பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் மாற்று சான்று - பள்ளிக்கல்வி துறை

 அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காகித மாற்றுச் சான்றித ழுக்கு பதில், 'டிஜிட்டல்' மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளி மாறும்போது மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்.


அந்த சான்றிதழை வைத்தே, மாணவர்கள் மற்ற பள்ளிகளில் சேருவர். இந்த மாற்றுச் சான்றிதழ்கள், ஆண்டாண்டு காலமாக பதிவேட்டு புத்தகமாக, பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளதால், பள்ளிக் கல்வியில் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தளமான 'எமிஸ்' வழியே இணைக்கப்பட்டு உள்ளன.


இதை பயன்படுத்தி, இனிவரும் காலங்களில், மாணவர்களுக்கு டிஜிட்டல் மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு, பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.


இந்த டிஜிட்டல் மாற்றுச் சான்றிதழை, அச்செடுத்து பெற்றோர் பயன்படுத்தலாம். இதனால், போலியான மாற்றுச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படாமல் தடுக்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Click here for latest Kalvi News 

32 படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றவை - உயர்கல்வித்துறை

 பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வரி வசூல், வணிக மேலாண்மை ஆகியன, பி.காம்., படிப்புக்கும்; எம்.ஏ., கூட்டுறவு, மாஸ்டர் ஆப் கார்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகியன எம்.காம்., படிப்புக்கும்; பி.ஏ., உளவியல், பி.ஏ., சமூகவியலுக்கும், அரசு வேலை பெறுவதற்கு இணையான படிப்பு அல்ல.


எம்.எஸ்சி., பயன்பாட்டு கணிதம், எம்.எஸ்சி., கணிதத்துக்கும்; எம்.எஸ்சி., சுற்றுச்சூழல் அறிவியல், எம்.எஸ்சி., நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண் உயிரியல் படிப்பு, எம்.எஸ்சி., நுண் உயிரியலுக்கும் இணையான படிப்பல்ல.


எம்.எஸ்சி., ஸ்பீச் லாங்குவேஜ் நோயியல், எம்.எஸ்சி., மறுவாழ்வு அறிவியலுக்கு இணையான படிப்பல்ல.


இவ்வாறு மொத்தம், 32 படிப்புகள் அரசின் வேலைவாய்ப்புக்கான பிரதான படிப்புகளுக்கு இணையானது அல்ல என, அறிவிக்கப்பட்டு உள்ளது.




Click here for latest Kalvi News 

அனைத்திந்திய அளவில் நீட் மாடல் தேர்வு - கட்டணமின்றி எழுத லிம்ரா அழைப்பு

 நீட் தேர்வை எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம், இந்த ஆண்டும் 12 மாடல் தேர்வுகளை, எவ்விதக் கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் வழியாக நடத்துகிறது.


நீட் தேர்வு வரும் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 1,47,581 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள மொத்த இடங்களில் இட ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதமுள்ள 4,025 இடங்கள் மட்டுமே நம் தமிழக மாணவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.


எனவே, கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் அனைத்து வழிகளிலும் தேர்வுக்காக மாணவர்கள் உழைத்து வருகின்றனர். நம் மாணவர்களுக்கு உதவுவதற்காகவே, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் எந்தக் கட்டணமும் இன்றி, இலவசமாக நீட் மாடல் தேர்வை ஆண்டுதோறும் ஆன்லைனில் நடத்துகிறது.


நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி பயிற்சி தரும் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் இத் தேர்வுக்கான கேள்வித் தாள்களை வடிவமைத்துத் தந்துள்ளனர். தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாக இது இருக்கும். சென்ற ஆண்டு இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் நீட் தேர்வில் இடம் பெற்றிருந்தன என இத்தேர்வை ஆன்லைனில் எழுதிய மாணவர்கள் கூறி இருந்தனர்.


இந்த இலவச மாடல் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர், நீட் தேர்வு பதிவெண், பிறந்த நாள், முகவரி மற்றும் மொபைல் எண் தந்து பதிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் தரப்படும். பின்னர் இவர்கள் குறிப்பிட்ட இணையதளம் சென்று, லாக் இன் செய்து தேர்வை எழுதலாம்.


