NMMSS Online Entry Proceedings by DSE!!!

 IMG_20231003_223439

Opening of National Scholarship Portal ( NSP ) for AY 2023 24 under National Means - cum - Merit Scholarship Scheme ( NMMSS ) Information communicated for necessary action - Reg

DSE - NMMSS Online Entry Reg - Download here


🔻🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசு பள்ளிகளில் "கலைத் திருவிழா போட்டிகள் 2023-24" நடத்துதல் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு

 IMG_20231003_222706


கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கீழ்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் "கலைத் திருவிழா போட்டிகள் 2023-24" நடத்துதல் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு


மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 03.10.2023

 Approved_Kalaithiruvizha proceedingsf 2023-24 | Download here


🔻🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு (2023ஆம் ஆண்டு) வினாத்தாள் வெளியீடு!

 

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு (2023ஆம் ஆண்டு) வினாத்தாள் வெளியீடு!

ESLC 2023 Question Paper - Download here


🔻🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளிக்கல்வி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியீடு.

 IMG_20231003_191857

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது .

Order - Click here



🔻🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு!

 IMG_20231003_183041


தொடக்கக் கல்வித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓரலகு என உள்ளதனை மாற்றம் செய்வது குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.15 - Download here


🔻🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பம் வெளியீடு - DSE நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!

 

IMG_20231003_182807

அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பம் வெளியீடு - DSE நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!

DSE - Education Advance Application - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 04.10.2023

  .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.10.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :270

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.


விளக்கம்:


ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.


பழமொழி :

Desire is the root of all evil


ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :


பலவீனமானவன் பிறரை மன்னிக்க மாட்டான். மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம் மகாத்மா காந்தி 


பொது அறிவு :


1. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?


விடை: சார்ஸ் டார்வின் 


2. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?


விடை: நண்டு 


English words & meanings :


 dias (டயஸ்) - a raised platform பேச்சு மேடை: sewers (சிவெர்ஸ்- a channel for carrying waste water சாக்கடைக் குழாய்.


ஆரோக்ய வாழ்வு :


ரோஜா: ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.


அக்டோபர் 04 இன்று


சுப்ரமணிய சிவா அவர்களின் பிறந்தநாள்


அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.[1] அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.


திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்தநாள்


திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran; 4 அக்டோபர் 1904 – 11 சனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[2] சனவரி 11 இல் உயிர் துறந்தார்.[3] இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்


உலக விலங்கு நாள்


உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.


நீதிக்கதை


 செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது .


ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள். 


மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தை கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது” என்றார். அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?


அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள். இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர். 


காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள். அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள். 

நான் என் குடிமக்களுக்காக அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.  நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். எனவே தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பழக வேண்டும்.


இன்றைய செய்திகள் - 04.10.2023


*19 அடி உயரம் அம்பேத்கர் சிலை: அமெரிக்காவில் அக்டோபர் 14 திறப்பு.


* சென்னை ஐ.சி.எப் சார்பில் புதிய 10 வந்தே பாரத் ரயில்கள் : பெங்களூருவில் மாதிரி வடிவம் தயாரிக்கப்படுகின்றது.


*அடுத்தடுத்து மூன்று முறை 4.1 ரிக்டர் அளவு தொடர் நிலநடுக்கத்தால் திணறிய நேபாளம்.


* இந்தியாவின் அண்டை நாடான  வங்காள தேசத்தில் டெங்கு உயிரிழப்பு 1006 : நோயாளிகளால் நிரம்பி வழியும் வார்டுகள்.


*ஆசிய விளையாட்டுப் போட்டி: பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.


* ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலம் வென்றார்.


Today's Headlines


*19 feet tall Ambedkar statue: October 14 unveiling in USA.


 * New 10 Vande Bharat trains by Chennai ICF: Prototype for it is being prepared in Bengaluru.


 *Nepal has been hit by three successive 4.1 magnitude earthquakes. It shook Nepal 


 * Dengue death toll 1006 in India's neighboring country Bengal: Wards are overflowing with patients.


 *Asian Games: India won the women's hockey with a score of 13-0.


 * Asian Games: Indian athlete Preeti Pawar wins bronze in boxing.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

03.10.2023 பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி?

