School Morning Prayer Activities 13-01-2023

 



திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்

குறள் 103:

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

குறள் விளக்கம்:

இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

பழமொழி :

A journey of a thousand miles begins with a single step

ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்

பொன்மொழி :

எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள், நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.

பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர்? 

 ரீட்டா பிரியா.

 2. இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் யார்?

 ஜெனரல் கே. எம் .கரியப்பா.



English words & meanings :

hole - opening. noun. துளை. பெயர்ச் சொல். whole - entire. adjective. பெயரடைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

ஆளிவிதையை பாலுடன் கலந்து சாப்பிடலாம். இதற்கு, நீங்கள் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஆளி விதை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, இந்த பாலை வடிகட்டிக் குடிக்கலாம். வேண்டுமானால் ஆளி விதை பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலை இரவில் தூங்கும் போது குடிக்கலாம். இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

NMMS Q

அண்டம் மற்றும் விண்மீன்களில் காணப்படும் மிக முக்கியமான தனிமங்கள்_________ 

விடை: H, He

நீதிக்கதை

சமாதானம் அவசியம்

காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன. கரடி, நான் தான் முதலில் மானைப் பார்த்தேன். ஆகவே அது எனக்குச் சொந்தம் என்றது. ஆனால் சிங்கமோ.... நான் தான் முதலில் பார்த்தேன். ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம் என்றது.

இரண்டும், செத்துக்கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன. அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின. அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும். கரடியையும் பார்த்தது. இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.

மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன. நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப்போட்டு உண்டிருக்கலாம். நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே என வருந்தின.

இன்றைய செய்திகள்

13.01.2023

* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.17 லட்சம் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7 கோடி ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

* தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்.

* 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கும், சூரியனுக்கு அருகில் வரவுள்ளது.

* இந்தியாவின் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்.

* 2வது ஒருநாள்கிரிக்கெட் போட்டி: இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா.

* உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சரத்கமல், மணிகா தகுதி.

Today's Headlines

* On the occasion of Pongal, the Tamil Nadu government has announced that 1.17 lakh transport corporation employees will be given an 'achievement incentive' of Rs 7 crore.

* The Chennai Meteorological Center has reported that the Northeast Monsoon has receded over Tamil Nadu, Puduwai and Karaikal.

* Defense Ministry approves procurement of indigenously manufactured missiles worth Rs 4,276 crore

 * After 50,000 years a comet from outside our solar system will come close to Earth and the Sun.

*  Do not use India's AMBRONOL, DOK-1 Max cough medicine: World Health Organization.

*  2nd ODI: India beat Sri Lanka by 4 wickets to win the series.

 * India's Sarathkamal, Manika qualify for World Table Tennis Championship.
 
 Prepared by


Covai women ICT_போதிமரம்

NHIS ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு!!!

 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு!



Economicsக்கு Incentive உண்டு. அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995

 Economicsக்கு Incentive உண்டு. அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995


ன்படி+2 பாடப்பிரிவில் உள்ள பாடங்களை படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் உண்டு என ஆணையிடப்பட்டுள்ளது.


அரசாணை 134 ப.கதுறை நாள் 15.06.2007 ஆனது 6,7,8 கற்பிக்க தகுதி இல்லாத பாடப்பிரிவுகளில் ஒன்றான Economicsக்கு பதவி உயர்வு கிடையாது என ஆணையிடப்பட்டுள்ளது. ஆனால் Incentive கிடையாது எனக் கூறவில்லை.


மேலும் +2 பாடப்பிரிவில் உள்ள எந்த பாடங்களை படித்தவர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு என்ற அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995 தற்போதும் நடைமுறையில் உள்ளது என தொடக்கக்கல்வி துறையால் 03.09.2014 தகவல் தரப்பட்டுள்ளது.


ஆனால் இயக்குனர் அவர்கள் அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995 தற்போதும் நடைமுறையில் இருக்கும் போதே அரரசாணைக்கு முரணாக 24.08.2016 அன்று Economicsக்கு Incentive கிடையாது என


ஆணையிட்டுள்ளார்கள். நீதிமன்றத்தில் அரசாணை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அரசாணை நடைமுறையில் இருக்கும் போதே அதற்கு முரணாக போடப்படும் எந்த ஒரு இயக்குனர் ஆணைகளையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. எனவே நீங்கள் வாங்கியுள்ள தீர்ப்பின்படி நீங்கள் Economicsக்கு கண்டிப்பாக ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்.


கீழே ஆணைகள் இணைக்கப்பட்டுள்ளது.JUDGEMENT COPY & G.O & RTI LETTER AVAIL


CLICK HERE TO DOWNLOAD- THE G.O & PRO & RTI LETTER


CLICK HERE TO DOWNLOAD- JUDGEMENT COPY


தகவல் :

திரு -சா.ஜான்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செந்தூர் கல்வி மாவட்டம்.

தலைமைப்பண்புப் பயிற்சி - அடுத்த கட்ட தலைமை ஆசிரியர்கள் பட்டியல் மற்றும் பயிற்சி தேதி அறிவிப்பு.

 

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து , தற்போது 06.02.2023 முதல் 25.02.2023 வரை Batch 67 முதல் 73 வரை அணிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு இணைப்பு -1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் தலைமைப்பண்புப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


 CoSE - Mentor Training - pdf - Download here...

