பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.10.2022
School Morning Prayer Activities - 12.10.2022
தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - வினாத்தாள்
தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - வினாத்தாள்
தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - Download here
பள்ளிகளில் இம்மாதம் அக்டோபர் 13 , 2022 அன்று " தி ரெட் பலூன் " சிறார் திரைப்படம் திரையிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை
பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் சார்ந்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!
அரசுநடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு . சிறார் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிடவேண்டும். திரைப்படங்களைத் திரையிடுவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட திரைப்பட சுற்றறிக்கை தொடர்பாக , இம்மாதம் அக்டோபர் 13 , 2022 அன்று " தி ரெட் பலூன் " திரைப்படம் திரையிடப்படும். இப்படம் பிரஞ்சு மொழியில் ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமாகும் படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
SPD - Movie Screening Instructions.pdf - Download here...
13.10.22 அன்று அனைத்து நடுநிலை,உயர்நிலை,மேல் நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய திரைப்படம்
THE RED BALLOON
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
https://www.mediafire.com/file/ydc777p2vruzvry/THE_RED_BALLOON_HD_.mp4/file
School Morning Prayer Activities - 11.10.2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 11.10.2022
TNSED EMIS ATTENDANCE NEW APP RELEASED(10.10.2022 முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய EMIS ATTENDANCE செயலி!!)
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு- MODEL OMR Sheet - PDF
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள் (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!!!
CLICK HERE TO DOWNLOAD-OMR SHEET
TNSED - School Attendance New Mobile App Released
10.10.2022 முதல் அனைவரும் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டிய புதிய செயலி வெளியீடு
TNSED Attendance App Download here...
10.10.2022 முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய EMIS ATTENDANCE செயலி - என்னென்ன?
TNTET Paper 1 - Computer Based Examination Admit Card Published
COMPUTER BASED EXAMINATION ADMIT CARD
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 14.10.2022 முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படும் என 23.09.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது . கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது . தற்போது , தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 ( District Admit Card.I ) இன்று 07.10.2022 முதலும் தேர்வு மையம் ( இடம் ) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு -2 ( Venue - Admit Card - II ) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Click here to download Admit Card
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை அறிவிப்பு-
கேந்திரவித்யாலயா பள்ளிகளில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை அறிவிப்பு
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கேந்திரவித்யாலயா பள்ளிகள் நாடு முழுதும் செயல்பட்டுவருகின்றது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது.
கேந்திரவித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஐந்திலிருந்து, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது.இதை தொடர்ந்து, ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள், ‘பால்வாடிகா’ என்ற பெயரில், கே.வி பள்ளியில் துவங்கப்படுகிறது.
👉பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும்,
👉பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும்,
👉பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும்
மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை,
https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் அக்டோபர் 10ம் தேதி வரை காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை பதிவுகள் நடக்கும். பால்வாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும்.
இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய
👇👇👇👇👇👇👇👇
https://chennaiiit.kvs.ac.in/sites/default/files/Balavatika.pdf
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 07.10.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!!!
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு , 15.10.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்டப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 07.10.2022 பிற்பகல் முதல் பள்ளிகளுக்கான User ID , Password- ஐப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினைத் தாங்கள் பயிலும் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.5,000 தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்கள்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மழலையா் வகுப்புகளுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையா் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியா்கள் நியமனம் செய்வது தொடா்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் கருத்துரு அனுப்பியுள்ளாா். அதையேற்று மழலையா் வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது தற்காலிக பணி என்பதை அறிவுறுத்தி ஒரு மையத்துக்கு ஓராசிரியா் வீதம் 2,381 நபா்களை தோ்வு செய்ய வேண்டும்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களை தற்காலிக ஆசிரியராக முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக பணியமா்த்தலாம். அதில் தகுதியானவா்கள் இல்லாத நிலையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்தவா்களை நியமனம் செய்யலாம். இவா்கள் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் பணியாற்ற வேண்டும். பள்ளி வேலை நாள்களில் காலை 9.30 முதல் 12.30 மணி வரை பணி நேரமாகும். கல்வியாண்டின் இறுதி நாளில் அவா்கள் பணிகள் நிறைவடைந்துவிடும்.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் தரப்படும். இதற்காக நிகழ் கல்வியாண்டுக்கு ரூ.13.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-12 வகுப்பு ஆசிரியர்களுக்கு மாநில அளவில் 2 நாட்கள் STEM பயிற்சி SPD செயல்முறைகள்
6-12 வகுப்பு ஆசிரியர்களுக்கு மாநில அளவில் 2 நாட்கள் STEM பயிற்சி SPD செயல்முறைகள்
4th,5th std - 2nd Term Syllabus Download
4th,5th std - 2nd Term Syllabus Download
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடத்திட்டம்
CEOs Seniority List ( 04.10.2022)
முதன்மைக் கல்வி அலுவலர் / அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 48 அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு!
CEOs Seniority List 4th Oct.pdf
DEOs Seniority List ( 04.10.2022 )
146 மாவட்டக் கல்வி அலுவலர்களின் அக்டோபர் - 2022 நிலவரப்படி உத்தேச பணிமூப்புப் பட்டியல் (Seniority List) வெளியீடு!
DEOs Seniority List.pdf - Download here
Transfer Gov Women Employees - Maternity Leave Clarification - RTI Letter
மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்க வழிவகை இல்லை - RTI REPLY!
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும்,1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதி வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த சில தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான தகவல்களை பெற்றோருக்கு தெரிவித்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அனுமதி பெற்று சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்ளலாம். ஆனால், முழு நாளாக அந்த வகுப்புகள் நடைபெறக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.