Showing posts with label STD 4 - Q&A. Show all posts
Showing posts with label STD 4 - Q&A. Show all posts

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 5. பனிமலைப் பயணம் - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 பனிமலைப் பயணம்


வாங்க பேசலாம்
பக்கம் - 26
 சிந்திக்கலாமா? 

 பக்கத்து ஊருக்குச் செல்ல படகிலும் செல்லலாம், பேருந்திலும் செல்லலாம்… எதில் பயணம் செய்ய நீ விரும்புவாய், காரணம் என்ன?

விடை :  நான் படகில் பயணம் செய்ய விரும்புவேன். 

காரணம் : சாலை வழிப் பயணம் என்பது எப்போதும் எளிதானது. வழக்கமாக நிகழும் ஒன்று. ஆனால் படகில் பயணம் செய்வது அரிதானது. சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும், மாசடைந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது. படகில் பயணம் செய்யும்போது மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவும். பயணம் செய்வதற்கான சோர்வு இல்லாமல் இருக்கும். இவையே நான் படகில் பயணம் செய்வதற்கான காரணங்கள் ஆகும். 

  சிந்திப்போம்! எழுதுவோம்!
பக்கம் - 27

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது? 

அ) மெதுவாக ஆ) எளிதாக இ) கடினமாக ஈ) வேகமாக 

விடை :  அ) மெதுவாக 

2. “என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது…………….. அ) என்ன என்று ஆ) என்னென்று இ) என்னவென்று ஈ) என்னவ்வென்று 

விடை :  இ) என்னவென்று 

3. “அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………… 

அ) அந்த + காட்டில் ஆ) அ + காட்டில் இ) அக் + காட்டில் ஈ) அந்தக் + காட்டில்

 விடை : ஆ) அ + காட்டில் 

 4. “என்னவாயிற்று” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) என்ன + ஆயிற்று ஆ) என்னவா + ஆயிற்று இ) என்ன + வாயிற்று ஈ) என்னவோ + ஆயிற்று 

விடை : அ) என்ன + ஆயிற்று 

  வினாக்களுக்கு விடையளிக்க 

  1. படகில் செல்லும்போது, விலங்குகள் ஏன் திடீரென அலறின? 

விடை :  விலங்குகள் படகில் செல்லும்போது, திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது. அதனால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்ததனால் விலங்குகள் அலறின. 

 2. நரி, முதலையிடம் என்ன கூறியது? 

விடை :  “இதற்கு முன் ஒரு முதலை, விலங்குகளைச் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்துவிட்டது.” “விஷ முறிவுச் செடிகளை நாங்கள் தின்றுள்ளதால், எங்களை யார் கடித்தாலும் அவர்கள் இறந்துவிடுவர்” என்று நரி முதலையிடம் கூறியது. 

  3. இக்கதையில் உனக்குப் பிடித்த விலங்கு எது? ஏன்? 

விடை : எனக்குப் பிடித்த விலங்கு நரி. ஏனெனில் நரி தன் தந்திரத்தால் உடனிருந்த அனைத்து விலங்குகளையும் காப்பாற்றியது. 


 உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக



மொழியோடு விளையாடு 

 கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. 
உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.

அகர வரிசைப்படுத்துக 

 மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மௌவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய். 

 மைதானம், முறுக்கு, மோப்பம், மகிழ்ச்சி, மௌவல், மாதம், மொழி, மீன், மேகம், மெத்தை, மிளகு, மூட்டை




Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 6. ஆராய்ந்திட வேண்டும் - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 

 6. ஆராய்ந்திட வேண்டும்   

இரண்டாம் பருவம் 

வாங்க பேசலாம் 

பக்கம் - 33

1. கதையை உம் சொந்த நடையில் கூறுக. 

விடை :  மன்னர் ஒருவர் தம் நாட்டு மக்களின் நிலையை அறிய குதிரையில் பயணம் செய்தார். குதிரையும் மன்னரைப் போன்று இரக்கக் குணம் கொண்டது. அக்குதிரை சாலையை நோட்டமிட்டுக் கொண்டே சென்றது. அப்போது காலில் அடிபட்ட நாய் ஒன்று நடக்க முடியாமல் நொண்டி நொண்டி வருவதைப் பார்த்தது. மன்னரின் அனுமதி பெற்று அந்த நாயை மன்னருக்கு முன் அமரச் செய்தது. மன்னர் முன்னே அமர்ந்து குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்த அந்த நாயானது மிகவும் மகிழ்ச்சியடைந்தது. குதிரையின் மீது அமர்ந்து வரும் மன்னரைப் பார்த்து மக்கள் அனைவரும் வணக்கம் தெரிவித்தனர். நாய், குதிரையையும் மன்னரையும் வணங்காமல் மக்கள் தன்னை வணங்குவதாக எண்ணி மகிழ்ச்சியில் தன்னை மறந்தது. தன் தலையைத் தூக்கியபடி ‘லொள் லொள்’ என்று குரைத்தது. 

