ஆன்லைன் பத்திரப்பதிவு பணிகள் 5 கட்டங்களாக பிரிப்பு: புதிய வழிமுறைகள்

 தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், வீடு, மனை விற்பனை பத்திரப்பதிவு செய்யும் பணிகள் ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், வரிசை முறைக்கான 'டோக்கன்' பெற வேண்டிய தேவை இல்லை என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பதிவுத்துறையில், 'ஸ்டார் 3.0' மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகளில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஆக., 17ல் தொடங்கப்பட்டது. புதிய வீடு மனை விற்பனை பத்திரங்கள், எம்.ஓ.டி., எனப்படும் வீட்டுக் கடனுக்கான ஆவணம் ஒப்படைப்பு அடமான பத்திரம், கடன் முடிவுக்கான ரசீது ஆவணம் ஆகியவற்றை, சார் - பதிவாளர் அலுவலகம் வராமல் பதிவு செய்யலாம். இதற்கு தேவைப்படும் கருவிகளை, மக்கள் வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதால், வீடு, மனை விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு சென்று, பத்திரப்பதிவு செய்யலாம். புதிதாக வீடு, மனை வாங்குவோர், இந்த புதிய பத்திரப்பதிவு நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். இதில், மொத்தம் ஐந்து நிலைகளில் பத்திரப்பதிவு பணிகள் நடக்கும். முதலில் சொத்து, அதை வாங்குவோர், விற்பவர், சாட்சிகள் குறித்த விபரங்களை பதிவேற்றம் செய்தல்; ஆதார் மற்றும் 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவேற்றம் செய்தல்; 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்துதல்; பதிவுக்கு தாக்கல் செய்தல்; சார் - பதிவாளர் அதை பதிவு செய்தல் என, ஐந்து நிலைகளாக இந்த பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான புதிய வழிமுறைகள்

முதல் கட்டம்

* சொத்து வாங்குவோர், பதிவுத்துறை இணையதளத்தில் தங்கள் பெயரில், 'லாக் இன்' உருவாக்கி, பதிவு செய்ய வேண்டிய பத்திர வகையை தேர்வு செய்ய வேண்டும்* பதிவு செய்யும் இடத்தில் விரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு, 'வெப் கேமரா' கருவிகளின் வகை என்ன என்பதை தேர்வு செய்ய வேண்டும்* சொத்தின் முன் ஆவண விபரங்களை உள்ளீடு செய்து, அதன் 'டிஜிட்டல்' பிரதியை பதிவேற்றம் செய்ய வேண்டும்* சொத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் குறித்த பெயர், முகவரி, அடையாள சான்று விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்* விற்பனை செய்யப்படும் சொத்து வீடா, மனையா என்பதை தேர்வு செய்து, அது தொடர்பான அடிப்படை விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்* சொத்து அமைந்துள்ள சார் - பதிவாளர் அலுவலகம், கிராமம், சர்வே எண், பரப்பளவு, எல்லைகள், குறிப்புகள் போன்ற விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்* சொத்து கைமாறும் மதிப்பு என்ன? அது எந்த வகையில் கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்* அந்த சொத்து, தற்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டும்* அந்த சொத்து தொடர்பான சட்ட நிலை, வழக்கு ஏதாவது நிலுவையில் உள்ளதா என்பதை குறிப்பிட வேண்டும்* இந்த விபரங்கள் அடிப்படையில், தானியங்கி முறையில் உருவாகும் வரைவு பத்திரம் பார்வைக்கு கிடைக்கும்* இதன் அடிப்படையில், பத்திரத்தின் சொத்து மதிப்பு சரிபார்க்கப்பட்டு, அதற்கான பதிவு கட்டணம், முத்திரை தீர்வை, கணினி கட்டணம், ஆவண எழுத்தர் நல நிதி விபரங்கள் திரையில் தோன்றும்* இதையடுத்து, வரைவு பத்திரம் சரி பார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்தால், இணையதளத்தில் அந்த பத்திரம், 'மை டாக்குமென்ட்ஸ்' பிரிவில் சேமிக்கப்படும்* இதன்பின், சொத்து வாங்குவோர், விற்பவர் அடையாள சான்றுகள், மனைப்பிரிவு வரைபடம், சொத்தின் புகைப்படம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இரண்டாம் கட்டம்

