Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

Primary HM to BT Teacher Promotion - State Level Seniority List Published

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!

 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் 


ஆங்கிலம், 

கணிதம், 

அறிவியல்


 பாடம் பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!


Primary HM to BT Teacher - English - Download Here 

Primary HM to BT Teacher - Maths - Download Here 

Primary HM to BT Teacher - Science - Download Here 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து ஆணை - Director Proceedings

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணிவிடுவிப்பு செய்து ஆணை வழங்குதல் - தொடர்பாக.


ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாறுதல் ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கின் தீர்ப்பினை செயல்படுத்தும் பொருட்டு பணி விடுவிப்பு செய்தல் -தொடர்பாக

பார்வை :


1அரசாணை (1டி)எண். 134, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை நாள். 18.08.2021.

2. சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,நக.எண்.41779/84/இ1/2021நாள்.15.09.2021 மற்றும் 20.10.2021 3. சென்னை, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனு எண். 6508/2023 மற்றும் தொகுப்பு வழக்கின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பாணை நாள் : 28.02.2024

4. சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.41779/சி4/இ1/2021நாள்.30.04.2024.


Click Here to Download - BRTE to BT Teacher Conversion - Director Proceedings - Pdf


Click Here to Download - BRTE to BT Teacher Conversion - Kanyakumari CEO Proceedings - Pdf


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' RTE ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.

 RTE சட்டம் - புதிய கட்டுப்பாடு

 

IMG-20240428-WA0022

வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் , அந்த மாணவருக்கு , அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' அனைவருக்கும் கல்வி உரிமை ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.


 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் , இந்த சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அதிக அளவு தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

UGC தேசிய தகுதித்தேர்வு தேதி மாற்றம்!!!

 ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த UGC தேசிய தகுதித்தேர்வு ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

IMG-20240430-WA0010

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!

 IMG_20240430_202131

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் 

ஆங்கிலம், 

கணிதம், 

அறிவியல்

 பாடம் பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!

PSHM to BT Panel List👇

English - Download here


Maths - Download here


Science - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

 

005

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

Pay Order - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளியிலேயே சீருடையை தைத்து வழங்க முடிவு

 1237163

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்(எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நடத்தப்பட்டு வருகின்றன.


அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெற்றோர் செயலியில் உள்ளீடு செய்யும் நடைமுறை அமலில் இருக்கிறது. 1,369 தீர்மானங்கள் மாணவர்களின் சீருடை அளவு சார்ந்தவைகளாக உள்ளன. எனவே, ஒரு முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடை தைத்து வழங்குவதை எஸ்எம்சி குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கான சீருடைகள் தைத்தலை சார்ந்த பள்ளிகளே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


அந்த சீருடைகளை தைப்பதற்கு சுய உதவிக்குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதிவாய்ந்த ஒரு தையல் கலைஞரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அளவுகளை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் எஸ்எம்சி மூலமாக பள்ளி மாணவர்களுக்கு அளவெடுத்து தைப்பதற்குத் தேவையான துணியின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளின் அளவு தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை தற்போது முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு

 


1237009

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நடப்பு (2023-24) கல்வி ஆண்டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி, ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.


அதன்படி, 6, 7-ம் வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப்பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.


அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNPSC - Departmental Exam May 2024 Notification Published

 


IMG_20240426_173348

DEPARTMENTAL EXAM MAY 2024

Applications are invited from the candidates through " ONLINE " only for admission to the Departmental Examinations - MAY - 2024 


The candidates are required to furnish their particulars in Departmental Examination One Time Registration before applying . Aadhaar Number details shall be linked with the Departmental Examination One Time Registration , mandatorily . If there is any change with regard to details entered in the One Time Registration , such as name , initial , father's name , date of birth , working district , etc. , the same shall be updated in the One Time Registration before applying for Departmental Examinations - MAY - 2024 . After submitting the application , any subsequent claim , with regard to change of test code / centre , corrections in name , father's name , age , date of birth , etc. , will not be entertained . Hence , the candidates are instructed to submit the applications with utmost care.


