School Morning Prayer Activities - 15.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.06.23


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

விளக்கம்:

பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

பழமொழி :
Penury pinches all.

பசிவந்தால் பத்தும் பறந்து போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.


பொன்மொழி :

இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. நெல்சன் மண்டேலா

பொது அறிவு :

1. சூரியனைச் சுற்றி வருவதற்கு அதிக நேரம் எடுக்கும் கிரகம் எது?

நெப்டியூன்



2. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் என்ன?

150 மில்லியன் கிலோமீட்டர்கள் (93 மில்லியன் மைல்கள்)

English words & meanings :

 Donate - give money to charity or poor people, 

deposit - a sum of money people put in their bank account

ஆரோக்ய வாழ்வு :

அசைவ உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.

ஜூன் 15 இன்று

உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.


நீதிக்கதை

அவன் சரியான வால் பையன். பள்ளியில் எப்போதும் சேட்டைகள்தாம். அன்று அவனுக்கு பயமாக இருந்தது. காரணம், ஆசிரியைகளுடன் பெற்றோர் சந்தித்துப் பேசும் தினம் அது. பள்ளிக்கு வரும் அம்மாவிடம் 'மிஸ்' புகார் சொல்லி விட்டால்... பயந்து கொண்டே இருந்தான்.

எல்லா பெற்றோரும் ஆசிரியையுடன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவனது தாயாரின் முறை வந்தது.

"பள்ளியில் பையன் எப்படி?" என்று கேட்டாள் தாய்.

"அவனுக்கென்ன சமத்துப் பையன்" என்று மாணவனைப் பார்த்தவாறே சொன்னார் ஆசிரியை.

பையனுக்கு ஆச்சர்யம். தாய்க்கும் ஆச்சரியம்.

“அப்படியா? அவன் ரொம்ப வால் ஆச்சே, நிறைய குறும்பு பண்ணுவானே" என்று விடாமல் கேட்டாள் தாய்.

"அதெல்லாம் சின்னப் பசங்க பண்றதுதானே. மத்தபடி ரொம்ப நல்ல பையன்" என்று, மீண்டும் சொன்னார் ஆசிரியை.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாணவனின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. தன்னைப் பற்றி நல்லவிதமாக சொன்ன ஆசிரியையிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றே தன்னுடைய 'வால்' தனத்தைக் குறைத்துக் கொண்டான். •

இன்றைய செய்திகள் - 15.06. 2023

* பிபோர்ஜாய் புயல் - குஜராத் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம்.

*பிபோர்ஜாய் புயலை கருத்தில் கொண்டு 63 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

*பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் புத்தாக்க நிறுவனங்களின் கண்காட்சியில் 70 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு.

*கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழை ஜூன் 18 ல் இருந்து கிழக்கு இந்திய பகுதிக்கு பரவும் என அறிவிப்பு.

*தூத்துக்குடியைச் சேர்ந்த ஹர்சன் என்ற சிறுவன் தொடர்ந்து 7.30 மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைத்தான்.

Today's Headlines

* Piborjoy Cyclone - Gujarat State Government Intensifies Precautionary Measures

 *63 trains have been canceled due to  Cyclone Piborjoy.

 *70 Indian companies will participate in the exhibition of innovative companies in Paris, the capital of France.

 * It is Announced that the Southwest Monsoon which has started in Kerala will spread to East India from June 18.

 *A boy named Harsan from Thoothukudi set a world record by floating continuously for 7.30 hours


 Prepared by

Covai women ICT_போதிமரம்


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Diary - June 2023

 ஜூன் 2023 டைரி 2023-2024 கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி..


12-06-2023....6-12 வகுப்புகளுக்கு  பள்ளி திறப்பு


14-06-2023 -- 1-5  வகுப்புகளுக்கு  பள்ளி திறப்பு


17.06.2023- சனிக்கிழமை --- CPD training 

(1-5 வகுப்பு ஆசிரியர்கள்)


6-10 வகுப்பு ஆசிரியர்கள் CPD training தேதி விரைவில் அறிவிக்கப்படும்...