* இதை தொடர்ந்து, 'மை டாக்குமென்ட்ஸ்' பிரிவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பத்திரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்* அடுத்து, ஆதார் சரிபார்ப்பு, விரல் ரேகை, புகைப்படம், கருவிழி ஆகிய, 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மூன்றாம் கட்டம்

* முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றை, 'ஆன்லைன்' முறையில் செலுத்த வேண்டும்.

நான்காம் கட்டம்

* கட்டணம் செலுத்திய பின், பத்திர பதிவுக்கு, 'ஆன்லைன்' முறையில் தாக்கலுக்கு விண்ணப்பதாரர் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர் நிலையில் பணிகள் முடிந்து விடும்.

ஐந்தாம் கட்டம்

* விண்ணப்பதாரர் பதிவேற்றம் செய்த பத்திரம், இணைப்பு ஆவணங்கள், அடையாள சான்றுகளை சார் - பதிவாளர், 24 மணி நேரத்தில் சரி பார்த்து முடிவு எடுப்பார். இதன் அடிப்படையில், சார் - பதிவாளர் 'டிஜிட்டல்' கையெழுத்து போட்டு, பத்திரப்பதிவை முடித்து வைப்பார். இதன்பின், விண்ணப்பதாரர் தன், 'லாக் இன்' பிரிவை திறந்தால், அதில் பிரதி எடுப்பதற்கு ஏற்ற நிலையில் பத்திரம் தயாராக இருக்கும்.

சந்தேகங்களுக்கு உதவி

நேரில் வராமல், எங்கிருந்தும் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக எழும் சந்தேகங்களை பூர்த்தி செய்ய, பதிவுத் துறை தலைமை அலுவலகத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 1025174. பத்திரப்பதிவு தொடர்பாக விளக்கம் பெற, ஐ.ஜி., அலுவலகத்தில் வழங்கப்படும் ஆன்லைன் பயிற்சியை, கட்டுமான நிறுவனங்கள் பெற, https://igr.webex.com/igr/j.php?MTID=mcedac14f848a67e8be1042143f6a5cd2 இந்த இணையதள இணைப்பை பயன்படுத்தலாம்.

யோகா, இயற்கை மருத்துவம் முதுநிலைப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம்


முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு (எம்.டி. யோகா & நேச்சுரோபதி) மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதன்படி, தகுதியானவர்கள் செப்.3-ம் தேதி மாலை 5 மணிக்குள் www.tnayushselection.org என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதில் சிறப்புப் பிரிவின்கீழ் விண்ணப்பிப்பவர்கள், ஆன்லைனில் சமர்ப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ‘செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, அரும்பாக்கம், சென்னை - 600106’ என்ற முகவரிக்கு செப்.3-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணய ஆணைகள் வழங்கப்பட்ட விவரங்கள் கோருதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

 

1043472

தொடக்கக் கல்வி- உதவி பெறும் பள்ளிகள்-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட அறிவுரை வழங்கப்பட்டது-பணியாளர் நிர்ணய ஆணைகள் வழங்கப்பட்ட விவரங்கள் கோருதல்-சார்ந்து


DEE - Aided school Staff fixation 2026-27 -Proceedings

👇👇👇👇

Download here


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

6 முதல் 10ம் வகுப்பு வரை வரைவு பாடத்திட்டம் வெளியீடு

 

 

.com/

ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்விக்கான, 'தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025'ன் அடிப்படையில், புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் உருவாக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில், உயர்மட்ட வல்லுநர் குழு, கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், 6 - 10ம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான வரைவு பாடத்திட்டம், https://tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இது குறித்து, கல்வியா ளர்கள், பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர், https://tnschools.gov.inஇணையதளத்தில், வரும் 31ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு.

