4 , 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

 4 , 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்றுநர்களுக்கு மதுரையில் 27.01.23 ல் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள். 



School Morning Prayer Activities - 25.01.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 25.01.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல்

 அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பொருள்:
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்


பழமொழி :
The bearer knows the burden.

சுமப்பவனுக்கு தெரியும் பாரம்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 

2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :

வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர முடியும்.


பொது அறிவு :

1. இந்தியாவில் முதல்முறையாக பீரங்கியை பயன்படுத்தியவர் யார்? 

 பாபர்.

 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 

 சீனா.


English words & meanings :

patience - being willing to wait. noun. பொறுமை. பெயர்ச் சொல்.patients - person treated in a hospital or by a doctor. noun. நோயாளி. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் மக்னீசியம் அதிகளவு உள்ளது. இந்த மக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.


NMMS Q

ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு_______

விடை: இரு சமபக்க சரிவகம்


ஜனவரி 25 இன்று

தேசிய வாக்காளர் தினம்



இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது


நீதிக்கதை

வேப்பமரமும்... சிறுவனும்

வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட மரம் தம்பி ஏன் அழறே என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததுமே முதலில் பல் தேய்த்துவிட்டு வா என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி என்று கண்டிக்கிறார். பின் குளித்து முடித்து பசிக்கலை என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.

பள்ளிக்கு வந்தாலோ பாடம் படிக்கலைன்னும், பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க. எல்லாருமே என்னை நாள் முழுக்க திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை என்றான் அழுது கொண்டே.

வேப்பமரம் என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா? என்றது. ஓ... இலை மட்டுமா உன் இலை, குச்சி எல்லாமே ஒரே கசப்பு. சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன். ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.

நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன். அது போல் பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.

நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பப்படுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.



இன்றைய செய்திகள - 25.01.2023

* குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்துக்கு முழு அளவு நிலக்கரியை வழங்கியது மத்திய அரசு.

* நாட்டிலேயே முதல்முறையாக அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடியில் 135 அடி உயரம் கொண்ட டவர் அமைக்கப்பட்டுள்ளது.

* மணிக்கு 160 கி.மீ வேகம் செல்லும் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்: சோதனை ஓட்டத்தில் RRTS சாதனை.

* நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.

* உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ வழக்கறிஞர் - அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராகிறது.

* 2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பெண்கள் அணி அறிவிப்பு - 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்.

* உலகக்கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்குள் நுழைந்த சானியா-போபண்ணா ஜோடி.


Today's Headlines

* Chennai has implemented 5 layers of security on the occasion of the Republic Day celebrations.  Also drones flying are banned .

 * Central government has provided full amount of coal to Tamil Nadu.

* For the first time in the country, a 135-feet high tower has been constructed at the Chennai airport at the cost of Rs.10 crore for state-of-the-art information technology facility.

* India's fastest metro train at 160 kmph: RRTS record in test run

* An earthquake occurred in Nepal this afternoon.  It was recorded as 5.8 on the Richter scale.

* World's first artificial intelligence robot lawyer - appearing in US court next month

* ICC Women's ODI Team of the Year 2022 Announced - 3 Indian Women's Places

 * Hockey World Cup: Australia beat Spain to reach semi-finals

* Australian Open Tennis: Sania-Bopanna pair into semi-finals
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

+1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று (24.01.2023) முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE

 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று (24.01.2023) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு என தேர்வுத்துறை அறிவிப்பு.

CEO & DEOs Meeting Agenda ( January 27,28,29 )

 


பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27.01.2023, 28.01.2023, 29.01.2023 மற்றும் 30.01.2023 நாட்களில் நடைபெறுகிறது.

ஆய்வுக் கூட்டத்திற்கான கூட்டப்பொருள் துறை வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்  [ 23/01/23 ]


CEO & DEOs Meeting Agenda - Download here


 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

EE - Term 3 - Module 2 TLM ( Pdf )

 எண்ணும் எழுத்தும் தமிழ் மூன்றாவது பருவம் UNIT 2 TLM PDF


Download here


 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 27.01.2023

 வரும் 27. 1. 2023 பழளி கோவில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  விடப்படுகிறது...இதனை ஈடு செய்யும் பொருட்டு 25.02.23 அனைத்து அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாகும்...



School Morning Prayer Activities - 24.01.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.01.2023

திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்

குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பொருள்:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.


பழமொழி :
Time cures all things.

காலம் அனைத்திற்கும் தீர்வு காணும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன்.

 2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :

தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்


பொது அறிவு :

1. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்?

 தாம்சன். 

 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது ?

