4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீட்டு வினாத் தாள் (Summative Assessment)
EE work book ல் உள்ள Summative Assessment, 4 & 5 வகுப்புகளுக்கானது...
4th Std -Click here
5th Std -Click here
Education and Information
4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீட்டு வினாத் தாள் (Summative Assessment)
EE work book ல் உள்ள Summative Assessment, 4 & 5 வகுப்புகளுக்கானது...
4th Std -Click here
5th Std -Click here
Click here for latest Kalvi News
Ennum Ezhuthum - Term 2 - 1 To 3rd Std - Arumbu , Mottu, Malar Workbooks
எண்ணும் எழுத்தும் - அரும்பு, மொட்டு, மலர் - பயிற்சி புத்தகம்
TAMIL WORKBOOK
Tamil Arumbu - Download here
Tamil Mottu - Download here
Tamil Malar - Download here
ENGLISH WORKBOOK
English Arumbu - Download here
English Mottu - Download here
English Malar - Download here
MATHS WORKBOOK
Maths Arumbu TM - Download here
Maths Mottu TM - Download here
Maths Mottu EM - Download here
Maths Malar TM - Download here
Maths Malar EM - Download here
Click here for latest Kalvi News
மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...
எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு
*************************************
வணக்கம்!
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியமான திட்டமான மாபெரும் வாசிப்பு இயக்கத்தில் தங்களின் படைப்புகளைத் தந்து பங்கேற்பினை நல்க அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மாபெ
* பெண்ணுரிமை, மனிதநேயம், சகோதரத்துவம், சமத்துவம், அறிவியல் புனைவுகள், எளிய மனிதர்களின் வாழ்வியல், குழந்தைகளின் மனநலம் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்ட கதைகள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் கதைகள் வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப படைப்புக் குழு செழுமைப்படுத்தும்.
கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ அரசால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.
மேலும் சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானதாகும்.ரும் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தற்போது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற வகைகளில் ஒரு கதை, ஒரு புத்தகம், 16 பக்கம் என முதல் கட்டமாக 53 கதைப் புத்தகங்கள் சிறார் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு ஆளுமைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக 197 நூல்கள் உருவாக்கப்பட்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வாசிப்பு இயக்கத்திற்காக கீழ்க்கண்ட கருப்பொருளைக் கொண்டு தங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
* குழந்தைகள் எளிதில் வாசிக்கும் வகையில் எளிய மொழி நடை.
* சின்னச் சின்ன வாக்கியங்கள்.
* குழந்தைகள் பரவலாக பயன்படுத்தும் சொற்கள், நகைச்சுவை, வேடிக்கைக் கதைகள் வரவேற்கப்படுகின்றன.
• மாற்றுத் திறனாளிகள், திருநர், விளிம்பு நிலை மனிதர்களை உள்ளடக்கிய கதைகள்
வழிகாட்டு நெறிமுறைகள் :
1. தயவுசெய்து தங்களது கதைகளை வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு எழுதி அனுப்பவும்.
2. படைப்புகளை தமிழிலேயே அனுப்பவும்.
3. தங்களால் எழுதப்பட்ட தங்களது சொந்தப் படைப்புகளை மட்டும் அனுப்பவும்.
4. தங்களுடைய கதைகள் தெரிவு செய்யப்பட்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
5. தங்களுடைய படைப்புகளாயினும் ஏற்கனவே வேறு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது இதழ்களிலோ பதிப்பிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறிப்பிடவும்.
6. மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின் அது பற்றிய முழு விவரத்தைக் குறிப்பிடவும்.
தங்களுடைய கதைகள் வாசிப்பின் நிலைகளான...
"நுழை" எனில் 200 முதல் 250 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.
"நட" எனில் 250 முதல் 300 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.
"ஓடு" எனில் 300 முதல் 400 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.
"பற" எனில் 400 முதல் 500 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கான ஓவியம், வடிவமைப்பு, செழுமைப்படுத்துதல் பற்றி தங்களிடம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.
தேர்வு செய்யப்படவுள்ள நூல்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் வகுப்பறையிலும் நூலகங்களிலும் வழங்க இருப்பதால் கதைகளுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்பட மாட்டாது.
தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
17/09/2023 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக ssatnvit@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தங்களது படைப்புகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு 8248259501 என்கிற எண்ணை தொடர்புகொள்ளவும்.
மிக்க நன்றி!
மாநில ஒருங்கிணைப்பாளர்,
வாசிப்பு இயக்கம்,
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு.
Click here for latest Kalvi News
September 2023
September 2023
Click here for latest Kalvi News
பள்ளிக் கல்வித்துறை பயிற்சி - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிருவாக காரணங்களின் பொருட்டு 12.09.2023 14.09.2023 நடைபெறுதல் - தகவல் தெரிவித்தல் - சார்பாக
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
ஆசிரியர் தேர்வு வாரியத்தால், நடத்தப்பெறும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்திற்கான தேர்வு 10.09.2023 அன்று நடைபெறவுள்ளதால் நிருவாகக் காரணங்களின் பொருட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது 12.09.2023 முதல் 14.09.2023 முடிய 03 நாட்கள் மேற்குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும் எனவும், பயிற்சியில் பங்கேற்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பயிற்சி துவங்குவதற்கு முதல் நாள் 11.09.2023 அன்று இரவு 8.00 மணிக்கு முன்னதாக பயிற்சிக்கு வந்து சேர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Click here for latest Kalvi News
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - குழுக்களை வலுப்படுத்துதல் - பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட முதன்மைக் கருத்தாளர்களுக்கானப் ( District Training Unit ) மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி வழங்குதல் , நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முகள்
SMC - DTU Zonal Training Proceedings -reg - Download here
Click here for latest Kalvi News
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.09.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் :257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
விளக்கம்:
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்துஅறிவைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
பழமொழி :
Charity begins at home
தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.