 


IMG_20231002_193220

03.10.2023 முதல் 06.10.2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை


தொடக்கப் பள்ளிகள்

03.10.2023 &04.10.2023

Today's Status

Fully Not Working

Reason: Others


Staff Attendance

👉1-3 Handling Teachers

TR

👉 4 & 5th Handling Teachers

P or As usual Method


Students Attendance

👉பதிவிடத் தேவையில்லை.


👉🏼இதேபோன்று....

05.06.2023 & 06.06.2023

4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு TR போடவேண்டும்.


நடுநிலைப் பள்ளிகள்

Today's Status

Partially Working

Select Classes Working Today - VI,VII & VIII

Reason: Others


Staff Attendance


👉 1-3 Handling Teachers

TR

👉 Other Teachers

P or As usual Method

Students Attendance

6,7 & 8 ஆம் வகுப்பு 

ஆசிரியர்கள் மட்டும் 

தங்களது வகுப்பு 

மாணவர்களுக்கு 

பதிவிட வேண்டும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

NET தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம்

 

1131890

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.


இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக அக்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த அக்.29-ம் தேதி கடைசி நாளாகும்.


விண்ணப்பங்களில் அக்.30, 31-ல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து டிசம்பர் முதல்வாரத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்பகட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

விண் கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

 

தமிழ்நாடு விண் கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் குழுவாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சூரிய குடும்பம் தோன்றியதிலிருந்தே அதன் முக்கிய உறுப்பினராகப் பல கோடிக் கணக்கிலான சிறு கோள்கள் இருந்து வருகின்றன. சூரிய குடும்பத்தின் பல்வேறு இடங்களில் பரவிக் கிடக்கும் சிறு கோள்களானது, வெவ்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் பண்புகளை உடையவை ஆகும்.


உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் சிறு கோள்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த, சிறு கோள்களை (விண் கற்கள்) ஆராய்ந்து வகைப்படுத்துவதன் மூலம், அவற்றின் மோதலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும். உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் இவ்வாறு விண் கற்களை வகைப்படுத்தும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.


சில மீட்டர்கள் முதல் சில நூறு கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்ட விண் கற்களைக் கண்டறிவது ஒரு சவாலான பணியாகும். இந்த பணியை தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் செய்து வருகின்றனர்.


இது தொடர்பாக, ‘ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன்’ அமைப்பின் உதவி அறிவியலாளர் கிரித்திகா கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு விண் கற்கள் தேடுதல் திட்டம் மூலமாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு விண் கற்களைக் கண்டறிவதற்கான பயிற்சி பெறுபவர்கள் சர்வதேச அளவிலான விண் கற்கள் தேடுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்று வருகின்றனர்.


இத்தேடுதல் திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, International Astronomical Search Collaboration (IASC) எனும் சர்வதேச அமைப்பு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து, ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் (PAN-STARRS) எனும் 1.80மீட்டர்விட்டமுடைய தொலைநோக்கியால் எடுக்கப்படும் படங்களை ஆன்லைனில் வழங்கும்.


இப்படங்களை, விண் கற்களின் நகர்வுகளைக் கண்டறிய உதவும் பிரத்யேக மென் பொருளின் உதவியுடன், மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்வார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட படங்களில் ஏதேனும் நகரும் பொருட்கள் இருப்பின், அவற்றை வகைப்படுத்தி மீண்டும் பான்-ஸ்டார்ஸ் வானியலாளர்களுக்கு மாணவர்கள் அனுப்பிவைப்பர்.


மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டறியும் விண் கற்களின் தடயங்கள், மேலும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சர்வதேச வானியல் மையத்துக்கு அனுப்பப்படும். இவ்வாறு பல நிலைகளைக் கடந்து உறுதி செய்யப்படும் கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களே பெயர் வைக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.


கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு விண் கற்கள் தேடுதல் திட்டம் மூலம், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் என தமிழகம் முழுவதுமிருந்து 20 குழுக்களைப் பங்கேற்கச் செய்கிறோம். நடப்பாண்டுக்கான நிகழ்ச்சியானது அக்டோபர் 9-ம் தேதி தொடங்கி நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு பங்கேற்கும் 20 தேடுதல் குழுக்களில் 14 குழுக்கள் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவை.