 

தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு.


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


விருது பெறும் 48 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வு.


புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரையைச் சேர்ந்த பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் அமுதாவும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஐஐடி மூலம் திறன் பயிற்சிகள்

 .com/

சட்​டப்​பேர​வை​யில் நேற்று சிறப்பு திட்ட செய​லாக்​கத்​துறை தொடர்​பான அறி​விப்பை முதல்​வர் விஜய் சார்​பில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் சி.ரமேஷ் வெளி​யிட்ட முக்​கிய அறி​விப்​பு​கள்: வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ், வேலை​வாய்ப்​பற்ற இளைஞர்​களுக்கு தொழில் பாது​காப்​பு, தீ பாது​காப்​பு, தொழில்​சார் பாது​காப்பு, சுகா​தா​ரம், கட்​டு​மானபாது​காப்பு பயிற்​சிகள் அளிக்​கப்​பட்டு சர்​வ​தேச சான்​றிதழ்​கள் வழங்​கப்​படும்.

இதன் மூலம் இளைஞர்​களுக்கு உற்​பத்​தி, கட்​டு​மானம், உள்​கட்​டமைப்​பு, சரக்கு மற்​றும் போக்​கு​வரத்து, கிடங்​கு​கள், மருத்​து​வ​மனை​கள், தங்​கும் விடு​தி​கள், எரிசக்தி உள்​ளிட்ட துறை​களில் வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.

நடப்பு கல்வி ஆண்​டில் உயர் மதிப்​பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்​களுக்கு தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழகம் வாயி​லாக உலகளா​விய சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ் கல்​லூரி மாணவர்​களுக்கு சென்னை ஐஐடி மூலம் சிறப்பு திறன் பயிற்​சிகள் வழங்​கப்​படும்.Education

இ்த்​திட்​டத்​தின் கீழ், அப்​ளைடு டேட்​டாபேஸ் சிஸ்​டம், அட்​வான்​ஸ்டு எலெக்ட்​ரானிக்ஸ் மேனுபேக்​சரிங் போன்ற சிறப்பு பயிற்சி படிப்​பு​கள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய,வேலை​வாய்ப்பு இல்​லாத ஐடி பட்​ட​தா​ரி​களுக்கு சர்​வ​தேச சான்​றிதழ் பயிற்சி மூலம் உள்​நாடு, வெளி​நாடு​களில் வேலை​வாய்ப்​பு​கள் பெறு​வதற்கு திட்​டம் உரு​வாக்​கப்​படும்.

நடப்பு கல்வி ஆண்​டில் உயர் மதிப்​பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்​களுக்கு தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழகம் வாயி​லாக உலகளா​விய சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ் கல்​லூரி மாணவர்​களுக்கு சென்னை ஐஐடி மூலம் சிறப்பு திறன் பயிற்​சிகள் வழங்​கப்​படும்.

இ்த்​திட்​டத்​தின் கீழ், அப்​ளைடு டேட்​டாபேஸ் சிஸ்​டம், அட்​வான்​ஸ்டு எலெக்ட்​ரானிக்ஸ் மேனுபேக்​சரிங் போன்ற சிறப்பு பயிற்சி படிப்​பு​கள் அளிக்​கப்​படும். வெற்றி திறன் பயிற்சி திட்​டத்​தின் கீழ், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய,வேலை​வாய்ப்பு இல்​லாத ஐடி பட்​ட​தா​ரி​களுக்கு சர்​வ​தேச சான்​றிதழ் பயிற்சி மூலம் உள்​நாடு, வெளி​நாடு​களில் வேலை​வாய்ப்​பு​கள் பெறு​வதற்கு திட்​டம் உரு​வாக்​கப்​படும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு அலுவலகங்களில் தற்காலிக ஒப்பந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

 application

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஒப்பந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஒப்பந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநா், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள கஹக்ஷ பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய் எழ்-ஐஐஐ-3, பணியிடங்களுக்கான நபா்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தோ்வு செய்யப்படவுள்ளனா். இது குறித்த விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் பூா்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து செப்டம்பா் 15 மாலை 6 மணிக்குள் ரேஸ்கோா்ஸில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆசிரியர்கள் புதிய நியமனம் எப்போது? எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்னென்ன?