Teachers General Transfer counselling 2023 - 2024 - instruction and schedule

 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!



தற்போது அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு செயல்முறைகளானது 2022-23ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாறுதல் கலந்தாய்வு (நடப்பு கல்வி ஆண்டு) ஆகும். பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை மாறுதல் கலந்தாய்வு மட்டும் (No Promotion Counselling) அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடக்கக் கல்வித் துறைக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது!

Teachers General Transfer counselling 2023 - 2024 - instruction and schedule -Pdf - Download here


Click here for latest Kalvi News 

ENNUM ELUTHUM TRAINING SCHEDULE

 எண்ணும் எழுத்தும் பயிற்சி அட்டவணை!!



Click here for latest Kalvi News 

ENNUM ELUTHUM TIMETABLE

 எண்ணும் எழுத்தும் கால அட்டவணை!!


எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

 தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த 20-ம் தேதி நிறைவடைந்தன. சுமார் 9.2 லட்சம்மாணவர்கள் தேர்வெழுதினர். இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி இன்று (ஏப். 24) தொடங்குகிறது.


இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 60,000 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.


மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிக ளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ம்தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click here for latest Kalvi News 

பள்ளி வாகனங்கள் ஆய்வு: மே மாதத்துக்குள் முடிக்க உத்தரவு

 தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்வது வழக்கம். வாகன ஆய்வுப் பணிகளை வருவாய், போக்குவரத்து, கல்வி, காவல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆண்டு தேர்வு விடுமுறையின்போது மேற்கொள்வர்.


வரும் கல்வி யாண்டை முன்னிட்டு, பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை மே மாதத்துக்குள் முடிக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக துறை சார்ந்த உயரதிகாரிகள் கூறியதாவது: பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.


இதற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய அவகாசமும் முடிவுற்ற நிலையில், கேமரா, சென்சார் போன்றவை கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். இதனை பின்பற்றும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். இந்த ஆய்வு தொடர்பான இறுதி அறிக்கையை மே 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click here for latest Kalvi News 

மாவட்ட வாரியாக சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு

 தொடக்க கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.


அதன் தொடர்ச்சியாக, 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்தபள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தலைமையில் 5 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் இக்குழுவினர் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சி, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட 15 பிரிவுகளில் தலா 10 மதிப்பெண் என 150 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்.


இதில் 135 முதல் 150 வரை, 112 முதல் 135 வரை, 112-க்கு கீழ் என 3 பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்கி, சிறந்த 3 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இப்பணிகளை துரிதமாக முடித்து, பரிந்துரை பட்டியலை வரும் ஏப்.26-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

All CEO & DEO (Elementary) Meeting on 28.04.2023 in Chennai - CoSE Proceedings!

 All CEO & DEO (Elementary) Meeting on 28.04.2023 in Chennai - CoSE Proceedings!


Click here for latest Kalvi News 

புதிய EMIS ID பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டுதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!

 


மாணவர் சேர்க்கை - புதிய EMIS ID பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டுதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!

TNSED EMIS ATTENDANCE NEW APP RELEASED

 

TNSED EMIS ATTENDANCE NEW APP RELEASED


 அனைவரும் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டிய புதிய செயலி version  வெளியீடு


DIRECT LINK
👇👇👇👇👇👇👇👇👇👇👇


TNSED Attendance

அரசு & அரசு உதவி பெறும் 🔹தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம் 

🔹 எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய மாட்டார்கள் என்பதால்   TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில்   24.04.2023 முதல் 26.04.2023 வரை   பின்வரும்  வழிமுறைகளை பயன்படுத்தவும்.

🔹 For Student Attendance 

 Partially Working என்ற Option-னை Select செய்து எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ அதை மட்டும் Select செய்யவும். Reason-இல், Others என்று கொடுக்கவும். 

🔹 Staff Attendance 

🔹 எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு  FN & AN Attendance-இல் TR (Training) என்று 3 நாட்கள் பதிவிடவும்.



இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்




Click here for latest Kalvi News 

TNSED Attendance Appல் ( 24-04-2023 முதல் 26-04-2023 வரை) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் Attendance பதிவிடும் முறை...

 

 

 TNSED Attendance Appல் ( 24-04-2023 முதல் 26-04-2023 வரை) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் Attendance பதிவிடும் முறை...


அரசு & அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்


🔹    எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக 1,2,3ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய மாட்டார்கள் என்பதால்   TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில்   24.04.2023 முதல் 26.04.2023 வரை   பின்வரும்  வழிமுறைகளை பயன்படுத்தவும்.

🔹 For Student Attendance

 *Partially Working என்ற Option-னை Select செய்து எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ அதை மட்டும் Select செய்யவும். Reason-இல், Others என்று கொடுக்கவும். 

🔹 Staff Attendance

🔹 எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு  FN & AN Attendance-இல் TR (Training) என்று 3 நாட்கள் பதிவிடவும்.


Click here for latest Kalvi News 

TRB Teachers - Proposed Posting in District Model Schools

 

TRB Teachers - Proposed Posting in District Model Schools


தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Model Schools_Teachers Deputation-21.04.2023 - Download here


Click here for latest Kalvi News 

அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

Model Schools_Teachers Deputation-21.04.2023 - Download here



Click here for latest Kalvi News 

Click here to join whatsapp group for daily kalvinews update  

Breaking News: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவு!!

 


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவு.
தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் வழங்க உத்தரவு. ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்க
உத்தரவு.



Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 24.04.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.04.2023

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புறங்கூறாமை

குறள் எண்: 184

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க

முன்னின்று பின்னோக்காச் சொல்.


பொருள்:

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.


பழமொழி :

A sound mind in a sound body


வலுவான உடலில் தெளிவான மனம்


இரண்டொழுக்க பண்புகள் :


1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 


2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்


பொன்மொழி :


ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்


பொது அறிவு :


  1. உப்பு ஏரிகள் அதிகமாக காணப்படும் மாநிலம் எது? 


 இராஜஸ்தான்.


 2. வடகொரியா தென்கொரியா ஆகியவற்றை பிரிக்கும் கோடு எது? 


 38வது இணை கோடு


ஆரோக்ய வாழ்வு :


உலகத்தின் ஆரோக்யமான பழங்களில் தர்பூசணியும் ஒன்று. அதில் 92% நீர் சத்து இருப்பதால் நாள் முழுவதும் உங்கள் உடலை நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிண்ணம் தர்பூசணி பழங்களில் வெறும் 46 கலோரிகளே உள்ளன. மேலும் இந்த பழத்தை பற்றி நாம் அறிந்திராத உண்மை என்னெவென்றால் இப்பழம் ஒரு எதிர்மறை கலோரி உணவு ஆகும். இது எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பழம் ஆகும்.


ஏப்ரல் 24 இன்று

ஜி. யு. போப் அவர்களின் பிறந்தநாள்


ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்


சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் அவர்களின் பிறந்தநாள்


சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar ஒலிப்பு (உதவி·தகவல்), பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[4] துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.[5].[6] இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார்.[7] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே[8] மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.


நீதிக்கதை

பொம்மைகள்


ரகு வண்ணத்தாள்களில் சின்ன சின்னதாய் குருவி, கிளி, வாத்து, மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்த வரதன் மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்து மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது.




படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய். எப்பொழுது பார்த்தாலும் கிளியும், வாத்துமா செய்து வீடு முழுவதும் குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்குகூட பிரயோஜனம் இருக்கிறதா? இப்படி இருந்தா எப்படிடா பிழைக்கப் போகிறாய். நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும், நாளை வேலைக்குப் போக வேண்டும் என்கிற எண்ணமே வராதாடா என்று கோபமாக கத்தியவர்.




ரகு முதுகில் இரண்டு அடி போட்டார். செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார்.




