Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் தேதி அறிவிப்பு

 கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதம் 31.03.2023 தேதி நடைபெறும் என அறிவிப்பு


Click here for latest Kalvi News 

வினாத்தாள் வெளியாவதை தடுக்க புதிய முயற்சி!

  6 முதல் 12ம் வகுப்பு வினாத்தாள் வெளியாவதை தடுக்க பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கி, தேர்வன்று பள்ளிகளிளேலே பிரிண்ட் எடுத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சென்னை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வழங்கப்பபட்டுள்ளன. வெளி இடங்களில் பிரிண்ட் எடுப்பதன் மூலம் வினாத்தள் லீக் ஆவதை தடுக்க கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

Click here for latest Kalvi News 

Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF

 


தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2023 - 2024 முழு விபரம் ( Pdf )  


 Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF - Download here


Click here for latest Kalvi News 

தமிழக பட்ஜெட் 2023 - 2024 | கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

 

எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?


* ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி


* உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி 


* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி


தமிழக பட்ஜெட் 2023 - 2024 |  கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் 

* ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்

* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது

* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்

* புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்

* திருச்சி, கோவை, மதுரை, நீலகிரியில் 100 கோடி ரூபாய் செலவில் ஆதி திராவிடர் நல விடுதிகள் கட்டப்படும்

* அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத்திருவிழா நடத்தப்படும்


TN BUDGET - EDUCATION ANNOUNCEMENT - Download here pdf


Click here for latest Kalvi News 

TRB - 4136 கல்லூரிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

 

Applications are invited for Direct Recruitment from eligible candidates for the post of Assistant Professors in Tamil Nadu Collegiate Educational Service for Government Arts & Science Colleges and Colleges of Education forthe year 2023-2024


Total Vacancies 4136

Trb notification 18.03.23 - Download here



Click here for latest Kalvi News 

வானவில் மன்றம் ( Vanavil Mandram ) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்

 

வானவில் மன்றம் (Vanavil Mandram) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்

 Rainbow Forum - Winners List - Download here...

Click here for latest Kalvi News 

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை பள்ளிகளில் நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!

 

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!

⚘நாள்:19.03.2023

⚘ நேரம்: காலை 10 - மாலை 4 மணி வரை

⚘இடம்: மையம் சார்ந்த பள்ளி

⚘அறை கண்காணிப்பாளர்: தன்னார்வலர்கள்

⚘முதன்மை கண்காணிப்பாளர்: தலைமையாசிரியர்

⚘கற்போர் அனைவரும் 100% தேர்வில் பங்கேற்க வேண்டும்.

⚘பேனாவால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

⚘கற்போர் அனைவருக்கும் வருகை பதிவு தாளில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.( வருகை பதிவு தாள் வழங்கப்படும்)

⚘கற்போர் விவரங்களை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் படிவத்தில் தமிழில் எழுதி,  விடைத் தாள் களுடன் இணைத்து 19.03.2023 அன்று ஒப்படைக்க வேண்டும்

⚘வினாத்தாளில் கற்போர் அவர்களுக்குரிய இடத்தில் கையொப்பம் இடவேண்டும் ( கைரேகை பதிவு செய்ய கூடாது).

Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் கொள்முதல் செய்த புத்தகங்களின் பெயர் பட்டியல் விவரம் வெளியீடு!!!

 

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  வரை அரசுப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் கொள்முதல் செய்த  புத்தகங்களின் பெயர் பட்டியல் விவரம் வெளியீடு!!!


Library Books List - Download here

Click here for latest Kalvi News 

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

CoSE - Vanavi Mandram_ State level _ Competition.pdf - Download here


Click here for latest Kalvi News 

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 | இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு அறிவிப்பு.

 

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19.03.2023 அன்று நடைபெறவுள்ளது.


NILP 19.03.2023 EXAM GUIDELINES MEETING - REG.pdf - Download here...



Click here for latest Kalvi News 

‘காலை உணவு’ திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரிப்பு! !!

 பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக, 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பிறகு, 2-ம் கட்டமாக மேலும் 56 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.


அப்போது, ‘‘மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும்’’ என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாணவர்கள் வருகைஅதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,543பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இவற்றில் 1,319 பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.


அது மட்டுமின்றி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படும் தொடக்கப் பள்ளிகளில் 100 சதவீத வருகை பதிவாகியுள்ளது.


கிருஷ்ணகிரி (98.5%), கரூர் (97.4%), நீலகிரி (96.8%) மாவட்டங்களிலும் மாணவர் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 1,086 பள்ளிகளில் 20 சதவீதமும், 22 பள்ளிகளில் 40 சதவீதமும் மாணவர்கள் வருகை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.