  நாயின் இச்செயலைக் கண்ட குதிரை “நாயே, அமைதியாக இருந்து கொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால் எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை. நாய், “மக்கள் என்னை வணங்குவது உனக்குப் பொறாமையாக உள்ளது. அதனால்தான் என்னை மட்டம் தட்டுகிறாய்” என்றது. குதிரை, நாயிடம் “அவர்கள் மன்னருக்குத்தான் மரியாதை கொடுக்கின்றனர். உனக்கு இல்லை” என்று கூறியது. ஆனால் நாய் அதனை ஏற்கவில்லை. குதிரையின் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாமல் மேலும் சத்தமாகக் குரைத்தது. மன்னரின் அருகில் வந்து கொண்டிருந்த காவலர்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினர். அங்கிருந்து சென்ற நாய் சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது. தான் இல்லாத போதும் மக்கள் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். இக்காட்சியைப் பார்த்தபோது நாய்க்கு உண்மை புரிந்தது. தன் தவற்றினை உணர்ந்தது. ஆராயாமல் முடிவு எடுத்ததை எண்ணி வருந்தியது. 

 2. ஆராய்ந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளைக் கூறுக. 

விடை :  நாம் செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். அவையே நன்மைகளைத் தரும். நம்மால் ஆராய்ந்து செயல்படும்போது, பிழைகளைத் தவிர்க்க முடியும். நம்மால் துன்பத்திலிருந்து விடுபட இயலும். நாம் எல்லோராலும் பாராட்டப்படுவோம். பிறரைச் சார்ந்து இல்லாமல் தனித்துவமாக நம்மால் இயங்க முடியும். நல்லது கெட்டதைப் பகுத்தறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். நாம் தலைமைத் தாங்கிச் செயலாற்ற முடியும். மன்னரைப் போன்று நமக்கு மரியாதை கிடைக்கும். 

சிந்திக்கலாமா?

 நீ செய்யாத செயலுக்கு உனக்கு ஒருவர் நன்றி கூறினால் அல்லது பரிசு அளித்தால் அவ்வேளையில் நீ என்ன செய்வாய்? 

விடை :  ஒருவர் எனக்கு நன்றி கூறியதற்கு எதிர் நன்றி கூறிவிட்டு நான் அச்செயலைச் செய்யவில்லை என்று அவரிடம் உண்மையைக் கூறுவேன். அவர் ஏதேனும் பரிசு அளித்தால் ‘பரவாயில்லை வேண்டாம்’ என்று சொல்லி விடுவேன். 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 வினாக்களுக்கு விடையளிக்க 

 1. குதிரை ஏன் நாய்க்கு உதவி செய்ய நினைத்தது? 

விடை :  காலில் அடிபட்டதால் நாய் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தது. அதனால் குதிரை நாய்க்கு உதவி செய்தது. 

 2. காவலர்கள், குதிரைமீது இருந்த நாயை ஏன் கீழே இறக்கிவிட்டனர்?

 விடை :  நாய், குதிரையின் மேலே அமர்ந்துகொண்டு குதிரையிடம் விவாதம் செய்து கொண்டு சத்தமாகக் குரைத்தது. ஆதலால் காவலர்கள் நாயைக் கீழே இறக்கிவிட்டனர். 

நிறுத்தக் குறியிடுக 

 “அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக் கொண்டு, அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது.

 ஒரே சொல் இரண்டுமுறை அடுத்தடுத்து வருமாறு சொற்றொடர் அமைத்து எழுதுக. 

 (எ.கா.) நாய் ஒன்று நொண்டி, நொண்டி நடந்தது. 

 1. தத்தித் தத்தி = குழந்தை தத்தித் தத்தி நடந்தது. 

2. எழுதி எழுதி = கந்தன் எழுதி எழுதி பார்த்தான். 

3. திரும்பித் திரும்பி = குழந்தை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றது. 

4. குனிந்து குனிந்து = குனிந்து குனிந்து புத்தகத்தை எடுத்து அடுக்கியதால் முதுகு மிகவும் வலிக்கிறது என்றான் கந்தன்.