2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.
பொன்மொழி :
போட்டியும் பொறாமையும்
பொய் சிரிப்பும் நிறைந்த
இந்த உலகத்தில் நமது
பாதையில் நாம் நேராக
நடந்து செல்ல நமக்கு
துணையாக இருக்க கூடியது
கல்வி மட்டுமே. அறிஞர் அண்ணா
பொது அறிவு
1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
விடை: ஞானபீட விருது
2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
விடை: ஐரோப்பா
English words & meanings :
manhunt - an organised search for a criminal குற்றவாளியைத் தேடுதல். computation - the action of computing எண்ணி அளவிடுதல்
ஆரோக்ய வாழ்வு :
எள் : எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது
செப்டம்பர் 11 இன்று
மகாகவி பாரதியின் நினைவுநாள்
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.[சான்று தேவை] பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[3] இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
நீதிக்கதை
நீதிக் கதைகள் – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு.
ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலைகள் ஆரம்பமானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன. அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.
அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கேற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனைவருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.
இன்றைய செய்திகள் - 11.09.2023
*வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிர்பலி- 20 ஆயிரத்தை தாண்டியது.
*காவிரி நதிநீர் ஒழுங்காற்று கமிட்டி இடம் தமிழக அரசு 12 ஆம் தேதி புகார் அளிக்க முடிவு.
*சென்னை அருகே சுரங்கப் பணி: திருப்பதி, பெங்களூர் செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து.
*டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூபாய் 100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம் அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்.
*அமெரிக்க ஓபன் டென்னிஸ்:
சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காப்.
*லபுசேன், வார்னர் அதிரடி சதம் இரண்டாவது ஒருநாள் கிரக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி.
Today's Headlines
* The death toll due to the earthquake in the North African country of Morocco has exceeded 20 thousand.
*The Cauvery River Management Committee is held by the Government of Tamil Nadu Decided to lodge complaint on 12th.
*Mining work near Chennai: 14 express trains to Tirupati, Bangalore cancelled.
*100 Crore Kalaingar Research Center Minister at Dr. MGR Medical University Minister M. Subramanian informed
*US Open Tennis:
He defeated Sabalenka to win the title Cocoa Cop.
*Labussain, Warner's fantabulous century gives Australia a stunning win in the second ODI cricket match.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Click here for latest Kalvi News
கல்வியாண்டு 2023-24ஆம் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட காலாண்டுத் தேர்வு கால அட்டவணை
REVISED QUARTERLY TIME TABLE 2023 - CEO Proceedings...
Click here for latest Kalvi News
ஜப்பான் அரசின் ‘சகுரா சயின்ஸ்’திட்டத்தின்கீழ் தென்னிந்திய பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஜப்பான்அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கல்வி நிறுவனங்களில் நிர்வாகிகள் ஜப்பான் பயணம் செய்கின்றனர்.
இந்திய மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் 12 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்திய மாணவர்களை ஜப்பான் அரசு ‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தின்கீழ் ஜப்பானுக்கு இலவசமாக அழைத்து செல்கிறது. அங்கு ஜப்பான் நாட்டில் நோபல் பரிசு பெற்ற மிகச் சிறந்த ஆளுமைகளை மாணவர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்து அறிவுசார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும் உதவி செய்கிறது.
இந்நிலையில், ‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்துஅறிந்துகொள்ள, தென்னிந்தியாவில் உள்ள தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த ஆர்வமுள்ள பள்ளி, கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஜப்பானுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள், முதல் உலக மூத்தக்குடி நிறுவனமும், கேசிசிஎஸ் இந்தோ - ஜப்பான் நிறுவனமும் இணைந்து செய்துள்ளன. முதல்கட்டமாக 10 கல்விநிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். இவர்களுக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.
முதல் உலக மூத்தக்குடி நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கேசிசிஎஸ் இந்தோ ஜப்பான்நிறுவன நிறுவனரும், டோக்கியோதமிழ் சங்கத்தின் மூத்த மைய குழு உறுப்பினருமான கருணாநிதி காசிநாதன் முன்னிலை வகித்தார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன், ஜப்பான் நாட்டுக்கு செல்லும் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், டீன்கள், முதல்வர்கள் உட்படஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கருணாநிதி காசிநாதன் பேசுகையில், ‘இந்தியா,ஜப்பானுக்கு இடையிலான கல்விவளம், மாணவர்களின் கல்வி உதவித்தொகை தொடர்பாக ஜப்பான் அரசை கல்வி நிறுவன நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர்.
மேலும், அங்குள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்துதான், ’சகுரா சயின்ஸ்’ திட்டத்தில் மாணவர்கள் பயன்பெற முடியும் என்பதால், அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு இந்த குழுவை அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சியாளர்களுடன் சந்திப்பு நடைபெறும். பின்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்.
ஜப்பான் செல்லும் கல்வி நிறுவன நிர்வாகிகள் குழு இந்தியா திரும்பிய பிறகு, அந்தந்த கல்விநிறுவனங்களில் படிக்கும், ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் தலா 10 மாணவர்கள் என மொத்த100 பேர் ‘சகுரா சயின்ஸ்’ திட்டத்தின்கீழ் ஜப்பானுக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Click here for latest Kalvi News