ரகுவுக்கு தன்னை அடிக்கும் போது கூட வலிக்கவில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது. கலை நயமாக தான் வடித்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே என்று எண்ணி அழுதான் ரகு. தோட்டத்தில் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்த மேகலா, ஏண்டா ரகு அழுகிறாய் எனப்பதறியபடி உள்ளே வந்தாள். பொம்மைகள் சிதறிக் கிடப்பதையும் தன கணவர் துணி மாற்றிக் கொண்டு இருப்பதையும் பார்த்த மேகலா நிலைமையை புரிந்து கொண்டாள். ரகுவை சமாதானப்படுத்திவிட்டு, கீழே சிதறிக்கிடந்த பொம்மை தாள்களை எடுத்து ஒழுங்குபடுத்தினால் மேகலா.


அந்த சம்பவத்திற்கு பின் ரகுவரன் மனதில் ஒரு வைராக்கியம் வந்து விட்டது. இந்த பொம்மைகளை வைத்து ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று. அவனுக்கு பக்க துணையாக இருந்தாள் அன்னை மேகலா. காலங்கள் கடந்தன. ஆண்டுகள் பல தாண்டியபோது ஒரு நாள் சென்னையில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம். புதுமையான ஓவியக்கண்காட்சியை காண்பதற்குதான் இவ்வளவு கூட்டம், பார்த்தவர்கள் எல்லாம் பரவசப்பட்டார்கள். பூங்கா, கோவில், மசூதி, தேவாலயம், மலை, மலர்க்காடு இப்படி எண்ணிலடங்கா கண்ணைக் கவரும் இயற்கையாக அமைந்தது போன்ற ஓவியங்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் அழகாக காட்சி அளித்தது. நல்ல விலைக்கு விற்பனையும் ஆனது.

ரகுவை மட்டும் பாராட்டவில்லை. அவன் பெற்றோரையும் பாராட்டினார்கள். அவன் தந்தையின் மனமோ, கூனிக் குறுகிப் போனது. தன் தவறை எண்ணி அவர் உணர்வுகளை உணர்ந்து கொண்டான் ரகு.


அப்பா என்று அழைத்தான். தன் உணர்வுகளில் இருந்து மீண்டு வந்த வரதன், என்ன என்பது போல் பார்த்தார். பக்கத்தில் வந்த ரகு இந்த அளவிற்கு நான் வளர காரணமே எனது அப்பா, அம்மாவின் ஒத்துழைப்பு தான் என்று பேட்டி கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட வரதன் நெகிழ்ந்து போனார். படிப்பு மட்டும் உயர்வுக்கு காரணமில்லை. குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அந்த துறையில் ஊக்கப்படுத்தினால் அந்த துறையில் அவர்கள் சாதனையாளர்கள் என்றார் வரதன்.

காற்று உள்ள போதே தூற்றிக்கொள் வாழ்த்துக்கள் என கைகுலுக்கி விடைபெற்றார் பேட்டி எடுத்த நண்பர்.


இன்றைய செய்திகள்  - 24.04. 2023


* 12 மணி நேர பணி சட்டத்துக்கு தொடரும் எதிர்ப்பு: திரும்பப் பெற பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்.


* தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.


* மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகள் மூலமாக சிறுசேமிப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


* ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வணிகரீதியாக இஸ்ரோ செலுத்திய பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் பயணம் வெற்றி.


* வரும் செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.


* இந்த ஆண்டு 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா: அமெரிக்க அமைச்சர் டொனால்டு லூ தகவல்.


* உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்.


* ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி.


Today's Headlines


* Continued opposition to 12-hour work law: Various party leaders urge withdrawal.


 * Heavy rain likely in 15 districts of Tamil Nadu: Meteorological Department information.


* Cooperative Minister K.R.Periyagaruppan has said that steps will be taken to start a small savings scheme through cooperative banks for the welfare of students.


* ISRO successfully launched PSLV-C55 rocket from Sriharikota.


 * US President Joe Biden is coming to India in September.


 * Visa for 10 lakh Indians this year: US Minister Donald Lew informs.


 * 2 gold medals for India in Archery World Cup.


 * Bengaluru win by defeating Rajasthan.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News