 Candidates should submit their applications in on - line mode only . Other mode of applications will not be accepted and they will be rejected , even though the cost of application is enclosed with them .

TNPSC - Departmental Exam May 2024 Notification pdf👇👇👇

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் மே முதல் வாரத்தில் தொடக்கம்

 


1236535

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேலாக எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மே முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.


நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌’ 2022-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.


தொடர்ந்து இந்தாண்டு பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறையின் இயக்குநர் சு.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2024-25) தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேலானவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணிகள் மாவட்ட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இதையடுத்து தங்கள் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து வார்டு அளவில் எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறியும் கணக்கெடுப்பை மே முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். இதற்கு பள்ளி, கல்லூரிகளில் என்சிசி போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டும் கணக்கெடுப்பு நடத்தலாம்.


பிற மாநிலத்தவர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் யாரும் விடுபடுதல்கூடாது. அதன்படி எழுத, படிக்க தெரியாதவர்களை கண்டறிதல், தன்னார்வலர்கள் நியமனம் உட்பட பணிகளை மே 24-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20240426_193225

பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று , ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிய வருகின்றது.

 எனவே மேற்கண்ட காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் . உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.


வழிகாட்டு நெறிமுறைகள்


DSE - Pension Benefits Proceedings👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்! & முன்னுரிமை பட்டியல் இணைப்பு...pdf

 IMG_20240426_204545

01.01.2024- நிலவரப்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 31.12.1997 க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின்  மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்!

Dir Proceedings 26.04.2026 - Download here

 SGT state seniority upto 31.12.1997👇

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6,7,8,9 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்ற CEO உத்தரவு.

 IMG_20240425_210502

6,7,8 மற்றும் 9 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்றுமாறு அரசு அரசு உதவிபெறும் சென்னை மெட்ரிகுலேஷன் ஆங்கிலோ இந்தியன் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறப்புபள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 correction-result-6-to-9 | CEO Proceedings👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு Summer Camp - SPD proceedings

 


உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு Summer Camp - SPD proceedings


Click Here to Download - Summer Camp - SPD Proceedings - Pdf

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CCE GRADE தரநிலை - Primary & Upper Primary

CCE GRADE XL SOFTWARE

 



🛑 *CCE GRADE XL SOFTWARE*

🌹 *ஒரு முறை மாணவர் பெயர்,FA(A),FA(B)&SA மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்தால் போதும்.*

👉 *5 நிமிடங்களில் CCE மதிப்பெண் பதிவேடு தயார்*

👉 *பாட ஆசியர் மற்றும் வகுப்பாசிரியர் பதிவேடு அனைத்தும் A4 SHEET-ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்*

👉 *60 மாணவர்கள் வரை ENTER செய்து கொள்ளலாம்.*


Click Here to Download - CCE GRADE XL SOFTWARE

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Middle School HM to BEO Panel 2024 - Temporary Panel Published - Appointed Before 31.12.2011 - Director Proceedings

 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் - 01.01.2024 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் தலைமையாசிரியர்களின் நடுநிலைப்பள்ளி தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியீடு.


Click Here to Download - Middle School HM to BEO Panel -  Temporary Panel Published - Appointed Before  31.12.2011 - Director Proceedings - Pdf


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

 


1235257

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் முதன்மை செயலர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:


2024-2025-ம் கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. இக்கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


குழுவின் தலைவராக தொழில்நுட்ப கல்வி ஆணையரும், துணை தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர், மருத்துவ கல்வி தேர்வுக் குழு செயலாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாநில இயக்குநர், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர், தொழில்நுட்ப கல்வி நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாகவும், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பெறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் டி.புருஷோத்தமன் உறுப்பினர் செயலாளராகவும் செயல்படுவர்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

25% இடஒதுக்கீடு இடங்கள் தனியார் பள்ளிகளில் சேர ஆன்லைன் பதிவு தொடங்கியது: மே 20-ம் தேதி கடைசி தனியார் பள்ளிகநாள்

 


1234608

தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதற்காக விண்ணப்பிக்க மே 20-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) தொடக்கநிலை வகுப்புகளில் (எல்கேஜி மற்றும் முதல் வகுப்பு) ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த இடங்களில் சேரும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு அரசே செலுத்திவிடும்.


