TNTET 2025 Application Edit option given for 3 days from 11.09.2025 to 13.09.2025

 

IMG_20250911_121451

விண்ணப்பதாரர்கள் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளதால் மேற்காண் தேர்விற்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 10.09.2025 அன்று மாலை 5,00 மணி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இதனைதொடர்ந்து , விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு ( TNTET ) விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 11.09.2025 முதல் 13.09.2025 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

TNTET 2025 Application Edit option given for 3 days from 11.09.2025 to 13.09.2025 - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2019 அக்டோபர் மாதம் சரண் விடுப்பு செய்தவர்கள் தற்போது அக்டோபர் 2025 சரண் விடுப்பு செய்து பணம் பெறலாம்

 IMG_20250910_101127

2019 அக்டோபர் மாதம் சரண் விடுப்பு செய்தவர்கள் தற்போது அக்டோபர் 2025 சரண் விடுப்பு செய்து பணம் பெறலாம் 

EL Surrender GO - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6 முதல் 9 வகுப்பு வரையான திறன் முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் - பணிமனை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் சார்ந்து SCERT Proceedings

 

IMG-20250910-WA0022

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - மதிப்பீட்டுப் புலம் - 6 முதல் 9 வகுப்பு வரையான திறன் முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் - பணிமனை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் – 08.09.2025 முதல் 12.09.2025 அனுமதித்தல் - சார்ந்து SCERT Proceedings 

பார்வை 1 - ல் காணும் கடிதத்தின்படி , 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கியுள்ள திறன் மாணவர்களுக்கென முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ் , ஆங்கிலம் , கணக்கு , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா 1 மாதிரி வினாத்தாள் மற்றும் 2 முதல் பருவம் / காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


எனவே , தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கும் பணிமனை 08.09.2025 முதல் 12.09.2025 முடிய ஐந்து ( 05 ) வேலை நாட்களில் நடத்திட ஆணை வழங்கப்படுகிறது . 08.09.2025 அன்று இதன்படி , இணைப்பு ( 1 ) ல் தெரிவிக்கப்பட்டுள்ள சார்ந்த ஆசிரியர்கள் முதல்வர்கள் நடைபெறும் பணிமனையில் கலந்துகொள்ள அறிவுறத்தப்படுகிறார்கள் . எனவே , சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவிக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது . மேலும் , திறன் முதல் பருவம் / காலாண்டுத்தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பக்கவடிவமைப்பு செய்யும் பணியினை 03 Layout பணியாளர்களைக் கொண்டு 10.09.2025 முதல் மேற்கொள்வதற்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

One day Mass Casual Leave on 11.09.2025 ( Thursday ) by certain associations Participation of State Government Employees / Teachers - Instructions - Issued .

 

IMG_20250910_134613


Service Associations of State Government Employees Proposed One day Mass Casual Leave on 11.09.2025 ( Thursday ) by certain associations Participation of State Government Employees / Teachers - Instructions - Issued.
👇👇👇

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TET தேர்வு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் இன்றைய (9.9.2025) பேட்டி.

TET தேர்வு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் இன்றைய (9.9.2025) பேட்டி.

👇👇👇👇

👇👇👇👇

 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக கருத்து கேட்பு கூட்டம்!!!

 1000300830


தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய பார்வை 3-ல் காணும் அரசாணையில் அமைக்கப்பட்ட குழுவின்படி நான்காவது கூட்டம் 11.09.2025 அன்று கூட்டம் நடத்துவது சார்ந்து பார்வை 4-ல் காணுமாறு அரசுக் கடிதம் பெறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக பார்வை 3-ல் காணும் அரசாணையின்படி குழுவின் தலைவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பார்வை 4-ல் காணும் 04.09.2025 நாளிட்ட அரசுக் கடிதத்தின்படி 11.09.2025 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏழு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். 

