ஆகஸ்ட் 10 - உள்ளூர் விடுமுறை

 

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த திருவிழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன் முக்கிய திருவிழா ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு பொருந்தாது எனவும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதனை ஈடு செய்யும் வகையில் செப்டெம்பர் 3 ஆம் தேதி (சனிக்கிழமை ) முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து திருவிழாவில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: சிற்றுண்டி மெனு முதல் குறிக்கோள் வரை - முழு விவரம்

 

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம்.

 முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரம்:

1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தபடவுள்ளது.

இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

உணவு விவரம்

 திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

செவ்வாய் - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி

புதன் - வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்

வியாழன் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளி - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.

வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி

குறிக்கோள்கள்

மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்

ஊட்டச்சத்தை உயர்த்துதல்

வருகை அதிகரித்தல்

வேலைக்கும் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை குறைத்தல்

வழிமுறைகள் 

உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் FSSAI நெறிமுறைகளின் படி இருக்க வேண்டும்

உணவு தயாரிப்பதில் வேறு வெளி மூலப் பொருட்களை சேர்க்கக் கூடாது.

உள்ளூர் சமையல் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்

காய்கறிகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்

பள்ளி மேலாண்மை குழு தினசரி உணவை ருசி பார்க்க வேண்டும்

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்

கண்காணிப்பு

இந்த திட்ட செயல்பாட்டை கண்காணிக்க சமூக நலன், ஊரக வளர்ச்சி, நகர்புறம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழு மாநில, மாவட்ட, பள்ளி அளவில் அமைக்க வேண்டும்.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

 

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 28.07.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடு - Morning prayer




1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு.

 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.


முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை- அரசாணை வெளியீடு.


GO NO : 43 , DATE : 27.07.2022 - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை

 பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.


பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!


எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஏற்படும் ஐயங்களுக்கான தெளிவான விளக்கங்கள் - FAQ

 எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஏற்படும் ஐயங்களுக்கான விளக்கங்கள்


 FAQ Pdf - Download here..



Click here to Join WhatsApp group for Daily kalvi news

School Calendar - August 2022

ஆகஸ்ட் மாத  முக்கிய தினங்கள்.


06-08-2022-- குறை தீர்க்கும் நாள்.


27-08-2022 --- சனி --- CRC நாள்..


வரையறுக்கப்பட்ட விடுமுறை:


1) 03-08-2022---  புதன் ---ஆடிப் பெருக்கு /ரிக் உபகர்மா


2) 05 -08-2022 -- வெள்ளி -- வரலட்சுமி  விரதம்.


3) 11-08-2022 -- வியாழன் ---யஜுர் உபகர்மா


4) 12-08-2022 -- வெள்ளி --

காயத்ரி ஜெபம்.


அரசு விடுமுறை நாட்கள் :


1) 09-08-2022 -- செவ்வாய் -- மொஹரம் பண்டிகை


2) 15-08-2022 -- திங்கள் -- சுதந்திர தினம்


3)19-08-2022 --வெள்ளி -- கிருஷ்ண ஜெயந்தி


4) 31-08-2022 -- புதன் -- விநாயகர் சதுர்த்தி




பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் / பதிவு செய்யப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் அல்லது உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் , தொழில்சார்ந்த அல்லது கலை அல்லது சமுதாயக் கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் . அதிக அளவிலான மாணவர்களை சென்றடைவதுதான் இதன் நோக்கம் ஆகும் . உள்ளூர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளின் பங்கு பிரதானமாக அமைவதால் , இக்கூட்டமைப்புகளும் நுகர்வோர் மன்றங்களாக செயல்படலாம்.

நுகர்வோர் மன்றங்கள் உருவாக்குதலில் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு - Download here



 Click here to Join WhatsApp group for Daily kalvi news

1/8/2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம்

  1.8.2022 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள் Pension papers தயார் செய்வது IFHRMS வழியாக மட்டுமே Manual systems not accept E-SR(electronic service register) ONLY கருவூல ஆணையரின் கடிதம்.





Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக சேர்க்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டுதலில் , புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். கல்வியாண்டின் இறுதியில் கணக்கெடுப்பு நடத்தாமல், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 5,8,10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Click here to Join WhatsApp group for Daily kalvi news

SMC Training - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் கால அட்டவணை வெளியீடு.

2022-2023 ம் கல்வியாண்டு  பள்ளி மேலாண்மைக்குழு - மாநில, மாவட்ட மற்றும் பள்ளிகள் அளவிலான பயிற்சி வழங்குதல் - நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 - ன்படி பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் .  அனைத்து அரசு தொடக்கநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன.

 குழந்தைகளுக்கான தரமான கல்வியை உறுதி செய்திடவும் , அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் , பெற்றோர்களின் முக்கியமானது என்று கல்வி உரிமை சட்டம் வலியுறுத்துகிறது. எனவே பெற்றோர்களின் பங்கேற்பை உறுதி செய்திட மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து இதன்படி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சியளித்து , இக்குழுக்கள் சிறப்பாகச் செயல்பட ஊக்கம் அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி அளித்தல் மற்றும் கால அட்டவணை :


SMC Training - Proceedings to Districts - Dr level, School Level , Letter pad & ID card Expenses - reg.pdf - Download here 



Click here to Join WhatsApp group for Daily kalvi news

School Morning Prayer Activities - 27.07.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2022



Click here to download pdf file

Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி மாணவர்களின் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி: பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்

 பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூரில் நடந்த உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். செயலி மூலம் திறன் கண்காணிக்கப்பட்டு ,மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்படும் என அவர்  கூறினார்.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

TN PTA Rules And Regulations

 தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள்!


Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022-2023 ஆம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக் குழு மாநில மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022-2023 ஆம் கல்வியாண்டு பள்ளி மேலாண்மைக் குழு மாநில மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு.



SPD Proceedings avail
👇👇👇👇👇👇👇👇👇👇

School Morning Prayer Activities - 26.07.2022

மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 சென்னையில் அமர் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமானது, 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' என்ற திட்டத்துடன் இணைந்து 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் சேர்ந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது. 

இதனை அமர் சேவா சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். தரமான கல்வி-பெண் கல்வி-திறன் மேம்பாடு-விளையாட்டுக்கல்வி-உடல் கல்வி-ஆகியவற்றில் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியரை முழுமையாக ஈடுபடுத்தக்கூடியத் திட்டம் தான் இது.


இந்தியாவிலேயே நமது மாநிலம்தான் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியருக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அந்த வகையில் இப்போது தொடங்கப்பட்டுள்ள திட்டம் மிகமிக ஒரு முன்னோடித் திட்டம். 

இரண்டாவது நிகழ்வாக, அமர் சேவா சங்கத்தின் நாற்பதாம் ஆண்டை முன்னிட்டு ஆண்டு மலர் வெளியிடும் நிகழ்ச்சி. மரியாதைக்குரிய ராம கிருஷ்ணன்-சங்கர் ராமன் ஆகியோரால் இன்று வளர்த்தெடுக்கப்பட்டு வரும் இந்த அமர் சேவா சங்கமானது 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் நலனிற்காக குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சிடும் ஒரு சிறந்த நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. 

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையில் சுய சார்புடன் இருப்பதற்குத் தேவையான திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்புக் கல்வி அளித்து வருகிறது. அவர்கள் நம்பிக்கையுடன் சமுதாய நீரோட்டத்தில் சமநிலை மற்றும் சம வாய்ப்புடன் இணைந்திடும் வகையில் செயல்புரிந்து வருகிறது. 


அமர் சேவா சங்கமானது கிட்டத்தட்ட 900 கிராமங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு மேம்பட கிராமம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. செயலி மூலம் குழந்தைகளுக்கான ஆரம்பகால குறைபாடுகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறீர்கள். 

இதுபோன்ற புதுமையான, ஆக்கப்பூர்வமான திட்டங்களோடு சுமார் 16,000 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த கல்வியினை அளித்து நமது சமுதாயத்தில் அவர்களையும் ஒன்றிணைக்கும் வகையிலே ஆற்றல்மிகு செயல்புரிந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news


தேசியக் கொடி விதிகளில் மத்திய அரசு செய்த முக்கிய திருத்தங்கள்! என்ன அவை?

 பகலில் மட்டுமல்லாது இரவிலும் தேசியக் கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மூவர்ண தேசியக் கொடியை சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறைவதற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் என்பது சட்ட நடைமுறையாக இருந்தது. தற்போது இந்திய தேசியக் கொடி சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தேசியக் கொடிகள் கைத்தறியால் நெய்யப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதியும் அமலில் இருந்தது. ஆனால் தற்போது அந்த விதியிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கைத்தறி மட்டுமல்லாது தேசியக் கொடியானது இயந்திரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும், பாலிஸ்டரில் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம் எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தது நினைவு கூறத்தக்கது.



 Click here to Join WhatsApp group for Daily kalvi news


மனமொத்த மாறுதல் கலந்தாய்வு- கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

  தமிழ்நாடு - தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - 2021-2022 கல்வியாண்டிற்கான பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு- கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


IMG_20220725_171107

IMG_20220725_171126

IMG_20220725_171117



Click here to Join WhatsApp group for Daily kalvi news

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்

 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்.


அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம்

காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என தகவல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தகவல்


 Click here to Join WhatsApp group for Daily kalvi news


தமிழ்நாடு கல்வி ‘பெல்லோஷிப் ' திட்டம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

 தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக இல்லம் தேடிக் கல்வி,எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அவ்வகையில், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது


அதன்படி, முதுநிலை உறுப்பினர் (senior fellow), உறுப்பினர் (fellow) என 2 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முதுநிலை உறுப்பினர் பதவிக்கு 38 பணியிடங்களும், உறுப்பினர் பதவிக்கு 114 பணியிடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை 15-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.


தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜூலை31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள பட்டதாரிகள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform என்ற வலைதளம் வழியே உடனடியாக விண்ணப்பிக்கலாம்.


மொத்த பணிக்காலம் 2 ஆண்டுகளாகும். முதுநிலை உறுப்பினருக்கு ரூ.45,000, உறுப்பினருக்கு ரூ.32,000 மாத தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்தப் பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், முழுமையாக பணியைமுடிப்பவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை tnschools.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TERM 1 CLASS- 4 LESSON PLAN GUIDE TAMIL & ENGLISH MEDIUM (PDF)

TERM 1 CLASS 4, 5 | LESSON PLAN GUIDE COLLECTION | DOWNLOAD PDF

TERM 1 CLASS 5 LESSON PLAN GUIDE TAMIL & ENGLISH MEDIUM (PDF)







 Click here to Join WhatsApp group for Daily kalvi news 



ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ' ஆசிரியர் மனசு ' பெட்டி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 

ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சியானது இன்று கோவையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டடு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித் துறை அலுவலகங்களில் ' ஆசிரியர் மனசு ' என்ற பெட்டி வைக்கப்படும.   ' ஆசிரியர் மனசு ' பெட்டி மூலம் மனுக்களை பெற்று கோரிக்கைகள் நீறைவேற்றப்படும். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

மண்டல ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள்

மண்டல ஆய்வுக் குழுவினரால் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது – ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள் வழங்கி வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு.


Zonal meeting hm instructions - Download here... 


Click here to Join WhatsApp group for Daily kalvi news