 இந்தியா.


English words & meanings :

peace - calm. noun. அமைதி. பெயர்ச் சொல். Piece - segment. noun. ஒரு பகுதி அல்லது ஒரு துண்டு. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

இந்த மொச்சை பயிறில் உள்ள போலேட் பிறந்த குழந்தைகளின் பிறப்புக் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு 400 எம்.சி.ஜி போலேட் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.

இதுவே கர்ப்ப காலத்தில் 600 எம். சி.ஜி அளவு அதிகரிக்கிறது. கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகெலும்பு முழுமையற்ற வளர்ச்சி, மூளையின் பகுதிகளில் ஏற்படும் முழுமையற்ற வளர்ச்சி போன்ற முக்கிய பிறப்பு குறைப்பாட்டை தடுக்க உதவுகிறது.


NMMS Q

விசையின் விளைவானது__________ , ____________ சார்ந்தது.

விடை: எண்மதிப்பு, பரப்பளவைச் 


ஜனவரி 24 இன்று

தேசிய பெண் குழந்தை நாள்



தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.[1] மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது


நீதிக்கதை

இறைவன் படைப்பு

ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த ஆமை. நம்மால் ஏற்கனவே வேகமாக போக முடியாது இதில், முதுகில் வேறு பாரமாக ஓடும். முயலைப் பார்த்து பொறாமைப்படுவதில் பயன் இல்லை என்னை இப்படிப் படைத்ததற்காக ஆண்டவனைத்தான் நொந்து கொள்ளவேண்டும் என ஆமை எண்ணியது.

அப்போது அன்று இரை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம், விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது. முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது. ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது.

சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது. ஒவ்வொரு விநாடியும் மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில், விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.

இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. அந்த தனித்தன்மையை உபயோகித்து ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம். இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை.


இன்றைய செய்திகள் - 24.01.2023

* உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவிதமான வருமான வரம்பும் இல்லாமல் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு.

* மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: பாரத் பயோடெக் நிறுவனம் 26-ம் தேதி அறிமுகம்.

* இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் 'வகிர்'  கடற்படையில் சேர்க்கப்பட்டது.

* சீன மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

* அமெரிக்க அதிபர் பைடன் இல்லத்தில் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.

* மாநில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கைப்பந்து போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் போராடி வென்ற சிட்சிபாஸ்.

* பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

* Chief Minister MK Stalin welcomed  the order by Supreme Court regarding all the government proceedings should be issued in all Indian languages.

* Minister Ma Subramanian said that the insurance scheme will be implemented without any income limit for the disabled.

* Weather forecast: Expecting 4 days of rain in Tamil Nadu

* Corona Prevention dose through Nose: Bharat Biotech launches on 26th.

* In order to add strength to the Indian Navy, the fifth ship of the Calvary type submarine, INS 'Vagir' was added. 

* More than 13,000 people have been died of corona virus in Chinese hospitals in the last week, the Government declared. 

* US President Biden House: Seizure of key documents.

* State School and Colleges Volleyball Tournament started in Chennai yesterday.

* Australian Open Tennis: Citzipas won the 4th round.

* Women Junior World Cup Cricket: India defeated Sri Lanka.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்

 பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர்கள்  தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசு தினவிழா கொண் டாட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு : 


ஜனவரி 26 - ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் , பெற்றோர் பொறுப்பாளர்கள் , ஆசிரியர் கழக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். வேறு யாரையும் வைத்து கொடி ஏற்றக்கூடாது. தலைமையாசிரியர் இல்லாத இடத் தில் பொறுப்பு தலைமை ஆசிரியர் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.


அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

 அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசின் சம்பளத்துடன் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்தப் பள்ளிகள், தங்கள் பகுதியைச் சுற்றி வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு, இலவசமாக கல்வி சேவை வழங்குகின்றன.


சமீப காலமாக நர்சரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகரித்து விட்டதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதனால், மாணவர் எண்ணிக்கை விகிதத்தின்படி, பல அரசு உதவி பெறும் பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்கள் பணியாற்ற, பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்துள்ளது.


அதேநேரம், சில அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கூடுதல் ஆசிரியர்கள் தேவை. இதை சமப்படுத்தும் வகையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் அடிப்படையில், கட்டாய இடமாறுதல் வழங்கப்பட உள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அதே குழுமத்தைச் சேர்ந்த மற்ற பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட உள்ளனர். இந்த கவுன்சிலிங்கை மாவட்ட அளவில் நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களுக்கு, இன்று முதல், 25ம் தேதி வரை, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கட்டாய இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், தனித்தனி நாட்களில் இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


இந்த கட்டாய இடமாறுதலுக்கு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.


