🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
Education and Information
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
அரசு / அரசு பள்ளிக் கல்வி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஓய்வு பெற்ற மற்றும் பணியிலிருக்கும் போது இறந்த ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை ( Tution Fee ) ரூ .50,000 / - வரை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது .
G.O.Ms.No.169 - Scholarship to Professional Courses - Download here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
திருச்சி, செங்கல்பட்டு, வேலுார் மாவட்டங்களில் நடக்கும் மாநில கலைத்திருவிழாவுக்கு, திருப்பூரில் இருந்து, மாணவ, மாணவியர் புறப்பட்டு சென்றனர்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில கலைத்திருவிழா நேற்று (21ம் தேதி) துவங்கி வரும், 24ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, வேலுாரிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு செங்கல்பட்டிலும், மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு திருச்சியிலும் நடக்கிறது.கடந்த அக்., மாதம், திருப்பூரில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று, முதலிடம் பெற்று, மாணவ, மாணவியர், 436 பேர், மாநில போட்டியில் பங்கேற்க சென்றனர். திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, 15 அரசு பஸ்கள் மூலம் மாணவர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, மாணவர்களிடம் பேசிய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, நம் மாவட்டத்துக்கு வெற்றியை தேடித்தர, உங்களது திறமையை காட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மாநில போட்டிகளில் கவனமுடன் பங்கேற்று, வெற்றி பெற்று திரும்பி வாருங்கள், என பேசினார்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.வரும், 2024 - 25 கல்வியாண்டுக்கு, ஜே.இ.இ.,முதன்மை மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ் என இரண்டு தேர்வுகளாக நடைபெற உள்ளது. ஜன.,24 முதல் பிப்.,1 வரை, ஜே.இ.இ., முதன்மை தேர்வு நடக்கிறது; முதன்மை தேர்வு முடிவுகள் பிப்., 12 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட, 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.இதற்கான அறிவிப்பை, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்வெழுத தகுதியான மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி இரவு, 9:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல், சந்தேகங்கள் இருப்பின், 011 - 40759000 அல்லது 011 - 69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...
22.11.2023 முதல் 24.11.2023 ஆம் தேதி வரை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நான் முதல்வன் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி மதிப்பீடு தேர்வு நடைபெற உள்ளது.எனவே,கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்:
1. இந்த மதிப்பீட்டை கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றின் மூலம் இணையவழியில் மேற்கொள்ளலாம்.
2. https://exams.tnschools.gov.in/login - என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் User ID என்ற இடத்தில் தங்கள் EMIS ID - யையும், Password என்ற இடத்தில் தங்களின் EMIS ID யின் கடைசி நான்கு எண்களையும் @ என்றும் அதனைத் தொடர்ந்து அவர்களின் பிறந்த வருடத்தையும் உள்ளிட்டு உள் நுழைய வேண்டும்.
உதாரணத்திற்கு, User name – 9876543210 - Password - 3210@2007
3. இந்த மதிப்பீட்டை version 524 இல் மட்டுமே உபயோகிக்க முடியும். மேலும் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டுமே இந்த மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும்.
Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...
⬇️
https://exams.tnschools.gov.in/login
⬇️
User Name
⬇️
Password
⬇️
login
⬇️
Start Quiz
⬇️
Quetions
⬇️
Save & Next
⬇️
Complete Quiz
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நவம்பர் 28-ல் தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், மாநில மதிப்பீட்டுப் புலம் என்ற பெயரில் திறனறித் தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தற்போது திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நவ.28 முதல் டிச.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக மதியம் 2 முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அந்த வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வினாத்தாள் பதிவிறக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
ஒவ்வொரு தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத் தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களை கொண்டிருக்கும். மாணவர்களுக்கு தனித்தனியாக அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்தத் தாள்களிலேயே மாணவர்களை குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
கனமழை விடுமுறை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
- மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Results Declaration Schedule ( As on 21st November 2023 )
Pdf File - Download here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.11.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள்:304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
விளக்கம்:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.