19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை- தொல்லியல் பயிற்சி

(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)


26.06.2023- திங்கள் கிழமை அர்பா---(RL)

 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

June 2023 - Then chittu Magazine ( 1 to 15th )

 

தேன்சிட்டு | 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு 


Then Chittu - 01-15 June 2023 Magazine - Download here


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!

 

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!



தாங்கள் கனவு ஆசிரியர் நிலை 2 தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் இது போன்ற குறுஞ்செய்தி தாங்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு வரப்பெற்றிருக்கும். 


மேலும் நாளை மறுநாள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்களை EMIS வலைதளத்தில் தங்களது தனிப்பட்ட LOGINல் அறிந்துகொள்ளலாம்..

Click Here to View ur Result



 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Mutual transfer Application - Option avail in Emis portal

 2023-2024- Mutual transfer Application - Option avail in Emis portal




 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 17.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 17.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!



 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியா் பணியிடம் நிரப்ப முன் அனுமதி பெற உத்தரவு.

 சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவா் 2014-இல் இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டாா்.


இவரது நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி பள்ளி நிா்வாகம் சாா்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டதன் பேரில், 2017-இல் அங்கீகாரம் வழங்கப்பட்டது.


இந்த நிலையில், ஜேசுபிரபா தனது பணி நியமனத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அங்கீகரித்து, சம்பளப் பாக்கி, பணப் பலன்களை வழங்கக் கோரி வழக்குத் தொடுத்தாா். அப்போது, அவரது பணி நியமனத்தை 2014-ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டாா்.


இதை எதிா்த்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்தது.


இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறையின் செயலா் மனு தாக்கல் செய்தாா்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், ஆா்.தாரணி அமா்வு பிறப்பித்த உத்தரவு:


சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியா்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பணி நியமனங்கள் அந்தந்த மறை மாவட்டங்கள் பராமரித்து வரும் பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மறை மாவட்டங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு இணையாக பதிவேட்டை பராமரித்து வருகின்றன.


இந்தக் கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவா்கள் விவரங்களை ஆராய்ந்தால், அவா்கள் ஒரே மதத்தைச் சோ்ந்தவா்களாகவோ, அதே மதத்தில் உள்ள ஒரு பிரிவினராவோ இருப்பா்.


கல்வித் துறை, உபரி ஆசிரியா் பிரச்னையை சந்தித்து வருகிறது. ஆனால், இது போன்ற கல்வி நிறுவனங்கள், தங்களது பள்ளியில் ஒரு காலியிடம் ஏற்பட்டால் கூட உடனடியாக நிரப்பி விடுகின்றனா். அவா்கள் மற்றொரு பள்ளியில் உபரி ஆசிரியா்கள் இருப்பதைக் கண்டு கொள்வதில்லை.


எனவே, வரும் காலங்களில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், கல்வித் துறையிடம் முன் அனுமதி பெற்றே ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி சிறுபான்மை கல்வி நிறுவனம் அனுப்பும் பரிந்துரைகளை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. அதாவது, ஆசிரியா் நியமன ஒப்புதல் தொடா்பாக கல்வி நிறுவனங்களிடமிருந்து பரிந்துரை கிடைக்கப் பெற்றால், அதன் மீது 10 வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவிலும், அமா்வு உத்தரவிலும் தலையிட வேண்டியதில்லை. மறுசீராய்வு மனு முடித்து வைக்கப்படுகிறது என்றனா்


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 2 Lesson Plan - Download here

******************************** 


Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024


4,5th Ennum Ezhuthum Lesson Plan - June 1st week - Download here

Ennum Ezhuthum - 1,2,3 Std - First Term All Lesson Plan - Download here

Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023 

Ennum Ezhuthum - Lesson Plan Empty Model Format - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ்

 

கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு.


Kanavu Aasiriyar - June 2023 Monthly Magazine - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இந்தாண்டு பணி நிரவல் மற்றும் பணியிடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு STATE EMIS TEAMன் தகவல்

Kind attention to all,

 _Teachers who have been deployed or transferred in this counselling - their profiles are currently being moved to their new schools. Their profile should reflect in the new schools by tonight itself.

- STATE EMIS TEAM


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பதவி உயர்விற்கு TET கட்டாயமா? RTE சட்டமும் NCTE ஆணைகளும் சொல்வதென்ன? அரசும் ஆசிரிய இயக்கங்களும் செய்ய வேண்டியது என்ன?

 

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கல்வி பெறும் உரிமையை வலியுறுத்தி Right of Children to Free and Compulsory Education Act 2009 (RTE Act 2009) 27.08.2009ல் வெளியானது. இதன் பிரிவு 23(1)ன்படி 1 - 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தகுதி இருக்க வேண்டும் என்றது.


மேலும், காலிப்பணியிடம் உருவான 6 மாத காலத்திற்குள் நிரப்பப்பட வேண்டும் என்றும், மாணவர் ஆசிரியர் விகிதம் 30:1 (VI - VIII 35:1) என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்றும் சட்டமானது.


அதன்பின்னர், இச்சட்டத்திற்கான தெளிவுபடுத்தல்கள் / திருத்தங்கள் என இதுவரை 6 அறிவிப்பாணைகளை NCTE எனும் National Council for Teacher Education வெளியிட்டுள்ளது. அவற்றில்தான் TET, Minimum Qualifications, Recruiting & Promotion தொடர்பான மாற்றங்கள் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கிய மாற்றங்களை மட்டும் பருந்துப் பார்வையில் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.


23.08.2010ல் வெளியான NCTE-ன் (National Council for Teacher Education) அறிவிப்பாணை குறைந்தபட்ச அடிப்படைத் தகுதியானது பின்வருமாறு இருக்க வேண்டும் என்றது.

I - V :

Senior Secondary (H.Sc) + D.T.Ed., & TET PASS

VI - VIII

B.A., B.Sc., + D.T.Ed., & TET PASS

B.A., B.Sc., + B.Ed., & TET PASS


== == == == == == ==


NCTE 11.02.2011ல் TET தேர்வை நடத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. அதன்படி 60% (90/150) மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி. ஒருமுறை தேர்ச்சி பெற்றால் 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது. ஆண்டிற்கு ஒருமுறையாவது TET தேர்வு நடத்தப்பட வேண்டும்.


== == == == == == ==


29.07.2011ல் வெளியான NCTE-ன் அறிவிப்பாணை குறைந்தபட்ச அடிப்படைத் தகுதியானது பின்வருமாறு இருக்க வேண்டும் என்று கல்வித் தகுதியில் சற்றே திருத்தம் செய்தது.

I - V :

Senior Secondary (H.Sc) + D.T.Ed., & TET PASS

Graduation + D.T.Ed., & TET PASS

VI - VIII

Graduation + D.T.Ed., & TET PASS

Graduation + B.Ed., & TET PASS


மேலும், ST / SC / OBC & மாற்றுத்திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வும் அளித்தது.


[இந்த அறிவிப்பாணை வெளிவந்த தேதிதான் இறுதியாகத் தீர்ப்பு வந்த (WA. No. 313 of 2022 etc batch IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED.02.06.2023) TET Promotion வழக்கில் தகுதி நாளாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.]


== == == == == == ==


NCTE 12.11.2014ல் அரசு / நிதியுதவி / பகுதி நிதியுதவி / தனியார் பள்ளிகளில் Pre-primary, Primary, Upper Primary, Secondary & Senior Secondary ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான குறைந்தபட்சத் தகுதிகளை வரையறுத்து NCTE Teacher Education Regulations 2014ஐ வெளியிட்டது.


அதில்தான் முதன்முறையாக பதவி உயர்வுகள் தொடர்பாக For promotion of the teachers the relevant minimum qualification are specified in the First and Second schedules are applicable for consideration  from one level to the next level என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு பரிசீலிக்க முதல் மற்றும் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதிகள்  பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் First schedule என்பது பொதுவான ஆசிரியர்களுக்கும், Second schedule என்பது உடற்கல்வி ஆசிரியர்களுக்குமான அட்டவணையாகும்.