மேலும் இக்கூட்டத்திற்கு ஒரு சங்கத்திற்கு இரு பிரதிநிதிகளுக்கு மிகாமல் தவறாமல் கலந்து கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளி மாணவர்களிடையே ஒற்றுமை எண்ணங்களை வளர்க்கவும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

IMG_20250909_180346


பள்ளி மாணவர்களிடையே சாதிய ரீதியிலான மோதல்களை தடுக்கவும், சமத்துவம், சமூக நீதி மற்றும் ஒற்றுமை எண்ணங்களை வளர்க்கவும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Communal Harmony.pdf

Download here


 🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனரா வங்கியில் டிரைய்னி பணியிடங்கள்; தமிழ்நாட்டில் பயிற்சி பெற வாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள்

  

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய அளவில் முதன்மையான வங்கிகளில் கனரா வங்கி முக்கிய பங்கை பெற்றுள்ளது. அந்த வகையில், கனரா வங்கி செக்யூரிட்டீஸ் மெயின் வங்கியின் கீழ் செயல்படுகிறது. இங்கு சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் டிரைய்னி (Canara Bank Securities Sales and Marketing Trainee) பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேசிய அளவில் பல்வேறு பகுதிகளில் உள்ள சென்டர்களில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை சென்டர் மற்றும் மதுரை சென்டரில் பல்வேறு பகுதிகளில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பயிற்சி அறிவிப்பு 2025
வங்கியின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த வாய்ப்பு சிறப்பாக அமைகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதால் பட்டதாரிகளுக்கு திறன் வளர்ச்சி உதவும். மேலும், பயிற்சி பெறும் நபர்கௌக்கு மாத உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பயிற்சி வாய்ப்பு உள்ளன?
சென்டர்பணி இடங்கள்
சென்னைதாம்பரம், அண்ணாநகர், திருவள்ளூர், ஈரோடு, திருச்சி மற்றும் புதுச்சேரி
மதுரைகோயம்புத்தூர், தஞ்சாவூர், திருநெல்வேலி
வயது வரம்பு
இப்பயிற்சி வாய்ப்பை பெற விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். துறை சார்ந்த அனுபவமுள்ளவர்களுக்கு அனுவபத்திற்கு ஏற்ப 10 வருடங்கள் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி
ஆகஸ்ட் 31-ம் தேதியின்படி, விண்ணப்பதார்கள் கட்டாயம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதார்களுக்கு கணினி திறன் அவசியமாகும். அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

டிரைய்னி உதவித்தொகை
சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் டிரைய்னி பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், செயல்பாடுகளுக்கு ஏற்ப மாதம் ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் பயிற்சி பெற விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஆன்லைன் அல்லது நேரடியாக நேர்காணல் நடத்தப்படலாம். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் https://www.canmoney.in/careers என்ற இணையதளத்தில் நேரடியாகவும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு முறையும் கட்டாயமாகும். விண்ணப்பத்தை உரிய தகவல்களுடன் பூர்த்தி செய்து, அனைத்து சான்றிதழ்களிலின் நகல்களின் சுய சான்றளிப்பு அளித்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நிலையில், அக்டோபர் 6-ம் தேதி மாலை 6 மணிக்குள் சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  • பிறப்பு சான்றிதழ்/ பிறந்த தேதி குறிப்பிட்ட 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழ்
  • ரெஸ்யூம்
  • கல்வித்தகுதிக்கான அனைத்து மதிப்பெண்கள் மற்றும் டிகிரி சான்றிதழ்கள்
  • அனுபவ சான்றிதழ்
  • இதர சான்றிதழ்கள்
விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி
THE GENERAL MANAGER,
HR DEPARTMENT,
CANARA BANK SECURITIES LTD
7 TH FLOOR, MAKER CHAMBER III,
NARIMAN POINT, MUMBAI – 400021

முக்கிய நாட்கள்
விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்06.10.2025
நேர்காணல்தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும்
சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்கில் அனுபவம் பெற விரும்புகிறவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். பயிற்சிக்கான கூடுதல் விவரங்களை அறிந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சென்னையில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

  சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் (Bio-ENZYME) ததயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 17.09.2025 முதல் 19.09.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 

இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு (Bio - ENZYME), ஆயுர்வேத சோப்பு, முடி வளரும் எண்ணெய், முடி வளரும் ஷாம்பு, பேஸ் வாஷ் ஜெல்,கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசிஎண்கள்.


தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032. 8668102600


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்களுக்கு அருமையான வாய்ப்பு

 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (என்.எச்.பி.சி) நிறுவனத்தில் காலியாக உள்ள 248 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் வருமாறு:


காலி பணிகள்: 248 பதவி: அசிஸ்டெண்ட் ராஜ்பாஷா ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூனிகேஷன்),சூப்பர்வைசர் (ஐ.டி.), சீனியர் அக்கவுண்டெண்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர்

கல்வி தகுதி: டிப்ளமோ, பி.எஸ்சி., பி.சி.ஏ., முதுகலை பட்டப்படிப்பு

வயது: 1-10-2025 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-10-2025 இணையதள முகவரி: https://www.nhpcindia.com/welcome/job


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி!! இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..


தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி (PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program ) அளிக்கப்படவுள்ளது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் : தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் (Drone Manufacturing Assembly Test& Flying), சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம் (PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.


இதற்கான தகுதிகள் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் (Drone Manufacturing Assembly Test& Flying) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.



எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பயிற்சி திட்டம் (PCB Designing Program) மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான (Core Tech Placement program) போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

மேற்கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Previous Year TET Pass Candidates Percentage List - Year wise

  கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுடைய தேர்ச்சி சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலையில்லாமல் வேலை வேண்டும் என்கிற வேகத்தோடு தேர்வுக்கு தயாரிப்பு செய்து, தேர்வு எழுதி வென்றவர்களின் தேர்ச்சி விழுக்காடு இது.

ஆக பணியில் இருப்பவர்கள்  எவ்வளவு பெரு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

PG TRB - Physics - Unit 1 - New Syllabus Study Materials

  What's New :


PG TRB - Physics - Unit 1 Study Materials - Srimaan Coaching Centre - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

'தலைமை' இன்றி தவிக்கும் 6 ஆயிரம் அரசு பள்ளிகள்

  IMG-20250908-WA0020

தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பிரச்னைக்கு சட்டரீதியாக தீர்வு காண முடியாமல் மூன்று ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்க முடியாமலும் கல்வித்துறை தடுமாறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.


அரசு, உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு டி.இ.டி., தேவை என்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது முதல் அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளில் இறுதியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் டி.இ.டி., கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர்கள் தவிர தற்போது பணியில் உள்ள 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு இத்தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


கல்வித்துறையில் இந்த உத்தரவு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏற்கனவே இவ்வழக்குகள் தொடர்பாக பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால் தற்போதைய நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது, 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் போன்றவை இத்துறையை தடுமாற்றத்திற்கு தள்ளியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 5 டி.இ.டி., தேர்வுகளே நடத்தப்பட்டுள்ளன. தற்போதய உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பின் பணியில் உள்ளவர்களும் டி.இ.டி., கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் சிறப்பு டி.இ.டி., நடத்தி தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஆலோசித்து வருகிறது. அதேநேரம் ஏற்கனவே 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்வர்களுக்கு அரசு என்ன பதில் அளிக்கும்.

மத்திய அரசு டி.இ.டி., கொண்டு வந்தபோது ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கும் வரை தற்காலிக ஆசிரியர்களை 2015 முதல் நியமித்துக்கொள்வது என அறிவித்து ரெகுலர் நியமனங்கள் தள்ளிப்போடப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அறிவித்தார். ஆனால் இதுவரை பெயரளவில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 13 ஆண்டுகளில் 20 ஆயிரம் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வாய்ப்பிருந்தும், அதிகாரிகளின் அறிவுரையால் தற்காலிகமாக இத்துறை நியமனங்களில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. இதற்கு தீர்வுகாண முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார். அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


டி.இ.டி., விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் 

இந்தாண்டு டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்., 8 கடைசி நாள். தற்போதைய சூழ்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், பணியில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோரும் கூடுதலாக விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அவசகாம் அளிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதுபோல் பணியில் உள்ளவர் உட்பட அனைவருக்கும் ஒரே வகையான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். இருவேறு வகையில் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டால் மேலும் வழக்குகள் தொடர வாய்ப்பு ஏற்படும்


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

  

IMG_20250908_164942

TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( TET ) விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப் .10 மாலை வரை நீட்டிப்பு விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Festival Advance form new - 2025

  

விழா முன்பணம் ரூ.20,000 பெறுவதற்கான புதிய படிவம்

 Festival Advance form new - 2025

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News