Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை - சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20231129_173526

அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை - சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Mission Iyarkai Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு?

 


dpi

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.


இதற்கான வழிகாட்டுதல் விதிகளை, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களின் வருகைப்பதிவுக்கு ஏற்ப, அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, குறைந்தபட்சம், 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும். அதில், 80 சதவீதம் வரை பள்ளிக்கு வந்தவர்களுக்கு, 1 மதிப்பெண்ணும்; 80 முதல் 100 சதவீதம் வந்தவர்களுக்கு, 2 மதிப்பெண்ணும் வழங்கப்படுகின்றன.


நாட்டு நலப்பணி திட்டம், அறிவியல் மன்றம் உள்ளிட்ட, 33 மன்றங்களில், ஏதாவது, மூன்றில் பங்கேற்றவர்களுக்கு, 2 அகமதிப்பீடு வழங்கப்படும்.


தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டும், வருகைப்பதிவுக்கு அதிகபட்சம், 5 மதிப்பெண்களும், கல்வி இணை செயல்பாடுகளுக்கு, 5 மதிப்பெண்களும் வழங்கலாம். இந்த விதிகளின்படி, பள்ளிகளுக்கு நீண்டநாள் வராதவர்களுக்கு, அக மதிப்பீடு மதிப்பெண் கிடைக்காது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை

 


IMG_20231128_093854

2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / அரசு உதவி பெறும் சென்னை பள்ளிகள் / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளின் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா தேர்வு அரையாண்டு தேர்விற்கு முன் நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கான கால அட்டவணை👇


One Mark Test Time Table - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

04.12.2023 ( திங்கட்கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

Local%20holiday

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சவேரியார் பேராலய கோட்டாறு தூய திருவிழாவினை முன்னிட்டு 04.12.2023 ( திங்கட்கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு

 மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு

FFF

வளரிளம் பருவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் மிக முக்கியமான காலகட்டமாகும். இப்பருவத்தில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் நடைபெறும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள  வளரிளம் பருவத்தினருக்கு மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி அவசியமாகிறது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மனவளர்ச்சி நலன் மேம்படுவதற்காக வளரிளம் பருவத்தினர் மனவளர்ச்சி நலன் என்ற மாணவர் நல்வாழ்வு இணைய முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட கலை சார்ந்த செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் மனவளர்ச்சி நலனை மேம்படுத்தி வாழ்வியல் திறன்களை வளர்ப்பதை இந்த இணைய முகப்பு நோக்கமாக கொண்டுள்ளது.


இந்த இணைய முகப்பு பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.👇


CLICK HERE TO DOWNLOAD


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

 


Teachers-R

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு கற்பித்தலை முன்னெடுக்க பள்ளிகளில் கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அதன் தொடா்ச்சியாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதற்காக 79,723 டேப்லெட்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் கோரப்பட்டுள்ளது. பொதுவாக மடிக்கணினி, டேப்லெட் போன்ற எண்ம சாதனங்கள் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலமாக கொள்முதல் செய்யப்படும். ஆனால், இந்தமுறை வெளி நிறுவனங்களிடம் நேரடியாக டேப்லெட்களை பள்ளிக் கல்வித் துறை கொள்முதல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், இந்த கையடக்கக் கணினியில் பாடக்குறிப்பேடுகள், எண்ணும், எழுத்தும் சாா்ந்த பயிற்சி கையேடுகள், காணொலிகள் உள்ளிட்ட கல்விசாா்அம்சங்கள் பதிவேற்றப்பட்டு ஆசிரியா்களுக்கு வழங்கப்படும். அதைக் கொண்டு குழந்தைகளுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும், இதன்மூலம் ஆசிரியா்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் முடியும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பொதுத்தேர்வு மாணவர் விபரம்: அப்டேட் செய்ய உத்தரவு.

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் விபரங்களை, வரும், 30ம் தேதிக்குள் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 

தேர்வு நடக்கும் நாள் குறித்த விபரம் தெரிய வந்துள்ள நிலையில், தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை துவக்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக, எமிஸ் தளத்தில் தேர்வர் பெயர், பிறந்த தேதி, போட்டோ உள்ளிட்ட, 14 தகவல்களை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு, திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.எனவே, ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், உடனடியாக திருத்தம் மேற்கொண்டு, நவ., 30 க்குள் அப்டேட் செய்திட வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


 இது குறித்து, விரிவான வழிகாட்டுதல்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், தேர்வுத்துறை இயக்குனரகத்தின் அறிவுறுத்தல்கள் குறித்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், தலைமை ஆசிரியர் நேரடி கவனத்தில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

 


1158803

பொதுத் தேர்வு எழுதும் 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் தருவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் அகமதிப்பீடு மதிப்பெண் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இவற்றை பின்பற்றி வருகைப் பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல் திட்டங்கள், கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறி வுறுத்தல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Lab Asst Transfer Date & application - CEO Proceedings

 புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28/11/2023 அன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர்வு கூடத்தில் நடைபெற உள்ளது.


பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள ஆய்வக உதவியாளர்களிடமிருந்து இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து தலைமைஆசிரியர் ஒப்பத்துடன் 27/11/2023 பிற்பகல் முதன்மைக்கல்வி அலுவலக “ அ 1 " பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க அனைத்து அரசு உயர் / மேல் நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறதுm


மேலும் பொது மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆய்வக உதவியாளர்களை 28/11/2023 காலை 10 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள தக்க அறிவுரை வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

 Lab Asst Transfer application Pdkt - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) வேலைவாய்ப்பு அறிவிப்பு

 நவோதயா வித்யாலயா சமிதி (NVS) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Commissioner (Finance) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நவோதயா வித்யாலயா சமிதி காலிப்பணியிடங்கள்:

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) காலியாக உள்ள Deputy Commissioner


(Finance) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


Deputy Commissioner (Finance) அனுபவம்:

Deputy Commissioner (Finance) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்கள்,


பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 11 / 12 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Deputy Commissioner (Finance) வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 15.12.2023 அன்றைய நாளின் படி, 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் NVS பணியாளராக இருப்பின் 02 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்படும்.


Deputy Commissioner (Finance) ஊதியம்:

இந்த NVS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 12 என்ற ஊதிய அளவின் படி, ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.


NVS தேர்வு முறை:

Deputy Commissioner (Finance) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Personal Interaction (Deputation முறைப்படி) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.


NVS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் applications.nvs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்


Job Notification Click Here


Application link click here 



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளில் ‘ பிராட்பேண்ட் ' : கல்வித் துறை உத்தரவு.

 

.com/


தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை நிறுவுவது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் சராசரியாக பத்து முதல் இருபது கணினிகள், புரொஜக்டா்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு தனித்தனியாக 100 ம்க்ஷல்ள் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 (ஜிஎஸ்டி உள்பட) கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம்.

அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பிராண்ட் பேண்ட் இணைப்புக்கான நிறுவுதல் கட்டணத்தை பள்ளிக்கு வழங்கப்படும் மானியத் தொகையிலிருந்து செலுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு!

 அரசு / அரசு பள்ளிக் கல்வி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஓய்வு பெற்ற மற்றும் பணியிலிருக்கும் போது இறந்த ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை ( Tution Fee ) ரூ .50,000 / - வரை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது .

G.O.Ms.No.169 - Scholarship to Professional Courses - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்தல் பணியிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு

 IMG_20231122_100834

தேர்தல் பணியிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும் .. ?

ELECTION DUTY EXEMPTION

Greater Chennai Corporation Tamil Nadu State Election Commission Polling Personnel 1 1 Formation of Committee for Scrutiny of Election Duty exemption applications - Orders Issued.


ORDER : Vide reference 1st cited , the Tamil Nadu Election Commission has announced the date of urban local body Elections and Model code of conduct is in force . It is stated that as per Rule 13 of TamilNadu Panchayats , Municipalities and Corporations ( Elections ) Rules , 2006 the District Election Officer is empowered to appoint any State Government or Central Government employee as Polling Personnel.