முதல் (schedule) அட்டவணையில் Level 1 & 2 என்பது Pre-Primary / Nursery / KG. இதற்கான கல்வித் தகுதி Hsc., + 2year D.E.C.Ed., / B.Ed., (Nursery)


Level 3-க்கு (Primary / Upper Primary. : I - VIII) RTE Act படியான குறைந்தபட்ச தகுதிகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் Level 3-க்கான குறைந்தபட்ச தகுதிகளில் எவ்விதத் தளர்வும் அளிக்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Level 4 என்பது IX - X வகுப்புகள். இதன்மூலம் பட்டதாரிப் பணியிடங்கள் VI - VIII மற்றும் IX - X என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


Level 5 என்பது XI - XII வகுப்புகள்.


== == == == == == ==


28.06.2018ல் B.Ed தகுதியுள்ளோரை தொடக்கப்பள்ளி ஆசிரியராக நியமித்துக் கொள்ளலாம் என்றும் மேலும் அன்னார் 2 ஆண்டுகளுக்குள் ஆறுமாத தொடக்கக் கல்விப் பயிற்சியை (Bridge Course) முடிக்க வேண்டும் என்றும் NCTE அறிவிக்கை வெளியிட்டது.


== == == == == == ==


NCTE 09.06.2021ல் TET தேர்வு தேர்ச்சிச் சான்றினை 7 ஆண்டுகள் வரை என்பதிலிருந்து வாழ்நாள் முழுமையும்  செல்லத்தக்கது என்று திருத்தம் செய்து அறிவித்தது.


== ==~== ==~== ==


மேலே குறிப்பிட்டுள்ள சட்டம் & அறிவிப்பாணைகளின் வழி நாம் பின்வரும் புரிதலுக்குள் வரலாம். . . .


RTE ACT குறிப்பிடும் TET தேர்வு என்பது I - VII கற்பிக்கும் ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கானதே.


பதவி உயர்வைப் பொறுத்தவரை 12.11.2014ல் வெளியான அறிவிப்பாணைப்படி ஒருநிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது மட்டுமே தற்போது இருக்கும் நிலைக்கான குறைந்தபட்ச தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.


தொடக்க & நடுநிலைப் பள்ளிகள் ஒரே நிலையில்தான் உள்ளது என்பதாலும், ஒரே நிலைக்குள்ளான பதவி உயர்வுகளுக்கு எவ்வித வரையறையையும் RTE ACT & NCTE வகுக்கவில்லை என்பதாலும், P-HM, BT & M-HM பதவி உயர்வுகளுக்கு தற்போதைய நிலையில் TET அவசியமில்லை.


ஆனால், இந்தக் காரணத்தை மட்டும் முன்வைத்து எதிர் வழக்காடுவதால் தீர்வு கிட்டிவிடாது. தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்வதோ, டிட்டோஜாக் அதனுடன் இணைந்து வழக்காடுவதோ குறிப்பிட்ட ஒரு வழக்கை மட்டும் முன்வைத்து நடக்குமெனில், அடுத்தடுத்த வழக்குகள் இச்சிக்கலை கன்னித்தீவு கதையாக்கிவிடும். எனவே, மேல்முறையீடு செய்வதற்குமுன் அரசு ஒரு தெளிவான கொள்கை முடிவை வெளியிட வேண்டும். அதனை முன்வைத்து TET பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து வழக்காட வேண்டும்.


NCTE படியான அடிப்படைத் தகுதிகளைப் பொருட்படுத்தாத மாநிலங்களால் தான் தகுதித்தேர்வே கட்டாயமானது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 100% NCTEன் கட்டமைப்பின் படியே ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இருந்தும் தற்போது தீர்ப்பான வழக்கில் TET எழுதாத ஆசிரியர்களை ஆசிரியர்களே அல்ல என்றும், அவர்கள் பதவி உயர்விற்குத் தகுதியே இல்லாதவர்கள் என்றும் எதிர்த்தரப்பு வாதிட்டு வழக்காடு மன்றத்தையும் ஓரளவு ஏற்க வைத்துள்ளது. இதுபோன்ற வாதங்கள் எதிர்காலத்திலும் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசு ஆசிரியர் நியமனங்களில் RTE ACT-ஐ முன்வைத்து தெளிவான உறுதியான கொள்கை முடிவை எடுத்தாக வேண்டும்.