   ஆசிரியர் வாரியம் மூலம் 2,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை விரைவில் நியமிக்கப் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், இதற்கான போட்டித் தேர்வு வரும் நவம்பர் மாதத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.வட்டடாரக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பும் வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகிறது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NHIS 2026 E CARD Download செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்

  1012884

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CARD பதிவிறக்கம் செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்


2026 ஆண்டிற்கான புதுபிக்கப்பட்ட  NHIS புதிய காப்பீட்டு  அட்டை(E-CARD) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கீழே உள்ள லிங்க் மூலம் சென்று உங்கள் IFHRMS ID NO மற்றும் DOB தரவேண்டும் SCHEME NAME என்ற பகுதியில் வரும் முதல் OPTION-ல் Tamil Nadu Gov.Employee Scheme 2026 என்பதை தரவேண்டும் 


உள்ளீடாக

IFHRMS ID NO

DOB


தர வேண்டும்


கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

https://tnnhis2016.com/TnHome.aspx


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CAED குறித்த முக்கிய தகவல் 



காப்பீட்டு திட்டத்தில் இரண்டு மூன்றாம் தரப்பு நிர்வாகி (Third party Administrator) உள்ளார்கள்.

Medi Assist  என்ற நிறுவனம் 20 மாவட்டங்களிலும், MD India  என்ற நிறுவனம் 18 மாவட்டங்களிலும் காப்பீட்டு திட்டத்தினை நடைமுறை படுத்திட அரசு அனுமதி வழங்கி உள்ளது 


Medi Assist நடைமுறை படுத்தும் மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் இன்னும் சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

Medi Assist  என்ற நிறுவனம் 20 மாவட்டங்களிலும், MD India  என்ற நிறுவனம் 18 மாவட்டங்களிலும் காப்பீட்டு திட்டத்தினை நடைமுறை படுத்திட அரசு அனுமதி வழங்கி உள்ளது 




Medi Assist நடைமுறை படுத்தும் மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் இன்னும் சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரத்தை எவ்வாறு பதிவேற்றம் செய்வது?

   

1011969

களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் update ஆகியுள்ளது...


*NHIS - Family

*member  update

*Enhancement


தற்போது களஞ்சியம் ஆப்பிள் குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்


1. களஞ்சியம் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும் 


2. பின்னர் அப்டேட் ப்ரோபைல் பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும் 

 

3. இதில் பேமிலி மெம்பர் டீடைல் என்பதனை அழுத்தி உள் சொல்லவும் 

4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருக்கும் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும் 




5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும் 





6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்டேட் செய்வது 




7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும் பின்னால் கீழே உள்ள அட்ஜஸ்ட்மென்ட் பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி அப்டேட் செய்யவும் 

8. தாங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றால் மேல் பகுதியில் add member என்ற தேர்வினை பயன்படுத்தி புதிய உறுப்பினரை சேர்க்கலாம் 


9. இதில் புகைப்படத்தை இணைக்க அதே பேனா சின்னத்தை பயன்படுத்தவும் மீதம் கேட்கப்படும் வினாக்களுக்கு சிவப்பு நிற நட்சத்திர குறியீடு உள்ள வினாக்கள் கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும் நட்சத்திர குறியீடு இல்லாத வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பதிவேற்றவும் தகவல் இல்லை என்றால் நட்சத்திர குறியீடு இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம் 


இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் வெகு விரைவாக செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க