எல்கேஜி, முதல் வகுப்பில்... இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2024-2025) 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் (https://rte.tnschools.gov.in) விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22 முதல் மே 20 வரை நடைபெறும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்திருந்தது.


எல்கேஜி வகுப்பில் சேருவதற்கு, குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2021 ஜூலை 31-ம் தேதிக்குள்ளும், முதல் வகுப்பில் சேர விரும்பும் குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1 முதல், 2019 ஜூலை 31-ம்தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி, 25 சதவீத இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், மாவட்டகல்வி அதிகாரி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வட்டார வள மையம் ஆகிய இடங்களிலும் பெற்றோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக்கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


குலுக்கல் முறையில் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். குறிப்பிட்ட பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் மே 28-ம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கை வழங்கப்படும்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Medical Insurance: மருத்துவ காப்பீடு பெற புதிய வழிமுறைகள்! யாரெல்லாம் இனி தகுதியானவர்கள்?

 

5d5768a28762738483536d41afba63931713685533365589_original

இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிநபர் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


காப்பீடுகள் பல வகை என்றாலும் நமக்கு மிகவும் முக்கியமான மற்றும் அவசர நிலையில் உதவுவது மருத்துவ காப்பீடு தான். இன்று இருக்கும் சூழலில் பல நிறுவனங்கள் நமக்கு மருத்துவ காப்பீடு வழங்கி வருகிறது. பாலிசி கவரேஜ் என ரூ. 5 லட்சம், ரூ.10 லட்சம் என கோடி ரூபாய் வரை காப்பீடு கிடைப்பது உண்டு. தற்போது மருத்துவ காப்பீடு பெறுவதற்கான புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


மருத்துவ காப்பீடு:

ஏப்ரல் 1, 2024 முதல் மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குவதற்கான வயது வரம்பை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நீக்கியுள்ளதால்,  இப்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. காப்பீட்டாளர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், மகப்பேறு மற்றும் தகுதிவாய்ந்த ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட வேறு எந்தக் பிரிவிற்கும் இந்த மருத்துவக் காப்பீட்டு வழங்கப்படும்.


வயது தடையில்லை:

முன்னதாக, 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் பாலிசிகளை வாங்க முடியாது. ஆனால், ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள், வயதைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு தனிநபரும் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையை வாங்குவதற்குத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இந்தப் புதிய முடிவு, இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்துவதற்கும், , காப்பீட்டு வழங்குநர் நிறுவனங்களைத் தங்கள் சலுகைகளைப் பன்முகப்படுத்த ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


சுகாதார கொள்கைகள்:

தற்போதைய அறிவிப்பின் படி, ​​பாலிசிதாரர் முதலில் அவருக்கு இருக்கும் உடல்நலக் குறைபாடுகளை வெளிப்படுத்தினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஏற்கனவே இருக்கும் அனைத்து நிபந்தனைகளும் 36 மாதங்களுக்குப் பிறகு பாதுகாக்கப்பட வேண்டும் அதாவது காப்பீட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இந்த 36 மாதங்களுக்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் க்ளைம்களை நிராகரிப்பதில் இருந்து சுகாதார காப்பீட்டாளர்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைச் செலவுகளை ஈடுசெய்யும் இழப்பீட்டு அடிப்படையிலான சுகாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, அவை நன்மை சார்ந்த கொள்கைகளை வழங்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.   

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News