  குறிப்பைப் படி! விடையைக் கொடு!

அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

 போலி – ஒன்றைப்போல இருத்தல் 

பொறாமை – காழ்ப்பு 

சவாரி – பயணம்

 வருந்தியது – துன்படைந்தது 

மரியாதை – நேர்மையான ஒழுக்கம் 

சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக 

 மண்னர் – மன்னர்

 குதிறைச் சவாரி – குதிரைச் சவாரி 

உர்சாகம் – உற்சாகம் 

சிறந்தவண் – சிறந்தவன் 

மக்கலெள்ளாம் – மக்களெல்லாம்

 கனைப்பொளி – கனைப்பொலி 

இறக்கக் குணம் – இரக்கக் குணம் 

கிராமங்கல் – கிராமங்கள் 

விலங்குகளுக்குரிய ஒலிப்புகளை வட்டமிடுக.



1. குதிரை கனைக்கும் 

2. சிங்கம் முழங்கும் 

3. நாய் குரைக்கும் 

4. புலி உறுமும் 

5. யானை பிளிறும்அறிந்து கொள்வோம்

செயல் திட்டம் 

 பிறர் பாராட்டுவதற்குரிய நல்ல செயல்கள் எவையெவை என உன் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதி வருக. 

விடை :  

  • விடியற்காலையில் துயிலெழுதல்.
  •  தினமும் இறைவனை வழிபடுதல் 
  • பள்ளிக்கு நேரத்திற்குச் செல்லுதல். 
  • வாரம் ஒருமுறை நகம் வெட்டுதல். 
  • தலைமுடியைச் சீராக வெட்டுதல். 
  • பிறருக்கு உதவி செய்தல். 
  • அன்புடன் திகழுதல். 
  • பெரியோரை மதித்தல் 
  • இனிமையாகப் பேசுதல்
  •  பணிவுடன் இருத்தல். 
  • ஒழுக்கத்தைக் கடைபிடித்தல். 
  • வாய்மையைப் போற்றுதல். 
  • அடக்கமாக இருத்தல். 

முக்காலம் அறிவோமா?

பக்கம் - 36 

கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் போல எழுதுக.


அட்டவணையில் விடுபட்ட இடங்களை நிரப்புக

படங்களுக்குப் பொருத்தமான காலங்களைப் பயன்படுத்தித் தொடர் எழுதுக

படங்களுக்குப் பொருத்தமான காலங்களைப் பயன்படுத்தித் தொடர் எழுதுக.





கூடுதல் வினாக்கள் 

 வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. மன்னர் எதற்காகக் குதிரையில் பயணம் மேற்கொண்டார்? 

விடை :  கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டியும், மன்னர் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டார். 

 2. குதிரை அரசரிடம் என்ன கேட்டது?

 விடை :  ஒரு நாய் நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று நடந்து கொண்டிருந்தது. நாயை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு, அது செல்ல வேண்டிய இடத்தில் விட்டுவிடலாமா என்று குதிரை அனுமதி கேட்டது. 

 3. குதிரையின் இரக்கக் குணத்தைப் பார்த்து மன்னர் என்ன கூறினார்?

 விடை : “குதிரையே! என்னைப் போலவே நீயும் இரக்கத்துடன் செயல்படுகிறாய்! அந்த நாய்க்கு உதவுவதில் உனக்கு இருக்கின்ற மகிழ்ச்சியைப் போன்றே எனக்கும் இருக்கின்றது” என்று மன்னர் குதிரையிடம் கூறினார். 

 4. நாயின் செயலைக் கண்டு குதிரை என்ன கூறியது?

விடை :  “நாயே! அமைதியாக இருந்துகொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால் எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை.

 5. நாய் தன் தவறினை எப்போது உணர்ந்தது? 

விடை :  “நாய்! குரைத்துக் கொண்டே வந்ததால் காவலர்கள் அதனை இறக்கிவிட்டனர். சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டு நாய் திரும்பிப் பார்த்தது; தான் இல்லாதபோதும் குடிமக்கள் எல்லாரும் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்தார். இக்காட்சியைப் பார்த்த நாய்க்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. தன்னுடைய தவற்றினை நினைத்து வருந்தியது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 7. திருக்குறள் கதைகள் - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 7. திருக்குறள் கதைகள்  

இரண்டாம் பருவம் 

வாங்க பேசலாம் 

பக்கம் - 42

 1. நாவைக் காக்காவிட்டால் ஏற்படும் துன்பம் குறித்து பேசுக. 