கடந்த ஆண்டு பங்கேற்ற குழுவினர் சுமார் 300-க்கும் அதிகமான விண்கற்களின் தடயங்களைக் கண்டறிந்தனர். அவற்றில் 98 தடயங்கள் விண் கற்களாக இருப்பதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட ஆய்வுக்கு விஞ்ஞானிகளால் உட்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, விண்கற்கள் தேடுதல் திட்டம் 2024 ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.


இதில், ஒரு பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள், ஒரு ஆசிரியர் குழுவாக பங்கேற்கலாம். மொத்தம் 20 குழுக்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் கூடுதல் விவரங்களை https://openspacefoundation.inஎன்ற இணையதளத்திலோ அல்லது 9952209695 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 03.10.2023


 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.10.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :269


கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.


விளக்கம்:


தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.


பழமொழி :

_Hunger breaks stone walls.


_பசி வந்தால் பத்தும் பறந்திடும்._


இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :


மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே. மகாத்மா காந்தி


பொது அறிவு :


1.வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?


விடை: மெக்சிகோ 


2. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?


விடை: பிங்கல வெங்கையா 


English words & meanings :


1. Approbate (அப்ராபேட்) - அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.


2. Decline (டிக்லைன்) - சரிவு.


3. Categorize (கேட்டகரைஸ்) - வகைப்படுத்து.


ஆரோக்ய வாழ்வு : 


வெந்தயம் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி,குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது .


நீதிக்கதை


 குரங்கின் அறிவு


ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்


ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை! தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று! திடீரென ஒரு ஆசை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம்... அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம், சந்தோசம்...!


அடுத்த  ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.


நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் பொது ஆண் முதலை கூறியது "இப்போ ஏன் விருந்துக்கு  போறோம் ன்னு தெரியுமான்னு கேட்டது"


அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே ன்னு சொன்னது.


முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னைகூட்டிகிட்டு போறேன் ன்னு கூறியது.


சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.


சற்று யோசித்த குரங்கு... அடடா என்ன நண்பா இத முன்னாடியே சொல்லகூடாதா? நேத்து நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருக்கு ன்னு கூற


முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வருவோம்னு திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலிடம் கூறியது...! முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்ல பாக்கிறியான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி போய்டுசாம்.


இன்றைய செய்திகள் - 03.10.2023


* பச்சை நிற ஆவின் பால் விநியோகம் 50 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.


*பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து வல்லூர் அணைக்கட்டு  நீர் நிரம்பி வழிந்தது.

*வண்டலூர் பூங்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கம் மான்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி துவக்கம். 


* பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு.


*ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து.


*ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாக்கியில் வங்காள தேசத்தை 12-0 என வீழ்த்தியது இந்தியா.


Today's Headlines


* 50 percent reduction in milk supply of green aavin milk: Milk Agents Association alleges.


* Vallur dam overflowed after release of surplus water in Poondi lake.

* After three years in Vandalur Park, the facility to see lions and deers by vehicle has been inaugurated.


* Boycott of Gram Sabha meeting in 13 panchayats in protest of Parantur airport.


*Chief Minister M K Stalin congratulated Tamil Nadu athletes who won medals in the Asian Games.


* India beat Bangladesh 12-0 in Asian Games Hockey.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Calendar - October 2023

 

அக்டோபர் 2023-க்கான பள்ளி நாட்காட்டி 

School Calendar - October 2023👇

Click here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 30.11.2023க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு!

 NMMS தேர்வில் (2022-23ஆம் கல்வியாண்டு) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 01.10.2023 முதல் 30.11.2023க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு!

Selected Candidates - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

டிசம்பர் - 2023 துறைத் தேர்வில் இருந்து தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை தேர்வு (DOM/TOM) முறையில் மாற்றம்!!!

 

 டிசம்பர் - 2023 துறைத் தேர்வில் இருந்து தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை தேர்வு  (DOM/TOM) முறையில் மாற்றம் - கொள்குறி வகை வினாக்கள் முற்றிலும் நீக்கப்பட்டு 100% descriptive வகை வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என அறிவிப்பு.




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

குழந்தைகளுக்கான உடல் பாதுகாப்பு சிக்னல் - வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை!!

 

குழந்தைகளுக்கான உடல் பாதுகாப்பு சிக்னல்  - வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை!!

IMG_20231001_184205_wm




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News