Click here to join whatsapp group for daily kalvinews update 

SYLLABUS - TERM - III - 6th std to 8th std

ஜனவரி மாத பள்ளி நாட்காட்டி

 

ஜனவரி மாத பள்ளி நாட்காட்டி


Click here to join whatsapp group for daily kalvinews update 

5 ஆம் வகுப்பு 3 ஆம் பருவம் -UNIT - 1 TRAY CARDS

 TRAY CARDS 5 ஆம் வகுப்பு 3 ஆம் பருவம் தமிழ் அலகு - 1 சிறு பஞ்சமூலம்



TRAY CARDS 5 ஆம் வகுப்பு 3 ஆம் பருவம் கணிதம் அலகு - 1 வடிவியல் -1


TRAY CARDS 5th STANDARD TERM III ENGLISH UNIT - 1 (prose) FIVE DETECTIVES

TRAY CARDS 5 ஆம் வகுப்பு 3 ஆம் பருவம் அறிவியல் அலகு - 1 நமது சுற்றுசூழல்

TRAY CARDS 5 ஆம் வகுப்பு 3 ஆம் பருவம் சமூக அறிவியல் அலகு - 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

தொடக்க கல்வித்துறை இணை இயக்குனருக்கு பதவி உயர்வு.

 தொடக்க கல்வித்துறை ( நிர்வாகம்) இணை இயக்குனராக பணியாற்றிய வந்த திருமதி உமா அவர்கள் ஒருங்கினைந்த பள்ளிக் கல்வி கூடுதல் திட்ட இயக்குநர் II ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Income Tax Calculation Sheet 2022 - 2023

 Income Tax Calculation Sheet 2022 - 2023

Latest IT Calculator Excel Format - Download here

Passcode: 123

With regards,

Basker T
SG tr,
Sanarpatty block,. DINDIGUL district.

School Morning Prayer Activities - 12.01.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.01.2023




திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

பொருள்:
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவார்.


பழமொழி :

Don't judge a book by its cover.

 புறத்தோற்றம் கண்டு மயங்காதே


இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்


பொன்மொழி :

ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது


பொது அறிவு :

1. நண்டு தன் ஆயுட்காலத்தில் எத்தனை முறை சட்டையை உரிக்கிறது ?

18 முறை. 

 2. கண்ணால் பார்க்கக்கூடிய கிரகம் எது ? 

 செவ்வாய்.


English words & meanings :

hear - to listen, verb. கேட்டல். வினைச் சொல். here - at this place. adverb.இங்கே. வினையுரிச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

ஆளி விதைகள் மற்றும் பால் கலவையானது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ஆளி விதையை பாலில் கலந்து சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனுடன், நீரிழிவு நோயால் ஏற்படும் பல சிக்கல்களைத் தடுக்க உதவும்.


NMMS Q

IUPAC ன் விரிவாக்கம்_______________ 

விடை: International Union Of Pure And Applied Chemistry


ஜனவரி 12 இன்று

தேசிய இளைஞர் நாள்



சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.


நீதிக்கதை

ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்

ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.

அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.

மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.

அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.

அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.

இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.

விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.

விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.


இன்றைய செய்திகள் - 12.01.2023

* தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாளை முதல் 340 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

* இம்மாத இறுதிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகும் என்று மத்திய அரசு தகவல்.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையும் - சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்.

* ஆண்களுக்கான ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: கோலி, ரோகித் முன்னேற்றம்.

* சென்னை மண்டல பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

Today's Headlines

* The Tamil Nadu government has issued an order transferring 21 IPS officers in Tamil Nadu.

* Minister KN Nehru said that the government policy has decided to establish basic infrastructure in the cities near the metropolitan cities.

 * 340 additional special buses will operate from Chennai from tomorrow on the occasion of Pongal festival.

 * The central government informed that the new parliament building will be ready by the end of this month.

* In UNO India will join as a permanent member for the Security Council –Information on international poll. 

 * ICC Men's Cricket Rankings List Released: Goalie, Rohit Progress

* In Chennai Zone in between School teams, the 20 over cricket match was won by BSPP Millenium Team
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரத்தினை TNSED APP-ல் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவு.

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டியல் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை , பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools App- ல் Login செய்து Schemes Menu -வை பயன்படுத்தி பாடப்புத்தகங்கள் விநியோகித்த பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

IFHRMS -ல் Employee ID ஐ பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவு - SR சரிபார்த்து விடுப்பு விபரங்களை TNSED APP-ல் பதிவேற்றவும் அவகாசம்!!!

 


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் (SR)- ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் கால நீட்டிப்பு - கணக்கில் உள்ள விடுப்பு விபரங்களை பதிவேற்றம் செய்தல் – தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் வெளியீடு.

* ஆசிரியர் பணிப்பதிவேடு சரிபார்ப்பு முகாம் 21.01.2023 அன்று நடைபெறும்...


* விடுப்பு விவரங்களை சரிபார்த்து TNSED schools App இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


* இனி வருங்காலங்களில் App  வழியாகவே விடுப்புகளை விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..


IFHRMS - Employee ID Add Proceedings - Download here

Inspire Award 2022 - 2023 | Selected Students List Published

Inspire Award Selected Students List 2022 - 2023


Government of India Ministry of Science & Technology, Department of Science & Technology


List of Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2022-23


Name of the State: Tamil Nadu


No. of Sanctioned: 733


Inspire Award 2022 - 2023 | Selected Students List PDF - Download here 


Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பின் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் Aided school ல் பெற்ற ஊதியத்தை தொடரலாம் - Judgement Copy

 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பின் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் Aided school ல் பெற்ற ஊதியத்தை தொடரலாம்.

தீர்ப்பு நகல் :


Aided School Pay - Judgement Copy - Download here