விடை :  பேச்சைக் குறைத்து, கேட்பதை அதிகரிக்க வேண்டும். தெரிந்ததைப் பேசு. தெளிவாகப் பேசாமல் இருந்தால் நல்லது’ என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. நுணல் என்றால் தவளை என்பது பொருள். பேச்சுத் தன்மை, பகுத்தறிவு இவை இரண்டும் இல்லாத ஜீவராசி தவளை. அது தன்னுடைய சப்தத்தினால், தன் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்கிறது. 

தீயினால் சுட்ட புண் உடம்பில் தழும்பு இருந்தாலும், உள்ளத்தில் ஆறி விடும். நாவினால் தீயச் சொல் கூறிச் சுடும் புண், என்றுமே ஆறாது. சொல்லினால் ஆக்கமும், அழிவும் ஏற்படும். கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். நாவை அடக்காமல், சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும். இப்படி – நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும்கூட உருவாக்கலாம். விளையாட்டாகப் பேசியது வினையாக முடிவதும் உண்டு. மனித சமூகம் நாவைக் காத்தல் வேண்டும். அதனைக் காக்காவிட்டால், குற்றமான சொற்களைச் சொல்லி துன்பம் அடைவர். கதையில் ஒன்றைத் தெரிவு செய்து நண்பர்களுடன் இணைந்து நாடகமாக நடித்துக் காட்டுக. மாணவர்களே தாங்களாகவே செய்ய வேண்டும்.

 சிந்திக்கலாமா? 

 அனுவும், பானுவும் சாலையைக் கடக்க, நின்று கொண்டு இருந்தனர். அப்போது மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அனு சாலையைக் கடக்கத் தொடங்கினாள். பானு, பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே கடக்க வேண்டும். பொறுமையாக இரு என்றாள். எது சரியான செயல்?

விடை :  பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். பச்சை விளக்கு ஒளிரும்போது சாலையில் பிற திசைகளிலிருந்து வண்டிகள் வராது. ஆகையால் பானு கூறியதே சரியானது. சாலைவிதிகளைப் பின்பற்றுவதே சிறந்தது.

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

  1. ‘பொறை’ என்பதன் பொருள் ……………………… 

அ) முழுமை ஆ) வளமை இ) பொறுமை ஈ) பெருமை 

விடை :  இ) பொறுமை

 2. நிறையுடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. 

அ) நிறை + யுடைமை ஆ) நிறை + உடைமை இ) நிறைய + உடைமை ஈ) நிறையும் + உடைமை

 விடை : ஆ) நிறை + உடைமை 

 3. ‘மெய் + பொருள்’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ……………………. 

அ) மெய்பொருள் ஆ) மெய்யானபொருள் இ) மெய்ப்பொருள் ஈ) மெய்யாய்ப்பொருள்

விடை :  இ) மெய்ப்பொருள் 

4. வெகுளாமை – இச்சொல்லின் பொருள்………………….. 

அ) அன்பு இல்லாமை ஆ) பொறாமை கொள்ளாமை இ) சினம் கொள்ளாமை ஈ) பொறுமை இல்லாமை 

விடை :  இ) சினம் கொள்ளாமை 

5. போற்றி ஒழுகப்படும் பண்பு………………………….. 

அ) சினம் ஆ) பொறையுடைமை இ) அடக்கமில்லாமை ஈ) அறிவில்லாமை

 விடை : ஆ) பொறையுடைமை

 வினாக்களுக்கு விடையளிக்க 

 1. பொறையுடைமை எப்போது போற்றப்படும்?

விடை :  நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். அப்போது பொறையுடைமை போற்றப்படும்.

2. மெய்ப்பொருள் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறக் காரணம் என்ன?

விடை :  எப்பொருளையார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே, எடுத்துக் கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவு என வள்ளுவர் கூறுகிறார். 

  3. நாவைக் காக்காவிடில் ஏற்படும் துன்பம் என்ன?

 விடை : நாவைக் காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

  4. சினம் எப்போது ஒருவரை அழிக்கும்? 

விடை :  ஒருவன் தன்னைத்தானே காக்க விரும்பினால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு காத்துக் கொள்ளாவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும். 

5. நீங்கள் படித்த திருக்குறள் கதைகளுள் உங்களுக்குப் பிடித்த கதை எது? ஏன்?

 விடை : எனக்குப் பிடித்த கதை ‘பொறுமையும் பொறுப்பும்’. இக்கதை மூலம் பொறுமையின் சிறப்பை உணர முடிகிறது. எடிசன் தன் பணியாளரிடம் பொறுமையாக செயல்பட்டு, பணியாளருக்குப் பொறுப்பாக இருப்பதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார். அதனால் இக்கதை எனக்குப் பிடிக்கும்.

