பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பயிற்சி - ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது

 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பயிற்சி - ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: எஸ்எம்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 2 முதல் 31-ம் தேதி வரை பல்வேறு நிலைகளாக நடைபெற உள்ளன.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் அனைத்துவித அரசுப் பள்ளிகளிலும் உள்ள பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, பாலினப் பாகுபாடு, எஸ்எம்சி நிதியைப் பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அளவிலான உண்டு உறைவிடப் பயிற்சி ஆக. 2,3-ம் தேதிகளில் மதுரையில் நடைபெறும். மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் ஆக. 8 அல்லது 9-ம் தேதியில் நடைபெறும். பங்கேற்பாளர்களின் போக்குவரத்து வசதிக்கேற்ப மையம் தேர்வு செய்யப்படும். மேலும், பள்ளி அளவிலான பயிற்சி ஆக. 11 முதல் 31-ம் தேதி வரை வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


0 Comments:

Post a Comment