Showing posts with label NEET Exam. Show all posts
Showing posts with label NEET Exam. Show all posts

Neet Exam -2023 Tentative key Answers-

Neet Exam -2023 Tentative key Answers-

 Key Answer-1 -Click here pdf 


Key Answer-2 -Click here pdf 

Key Answer -3 Click here pdf 

நீட் தேர்வு 2023 - வழிகாட்டு நெறிமுறைகள்

 இந்த ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு (NEET UG 2023) மே 7ம் தேதி நடக்க உள்ளது. அந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் இந்தியாவிலும் (485 நகரங்கள்) வெளிநாட்டிலும் (14 நகரங்கள்) எழுதுகின்றனர்.


பேனா மற்றும் பேப்பர் (PBT) முறையில் தேர்வு நடக்கும்.


நீட் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள்


மாணவர்கள் தங்களுக்கென பிரத்யேகமான குடிநீர் பாட்டில்களையும். சானிடைசரையும் கொண்டு வர வேண்டும். குடிநீர் பாட்டில்கள் மற்றும் சானிடைசர் நீங்கலாக அனுமதிச்சீட்டை மட்டுமே மாணவர்கள் எடுத்துச்செல்ல முடியும். 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்குள்ளும், இதர 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்கு வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.


மாணவர்களுக்கான ஆடை மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு விதிகள் என்னவென்று பார்போம்.


தேர்வு ஆணையம் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எந்தவிதமான உடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுபாடுகளை விதித்துள்ளது. 


உடை கட்டுப்பாடு : பெண்கள்


முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ் அணியக் கூடாது. துப்பட்டா அணியக் கூடாது. பெரிய பட்டன்களைக் கொண்ட சட்டைகளை அணிதல் கூடாது. 


கால்களை மூடு விதமான செருப்பு மற்றும் ஷூக்களை அணியக்கூடாது. குறைவான உயரமுள்ள சாதாரண செருப்புகளையே அணிய வேண்டும். 


நகைகள், காப்பு அணியக்கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது.


தலைமுடியில் பின்னல் மற்றும் கொண்டை கூடாது (தலைவிரி கோலமாக போக வேண்டும்)


“தேசிய தேர்வு ஆணையம் (NTA) கலாச்சாரத்தின் புனிதத்தை மதிக்கிறது. குறிப்பாக மாணவிகள் தேர்வு மையங்களுக்கு மதசார் உடைகளை அணிந்து வந்தால் அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.  தேர்வு அறைக்குள் கலாச்சார மற்றும் மத ரீதியான உடைகளை அணிந்து வருபவர்கள் குறைந்தது  ஒரு மணிநேரத்திற்கு முன்பே தேர்வு எழுதும் மையத்துக்கு வந்து விடவேண்டும். முறையான சோதனைக்கு பின்பே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 


பொது கட்டுப்பாடு: குளிர் கண்ணாடி, கைக்கடிகாரம், காப்பு ஆகியவை அணிந்து வரக்கூடாது. பேனா, ஸ்கேல், எழுதுவதற்கு அட்டை, ரப்பர், கால்குலேட்டர் ஆகியவற்றையும் எடுத்து வரக்கூடாது.  


தொலைத்தொடர்பு சாதனங்கள் ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


உணவு கட்டுப்பாடு:


சர்க்கரை நோயுள்ள மாணவர்கள் தங்களுக்கான மருந்தினை எடுத்து வரலாம். சாப்பிடுவதற்கு வாழைப்பழம், ஆப்பிள், போன்ற பழங்களையும் கொண்டு வரலாம். பேக்செய்யப்பட்ட உணவுகள், சாக்லேட்களுக்கு அனுமதியில்லை. 


ஆவன கட்டுப்பாடு :


இரண்டு பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோ, அசல் ஆதார் அட்டை மற்றும் நுழைவு சீட்டு (Admit card) மட்டுமே கையில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். நுழைவு சீட்டில் புகைப்படம் ஒட்டி பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு மைய பகுதியில் கோவிட் தொற்று பயம் இருந்தால் தேர்வு எழுதுபவர், ஒரு தண்ணீர் பாட்டில், சிறிய சானிடைசர் பாட்டில், முக்கவசம் மற்றும் கைஉறைகள் உள்ளே எடுத்து செல்லலாம்.


நேரம்:


இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. 


தேர்வு மையத்துக்கு அட்மிட் கார்டில் குறிப்பிட்டுள்ள ரிப்போர்டிங் டைம்மில் வந்துவிடவேண்டும்.


மையத்தினுல் நுழைவதற்கு கடைசி கால அவகாசம் 1:30pm. (Gate closing time 1:30pm, after that no body is allowed to enter or leave the Centre until 5pm)


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்

 நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்


1.மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

இதில் இயற்பியல் (Physics)50, வேதியியல் (Chemistry)50, தாவரவியல் (Botany)50 மற்றும் விலங்கியல் (Zoology) 50 என அமைந்திருக்கும்‌.


2. ஒவ்வொரு  பாடத்திலும் பகுதி 'A' மற்றும் பகுதி 'B' என இரண்டு வகை இருக்கும்.


3.'A' பகுதியில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.


4.பகுதி 'B' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 15 வினாக்களில் ஏதேனும் 10  வினாக்களுக்கு விடையளித்தால் போதும். 5 வினாக்கள் சாய்ஸ் ஆகும்.


5.ஓவ்வொரு பாடத்திலும் உள்ள 'B'பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் ‌ஏனெனில் இவை அனைத்தும், சிந்தித்து விடை எழுதும் சிந்தனையை தூண்டும் திறனறி வினாக்கள் ( HOT -Higher Order Thinking Skills Questions)வகை ஆகும்.

எனவே மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும்.


6.மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 200 வினாக்களில் 180 வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும்.

ஓவ்வொரு வினாவிற்கும்  4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் ஆகும்.


7. தவறான விடைகள் ஒவ்வொன்றிற்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும்.எனவே வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து புரிந்து சரியான விடையை தேர்வு செய்து எழுத வேண்டும். அவசரப் படுதல் கூடாது. ஓ.எம்.ஆர்.சீட்டில் (OMR) விடையை ஒருமுறை குறித்த பிறகு மாற்றம் செய்ய இயலாது.


8. அதிக மதிப்பெண் பெற உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முதலில் மிகவும் நன்கு பதில் தெரிந்த தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு விடை அளிக்கவும்.


9. இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடை அளித்தால் மட்டுமே 650 மதிப்பெண்களுக்கு மேலாக மதிப்பெண்கள் பெற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


10.முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு ( Doubtfull Answer)  பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இல்லையெனில் நெகடிவ் மதிப்பெண் ஆகிவிடும்.


11.நீட் தேர்வில் கேட்கப்படும் அனைத்துமே MCQ ( Multiple Choice Questions)  வகைதான்.ஆனால் ஒவ்வொரு வினாவும் ஒவ்வொரு வகையாக  இருக்கும்.குறிப்பாக 

1)சரியான கூற்றினை தேர்ந்தேடு 

2) தவறான கூற்றினை தேர்ந்தேடு 

3) சரியான இனை எது? 

4) தவறான இனை எது ?

5) சரியானவற்றை  பொருத்தி விடை காண்க 

6) கொடுக்கப்பட்டுள்ள படங்களின் சரியான வரிசை எது ? 

7) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப் பட்டுள்ள X,Y மற்றும் Z ன் பெயரினைக் கண்டறி 

8) பின்வருவனவறில் எது சரியான ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் அமைந்துள்ளது ? 

9) கொடுக்கப்பட்டுள்ள வினாவின் அடிப்படையில் கூற்று மற்றும் காரணம் எவ்வாறு உள்ளது?

