எண்ணும் எழுத்தும்-(2023-24) ஆண்டிற்கான புதிய இணைப்புகள் விபரம்

 பார்வை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒளி பாடங்கள்


பாடநூலை முழுமையாக பயன்படுத்த வாய்ப்பு 

ஒவ்வொரு செயல்பாட்டிற்கான கற்றல் விளைவுகள்


படைப்பாற்றலுக்கான வாய்ப்பு 


பேச எழுத- இது எங்கள் நேரம்


மூன்று வகுப்புகளையும் இணைத்த பாடப்பொருள்


சிறகுகள் விரியட்டும் நிலை வாரியாக 


மூன்று வகுப்பிற்கான பாடநூல் இணைப்பு


கற்பித்தலுக்கான தோராயமான நாள்கள்.



Click here for latest Kalvi News 

ITK தன்னார்வலர்களுக்கு புதிய Task

 புதிய மாணவர் சேர்க்கை படிவம்


அன்பிற்கினிய தன்னார்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்...


உங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 2023-2024 ஆம் கல்வியாண்டில் LKG, UKG மற்றும் முதல் வகுப்பில் சேர்க்க தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களை அணுகி அவர்களின் குழந்தைகளை நம் அரசுப் பள்ளியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டு அவ்வாறு விருப்பம் தெரிவித்த குழந்தைகளின் விவரத்தினை ITK App இல் உள்ள புதிய மாணவர் சேர்க்கை படிவம் எனும் Option இல் பதிவு செய்ய வேண்டும். 


படிவத்தில் உள்ள விவரங்கள்:


1.Class of Enrollment

2.Child Name

3.D.O.B

4.Gender

5.Father Name

6.Mother Name

7.Guardian Name (If applicable)

8.Parent/ Guardian Mobile Number

9.Select District

10.Select Block

11.Select School


மேலும் விவரங்களுக்கு:



Click here for latest Kalvi News 


மே 4-ல் சிமேட் நுழைவுத் தேர்வு

 

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.


நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் இணையவழியில் நடத்தப்படுகிறது.


அதன்படி நடப்பாண்டு சிமேட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 13-ல்தொடங்கி மார்ச் 13-ம்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுகால அட்டவணையை என்டிஏதற்போது வெளியிட்டுள்ளது.


அதன்படி சிமேட் தேர்வு மே 4-ம்தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வானது 3 மணிநேரம் நடைபெறும். ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை cmat.nta.nic.in, www.nta.ac.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். சந்தேகம் இருப்பின் 011- 4075 9000 என்றதொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.


Click here for latest Kalvi News 

வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? - அன்பில் மகேஸ் பதில்

 வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் தாமதமாக திறப்பது குறித்து தற்போதே முடிவு ஏதும் செய்ய இயலாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.


அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்' திட்டத்தின் ஓர் அங்கமான இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை சைதாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் இந்த பயிற்சி திட்டத்தை தொடங்கி யுள்ளோம். வரும் காலங்களில் அதிகப்படியான மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியில் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படுமா என்று கேட்கிறீர்கள்.


கோடை விடுமுறைமுடிந்து பள்ளி திறக்கும்போது வெயில் தாக்கத்தை வைத்து முடிவு செய்யலாம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


Click here for latest Kalvi News 



கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

 கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,


வாழ்த்துகள்! கனவு ஆசிரியர் 2023 இன் நிலை 2 இல் கலந்துகொள்ள நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.


மேலும் தகவலுக்கு 26/04/2023 அன்று இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்


வழக்கம் போல https://emis.tnschools.gov.in/auth/login என்ற இணையதளத்தில் தங்களின் user name password உள்ளீடு செய்து 3 lines click செய்து பிறகு kanavu aasiriyar contest click செய்து பார்த்து கொள்ளலாம்



Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table

 

இம்மாதம் 21,22,23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table


English ppt audio- Click here 


English module 4- Click here 


Maths module - Click here 


Maths ppt audio Videoscribe - Click here 


Tamil PPT AUDIO - Click here 


Tamil Module - Click here 


EE Training Modules-1 - Click here


Preparation Modules - Click here - pdf


EE units Modules - Click here - pdf file


EE - Tamil modules - Click here -pdf file


TLM -1- Click here 

TLM -2- Click here 

TLM -3- Click here 

TLM -4- Click here 

TLM -5- Click here 

Click here for latest Kalvi News 

4 & 5ஆம் வகுப்புகளுக்கு TERM I எண்ணும் எழுத்தும் பயிற்சி மாநில அளவிலான கருத்தாளர் பட்டியல் (ALL DISTRICTS)

 4 & 5ஆம் வகுப்புகளுக்கு TERM I எண்ணும் எழுத்தும் பயிற்சி மாநில அளவிலான கருத்தாளர் பட்டியல்

 (ALL DISTRICTS)...

Ennum ELUTHUM R.P list - Download here


Click here for latest Kalvi News 

4 & 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - SCERT & DEE Proceedings

 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 

2023 2024 ஆம் கல்வியாண்டில் - 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பான செயல்முறைகள்.

EE IV & V STATE LEVEL TRAINING.pdf - Download here

ஜூன் முதல் வாரத்தில் 4,5 வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு


Click here for latest Kalvi News 

நான் முதல்வன் திட்டம் - மாவட்ட அளவிலான உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 


நான் முதல்வன் திட்டம் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் – 10th & 12th வகுப்புத் தேர்வு எழுதிய / எழுதாத / பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் - முன்னாள் மாணவர்கள் , பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை வலுப்படுத்த மாவட்ட அளவிலான பயிற்சிகள் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

Proceedings for District level training 24.04.2023 to 05.05.2023 revised.pdf




Click here for latest Kalvi News 

கியூட் நுழைவுத் தேர்வு ஜூன் 5ம் தேதி துவக்கம்

 

நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில், முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு, ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர, கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக கடந்த மாதம் 20ம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில், முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேதிகளை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:


முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள், வரும் ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை நடக்கவுள்ளன. தேர்வுகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடத்தப்படும்.