பழமொழி :
Good beginning makes a good ending
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
வாழ்வில் நீ
வெற்றி பெறும் போதெல்லாம்
உன் முதல் தோல்வி
நினைவுக்கு வந்தால்
உன்னை யாராலும்
வெல்ல முடியாது.
பொது அறிவு :
1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: சென்னை
2. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு தொடங்கப்பட்டது?
விடை: மும்பை
English words & meanings :
Aback - surprised ஆச்சரியப்படுதல் abashment - feeling ahy வெட்கப்படுதல்
ஆரோக்ய வாழ்வு :
செம்பருத்தி பூ : செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
நவம்பர் 23 இன்று
கவிஞர் சுரதா அவர்களின் பிறந்தநாள்
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவுநாள்
சர். ஜெகதீஷ் சந்திரபோஸ்
சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.[2
நீதிக்கதை
ஒரு நாள் சுமன் என்ற மாணவன், செக்கிங்கிடம் வேணும்னா டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்துடறேன் சார்” என்று கெஞ்சினான் .
“அது ஒத்து வராது தம்பி, 500 ரூபாய் பைன் கட்டு. இல்ல போலீசுக்கிட்ட ஒப்படச்சுடுவோம். என்ன சொல்ற...?
அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
“எந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற?”
பள்ளியின் பெயரைச் சொன்னான் சுமன்.
“ஏம்பா, இதைத்தான் பள்ளியில சொல்லி கொடுத்திருக்காங்களா?” செக்கிங் கோபமாகக் கேட்டார்.
அப்போது பஸ்சிலிருந்து இறங்கிய சுமனின் ஆசிரியர் வேகமாக செக்கிங்கை நோக்கி வந்தார்.
“அய்யா வணக்கமுங்க. நான் தமிழ் ஆசிரியர், வகுப்பு ஆசிரியரும் கூட. நாங்க நல்லொழுக்கத்தைத்தான் போதிக்கிறோம். பயணிக்கும் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க வேண்டாமென்றோ. சாப்பிடும் சிற்றுண்டிக்கு பணம் கொடுக்காதீர்கள் என்றோ போதிப்பதில்லை. உங்களிடம் மாட்டிக்கொண்ட இந்தப் பையன் ஒழுங்கீனமானவன். பள்ளிக்கு பல நாட்கள் கட்அடித்து, தகாத நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிபவன். இவனுக்கு நாங்கள் கூறிய புத்திமதிகள் அனைத்தும் கடலில் பெய்த மழை போல வீணாயிற்று. இது ஆசிரியரின் குற்றமோ, பள்ளியின் குற்றமோ இல்லை. இருந்தாலும் இவன் என் மாணவன் என்பதால் இவன் செயலுக்கு வெட்கப்பட்டு, தாங்கள் கேட்கும் அபராதத்தை நானே கட்டி விடுகிறேன்” என்று கூறி தன் பர்சிலிருந்த பணத்தை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தார்.
நல்லொழுக்கம் போதிக்கும் ஆசிரியருக்கும், நற்பண்புகள் வளர்க்கும் கல்விக்கூடத்துக்கும் தன்னுடைய செயலால் கெட்ட பெயர் உண்டானதற்காக மனம் வருந்தி அழுது ஆசிரியரின் கால்களில் விழுந்தான் சுமன். அன்று மாலையே தன் பெற்றவர்களிடம் நடந்ததை மறைக்காமல் கூறி அவர்களிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அத்துடன் நிற்காமல் தன் தந்தையை விட்டே தமிழ் ஆசிரியர் அபராதமாகச் செலுத்திய 500 ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இப்போது பஸ்சில் ஏறிய உடனே முதல் ஆளாக டிக்கெட் எடுப்பதுடன், படியில் நின்று பயணிப்பதையும் விட்டு விட்டான் சுமன்.
இன்றைய செய்திகள் - 23.11.2023
*ஐ.என். எஸ் இம்பால் போர் கப்பலின் பரிசோதனை வெற்றி; இந்திய கடற்படை.