 பொருத்துக 

 1. பொறை – சொல் குற்றம்

 2. மெய்ப்பொருள் – துன்பப்படுவர்

 3. காவாக்கால் – பொறுமை

 4. சோகாப்பர் – காக்காவிட்டால்

 5. சொல்லிழுக்கு – உண்மைப்பொருள்

விடை : 

 1. பொறை – பொறுமை 

2. மெய்ப்பொருள் – உண்மைப்பொருள் 

3. காவாக்கால் – காக்காவிட்டால்

 4. சோகாப்பர் – துன்பப்படுவர் 

5. சொல்லிழுக்கு – சொல்குற்றம் 

 பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடரை நிரப்புக

 1. ஆய்வகம் ……………………. இருந்தது. (மேல் தளத்தில்/ மேல் தலத்தில்) 

விடை : மேல் தளத்தில் 

 2. வழியில் …………………… ஒன்று வந்தது. (குருக்குப்பாதை/ குறுக்குப்பாதை)

 விடை : குறுக்குப்பாதை 

 3. உனக்குக் காரணம் ……………. (புறியவில்லையா/ புரியவில்லையா)

விடை : புரியவில்லையா

 4. எடிசன் மின் …………….. உருவாக்கினார். (விளக்கு/ விலக்கு) 

விடை :  விளக்கு 

 5. குற்றம் ……………. யாரிடம் இல்லை (குரை/ குறை) 

விடை : குறை 

 மொழியோடு விளையாடு

 பொருத்தமான வினாச் சொல்லை எடுத்து வினாத் தொடரை முழுமையாக்குக. 

 1. உன்னுடைய ஊரின் பெயர் என்ன

2. உனக்குப் பிடித்த வண்ணம் எது

3. நீ பள்ளிக்கு எப்படி வருகிறாய்?

 4. உன்னுடைய நண்பன் யார்

5. கோடை விடுமுறைக்கு எங்கு சென்றாய்? 

6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் யாது?

 7. குறில் எழுத்துகள் யாவை?

8. சாருமதி யாருடைய வீட்டிற்குச் சென்றாள்?


நமக்குத் தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுப்போமா?



1. அன்பு 

2. அடக்கம்

 3. ஒழுக்கம் 

4. ஈகை

 5. வாய்மை 

6. செய்ந்நன்றி

கலையும், கைவண்ணமும் 

 சூரியகாந்திக்கு வண்ணமிடுவோமா? 



 இதழ்களுக்கு மஞ்சள் தூள், விதைகளுக்கு உலர்ந்த தேயிலைத்தூள்,., பயன்படுத்தி அழகாக்குக.

அறிந்து கொள்வோம் 

 1. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.

 2. திருக்குறள் அகர எழுத்தில் தொடங்கி னகர எழுத்தில் முடிகிறது.

 3. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை. 

  செயல் திட்டம்

பக்கம் - 45

 நீங்கள் நன்கு அறிந்த திருக்குறளுக்கு உம் சொந்த நடையில் கதை எழுதி வருக. 

விடை : கல்வியே நமது செல்வம் ஓர் ஊரில் முத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். சொந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கடினமாக உழைத்துச் செல்வந்தராக உயர்ந்தார். அவருக்குப் புகழினி, மதியழகன் என்ற இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவருக்கும் கல்விக்கு முதன்மை அளிக்காமல், தொழிலில் ஈடுபடுத்த எண்ணினார். ஆனால், தந்தையின் ஆலோசனையையும் மீறி கல்லூரி வரை இருவரும் படித்து முடித்தனர். முத்தனுக்குக் கல்வியின் மேல் பெரிய ஈடுபாடோ, விருப்பமோ கிடையாது. ஆகவே, சரியாகக் கல்வி கற்காத முத்தனை அவரது வியாபாரக் கூட்டாளிகள் ஏமாற்றி விட்டனர். இதனால் வீடு, வயல், ஆடு, மாடுகள் எனச் செல்வத்தை இழந்து ஒருவேளை உணவுக்கே துன்பப்படும் நிலைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் ஆளாகினர். முத்தனின் பிள்ளைகள் இருவரும் இனியும் தாமதிக்கக் கூடாது என எண்ணிப் பல நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பித்தனர். உரிய கல்வித்தகுதி பெற்றிருந்ததால், இருவருக்கும் நல்ல வேலை கிடைத்தது. சில நாள்களிலேயே குடும்பத்தின் வறுமை நீங்கியது. முத்தன் கல்வியின் சிறப்பினை உணர்ந்து தமது கருத்தினை மாற்றிக்கொண்டார். குறள் : கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.