தமிழ்நாடு அரசு தனது கொள்கை முடிவாக, "தொடக்கக் கல்வித்துறையில் NCTE வழிமுறைகளின் படி தகுதிவாய்ந்த பாடத்திட்டம் & தேர்வுமுறைகள் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களாக 29.07.2011-ற்கு முன் நியமிக்கப்பட்டனர் என்பதால் அவர்களது பணி நியமனத்திற்கான அடிப்படைத் தகுதியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை; அவர்கள் அடுத்தடுத்த ஊட்டுப் பதவி உயர்வுகளை அடையத் தகுதிவாய்ந்தவர்களே; அதன்பின்னர் RTE ACT & NCTE வழிகாட்டல் படி SGT பணியிடம் TET மூலம் நேரடியாக நிரப்பப்பட்டு வருகிறது; BT பணியிடம் பதவி உயர்வின் வழி நிரப்பப்படாத சூழலில் மட்டுமே TET மூலம் நேரடியாக நிரப்பப்படும்; P-HM & M-HM பணியிடங்கள் கற்பித்தலுடன் கூடிய நிருவாகப் பணியிடங்கள்; நிருவாகப் பணியிடங்கள் 100% பதவி உயர்வின் வழி மட்டுமே நிரப்பப்படும்; பதவி உயர்வுப் பணியிடங்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் 29.07.2011-ற்கு முன் பணியேற்ற SGT / BTகளுக்கு பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் இடம்பெறுவர்; அதற்குப் பின் பணியேற்ற SGT / BTகள் TET PASS தகுதியுடன் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறுவர்" என்று சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு  அறிவிக்கலாம்.


பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை NCTE நடைமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து BT & PG பணியிடங்களும் 29.07.2011 முன்னர் TRB போட்டித் தேர்வின் வழியாக மட்டுமே நிரப்பப்பட்டன என்பதால் ஆசிரியர்களுக்கான அடிப்படைத் தகுதியில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை; 29.07.2011க்குப் பின்னர் TET தேர்வின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்; காலிப்பணியிடங்களுக்கு மாற்று அலகில் இருந்து மாறுதலில் வரும் BT அந்த அலகிற்கான அடிப்படைத் தகுதியுடன் மட்டுமே நியமிக்கப்படுவர்; இதர BT காலிப்பணியிடங்கள் TET தேர்வின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படும்; PG பணியிடம் TRB போட்டித் தேர்வின் வழி நியமிக்கப்படும்; HS-HM & HSS-HM பணியிடங்கள் கற்பித்தலுடன் கூடிய நிருவாகப் பணியிடங்கள்; நிருவாகப் பணியிடங்கள் 100% பதவி உயர்வின் வழி மட்டுமே நிரப்பப்படும்; என்று கொள்கை முடிவை எடுத்து அறிவிக்கலாம்.


அல்லது ஒட்டுமொத்தமாக பதவி உயர்வு நீங்கலான நேரடி BT பணியிடங்கள் மீண்டும் பழையபடி TRB போட்டித் தேர்வின் வழி மட்டுமே நிரப்பப்படும்; SGT பணியிட புதிய நியமனங்கள் TET தேர்வின் வழி மட்டுமே நடைபெறும்; என்றும் கொள்கை முடிவை எடுத்து அறிவிக்கலாம்.


இவையாவும் தனிநபரான எனது புரிதலுக்கு உட்பட்டவையே.


இது அறைவேக்காட்டுத் தனமானதாகக் கூட தோன்றலாம். ஆனால், சட்ட வல்லுநர்கள் - ஆசிரியர் இயக்கத்தினர் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழுவை அமைத்து அரசு செயல்படுமாயின் இதிலும் மேலானா ஒருநிலைப்பாட்டை உறுதி எடுக்க இயலும்.


