பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2023

 திருக்குறள் :

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:374

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

விளக்கம்:

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

பழமொழி :

Beauty comes not by forcing. 

அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 

பொன்மொழி :

மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.

பொது அறிவு :

1. முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது? 

 மூன்று ஆண்டுகள் . 

 2.பாரதியார் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் என்ன?

 ஷெல்லிதாசன்.

English words & meanings :

A very little ant - infant (குழந்தை)

ஆரோக்ய வாழ்வு :

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

          தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

NMMS Q

சீமா சச்சினின் சகோதரி. சச்சினும் ராகுலும் சகோதரர்கள் மற்றும் ராகுல் கமலாவின் மகன் ஆவார். கமலாவிற்கு சீமாவிடம் உள்ள தொடர்பு என்ன? 

 விடை: மகள் 

பிப்ரவரி 07


தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்




தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

குட்டி குரங்கின் செயல்

மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கூடம். அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர். குட்டிக் குரங்கு புஜ்ஜி. மலைமீது பல குரங்குகள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தன. அந்தக் கூட்டத்தில் புஜ்ஜி என்ற சிறிய குரங்கும் இருந்தது. அது மிகவும் புத்திசாலி. சரியாக பள்ளிக்கூட உணவு நேரத்தில் மலையை விட்டுக் கீழே இறங்கி வரும். 

மாணவர்கள் தருகின்ற உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். தாகம் தீர்த்துக் கொள்ள மாணவர்கள் குடிக்கும் குடிநீர்க் குழாயில், மாணவர்களைப் போலவே குழாயைத் திறந்து குடித்துவிட்டு, மீண்டும் குழாயைச் சரியாக மூடிவிட்டுச் செல்லும். இது அன்றாடம் நடக்கின்ற நிகழ்வு. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல புஜ்ஜி, மாணவர்கள் இல்லாததைக் கண்டு ஏமாந்து போகும். வெறும் நீரை மட்டும் குடித்துவிட்டு மலையேறும்.

முதலில் குரங்குக் குட்டியைக் கண்டு மாணவர்கள் அச்சம் கொண்டனர். நாளடைவில் அதன்மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டனர். பின்னர், அதற்குத் தாங்கள் உண்ணும் உணவிலிருந்து கொஞ்சம் கொடுத்து மகிழ்ந்தனர். ஒருநாள் வழக்கம்போல, உணவு இடைவேளைக்குச் சரியாக வந்த புஜ்ஜி, உணவுக்காகக் காத்திருந்தது. சில மாணவர்கள் மரத்தடியில் உண்டு கொண்டிருந்தனர். அவர்களின் அருகே குரங்குக் குட்டி வந்ததும் தங்களின் உணவில் கொஞ்சம் கொடுத்தனர்.

அதனை உண்டு முடித்தது. சிந்திய பருக்கைகளை, குரங்குக் குட்டியோடு, அணில் பிள்ளையும் உண்டு மகிழ்ந்தது. புஜ்ஜிக்குத் தாகம் எடுத்தது. அது குழாய் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது. அங்கே பல மாணவர்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் உள்ளே புகுந்த புஜ்ஜி திடுக்கிட்டது. குடிநீர்க் குழாய் உடைந்து, ஆறுபோல பெருக்கெடுத்து சீறிப் பாய்ந்தது. மாணவர்கள் செய்வதறியாது திகைத்தபடி நின்றிருந்தனர்.

புஜ்ஜி அங்கும் இங்கும் சென்று எதையோ தேடிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கையில் அகப்பட்ட துணி, கயிறு போன்றவற்றைக் கொண்டு வந்தது. கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை விலக்கிவிட்டு, குழாயிலிருந்து பாய்ந்து கொண்டிருந்த நீரை ஒரு கையால் அடைத்து மறுகையால் துணியைச் சுற்ற ஆரம்பித்தது. பலமுறை தோல்வியே கிடைத்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது புஜ்ஜி. இதனைக் கண்ட சில மாணவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தனர். குட்டிக் குரங்கோடு சேர்ந்து குழாயைத் துணியால் அடைத்து, கயிற்றால் கட்டினர். தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. மன நிறைவோடு அங்கிருந்து புறப்பட்டது குட்டிக் குரங்கு புஜ்ஜி.

இன்றைய செய்திகள்

07.02.2023

* சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

* ஹெக்டேருக்கு ரூ.20,000: பருவம் தவறிய கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகுப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

* எஸ்எஸ்எல்வி-டி2 சிறியரக ராக்கெட்டை பிப்ரவரி 10-ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.

* சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.

* துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: தோண்டத் தோண்ட சடலங்கள்; உயிரிழப்பு 1500-ஐ தாண்டியது.

* சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்.

* பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் 'டிரா'.

Today's Headlines

* The President has ordered the appointment of five additional judges to the Madras High Court.

 * Rs 20,000 per hectare: Relief package for farmers affected by unseasonal heavy rains - Chief Minister Stalin orders.

*  The Department of Primary Education has directed to send recommendations regarding opening and upgradation of new primary schools.

 * ISRO plans to launch SSLV-T2 small rocket on February 10.

*  Ban on 138 gambling apps of foreign countries including China: Central government action.

 * Earthquake hits Turkey, Syria: Bodies unearthed; The death toll exceeded 1,500.

* International Wrestling Championships: Bronze medal for Indian athlete.

 * Women's South Asian Football: India-Bangladesh made Draw. 
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News 

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...

 


ஒவ்வொரு மாதமும் அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இம்மாதம் பிப்ரவரி 13 முதல் 17 வரை மல்லி தமிழ் திரைப்படம் திரையிடப்பட வேண்டும். இந்த படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.


இது குறித்த கட்டுரை , தேன்சிட்டு இதழிலும் வெளிவந்துள்ளது . ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியருடன் இணைந்து பொறுப்பு ஆசிரியரும் பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்.


திரையிடலுக்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டியவை :


CoSE - Movies Screening.pdf - Download here...


Click here for latest Kalvi News 

EMIS பதிவுகள் checklist

 EMIS பதிவுகள் checklist


🛑🛑 *EMIS பதிவுகள் checklist:*🛑🛑

1. Student, staff & local body *attendance* தினமும் பதிவுசெய்தல். ( govt & aided)

2. *Library books* அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு assign செய்யப்பட்டிருத்தல் ( govt only) - class tr. Login.

🖊️ *Library Shelf Creation* - அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் shelf creation செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். *குறிப்பு: ஏற்கனவே shelf create செய்த தகவல் அனைவருக்கும் reset செய்யபட்டுள்ளது*

🖊️ *வாரந்தோறும் sufffle option ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்களை மாற்றி வாசிக்க கொடுக்க வேண்டும்*. - TNSED app in class teacher login

3. *Health check up* - அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்து முடித்தல் - ( govt only) - class tr. Login in TNSED app
4.*Quarterly மற்றும் *Half yearly தேர்வு: *Academic score* - 6-9 மாணவர்களுக்கும் , *Students marks - menu வழியாக 10,11,12 வகுப்புகளுக்கும் ( Quarterley, Half Yearly, Mid Term I, Mid Term II, Mid Term III) தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்து முடித்திருத்தல் வேண்டும் - class tr. Login (EMIS website) - govt & aided. ( *Need attention* ) *குறிப்பு :முடிந்த தேர்வுகளுக்கு மட்டும்*

5. அனைத்து மாணவர்களுக்கும் *ஆதார் எண்* பதிவேற்றம்.

6. *Teacher IFHRMS Number* : அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் school login-ல் staff profile- ல் IRHRMS எண்ணை பதிவு மேற்கொள்ளுதல்.

7.*EMAIL ID Updation:* - அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் Profile- ல் update செய்தல்.

8.*Career and Guidance Survey Form:* அரசு பள்ளியில் பயிலும் அனைத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களும் naanmuthalvan இணையதளத்தில் career gauindance தகவல்களை பூர்த்தி செய்தல்.

9. *Leave Balance Updation*: அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் E- profile icon ல் leave management icon ➡️My leave ➡️yearly leave and service leave ஆகிய பகுதியில் balance leave விபரத்தினை பதிவு செய்தல் வேண்டும்.

10. *Textbook Distribution Details* - அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் Schemes icon ➡️Books ➡️ Term I, Term II,Term III ல் வழங்கப்பட்ட விபரத்தினை update செய்தல் வேண்டும்.

11.*Spoken English Module( Only for Trained teachers 4 and 5 std)* - Spoken English பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் தாங்களது login இல் MY courses ➡️ Spoken English module ➡️ Term I and Term II complete செய்ய வேண்டும்.

12. *PSTM Application Verification* - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது login வரும் PSTM application - களுக்கு verification செய்யும் பணியை உடனுக்குடன் முடித்திடல் வேண்டும்.

13. *Schools and Medium Verification* - அனைத்து வகை தொடக்க,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தங்களது login ல் Verify student school ➡️ School and Medium Verification செய்யும் பணியை முடித்திடல் வேண்டும்.

🖊️மேற்கண்ட பதிவுகள் எமிஸில் *09.02.23க்குள்* 100% முடித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🖊️இதில் எந்த தவறுகளும் , நிலுவையும் இன்றி முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🖊️மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்க ), வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் இப்பணிகள் முடிவடைந்ததை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி மதுரையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 இதனைத் தொடர்ந்து , தற்போது 06.02.2023 முதல் 25.02.2023 வரை Batch 67 முதல் 73 வரை அணிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.


 இப்பயிற்சியில் இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


CoSE - HM Training.pdf - Download here...


Click here for latest Kalvi News 

பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டியவை - கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளரின் அறிவுரைகள்

 கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட காணொளி கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.....


பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான  Payroll Run 12.02.2023 அன்று செய்யப்படும்.


பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மாற்றங்களையும் (Income Tax... ect..) 10.02.2023 ற்கு முன்னதாக செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.*


20.02.2023 ற்கு பிறகு Mark For Recalculation Icon  Remove செய்யப்படும்.


எனவே, பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியல் தயாரிப்பதில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளுக்குள்  உரிய மாற்றங்களை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Click here for latest Kalvi News 

பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு

 

பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு


பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையில் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 11 வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “ 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்.10-க்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதில், உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Click here for latest Kalvi News 

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

 


TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறையை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை!

Leave Manual - Download here


Click here for latest Kalvi News 

4 & 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 11.2.23 அன்று CRC பயிற்சி - SCERT Proceedings

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டு , பணிமனைகளுக்கான குறுவள மற்றும் வட்டார வளமைய கூட்டத்திற்குத் தேவையான மதிப்பீடு சார்ந்த பொருண்மைகளை உருவாக்கம் சார்பான பணிகள் இந்நிறுவனத்தில் நடைபெற்று முடிவுற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து வருகின்ற 11.02.2023 அன்று குறுவள மையக் கூட்டம் அனைத்து மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படவேண்டி உள்ளதால் , கீழ்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு ( CRC ) கூட்டத்தினை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 07.02.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

2022-2023 - ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு ( NMMS ) 26.12.2022 முதல் 20.01.2023 விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.


இந்நிலையில் தற்சமயம் இத்தேற்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று 03.02.2023 முதல் 07.02.2023 வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.


 Click here for latest Kalvi News 


கனமழை விடுமுறை அறிவிப்பு - 03.02.2023

 கனமழை  காரணமாக இன்று ( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :

நாகை - 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

தஞ்சை - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மற்ற மாவட்டங்கள் நிலை குறித்து தகவல் கிடைத்த உடன் பகிரப்படும்...



Click here for latest Kalvi News 


School Morning Prayer Activities - 03.02.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.02.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் ...

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

பொருள்:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது


பழமொழி :

Try and try again you will succeed at last.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :

அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.


பொது அறிவு :

1. ரேடியோ கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் யார் ? 

 கியூரி

. 2. உலக அதிசயமான தொங்கும் தோட்டம் எங்கு உள்ளது ? 

 பாபிலோன்.


English words & meanings :

when an ant is looking for a job we call it APPLICANT


ஆரோக்ய வாழ்வு :

தினமும் 2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வரலாம். இது ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் குறைக்க பெரிதும் உதவி செய்யும்.
தயிர் பச்சடிகளில் பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.


NMMS Q

ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க பயன்படும் வினைவேகமாற்றி எது?

 விடை: இரும்பு


 பிப்ரவரி 03 இன்று

யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்


யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. 


என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்


கிறித்துவக் கம்பர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. 

நீதிக்கதை

என் அடிமைகளுக்கு நீ அடிமை

மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.

அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும்படி ஆணையிட்டான்.

முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப்படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.

முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து கொல்ல வரும் நபரைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா? என்று கேட்டான்.

அதற்கு முனிவர் மன்னா... நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது! என்றார்.

அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக முடியும்? என்று முனிவரிடம் கேட்டான். அவர் அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன் என்றார். மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.


இன்றைய செய்திகள் - 03.02.2023

* ஐ.டி. பயன்பாட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழக காவல்துறை: டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்.

* கோடைகாலத்தில் தினசரி மின்தேவை 19 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்: தமிழக மின்வாரியம் கணிப்பு.

* மன்னார் வளைகுடா, குமரிக் கடலை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன், தூத்துக்குடியில்  3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

* வீரர்கள் எந்த இடத்திலும் தாக்குதல் நடத்த ஜெட்பேக்ஸ், ரோபோ, ட்ரோன்கள் வாங்க டெண்டர் வெளியிட்டது இந்திய ராணுவம்.

* 2070-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத இந்தியா - ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* “போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய ராணுவ வீரர் வாக்குமூலம்.

* 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

* டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.

Today's Headlines

* Tamil Nadu Police pioneered in IT usage proudly said byDGP Shailendra Babu .

* Daily power demand to rise to 19,000 MW in summer: Tamil Nadu Power Board forecast

* Gulf of Mannar, depression approaching Kumarik Sea: Cyclone warning cage number 3 raised at Pampan, Tuticorin.

 * The Indian Army has issued a tender to buy jetpacks, robots and drones for soldiers to attack anywhere.

* Carbon free India by 2070 - Rs.35 thousand crore allocation.

* "Ukrainians were killed and sexually abused during the war," says ex-Russian soldier.

* South Africa won the 3-match ODI series for 2-1.

* TNPL  Cricketers auction: 2 days to be held in Chennai.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here for latest Kalvi News 


அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 

மத்திய கல்வி அமைச்சக திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதலின்படி , ' Rani Laxmibai Atma Raksha Prashikshan ' ( Elementary and Secondary ) - Salf - Defense Training ) தலைப்பின் கீழ் , 6744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு ரூ .15,000 ஆக மொத்த ரூ.1011.6 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் 5519 உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு 15,000 ஆக மொத்தம் ரூ.827.85 / - இலட்சம் என அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையிலும் , இடைநிற்றலை தவிர்த்து இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு ஏற்ப Karate , Judo , Taekwondo , Silambam ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தருவதால் , பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது.


கல்வி மாவட்டங்களில் தற்காப்புக்கலை பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கீழ்க்காணுமாறு வழங்கப்பட்டுள்ளது.

 SPD - Self Defence Training.pdf - Download here...



 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

CoSE - Geometry Box Distribution.pdf - Download here...

  Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

பிப்.6 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 கன்னியாகுமரி - பிப்.6 உள்ளூர் விடுமுறை


தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லா தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு


வரும் 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்


விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக  வரும் 11ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.

 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update