  விடை :ஒருவருடைய நிலைத்த செல்வம் என்பது அவர் கற்ற கல்வியே ஆகும். அதனைத் தவிர வேறு எந்த செல்வமும் நீடித்து இருக்காது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 8. பசுவுக்குக் கிடைத்த நீதி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

  8. பசுவுக்குக் கிடைத்த நீதி 

 இரண்டாம் பருவம் 

வாங்க பேசலாம் 

 1. நீங்கள் மனுநீதிச் சோழனாக இருந்தால், பசுவின் துயரத்தை எப்படிப் போக்குவீர்கள்?

 விடை :  நான் மனுநீதிச் சோழனாக இருந்தால் கன்றை இழந்த பசுவை அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பேன். அப்பசு, கன்றை இழந்த கவலையின்றி இருக்க நிறைய பசுக்களையும் கன்றுகளையும் சேர்த்து வளர்ப்பேன். 

 சிந்திக்கலாமா? 

 வீட்டிற்குப் போகும் வழியில் ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சிலர் துன்புறுத்துகின்றனர். அவர்கள் செய்தது சரியா அந்தச் செயலை நீங்கள் எப்படித் தடுப்பீர்கள்? 

விடை :  அவர்கள் செய்தது சரியன்று. சிறுவர்களிடம் “நீங்கள் செய்யும் செயல் தவறானது. நாம் உயிர்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்,” என்று கூறி அச்சிறுவர்கள் ஓணானைத் துன்புறுத்துவதைத் தடுப்பேன்.

  படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. இன்னல் – இச்சொல்லிற்குரிய பொருள் ………………. 

அ) மகிழ்ச்சி ஆ) நேர்மை இ) துன்பம் ஈ) இரக்கம் 

விடை :  இ) துன்பம் 

2. அரசவை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………… 

அ) அரச + அவை ஆ) அர + அவை இ) அரசு + அவை ஈ) அரச + வை

 விடை :  இ) அரசு + அவை 

 3. மண்ணுயிர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….. 

அ) மண் + ணுயிர் ஆ) மண் + உயிர் இ) மண்ண + உயிர் ஈ) மண்ணு + உயிர்

 விடை :  ஆ) மண் + உயிர் 

 வினாவிற்கு விடையளிக்க 

 1. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சி மணியை அமைத்ததற்கான காரணம் என்ன?

 விடை :  மனுநீதிச் சோழன் தனது ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தான். அதனால் ஆராய்ச்சி மணியை அமைத்தான்.

  2. பசு ஆராய்ச்சி மணியை அடித்தது ஏன்?

விடை :  அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும் போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்துவிட்டது. அதனால் துயருற்ற பசு ஆராய்ச்சி மணியை அடித்தது.

 3. பசுவின் துயரை மன்னன் எவ்வாறு போக்கினான்? 

விடை :   பசுவின் துயரைப் போக்க எண்ணிய மன்னன், தன் மகனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைப் போக்கினான். 

 அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

 1. ஆற்றொணா – தாங்க முடியாத 

2. வியனுலகம் – பரந்த உலகம் 

3. செவி சாய்த்தல் – கேட்க விரும்புதல் 

4. கொடியோன் – துன்புறுத்துபவன்

 5. பரம்பரை – தொன்றுதொட்டு 

 சொல் உருவாக்குக

கூடுதல் வினாக்கள் 

 வினாக்களுக்கு விடையளிக்க. 

  1. மனுநீதிச் சோழன் பற்றி எழுதுக. 

விடை :  மனுநீதிச் சோழன் சோழ மன்னர்களுள் ஒருவன். முறைமை தவறாது ஆட்சி புரிவதையே தன் நோக்கமாகக் கொண்டவன். அவனுடைய ஆட்சிக் காலத்தில் வாயில்லாப் பசுவுக்கு ஏற்பட்ட பேரிழப்பைத் தன் மகனைக் கொன்று சரிசெய்தவன். நீதியையே தன் பெயரில் வைத்துள்ளவன். 

 2. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சிமணியைப் பற்றிக் கூறியது யாது? 