*ஆவின் பச்சை நிற பாலுக்கு பதிலாக ஊதா நிற டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.–
அமைச்சர் மனோ தங்கராஜ்.
*குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும்.
*சென்னை: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.929.37 கோடியில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
*கேரள கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்.
*ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் வரிசையில்
சுப்மன் கில் தொடர்ந்து முதலிடம்.....விராத் கோலி முன்னேற்றம்!
Today's Headlines
* I.N. S Imphal warship Trial success ; Indian Navy.
*Instead of green milk we are highlighting Blue Delight milk.-
Minister Mano Thangaraj.
*TNPSC has announced that Group 2 exam results will be published in December. The results of the main examination for Group 2 posts held on February 25 will be published in December.
*Chennai: Chief Minister M. K. Stalin has ordered the implementation of 230 basic facilities projects at Rs 929.37 crore under the Amruth 2.0 project.
*Actress Keerthy Suresh appointed as ambassador of Kerala cricket team.
*ICC ODI Rankings; In the batsman's line-up
Subman Gill continues to top.....Virat Kohli's progress!
Prepared by
Covai women ICT_போதிமரம்
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
மழைக் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்படுவது எப்பொழுதும் உள்ள நடைமுறை. விடுமுறை விடப்படுவதற்கான முக்கிய காரணம் மாணவர்கள் மழையில் நனைந்து அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுக்காமல் இருப்பதற்காகவும் தான்.
தற்போது உள்ள தகவல் தொடர்பு வசதியில் தொலைக்காட்சி வழியாக மாவட்ட ஆட்சியர் விடுப்பு அறிவித்தால் மாவட்டம் முழுவதும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது.
இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பொருந்தும் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பம் இன்றி முடிவெடுக்க முடியும்.
சூழலுக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும்.
பள்ளி தலைமை ஆசிரியரால் பள்ளி விடுமுறை என்ற தகவலை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க முடியாது. முதல் நாள் மாலை 4:30 மணி வரையில்தான் தகவல்களை மாணவர்களுக்கு சேர்க்க முடியும்.
காலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விடுப்பு விட நினைத்தாலும் மாணவர்களுக்கு அந்த தகவல் சென்று சேர வாய்ப்பு இல்லாததால் மாணவர்கள் நனைந்து பள்ளிக்கு வந்து பள்ளி விடுப்பு என்று தெரிந்து மீண்டும் இல்லம் திரும்ப நேரிடும்.
இந்த குழப்பமான நடைமுறையினால் விடுமுறை அளிக்கும் நோக்கமே சிதைந்து விடுகிறது.
பள்ளி வேலை நாட்கள் கணக்கிடுவதிலும் ஒரு மாவட்டத்தில் சீரற்ற முறையில் இருக்கும். ஈடுசெய்யும் வேலை நாள் அறிவிப்பதிலும் குழப்பம் ஏற்படும்.
மழைக்காக விடப்படும் விடுமுறைகளை மாவட்டம் அல்லது தாலுக்கா முழுமைக்கும் மாவட்ட நிர்வாகமே அறிவித்த முன்பிருந்த நடைமுறையே சிறப்பானதாகும்.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
தேர்தல் பணியிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும் .. ?
ELECTION DUTY EXEMPTION
Greater Chennai Corporation Tamil Nadu State Election Commission Polling Personnel 1 1 Formation of Committee for Scrutiny of Election Duty exemption applications - Orders Issued.
ORDER : Vide reference 1st cited , the Tamil Nadu Election Commission has announced the date of urban local body Elections and Model code of conduct is in force . It is stated that as per Rule 13 of TamilNadu Panchayats , Municipalities and Corporations ( Elections ) Rules , 2006 the District Election Officer is empowered to appoint any State Government or Central Government employee as Polling Personnel.
In this regard , it is further stated that the total requirement of Polling Personnel for Chennai district is 30,000+ . It is further stated that the categories of employees for whom exemption can be given by the employer are as follows ,
Election Duty exemption application - Click here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update