இது தொடர்பான விபரங்களுக்கு, www.cuet.nta.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்., 19 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click here for latest Kalvi News 

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., தேர்வு பயிற்சி

 அரசு பள்ளிகளில் படிக்கும், 260 மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.


அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட், கியூட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்காக, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.


இவர்களில் பலர், ஜே.இ.இ., பிரதான தேர்வில் பங்கேற்றனர்; 260 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நேரடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர்.


எனவே, அந்த மாணவர்களுக்கு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், உணவு, இருப்பிட வசதி அளித்து, ஜூன் முதல் வாரம் வரை, இலவச பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

வீடுகளுக்கே சென்று அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை: முதன்முறையாக தொடக்கம்

 

திருச்சியில் முதன்முறையாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கே சென்று பள்ளியில் சேர்க்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


அந்தவகையில், திருச்சி உறையூர் பாண்டமங்கலம் தெற்கு மாநகராட்சி தொடக்கப் பள்ளி சார்பில் மாணவர்களை அவர்களது வீடுகளுக்கேச் சென்று பள்ளியில் சேர்க்கும் திட்டம் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.


இந்த திட்ட தொடக்க விழாவில், கல்வியாளர் எஸ்.சிவகுமார், பள்ளித் தலைமையாசிரியர் டி.லீலாலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் என 18 பேர் கொண்ட குழுவினர் வீடுதோறும் சென்று, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை அளித்து, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், 20 மாணவ, மாணவிகள் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.


இத்திட்டம் குறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: பெரும்பாலான கூலித் தொழிலாளர்களுக்கு போதிய நேரம் கிடைக்காததால், அவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க காலதாமதம் ஆகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் வீட்டிலேயே சேர்க்கை திட்டத்தை உருவாக்கினோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்படி, ஒரேநாளில் 20 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும், ரேஷன் கடை அருகே விளம்பர பதாகை வைக்கவும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.


இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் டி.லீலா லட்சுமி கூறியபோது, “அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் 14 வகையான நலத்திட்டங்களை பெற்றோரிடம் எடுத்துக் கூறினோம். பெற்றோர்களும் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொண்டனர்” என்றார்.


கரூர் மாவட்டத்தில்... கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.


விழாவில், ஆட்சியர் த.பிரபுசங்கர் பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக, பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்று இனிப்புகள், பாடப் புத்தகங்களை ஆட்சியர் வழங்கினார்.


நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா, முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) மணிவண்ணன், மண்டலக் குழுத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Click here for latest Kalvi News 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 17-ம் தேதி முடிவு வெளியீடு

 


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று நிறைவுபெற்றது. தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றன.


ஏறத்தாழ 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அதேபோல, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.


தேர்வு வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் தவிர்த்து, மற்ற பகுதிகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து, மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்கள் நடத்தப்பட்டன.


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித் துறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click here for latest Kalvi News 

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 


அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...


  அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...


அரசுப்பள்ளி  நம்பள்ளி....


சேர்த்திடுங்கள் நம் குழந்தைகளை அங்கே...


அரசுப் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது 


             அரசு அறிவிப்பு.

✳️LKG முதல்  8ஆம் வகுப்பு வரை .


✳️தெரிந்தவர்கள் புதுப்பித்துக்கொள்க..


✳️ தெரியாதவர்கள் தெரிந்துகொள்க..


✳️அரசுப் பள்ளியில் பயின்றால்...


✳️கட்டணமில்லா கல்வி...


✳️ ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில்  20% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை , சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 


7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.


✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .


✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.


✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 , 


ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, 


ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.


அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.


✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .


✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.


✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 , 


ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, 


ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.


✳️விலையில்லா புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கும்...


✳️விலையில்லா  குறிப்பேடுகள்- 3 பருவம்


✳️விலையில்லா சீருடைகள்- 4 செட்.


✳️விலையில்லா புத்தகப்பை.


✳️விலையில்லா காலணிகள்.


✳️வண்ண பென்சில்கள்.


✳️கணித உபகரணப் பெட்டி.


✳️புவியியல்  வரைபட நூல்.


✳️தினந்தோறும்  முட்டையுடன் சத்துணவு.


✳️இலவச பேருந்து பயண அட்டை...


✳️ போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்...


✳️ அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ்...


✳️ விலையில்லா மிதிவண்டி...


✳️ விலையில்லா மடிக்கணினி...


இன்னும் நன்மைகள் ஏராளம் ஏராளம்....


"அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்"


அன்பு பெற்றோர்களே, 


தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பீர்... அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுவீர்


Click here for latest Kalvi News 

09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான CEO செயல்முறைகள்!!

 


 09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்காக கருத்துரு இவ்வலுவலகத்தில் பெறப்பட்டது . பார்வை 2 ல் காணும் கடிதத்திற்கிணங்க சென்னையில் சென்று ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூடுதல் பிரதிகள் வழங்குமாறு கோரப்பட்டது.

 மீளவும் பார்வை 3 ல் காணும் தொலை பேசிச் செய்தியில் கூடுதல் பிரதி கோரப்பட்டதால் இணைப்பில் காணும் ஆசிரியர்கள் மட்டும் மீளவும் ஏற்கனவே வழங்கிய கருத்துருவினை இரண்டு பிரதிகளில் 24.04.2023 அன்று இவ்வலுவலக ஆ 4 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அரசு / நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


Click here for latest Kalvi News