விடை :  ஆராய்ச்சிமணியின் நோக்கம் உடனுக்குடன் நீதி வழங்குவது என்றும், குடிமக்கள் எப்போது ஆராய்ச்சி மணியை ஒலித்தாலும் அவர்கள் முன் தானே ஓடோடிச் சென்று, அவர்களின் மனக்குறையை உடனடியாகத் தீர்த்து வைப்பேன் என்றும் மனுநீதிச் சோழன் கூறினான். 

 3. பசுவின் கன்று எவ்வாறு இறந்தது?

விடை :   அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும்போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று, எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்தது.

  4. கன்றினை இழந்த பசுவின் எண்ணத்தை மன்னர் எவ்வாறு வெளிப்படுத்தினார்?

 விடை :  “நீயும் ஒரு மன்னனா? உனக்கு மகன் எப்படியோ அப்படியே எனக்கு என் கன்று அல்லவா? அந்தச் சின்னஞ்சிறு கன்று என்ன பாவம் செய்தது? அதன் உயிரைப் போக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? கன்றை இழந்து தவிக்கும் எனக்கு யார் ஆறுதல் தருவார்? இனி என் வாழ்நாளெல்லாம் வீண்தானோ என்று கேட்பது போல் இருக்கிறது” என்று பசுவின் எண்ணத்தை மன்னர் வெளிப்படுத்தினார்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 9. வேலைக்கேற்ற கூலி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 தமிழ்

இரண்டாம் பருவம்

 9. வேலைக்கேற்ற கூலி

வாங்க பேசலாம்

 1. கதையை உம் சொந்த நடையில் கூறுக. 

விடை : அழகாபுரி மன்னர் நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். அவரை எல்லோரும் புகழ்ந்து பேசுவர். இரத்தினபுரி மன்னர் இதனைக் கேள்விப்பட்டார். அவர் தன்னுடைய அமைச்சர்களிடம் “நானும் நன்றாக ஆட்சி புரிகிறேன். நம் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். ஆனால், என்னை யாரும் புகழவில்லையே” என்று கேட்டார். அமைச்சர் ஒருவர் கொஞ்சம் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் அழகாபுரி மன்னருடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவர் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அறிந்து கொண்டால் அதனை நாமும் பின்பற்றலாம்” என்று கூறினார்.

  அதன்படி இரத்தினபுரி மன்னர் அழகாபுரி நாட்டுச் சென்றார். இருமன்னர்களும் நலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு இருவரும் அரசவைக்குச் சென்றனர். அழகாபுரி மன்னர் தனக்குச் சமமான இருக்கையில் அம்மன்னரை அமரச் செய்தார். அப்போது விறகுவெட்டி ஒருவன் அரசவைக்கு வந்து தன் குறையைத் தீர்க்கும்படிக் கேட்டான். “ஐயா, விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்கிறேன்” என்றார் மன்னர். விறகுவெட்டி “தன்னைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும், மன்னரிடம் பணிபுரிபவருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினான். மன்னர் “இதுபோல் எக்குறையும் வரக்கூடாது என்பதில் நான் கவனமாகத்தான் இருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், உங்கள் ஐயத்தைத் தீர்த்து வைக்கிறேன்” என்றார். 

  மன்னர் அமைச்சர்களுள் ஒருவரையும் விறகு வெட்டியையும் பார்த்து “அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பார்த்துவிட்டு வாருங்கள்” என்று கூறினார். விறகுவெட்டி வெளியில் சென்று உடனே திரும்பி வந்து “ஒரு வண்டி செல்கிறது” என்று கூறினான். அந்த வண்டியில் என்ன இருக்கிறது? எந்த ஊரிலிருந்து வருகிறது? என்று மன்னர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் வெளியில் சென்று வந்து அவன் பதிலளித்தான். அப்போது அமைச்சர் உள்ளே நுழைந்தார். “நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று அமைச்சரிடம் மன்னர் கேட்டார். அமைச்சர் ஒரு கேள்விக்கு பல பதில்களைக் கூறி முடித்தார். விறகு வெட்டியோ மன்னர் கேட்ட ஒவ்வொரு வினாவிற்கும் வெளியே சென்று வந்து பதிலளித்தான். அமைச்சர் கூறியதைக் கேட்டு விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்தான். மன்னரிடம் விறகுவெட்டி, “அமைச்சரின் அறிவுக்கூர்மையையும் என்னுடைய அறியாமையையும் புரிந்து கொண்டேன். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான். 

 இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இரத்தினபுரி மன்னரும் ‘இவருடைய புகழைக் கண்டு பொறாமை கொண்டோமே, உண்மையை உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார். தம் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் அறிந்து கொண்டார். 