Ennum Ezhuthum - Lesson Plan




  • March 2023

    Ennum Ezhuthum - March Lesson Plan - Module 8 - Download here

**************************************************************************
Ennum Ezhuthum - March Lesson Plan - Module 7
Ennum Ezhuthum - Module 6 Lesson Plan - Download here
Ennum Ezhuthum - Module 5 Lesson Plan
எண்ணும் எழுத்தும் பருவம் 3க்கான பாடங்கள் ஒவ்வொன்றையும் எத்தனை நாட்களில் நடத்த வேண்டும் என்பதற்கான அட்டவணை. 


*************************************************************************

  • Ennum Ezhuthum - Module 3 - ( 30.01.2023 - 08.02.2023 ) Lesson Plan - Download here

  •  Ennum Ezhuthum - Module 2 - January 4th Week Lesson Plan

 Click here for latest Kalvi News 


அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் பதிவு!

 


அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி் மாணவர்களுக்கு   வழங்கப்படும் சலுகைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் பதிவு!


Concession to Disabled - Download here



 Click here for latest Kalvi News 


TERM 3 - TRAY CARDS - CLASS 4 - TM

EE - TERM 3 - FA (B) ONLINE TESTS IMPORTANT DATES TO REMEMBER

 


School Morning Prayer Activities - 23.01.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 23.01.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

பொருள்:

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.


பழமொழி :
Without wisdom,wealth is worthless.

விவேகம் இல்லாச் செல்வம் வீணே.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன்.

 2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :

நமது மேலாதிக்க எண்ணங்களின் விளைவுகளையே நமது வாழ்க்கை எப்போதும் பிரதிபலிக்கின்றது.


பொது அறிவு :

1. பறவை முட்டையில் எத்தனை சவ்வுகள் உள்ளன? 

 ஐந்து சவ்வுகள்

2 . உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது? 

கியூபா.


English words & meanings :

pail - bucket, noun. நீர் எடுக்கும் வாளி. பெயர்ச் சொல். pale - light in colour. adjective. வெளிறிய வண்ணம். பெயரடை


ஆரோக்ய வாழ்வு :

கொப்பரை தேங்காய் உடன் கசகசா அரைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். 2. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து காய்ச்சி நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்


NMMS Q

ஓர் இணைகரத்தின் உயரம் 8 சென்டிமீட்டர் மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தை போல் மூன்று மடங்கு எனில் அதன் பரப்பளவு___________சதுர சென்டிமீ்ட்டர் 

விடை: 192. 

விளக்கம் : b x h= 24 x 8 = 192


ஜனவரி 23 இன்று

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்


நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.[46] அதன்படி இந்தியா,

நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!  


நீதிக்கதை

நல்ல நண்பன் வேண்டும்


ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.

அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.


இன்றைய செய்திகள் - 23.01.2023

* குடியரசு தின விழா பாதுகாப்பு: டெல்லி செல்லும் ரயில்களில் ஜனவரி-26 வரை பார்சல் சேவை நிறுத்தம்.

* வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

* தமிழகத்தில் 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்.

* அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை  இன்று சூட்டுகிறார் பிரதமர் நரேத்திர மோடி.

* சீன எல்லையில் இந்தியா பிரம்மாண்ட போர் பயிற்சி - இந்திய விமானங்கள், ஏவுகணைகள் குவிப்பு.

* முடிவெடுக்க தயங்கும் மேற்குலக நாடுகளால் தங்கள் நாட்டு மக்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

* இந்திய ஓபன் பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீரர் குன்லவுட் மற்றும்  பெண்கள் ஒற்றையர் பிரிவில் கொரியா வீராங்கனை அன் சியாங் ஆகியோர் பட்டம் வென்றனர்.

* ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்.


Today's Headlines

* Republic Day Security: Parcel service suspended on Delhi-bound trains till Jan-26

* The district collector has imposed new restrictions on the conduct of bull slaughtering ceremonies in Vellore district.

* 1.14 lakh people are employed through 71 private employment camps in Tamil Nadu: Minister CV Ganesan informs.

 * Prime Minister Narendra Modi today named Paramveer Chakra awardees for 21 unnamed islands in the Andaman and Nicobar Islands.

 * India's massive war drills on Chinese border - Indian aircraft, missile build-up

 * Ukraine says its people are being killed by the West, which hesitates to make decisions.

*  India Open Badminton: Thailand's Kun Laut and Korea's Anh Xiang won the men's singles title.

 * Hockey World Cup: Spain beat Malaysia to reach quarter-finals
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்