 In this regard , it is further stated that the total requirement of Polling Personnel for Chennai district is 30,000+ . It is further stated that the categories of employees for whom exemption can be given by the employer are as follows ,

Election Duty exemption application - Click here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு

 23.08.10 to 16.11.12 காலகட்டத்தில் AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு...

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஏற்கனவே இருந்த துறை சார்ந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி 16.11.2012 வரை நிரந்தரப் பணியிடத்தில் நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வு நிபந்தனையுடன் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து , ஒரு தவிர்ப்பாணை வெளியிட தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திட பணிந்து வேண்டுதல் சார்பாக மனு...

IMG-20231121-WA0035

IMG-20231121-WA0036

IMG-20231121-WA0037

IMG-20231121-WA0038

IMG-20231121-WA0039

IMG-20231121-WA0042



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி - பள்ளி அளவில் அமைக்கப்படும் குழுக்கள் & பணிகள்

 

%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%C2%A0%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20-%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20&%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன் சுத்தம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு , கழிவு மேலாண்மை , காய்கறி தோட்டம் , கழிவு மறு சுழற்சி மற்றும் நெகிழி இல்லா பள்ளி வளாகம் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழ்நாடு அரசின் " எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி " என்ற திட்டம் 01-09-2023 முதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதன்படி பள்ளி அளவில் அமைக்கப்படும் குழுக்கள் மற்றும் அவர்களின் பணிகள்


Responsibilities of the School Level Committee 


* include Strengthening of Youth and Eco club

* Developing a clean School campus plan  

* Making safe drinking water available to students a part of clean school campus plan 

* Understanding waste management practice in the school campus.

 * Developing a school vegetable Garden and ensuring that the vegetable / fruits grown usedfor Noon meal programme

Constituting a team for conducting activities related to awareness regarding conservation ofenvironment . Every team should have students , teachers , NGOs , student alumni of school.


 Student Sub Committee 


A team of 5 students will be constituted to coordinate and implement various activities of the five sub - committees such as safe drinking water , clean classroom and maintenance , Clean School campus waste management and creation of school vegetable garden .


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா - ஆசிரியர்களுக்கு அழைப்பு.

 கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் 25.11.2023 அன்று காலை 8.00 மணியளவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. 


அவ்விழாவில் அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொறுப்பு ) நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் , முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒருவர் வீதமும் , பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒருவர் வீதமும் ( நடுநிலைப்பள்ளிகள் உட்பட ) , பள்ளித்துணை ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் அன்று காலை 8.00 மணியளவில் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ் வாசிக்கப் பழக ஓர் எளிய வழிகாட்டி (தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு)

 தமிழ் வாசிக்கப் பழக ஓர் எளிய வழிகாட்டி (தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு)


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மன்ற செயல்பாடுகள் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டிகள் (2nd Term) நடத்துதல் சார்ந்து SPD செயல்முறைகள்

 IMG_20231121_071052

2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவிலான மன்ற செயல்பாடுகள் நடத்துதல் மற்றும் அதனைத் தொடர்ந்து வட்டார , மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது சார்ந்து அறிவுரைகள் பார்வை- ( 1 ) ல் கண்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓரு பள்ளியிலிருந்து செப்டம்பர் , அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பள்ளி அளவில் நடைபெற்ற 10 போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவர்கள் , நவம்பர் மாதத்தில் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர் . வட்டார அளவிலான போட்டிகளை நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்கு முன் நடைபெற தெரிவிக்கப்பட்டுள்ளது . இம்மாணவர்களை வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக ஓர் ஆசிரியர் பள்ளியிலிருந்து அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது . இப்போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சிற்றுண்டி செலவினம் , 2 நடுவர்களுக்கான மதிப்பூதியம் & நினைவு பரிசு , வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் , வட்டார அளவில் போட்டிகள் நடத்துவதற்கான செலவினத்திற்கான நிதி இணைப்பில் உள்ளவாறு ரூ .2,81,06,035 / ( ரூபாய் இரண்டு கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து ஆறாயிரத்து முப்பத்தைந்து ரூபாய் மட்டும் ) நிதி அனைத்து மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.


SPD Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update