நாடு முழுதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு, மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.நாடு முழுதும் உள்ள, 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது.
இதில், 14.35 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு ஆண்டுதோறும் தலா 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன. நேரடி வாரிசுகள்இதன் அடிப்படையில் லோக்சபாவை சேர்ந்த 543 எம்.பி.,க்கள், ராஜ்யசபாவை சேர்ந்த 245 எம்.பி.,க்கள் பரிந்துரைக்கும் 7,880 மாணவ - மாணவியருக்கு இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும், 'சீட்' வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது.மத்திய அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை ஊழியர்களின் குழந்தைகள், எம்.பி.,க்களின் நேரடி வாரிசுகள் மற்றும் பேரக்குழந்தைகள், கே.வி., பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் பேரக்குழந்தைகள், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கே.வி., பள்ளிகளுக்கான அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:கொரோனா தொற்று பாதிப்பினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, பி.எம்., கேர்ஸ் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு அளிக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள் அளிக்கும் பரிந்துரைப் பட்டியலின் அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இந்த பரிந்துரையின் கீழ், ஒவ்வொரு கே.வி., பள்ளியிலும் 10 மாணவர் வரை சேர்த்துக் கொள்ளப்படுவர். 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடு ஜூன் மாதம் வரை வழங்கப்படும்.பரம் வீர் சக்கரா, மகா வீர் சக்கரா, வீர் சக்கரா, அசோக் சக்கரா, கீர்த்தி சக்கரா, ஷவுரிய சக்கரா உள்ளிட்ட வீர தீர செயல்களுக்கான விருது பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.ஒதுக்கீடு தொடரும்'ரா' எனப்படும் உளவு அமைப்பை சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் 15 பேருக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.
அதே போல, பணியின் போது இறந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள், மற்றும் நுண் கலைகளில் சிறப்பு திறமை உள்ள பிள்ளைகளுக்கும் ஒதுக்கீடு தொடரும்.வெளிநாடுகளில் இருந்து பணியிட மாறுதல் பெற்று வருபவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 60 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கான மாணவர் சேர்க்கை நவம்பர் மாதம் வரை நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? - முழு விவரம் இதோ !
நீட் தேர்வு 2024 ஹால் டிக்கெட் இன்று ரிலீஸ்: டவுன்லோட் செய்வது எப்படி?
ஐ.ஐ.டி மெட்ராஸ் டேட்டா சயின்ஸ் படிப்பு; விண்ணப்பப் பதிவு ஆரம்பம்
After 12th - Higher Studies Opportunities
Primary HM to BT Teacher Promotion - State Level Seniority List Published
10ம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி - Instructions - SPD & DSE Proceedings
EMIS - TC தயாரித்தல் பணி - செய்யவேண்டியது, தவிர்க்க வேண்டியது - ஆலோசனைகள்
EMIS Online TC - Identification Mark List Details
ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து ஆணை - Director Proceedings
EMIS இணையத்தில் SA மதிப்பெண்களை ENTRY செய்வதற்கான வழிமுறை - Step By Step Procedure
IFHRMSல் - வருமான வரி பிடித்தம் செய்யாமலிருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - Treasury Letter
FA (A) FA (B) MARKS தற்போது EMIS இணையத்தில் - எவ்வாறு பதிவிறக்கம் செய்வது??
1 கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளி இருந்தால் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ' RTE ' சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை.
UGC தேசிய தகுதித்தேர்வு தேதி மாற்றம்!!!
தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!
EMIS - STUDENTS PROMOTION OPTION IS AVAILABLE
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தமிழக அரசு திடீர் நிபந்தனை
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி
6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!
2025-26 முதல் இரண்டு பொதுத் தேர்வு முறை: சிபிஎஸ்இ ஆயத்தப் பணி தொடக்கம்
நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு
பள்ளியிலேயே சீருடையை தைத்து வழங்க முடிவு
கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு
TNPSC - Departmental Exam May 2024 Notification Published
TNSED ADMIN APP New Version 0.1.1
0 Comments:
Post a Comment