மே - 2023 துறைத் தேர்வுகளுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு வெளியீடு.
TNPSC - Department Exam May 2023 - Hall Ticket - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
Education and Information
மே - 2023 துறைத் தேர்வுகளுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு வெளியீடு.
TNPSC - Department Exam May 2023 - Hall Ticket - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் TNPSC குரூப் 1, 2, 2a,3,4 ஆகிய தேர்வுகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகளை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடத்தவுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் TNPSC குரூப் 1, 2, 2a, 3, 4 ஆகிய தேர்வுகளுக்கு கட்டணமின்றி இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இவ்வாண்டு அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் அறிவிப்பு வரும் முன்னரே வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளை அறிந்து கொள்வதுதான் நமது நோக்கமாகும்.விண்ணப்பிக்க தகுதியான மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்க அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் தயாராக உள்ளது. மாணவர்களின் கல்வித் தகுதியை முழுமையாக அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளத்தை (www.tnpsc.gov.in) பார்க்கவும்.
தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும்,அரசுத் துறைகளில் அனுபவம் பெற்றவர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வகுப்புகளை, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தி வருகிறது.பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். களத்தில் நமக்கு கிடைத்த முன் அனுபவங்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றோம்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும். 01.04.2023 அன்று முதல் வகுப்பு தொடங்குகிறது. மாணவர்கள் TNPSC-யின் குரூப் தேர்வுகளில் முழுமையாக பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்துவிட்டு வயது மற்றும் இருப்பிட ஆதாரத்தின் நகலுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப் படமும் கொண்டு வர வேண்டும். மேலும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பயிற்சி நடைபெறும் இடம். Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சிஐடியு அலுவலகக் கட்டிடம், 2வது தளம், நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ராஹரம், ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.
பயிற்சியில் சேர விரும்புவோர், 90950 06640, 63698 74318, 97906 10961,94446 41712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் நம்பிக்கையோடு உறுதியாக தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியை பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு 9444641712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest Kalvi News
11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது TNPSC
Applications are invited from eligible candidates only through online mode upto 13.01.2023 for direct recruitment to the vacancies in the post of District Educational Officer ( Group - I C Services ) in School Education Department included the Tamil Nadu School Educational Service
DEO Recruitment Notification 2022.pdf - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
*கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் பதவியில், எட்டு காலியிடங்களுக்கு இந்த ஆண்டு, ஏப்., 30ல் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கிறது
* நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 11ல் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது
*தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில் அடங்கிய, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியில், 16 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் 31ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது
* தமிழக சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TNPSC - Group 1,2 & 4 Exams Question And Answer Collections
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.