 சிந்திக்கலாமா? 

 அமைச்சர் வண்டிக்காரரரிடம் எல்லாத் தகவல்களையும் பெறுவதற்கு என்னென்ன கேள்விகளைக் கேட்டிருப்பார்? எழுதுங்கள். ………………………………………………………………………………………. ………………………………………………………………………………………. ………………………………………………………………………………………. ……………………………………………………………………………………….

விடை : 

 வண்டியில் என்ன இருக்கிறது? 

எந்த ஊரிலிருந்து வருகிறது? 

வண்டியில் என்ன எடுத்துச் செல்கின்றார்? 

வண்டியில் எத்தனை மூட்டைகள் உள்ளன? 

வண்டியில் உள்ள மூட்டைகளில் என்ன இருக்கிறது?

 வண்டி எங்கிருந்து எங்கு செல்கின்றது? 

வண்டியில் யார்யார் பயணம் செய்கிறார்கள்? 

வண்டி எப்போது திரும்பி வரும்? 

வண்டி விரைந்து செல்வதற்கான காரணம் யாது? 

 வினாக்களுக்கு விடையளிக்க 

 1. அழகாபுரி மன்னர் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தினார்? 

விடை :  அழகாபுரி மன்னர், அமைச்சர், விறகு வெட்டி என்ற வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்தினார். 

2. விறகுவெட்டி, மன்னரிடம் தம் மனக்குறையாக என்ன கூறினார்? 

விடை :  ‘மன்னர், விறகு வெட்டியான தனக்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும் அமைச்சருக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும் கொடுப்பதாகவும் அதுவே தம் மனக்குறை என்று விறகு வெட்டி மன்னரிடம் கூறினார்.

  3. மன்னர் அமைச்சரிடமும் விறகுவெட்டியிடமும் என்ன வேலை அளித்தார்?

 விடை :  “அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா?” என்று பார்த்து வரும்படி மன்னர் அமைச்சரிடமும் விறகு வெட்டியிடமும் கூறினார். அதற்கு அமைச்சர் ஒருமுறையே வெளியே சென்று வந்து பல பதில்களைக் கூறினார். ஆனால் விறகு வெட்டியோ ஒவ்வொரு முறையும் சென்று வந்து மன்னரிடம் பதில் அளித்தான். 

 படத்தைப் பார்ப்போம் வினாக்கள் உருவாக்குவோம்



யானை என்ன செய்கிறது? 

வரிக்குதிரை ஏன் சோகமாக உள்ளது?

 சீறி பாயும் விலங்கு எது? 

புலி சண்டை போடுகிறதா?

 நடனமாடும் விலங்கு எது?

 படத்தில் எத்தனை பறவைகள் உள்ளன? 

 மொழியோடு விளையாடு 

 சொல் உருவாக்கப் புதிர்

வடிவங்களைக்கொண்டு அவற்றிற்குரிய எழுத்துகளை எழுதிச் சொல் உருவாக்குக.

ஒவ்வொரு வடிவமும் ஓர் எழுத்தைக் குறிக்கும்



சொல் எழுதுக .சொற்றொடர் அமைக்க


விடுபட்ட எழுத்துகளை நிரப்பி விடுகதைக்கு விடையைக் கண்டுபிடிக்க

கூடுதல் வினாக்கள் .

வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. இரத்தினபுரி மன்னர் ஆலோசனையின் போது அமைச்சர்களிடம் என்ன வினவினார்? 

விடை :   “நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன். ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை ” என்று அமைச்சர்களிடம் வினவினார். 

 2. இரத்தினபுரி மன்னருக்கு அமைச்சர் கூறிய பதில் என்ன?

விடை :   “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். அழகாபுரி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்க வேண்டும். அவர் தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றார் என்று அறிந்து கொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா” என்று அமைச்சர் மன்னரிடம் கூறினார். 

3. விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்த பிறகு மன்னரிடம் என்ன கூறினான்?

விடை :   “மன்னா, என் மனக்குறை நீங்கிவிட்டது. உங்களைப் பற்றித் தவறாக எண்ணிவிட்டேன். அமைச்சரின் அறிவுக் கூர்மையையும் அவருடைய திறமையையும் கண்டுவியக்கிறேன். அவருடன் ஒப்பிடும்போது என் அறியாமையையும் நான் உணர்ந்து கொண்டேன். நான், நான்தான். அமைச்சர், அமைச்சர்தாம். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான் அந்த விறகுவெட்டி.


Click here to Join WhatsApp group for Daily kalvi news