 10) அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், புத்தகங்களின் பெயர்கள்,வேறு பெயர்கள், வினைகள் நடைபெறும் இடம்,சுவாச ஈவு , சுவாச நிறமிகள், இதய அறைகள் மற்றும் செவுள்களின் எண்ணிக்கை,மூட்டுக்களின் வகைகள் மற்றும் எடுத்துக் காட்டு, சரியான Abbreviation  எது ? சுவாசக் கொள்ளளவு கள் மற்றும் கொள்திறன்களின் அளவுகள், தாவர ஹார்மோன்கள் மற்றும் அதன் பணிகள் , தாவரங்களில் காணப்படும் வேர்,தண்டு மற்றும் இலையின் மாற்றுருக்களுக்கான எடுத்துக்காட்டுகள் என நேரடியான வினாக்களும் கேட்கப்படும்.

 எனவே 

அன்பான மாணவச் செல்வங்களே தன்னம்பிக்கையுடன், பொறுமை மற்றும் சிந்தித்து விடை எழுதும் தெளிவான பகுத்தறிவுடன் நீட் தேர்வினை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று தகுதியான மருத்துவர் ஆகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்


- NEET ஆசிரியர் குழு



Click here for latest Kalvi News 

அனைத்திந்திய அளவில் நீட் மாடல் தேர்வு - கட்டணமின்றி எழுத லிம்ரா அழைப்பு

 நீட் தேர்வை எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம், இந்த ஆண்டும் 12 மாடல் தேர்வுகளை, எவ்விதக் கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் வழியாக நடத்துகிறது.


நீட் தேர்வு வரும் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 1,47,581 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள மொத்த இடங்களில் இட ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதமுள்ள 4,025 இடங்கள் மட்டுமே நம் தமிழக மாணவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.


எனவே, கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் அனைத்து வழிகளிலும் தேர்வுக்காக மாணவர்கள் உழைத்து வருகின்றனர். நம் மாணவர்களுக்கு உதவுவதற்காகவே, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் எந்தக் கட்டணமும் இன்றி, இலவசமாக நீட் மாடல் தேர்வை ஆண்டுதோறும் ஆன்லைனில் நடத்துகிறது.


நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி பயிற்சி தரும் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் இத் தேர்வுக்கான கேள்வித் தாள்களை வடிவமைத்துத் தந்துள்ளனர். தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாக இது இருக்கும். சென்ற ஆண்டு இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் நீட் தேர்வில் இடம் பெற்றிருந்தன என இத்தேர்வை ஆன்லைனில் எழுதிய மாணவர்கள் கூறி இருந்தனர்.


இந்த இலவச மாடல் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர், நீட் தேர்வு பதிவெண், பிறந்த நாள், முகவரி மற்றும் மொபைல் எண் தந்து பதிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் தரப்படும். பின்னர் இவர்கள் குறிப்பிட்ட இணையதளம் சென்று, லாக் இன் செய்து தேர்வை எழுதலாம்.


நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு

 இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நீட் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுளள்து.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான neet.nta.nic.in இணையதளத்தில், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. நீட் 2023ஆம் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6ஆம் தேதி கடைசியாகும். நீட் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழடை நடைபெறவிருக்கிறது.


இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1600லிருந்து ரூ.1700 ஆக அதிகரிக்கப்பட்டுளள்து. இதர பிறப்டுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1600 ஆகவும், அதுபோல எஸ்சி/எஸ்டி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கு வெளியே வாழும் மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.9,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாணவர்கள் ஜிஎஸ்டி மற்றும் செயல்முறைக் கட்டணங்களையும் கூடுதலாக கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களது கல்விச் சான்று உள்ளிட்டவற்றை இணைத்தபிறகு, விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டதற்கான உறுதிச் சான்றை புகைப்படமாக சேமித்து வைத்துக் கொள்வது பயனளிக்கும்.



Click here for latest Kalvi News 

NEET ( UG ) Entrance Test - 2023 | Steps to apply online

29 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி: நவ. 26 வகுப்பு தொடக்கம்

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 414 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 26-ம் தேதி தொடங்கப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும்.


இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம்வழங்கப்படுகிறது. ஒரு பிளாக்கிற்குஒரு மையம் என 414 மையங்கள் நீட் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் என தமிழகம் முழுவதும் 29,000 மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தோறும் இப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்


.இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது: நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் 10 மையங்களில் 700 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். வாரம் தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். 100 முதுகலை ஆசிரியர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் மாணவர்களுக்கு இதற்கான பாடகுறிப்புகள் வழங்கப்படும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

NEET UG 2022 Result Published

 The National Testing Agency (NTA) is all set to declare the result for National Eligibility Cum Entrance Test-Undergraduate (NEET-UG) 2022


இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நீட் நுழைவு எழுதியவர்கள், கீழ் காணும் இணையதள இணைப்பில் பிறந்த தேதி, பதிவு எண் உள்ளிட்ட சுயவிபரங்கள் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.


நீட் நுழைவு தேர்வு: இன்று ‛ரிசல்ட்

 மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் இன்று(செப்.,7) வெளியாகின்றன.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, ஜூலை 17ல், நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது.நாடு முழுதும், 9.5 லட்சம் மாணவியர் உட்பட, 16 லட்சம் பேர் பங்கேற்றனர்.


தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த, 15 ஆயிரம் பேர் உள்பட, 1.30 லட்சம் பேருக்கு மேல் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை இன்று அறிவிக்கிறது. தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவரின் விடைத்தாள் நகல், கடந்த வாரமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


அதன் வாயிலாக, ஒவ்வொரு மாணவரும், தோராயமாக தங்களின் மதிப்பெண்களை தெரிந்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவில், ஒட்டுமொத்தமாக மாணவர்களின் தரவரிசை, மதிப்பெண் விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

-பள்ளிகள் அழைப்பு


அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவைத்து, அவர்களின் மதிப்பெண் விபரம் சேகரிக்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக உயர் கல்வி வழிகாட்டல் என்ற பெயரில், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு புள்ளிவிபரம் சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அப்போது, மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கவும், '14417' மற்றும் '104' என்ற தொலைபேசி எண்கள் வழியாக, உளவியல் கவுன்சிலிங் அளிக்கவும், பள்ளிக் கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

NEET UG - Question Paper & Key Answer

NEET UG July 17, 2022 Question Paper

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு

ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட இருக்கும் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நாளை வெளியாகும் என்று தேசிய தேர்வு முகாமை தெரிவித்துளளது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் UG வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது அந்த வகையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு 7 நாட்களே உள்ள நிலையில் இதற்கான நுழைவுசீட்டு நாளை இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

நடப்பு கல்வியாண்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பங்களை செய்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இத்தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சீட்டு மூலம் மாணவர்கள் தேர்வு மையங்கள், இடம் தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும். இப்போது நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் தொடர்பான விவரங்களை இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்தந்த தேர்வு மையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Click here to Join WhatsApp group for Daily kalvi news

நீட் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் திருத்த வாய்ப்பு..

நீட் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்த, மே27இரவு 9மணி வரை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை வாய்ப்பு வழங்கி உள்ளது.



இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு யு.ஜி-2022 நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் கடந்த 6-ந்தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த வாரம் 15-ந் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது. மேலும் மே 20-ந்தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியது.

கடைசி நாளான 20-ந்தேதி அன்று நாடு முழுவதிலும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். குறிப்பாக தமிழகத்தில் திரளான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்த, விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை வாய்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை நாளை மறுநாள் வரை மே24 முதல் 27-ந்தேதி இரவு 9 மணி வரை திருத்தங்களைச் செய்ய விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்பிறகு, விவரங்களில் எந்தத் திருத்தமும் செய்ய முடியாது.

எனவே திருத்தம் செய்வதற்கு மேலும் வாய்ப்பு வழங்கப்படாது என்பதால், திருத்தத்தை மிகவும் கவனமாக செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.



மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது தொடங்கியது. இதுவரை சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 தற்போது அதனை மே 20 வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!!

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. 




மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வரும் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.