பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் - தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். 




இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்தது. 

இந்த நிலையில் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment