JEE -அட்வான்ஸ்டு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

 ஒருங்கிணைந்த (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) நுழைவுத் தோ்வினை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை, நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது.


ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்கவிருப்பவர்களுக்கான நுழைவுச் சீட்டு, ஜேஇஇ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள, மாணவர்கள் ஜேஇஇ விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இந்த நுழைவுச் சீட்டு இல்லாமல், யார் ஒருவரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த நுழைவுச் சீட்டில், மாணவரின் அனைத்து விவரங்களும், தேர்வுக் கூட விவரங்களும், தேர்வு நேரம் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.


பதிவிறக்கம் செய்வது எப்படி? 


jeemain.nta.nic.in இணையதளத்துக்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் ஜேஇஇ முதன்மை 2023 அமர்வு 1 அட்மிட் கார்டு என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

ஜேஇஇ மெயின் விண்ணப்ப எண்ணையும் பிறந்த தேதியையும் உள்ளிடவும்.


சப்மிட் கொடுத்து ஜேஇஇ மெயின் 2023 அட்மிட் கார்டை டவுன்லோடு செய்யவும்.

அதனை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். நுழைவுத் தேர்வெழுதச் செல்லும் போது கையில் வைத்திருக்கவும்.


மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல்-தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு தகுதி பெறுவதற்கான ஜேஇஇ தோ்வு இரு கட்டங்களாக (முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) நடத்தப்படும்.


தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிப்பவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இதில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். இந்த நுழைவுத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருப்பதும் அவசியமாகும்.


இந்த நிலையில், மாநில கல்வி வாரியங்களில் படித்து ஜேஇஇ முதன்மைத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் (350/500 மதிப்பெண்) பெறாத காரணத்தால் ஐஐடிக்களில் சேர முடியாமல் போகிறது. எனவே, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் நிபந்தனையை தளா்த்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய கல்வி அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்று, மத்திய அமைச்சகம் மதிப்பெண் தளா்வு அளித்திருப்பது தெரியவந்துள்ளது.


நிகழாண்டு ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஜனவரி 24 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

ITK Upper Primary Training - Volunteers Module 5

 இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை பயிற்சி கட்டகம் - 5 (ITK Upper Primary Training - Volunteers Module 5 & PPT)


ITK Upper Primary Training - Volunteers Module 5 - Download Here

ITK Upper Primary Training - PPT - Download Here


Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசு பள்ளியில் ட்ரோன், செயற்கைக்கோள் ஆய்வகம்: தமிழகத்தில் முதல் முறையாக துவக்கம்

 

தமிழக அரசு பள்ளிகளில் முதல் முறையாக, ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆய்வகம், சென்னையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு உத்தரவை அடுத்து, தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 'வானவில் மன்றம்' என்ற அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தை, கடந்த நவம்பரில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

இளம் விஞ்ஞானி


இதன் ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சி ஆய்வகம், நேற்று திறக்கப்பட்டது.


சென்னை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் நடந்த விழாவில், ஆய்வகங்களை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாத்துரை திறந்து வைத்தார்.


விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், காணொலி காட்சி வாயிலாக பேசியதாவது:


நம் நாட்டின் வளர்ச்சிக்கு, இளம் விஞ்ஞானிகள் அதிகம் தேவை. இதுபோன்ற ஆய்வகங்களால், பள்ளிகளில் இருந்தே இளம் விஞ்ஞானிகளை உருவாக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.


இந்த பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில், ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சியில், சென்னையில், 12 பள்ளிகளை சேர்ந்த, 200 மாணவ - மாணவியர் பங்கேற்று, ட்ரோன்களை இயக்கி உள்ளனர்.


இவ்வாறு அவர் பேசினார்.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் முறையாக, அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின், 20 லட்சம் ரூபாய் நன்கொடை யில், இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது.


அவற்றில், மாணவர்கள் அறிவியல் காட்சிகளை பார்க்க ஸ்மார்ட் திரை வகுப்பறையும், வீடியோக்கள் உருவாக்க, ஸ்டூடியோ ஒன்றும் திறக்கப்பட்டுஉள்ளது.


விழாவின்போது, அரசு பள்ளி மாணவர்கள், ட்ரோன்களை இயக்கி, செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், நான்கு அரசு பள்ளிகளில், ட்ரோன் தொழில்நுட்ப ஆய்வகங்கள் துவங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


பயிற்சிகள்


இந்த ஆய்வகங்களில், அரசு பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, டிரோன் தொழில்நுட்பம், சிறிய ரக செயற்கைக்கோள் உருவாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


இதற்காக, தன்னார்வ பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில், அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை நிர்வாகிகள் மேத்யூ ஜோசப், பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

ITK TRAINING - VOLUNTEERS MODULE 5

 இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை பயிற்சி கட்டகம் - 5 ( ITK TRAINING VOLUNTEERS MODULE & PPT)


Module 5 - Download here


PPT - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

பள்ளிக்கல்வி - உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் வெளியீடு

 பள்ளிக்கல்வி - உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் நிலை -3 ஆகியோர்களுக்கு / சுருக்கெழுத்து தட்டச்சர் உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது - 15.03.2022 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்  தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


15.03.2022 ன் படியான உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III


15.03.2022 Assistant Panel - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

CRC Calendar - Term 3

How much ML Eligible? - பணிக்காலத்திற்கு ஏற்ப மருத்துவ விடுப்பு விவரம்.

 பணிக்காலத்திற்கு ஏற்ப மருத்துவ விடுப்பு விவரம்.

 





 

 

GPF ஆண்டு சந்தாத் தொகை உச்சவரம்பை ரூ.5 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

 


General Provident Fund Ceiling of Rupees 5 Lakh on Subscription to General Provident Fund account in a financial year Orders - Issued .

School Morning Prayer Activities - 20.01.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 20.01.2023



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள்:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.


பழமொழி :
All things come to those who wait.

பொறுத்தவரே பூமியை ஆள்வார்


இரண்டொழுக்க பண்புகள் :

1. புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன். 

2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. நேசிப்பேன்.


பொன்மொழி :

சொற்கள் நம் சிந்தனையின் உடைகள். அவற்றை கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக்கூடாது.


பொது அறிவு :

1. பாராசூட் பயிற்சிப் பள்ளி எங்கு அமைந்துள்ளது ? 

 ஆக்ராவில்

 2. இந்தியாவில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன? 

 1652 மொழிகள்.


English words & meanings :

Meat - flesh of the animals. noun. விலங்குகளின் மாமிசம். பெயர்ச் சொல். Meet - happen to visit or go to the presence of some one. verb. ஒருவரை சந்தித்தல். வினைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களில் தியமின், வைட்டமின் கே மற்றும் பி6, தாமிரம், செலினியம், இரும்புச்சத்து, நியசின், ரிபோஃப்ளவின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கோலின், சோடியம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது உங்களுக்கு மெலிந்த புரதத்தை வழங்குகிறது.


NMMS Q

கீழ்க்கண்டவற்றுள் எது உலோகப்போலி அல்ல? 

a) போரான் b) நைட்ரஜன் c) சிலிக்கான் d) ஜெர்மனியம். 

விடை : நைட்ரஜன்


ஜனவரி 20 இன்று

எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 



எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்


நீதிக்கதை

இறைவனுக்கு நன்றி சொல்வோம்

ஒரு ஊரில் காகமொன்று இருந்தது. அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது. ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.

அவற்றைப் பார்த்த காகம் அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே என வருந்தியது. அந்தப் பறவைகளைப்போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.

உடனே அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது. தன் இறகுகளை தேய்த்து தேய்த்து பார்த்தது. அதனால் சில இறகுகளையும் இழந்தது.

அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம் இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம், நிறம் பெற்றவை. அதை மாற்ற நினைத்தால் நடக்காது என அறிவுரை கூறியது. மேலும், கடவுள் எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும் என்றது.


இன்றைய செய்திகள் - 20.01.2023

* மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.

* நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மீண்டும் மத்திய அரசு கடிதம்: மா.சுப்பிரமணியன் தகவல்.

* அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

* தவறான பயன்பாட்டை தடுக்க மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்று மருந்துகட்டுப்பாடு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

* விக்கிப்பீடியா ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* உலகம் முழுவதும் தொற்றை சமாளிக்க சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்: ஜி-20 கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்.

* சீன புத்தாண்டு விடுமுறையில் தினசரி கரோனா உயிரிழப்பு 36 ஆயிரத்தை தாண்டும்: லண்டன் ஆய்வு நிறுவனம் கணிப்பு.

* ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை : விராட் கோலி, சிராஜ் முன்னேற்றம்.

* ஹாக்கி உலகக்கோப்பை: 14-0 என்ற கணக்கில் சிலி அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து.

Today's Headlines

* Minister SenthilBalaji informed  that 2 crore Aadhaar numbers had been linked with electricity connection number.

 * Central Government sent letter again asking for clarification on NEET Exemption Bill Information by Minister M. Subramanian

* The School Education said NSS funds for government schools will be paid directly into bank accounts said by the school education department .

 * The Drug Control Directorate has advised that psychotropic and sleeping medicines should be dispensed only with a doctor's prescription to prevent misuse.

* Wikipedia sources are not trust worthy : an advice from Supreme Court

 * Health infrastructure must be built to tackle the pandemic worldwide: India insists at G-20 meeting

 * London Research Institute predicted that Corona death toll will exceed 36,000 during Chinese New Year holiday.

* ICC ODI Rankings: Virat Kohli and Siraj Progressed 

 * Hockey World Cup: Netherland beat Chile by14-0 and reached quarter-final round
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக திருவாரூரில் பசுமை பள்ளித் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை. பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.


கொரோனா காலத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய, மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் படிப்படியாக மற்ற பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பசுமை பள்ளி திட்டம் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளது. மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமின்றி நடுநிலைப் பள்ளிகளிலும் பசுமை பள்ளி திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளுக்கான NSS நிதியை வங்கியில் செலுத்த திட்டம்

 அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு (என்எஸ்எஸ்) மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது.


நடப்பு கல்வி ஆண்டு முதல்என்எஸ்எஸ் நிதியை பள்ளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இதற் காக அரசுப் பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.


அதன்படி, என்எஸ்எஸ் திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு ஜன.20-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.


மேலும், இதுசார்ந்து மறு உத்தரவு வரும் வரை என்எஸ்எஸ் வங்கிக் கணக்குகளை எந்தக்காரணம் கொண்டும் முடிக்கக் கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளுக்கு என்எஸ்எஸ் நிதி தாமதமின்றி துரிதமாக சென்று சேரவும், தவறுகள் நடைபெறுவதை தவிர்க்கவும் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!!

 1) முதலில் TNSED App - individual login செய்யவும்


2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.


3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்


4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்


5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்


6) பிறகு "compensatory leave" என்ற option வரும்.அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff),எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்


7)  EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.


8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? த

குதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்

5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்

10 முதல் 15  வருடங்களுக்கு 270 நாட்கள்

15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்

20 வருடங்களுக்கு மேல்  540 நாட்கள்

ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.

உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.

180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.


9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள்  எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.


10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்!


குறிப்பு :

தற்போதுவரை இந்த வசதி அப்டேட் செய்யப்படவில்லை. அப்டேட் ஆனவுடன் பதிவு செய்யவும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியவை!

 




அனைவருக்கும் வணக்கம்..
EMIS - work 

1.Academic score (Govt & Aided school only)

Class 6 to 12 students at individual tr login.

2. Student and Teacher attendance ( Govt and aided school)

3. Sports delivery tracking (All type of Govt school only) @ school login _ TNSED school app.

4. School and Medium Verification ( Govt/Aided/Unaided school) @ school login _ approval 

5. Ensure total no of library book _ reset, edit and delete option available. 

6. Library book shelf creation @ individual tr login.

7. Library book tracking @ school login. Mobile app

8. Updation of IFMRHS ID ( teaching & non teaching staff) school login _ Staff list.

மேற்கண்ட பணியினை விரைந்து முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Library shelf creation ஏற்கெனவே ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு Library books Shelf creation செய்து அதனை மாணவர்களுக்கு assign செய்திருப்பீர்கள். அதில் சில பிரச்சினைகள் இருந்ததால் ஏற்கெனவே assign செய்த அனைத்தும் தற்போது reset செய்யப்பட்டு empty ஆக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அனைத்து வகுப்பாசிரியர்களும் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு library books assign செய்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அதற்கான விளக்க வீடியோ மேலே அனுப்பப்பட்டுள்ளது 

 Teacher leave Updation

Click here to join whatsapp group for daily kalvinews update