழிப் பாடத் தேர்வுக்கான வினாத் தாளில் பகுதி 111-ல் பிரிவு 2-ல் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் என்ற பகுதியில் 33-வது வினாவில், “நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக” என்று வினா இருந்தது.
இதில் ‘எண்ணியிருந்த’ என்பதற்குப் பதிலாக தவறுதலாக ‘பண்ணியிருந்த’ என இருந்தது. இதனால் மாணவர்கள் தடுமாற்றம் அடைந்தனர். பின்னர் எழுத்துப்பிழை என்பதை அறிந்து விடையளித்துள்ளனர்.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் :
SSLC Exam Hall Supervisors guide - Download here
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
10th Science - Slow Learners - Important 2 Mark Study Materials
Thanks To,
Mr S.R.senthil Kumar
Government Girls Higher Secondary School
Ayakkaranpulam
Nagapattinam District
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
10th Maths - Public Exam 2024 - Centum Mark Task Questions ( Chapter -1 ) - Download here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, அலகுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான தேர்வுகள் இடம்பெறவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8ல் நிறைவடைகிறது. எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் நடைமுறை உள்ளதால், பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில், பின்தங்குவது தொடர்கிறது.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
10th Maths - Formulae list in single page by Way to success👇
Click here t o join whatsapp group for daily kalvinews update
இதுவரை நடந்த 6 அரசு பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட 1 மதிப்பெண் வினாக்கள் குறித்த பகுப்பாய்வு:
1) இயக்க விதிகள் பாடத்தில் இருந்து ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதிகள் என்ற வினா மட்டுமே (மூன்று வினாத்தாள்கள்)கேட்கப்பட்டுள்ளது. இந்த அலகில் வேறு வினாக்கள் கேட்கப் படவில்லை.
2) அலகு *3,13 மற்றும் 23* ஆகியவற்றில் ஒரு 1 மதிப்பெண் வினா கூட கேட்கப்படவில்லை.
3) BB வினாக்கள் அலகு 12 இல் தான் அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.( 5BB+1CR)
4) CREATIVE வினாக்கள் அலகு 14 இல் தான் அதிகமாக கேட்கப்பட்டுள்ளது.( 1BB+5CR)
5) அலகு 5, 10 லிருந்து 1 வினா கேட்கப்பட்டுள்ளது.
6) 6 அரசு பொதுத்தேர்வுகளில் 47 BB + 25 CR வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.
7) அதிக பட்சமாக செப் 2020 வினாத்தாளில் 6 BB + 6 CR வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.
8) அலகு 22 இல் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களுமே CREATIVE வினாக்கள்.
9) creative வினாக்கள் புத்தக கோடிட்ட வினாக்கள் மற்றும் மேலும் அறிந்து கொள்வோம், மின்னோட்டவியல் பாடத்தில் இருந்து தீர்க்கப்பட்ட கணக்குகள் ஆகியவற்றில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
நன்றி
ப.லோகநாதன்
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி,
கெட்டுஅள்ளி.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
10th Maths Study Materials ( New Syllabus)
10th Maths - Half Yearly Exam Old Questions - Mega Collection - Download here
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் வரும் 30-ம் தேதிக்குள் சரிபார்க்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
எமிஸ் வலைதளத்தின் விவரங்கள் அடிப்படையிலேயே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் உள்ளிட்ட 13 தகவல்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை நவ.30-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும். அதனால், இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் தங்கள் நேரடி கவனத்தில் மேற்கொள்ள வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மேலும், எக்காரணம் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு, திருத்தங்கள் கோரி தேர்வுத் துறைக்கு விண்ணப்பம் அனுப்பக் கூடாது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பகுதி 1-ல் தமிழை மொழிப் பாடமாக எழுதியாக வேண்டும். எனினும், சிபிஎஸ்இ போன்ற பிற பாடத் திட்டத்தில் படித்து நேரடியாக 9, 10-ம்வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழிப் பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு இன்று (நவம்பர் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவுசெய்ய ஆகஸ்ட் 10 முதல் 21-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. தற்போது தேர்வர்களின் நலன் கருதி செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (நவம்பர் 6) முதல் நவம்பர் 10-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நேரில்சென்று தங்களின் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். அப்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு எழுத்துத் தேர்வுக்கான பதிவு தொடங்கும்போது தனித்தேர்வர்கள் இந்த ஒப்புகைச்சீட்டு மற்றும் முன்பு தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில்உள்ள விண்ணப்ப எண்ணைபயன்படுத்தியே ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய இயலும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
பத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.
பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை, கல்வியாண்டு துவங்கும் முன்பே, வெளியிடப்பட்டு வந்தது. இந்தக் கல்வியாண்டு(2023---24), நான்கு மாதம் நிறைவு பெற்றும், இன்னும் அட்டவணை வெளியிடப்படவில்லை.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கிறது. பொதுத்தேர்வுக்கு பின் தேர்தலா, தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வா என்ற கேள்வி மாணவ, மாணவியர், பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
தலைமை ஆசிரியர்கள், 'மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்த கல்வித்துறை உத்தேசித்துள்ளது.
இருப்பினும் அதிகாரபூர்வமாக தேதி விபரம் அறிவிக்கவில்லை,' என மாணவர்களிடம் கூறி வருகின்றனர். பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர், ஆசிரியர், பெற்றோரிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
பத்தாம் வகுப்பு ஆகஸ்ட் மாத அலகு தேர்வு பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் அமைப்பு விபரம்
தமிழ் இயல்:4மட்டும் மதிப்பெண்:25
1.உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. :5×1=5
2.குறுவினா(3):2×2=4
3. ஓரிரு சொற்களில் விடை தருக:2×2=4
சிறுவினா :4×3=12
கவினுற வரைக.
மனப்பாடம்.
English
Unit 3 0nly
Memory poem. 5
Letter writing. 5
Notice writing. 5
Picture comprehension 5
Prose paragraph5
Total. 25
Unit test 1
Maths - std X
Syllabus
1) Units 3.4 & 3.5
2) Units 4.3
3) Units 5.3
Question pattern :
Part l
1 x 2 = 2
1) Rational Expressions
Part ll
3 x 5 = 15
1) Theorem
2) square root of polynomial
3) Area of a Quadrilateral
Part III
1) Geometry 8 ( 4.3.2 )
Science unit test
X std
Portion Unit 3
Thermal physics
Question pattern
5×2=10
2×4=8
1×7=7
Total=25
Time 45 mints
Social science unit test
STD X mark - 25
Time: 45 minutes.
PORTION.
HISTORY Unit : 4
Geography unit 4
QUESTION PATTERN.
Short answer 12 x 2 = 24
Give reason. 1 x 1= 1.
Click here for latest Kalvi News
வரலாற்று காலக்கோடு - 6 முதல் 10ஆம் வகுப்பு
6 To 10th Std - August 1st Week - History Kalakkodu
Click here for latest Kalvi News
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஆக.10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023-24-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனிதேர்வர்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல்பாடத்தில் தோல்வியடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயரை பதிவு செய்யலாம்.
தனி தேர்வர்கள் ஆக.10 முதல் 21-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாவட்டகல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 80 சதவீத வருகை பதிவு உள்ள தனி தேர்வர்கள் மட்டுமே 2023-24-ம் கல்விஆண்டுக்கான 10-ம் வகுப்புபொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக.10 முதல் 21-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆக.21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
Click here for latest Kalvi News
தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வுமுடிவுகள் வரும் 26ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழ் கணிதன்- Maths shortcut Memes
விளையாட்டாக, மகிழ்ச்சியாக கணக்கு கற்க கீழ்காணும் 74 பக்க தமிழ் கணிதன் Maths Short cut memes பாருங்கள்... கணக்கை எளிமையாக கற்று விடலாம்...
இதை வைத்துக் கொண்டு TNPSC உள்ளிட்ட அரசு தேர்வுகளுக்கு பயன்படும்...
Click Here to Download - Maths shortcut Memes - Pdf
Click here to join whatsapp group for daily kalvinews update