இதுகுறித்து தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் கூறும்போது, ‘‘காலை உணவு திட்டம் மூலம் தினமும் சராசரியாக 1.48 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். காலை உணவுக்காக மாணவர் ஒருவருக்கு அரசு ரூ.12.71 செலவிடுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.


‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான செய்தி நேற்று வெளியானது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘மாணவர் வருகை அதிகரிப்பு, முதல்வரின் காலை உணவு திட்டத்தின் வெற்றி. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அளித்த அறிக்கை அடிப்படையில், ‘தி இந்து’ நாளிதழில் சங்கீதா கந்தவேல் எழுதியுள்ள செய்தி. கல்வி.. திராவிட வேட்கை’ என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.



Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!


அரசுப் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக , வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது மொழிகள் ' திட்டம். இதை அலைபேசியிலும் கணினியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகளின் மொழியறிவு வளர்கிறது. கணினி குழந்தைகளோடு பேசி அவர்களை ஊக்குவிக்கிறது.

 எழுத்துக்களில் , வாக்கிய அமைப்பில் , உச்சரிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துகிறது. இரு நண்பர்கள் சேர்ந்து விளையாட்டு முறையில் மொழியை கற்றுக்கொள்ளலாம்.

 Press-Invite - Download here

 Click here for latest Kalvi News 

மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள்!

 மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள்!


Instructions - Download here...


Click here for latest Kalvi News 

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகள், நடத்தை விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்

 தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விடுப்பு விதிகள், நடத்தை விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்

* TAMIL NADU LEAVE RULES , 1933


* TAMIL NADU GOVT.SERVANTS CONDUCT RULES , 1973


* TAMIL NADU CIVIL SERVICES Discipline & Appeal ) Rules , 1955


Pdf file - Download here 


Click here for latest Kalvi News 

பிறப்பு முதல் இறப்பு வரை அரசு ஆவணங்கள் / சேவைகள் வழிகாட்டி கையேடு

 பிறப்பு முதல் இறப்பு வரை அரசு ஆவணங்கள் / சேவைகள் வழிகாட்டி கையேடு

Guide pdf - Download here


Click here for latest Kalvi News 

பள்ளி மானிய தொகையின் பயன்பாட்டு சான்றிதழ் படிவம்

 

2022-2023-ம் நிதியாண்டிற்கான பள்ளி மானிய தொகையின் பயன்பாட்டு சான்றிதழ் படிவம்


Click here for latest Kalvi News 

அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை


அரசு ஊழியர்கள் ஊதியம் தவிர இதர வருமானம் இல்லை எனில் அவர்கள் வாரிசுகளுக்கு OBC சான்றிதழ் வழங்கலாம் என்ற அரசாணை


[OBC NON - CREAMY LAYER  சான்று பெற குடும்ப ஆண்டு வருமானம் விவசாயம் மற்றும் மாத ஊதியத்தை சேர்க்காமல் பிற ஏனைய வருமானம் ரூ 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

விவசாயம் மற்றும் மாத ஊதியத்தின் மூலம் கிடைக்கும் தொகை குடும்ப வருமானத்தில் சேராது. VAO குழப்பினால் மேலே பதிவிடப்பட்ட ஆணையை காண்பியுங்கள்.

மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் எத்தனை லட்சம் ஊதியம் வாங்கினாலும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு  மத்திய அரசின்(வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில்)  இட ஒதுக்கீடு 27% கிடைத்திட வருவாய்த் துறையிலிருந்து OBC சான்று பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கான அரசு கடிதம்.]


obc category Go - Download here... 

பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

 பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் தேர்வெழுதும் நேரத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  12-ம் வகுப்புக்கு மார்ச் 13-ம் தேதி, 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதி, 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்வுகள் தொடக்க உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தேவையான உத்தரவுகளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் நடைபெறும் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சார துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிற நிலையில், மாணவர்கள் தேர்வெழுதும் நேரத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.    மேலும், தேர்வு நேரங்களில் வீடுகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click here for latest Kalvi News 

ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

SCERT மூலம் அனைத்து மாவட்டத்தில் உள்ள முதுகலை (Zoology, Maths, Chemistry & Botany) ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

SCERT Training Proceedings - Download here...


Click here for latest Kalvi News 

பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி

 பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.


கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட முடியாது; பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே, வழிகாட்டுனராக பணியாற்ற முடியும்.


இந்த விதிமுறையால், பிஎச்.டி. வழிகாட்டுனரின் எண்ணிக்கை குறைந்து, ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.


இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'உயர் கல்வி நிறுவனங்களில் நிரந்தர பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் பயிற்சி காலத்திலும், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News