அத்தகைய முடிவிற்குள் அரசு வராமல் எத்தனைமுறை வழக்காடினாலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அவ்வளவு ஏன் பதவி உயர்வை முழுமையாகவே மேற்கொள்ள முடியாத அளவிற்கு மென்மேலும் தீர்ப்புகள்கூட வெளிவரலாம்.


ஒட்டுமொத்தமாக முதல் & அடிப்படைத் தேவை என்பது உறுதியான - சட்டப்பூர்வமான - தெளிவான கொள்கை முடிவே. அதனை அரசு தானாகவே சரி செய்துவிடும் / மேல்முறையிட்டு வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தையோடே அமைதியாகிவிடக்கூடாது. ஏனெனில் தற்போதைய நிலைக்குக் காரணமே அரசின் தனித்த செயல்பாடுகளே.


எனவே, கொள்கை முடிவு செயலாக்கத்தில் சட்ட வல்லுநர்களோடே தனது இருப்பையும் டிட்டோஜாக் உறுதி செய்வதோடு, பள்ளிக்கல்வித்துறை இயக்கங்களையும் இச்செயல்பாடுகளில் இணைத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும்.


வந்ததைத் தீர்க்கவும் வரும்முன் காக்கவும், கொள்கைகளை முறையாக வகுப்போம்!


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை எவ்வாறு பதிவிடுவது? - EMIS Team

1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதியும்,  6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பின்படி


அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14.06.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.


எனவே, தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும்,


ஆனால் வரும் 12.06.2023 அன்று 6 முதல் 10 ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட வேண்டும்.


Today's status இல் Partially working என கொடுத்துவிட்டு working class இல் VI, VII, VIII மட்டும் தேர்வு செய்யவும்.


Teacher attendance App இல்  1 முதல்  5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு NA (Not Applicable ) என பதிவிடவும்.


மற்ற BT Assistant ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவினைக் குறிக்கவும்.


EMIS Team


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு...


உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு...
👇👇👇👇👇👇👇👇👇


மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் ‘நெக்ஸ்ட்’ தேர்வு



எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்(நெக்ஸ்ட்) தேர்வு நடத்தப்பட உள்ளது.


தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) சட்டத்தின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது ஒரு பொதுவான தகுதி இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வாகவும், நவீன மருத்துவம் மற்றும் முதுகலைப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான உரிமத் தேர்வாகவும் இருக்கும்.


மேலும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான ஸ்கிரீனிங் தேர்வாகவும் ‘‘நெக்ஸ்ட்’’ இருக்கும்.



 ...Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


English Language Lab - Dir Proceedings - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.

 

இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்.


.பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு

"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்"

"பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்"

"மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்"

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பேட்டி

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

12.06.2023 அன்று உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் - பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் எடுக்க வேண்டிய உறுதிமொழி...

 12.06.2023 அன்று உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் காலை 11மணியளவில் எடுக்க வேண்டிய உறுதிமொழி...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Education - Important Exam Dates - June 2023

 

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS , CHENNAI -6 

HIGHER SECONDARY SUPPLEMENTARY EXAMINATION & DEE EXAM - JUNE 2023 ABSTRACT OF EXAM DATES REVENUE DISTRICT NAME COIMBATORE


School Education - Important Exam Dates - June 2023 ( pdf ) - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை , மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் ( FAQ ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - SCERT Proceedings

 எண்ணும் எழுத்தும் சார்ந்த தெளிவுரை


🌷 ஐந்தாம் வகுப்பிற்கு மட்டும் ஜூன் 21 முதல் Baseline survey நடத்தப்படும்


🌷1-3, 4-5 வகுப்பு கால அட்டவணை


🌷 வளரறி மதிப்பீடு (ஆ) FA(b), மாதத்தேர்வு MA, பருவத்தேர்வு SA நடத்த வேண்டிய தேதிகள்


🌷 எண்ணும் எழுத்தும் சார்ந்த அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்


போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SCERT Proceedings - Download here...



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News