'தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பதற்கு முன்பே, 30.14 லட்சம் மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 7ம் தேதி முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என, தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதையடுத்து, தமிழகம் முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரி, ஐ.டி.ஐ.,களில் படிக்கும் மாணவர்களுக்கு, போக்குவரத்து கழகங்கள் சார்பில், இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுதும், 30.14 லட்சம்...